திங்கள், 18 ஜூன், 2018

இன்று ..கம்பள விருட்சம் அறக்கட்டளை ...குழுவில் ..🌷🌷🌷மாப்பிள கார்த்தி SR ..💐💐ஒரு அருமையான தலைப்பை பகிர்ந்து ..இது பற்றி கூறவும் என்று கேட்டுஇருந்தார் ..அதற்கான ...கட்டுரையை ...பதிவிடுகிறேன் ...

தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன ?


தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.

1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது. (அதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.)

வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற் கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.

தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.

உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.

பின்னூட்டம் முக்கியம்.....!!!!! உரையாடி அறியாமை களை.....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...👍💐💐💐💐






அறக்கட்டளையின் நோக்கங்கள்:-
1. தமிழ்நாடு முழுதும் வாழும் இந்து - தொட்டியநாயக்கர் ராஜகம்பள இன மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான கல்விக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், மருத்துவ மனைகள், விவசாயம் சார்ந்த
தொழில்கள், பண்ணைகள், தொழிற்கூடங்கள், நிதி நிறுவனம் போன்றவை அமைத்து பராமரித்து வர பாடுபடுதல்
2.நமது சமுதாய மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் திருமண தகவல் மையம் அமைத்து நமது இன ஆண் பெண் நபர்களுக்கு நல்லதொரு மணமகள் , மணமகன் அமையவும் அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் உதவுதல்
3.நமது இன மக்களுக்கு படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுத்தல் அதற்காக தனி பிரிவு அமைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்ச்சி வகுப்புகள் நடத்துதல்
4.நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் ஜமீன்கள் அமைத்த பழம்பெரும் கோவில்களை புணரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதற்கான வரலாற்று புத்தகங்கள் வெளியிட்டு இனமக்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
5. அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நன்கொடைகள் பெறுதல், சந்தா வசூலித்தல் ,மற்றும் இதர வழிகளில் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்களிடமிருந்து நிதிகளை பெறுதல்.
6. அறக்கட்டளைக்கு தேவையான அசையும் அசையா சொத்துக்களை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு மற்றும் வாடைகைக்கு விடுதல் அடமானம் வைத்து கடன் பெறுதல் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான இதர காரியங்களை செய்தல்
7. கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள கல்வி ஸ்தாபனங்களை ஏற்று நடத்துவது அவற்றை அபிவிருத்தி செய்வது போன்ற கல்விப்பணியை செய்வது
8.சிறந்த மாணவ மாணவியற்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் அவர்களின் மேற்படிப்பிற்கு வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கல்விப்பணியை செய்வது
9.ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையோ அல்லது அதற்கான பண வசதிகளையோ செய்து கொடுப்பது

10.மேற்கண்ட நோக்கங்களுக்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டி அதற்கான ஆயத்த முடிவுகளை எடுப்பது

ஞாயிறு, 17 ஜூன், 2018


நேற்று ...இன்று ...அருமையான நிகழ்வுகள் ..

வழக்குரைஞர் சரவணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்.  அவர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ...இவர் உடுமலை மண்ணின் மைந்தர் ..உடுமலை அரசு பள்ளியில் படித்த மாணவர் ..நேற்று பெரியகோட்டை அருகே  உள்ள சுந்தர் நகரில் அவரின் வீட்டில் சந்தித்து கலந்துரையாடினோம்

எழுத்தாளர் ஜெயராணி (இவர் முன்னாள் நிலக்கோட்டைசட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் அவர்களுடைய பேத்தி ) இவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..

நமது தம்பி ...கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா திருமண நிகழ்வு ..மற்றும் சொந்தங்களை சந்தித்தது மற்றட்ட மகிழ்ச்சி ...

இன்று ...
பெரியகோட்டை யில் ..நம்ம தம்பி பிரபாகர் -சங்கீதா  திருமண நிகழ்வுக்கு சென்று மணமக்களை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி ...

உடுமலை கிளை  நூலகம்...வாசகர் வட்டம் ..துணைத்தலைவர் என்ற முறையில் ... மரக்கன்றுகள் நற்று வைத்தது ...ஊருக்கும் ...மக்களுக்கும் ...எனக்கும் ...உடலுக்கு நல்லது ...

நமது சென்னை சொந்தம் .செந்தில் அப்பையன் சகோதரர் ..எத்தனை கருத்து மோதல்களும் வந்தாலும் .அட நம்ம தம்பிதானே என்னய்யா சொல்லறாரு என்று ..என் தம்பியை விட்டுக்கொடுக்கமாட்டேன் ..அவருக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் ,உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வம் சார்பில் ..நம்ம மாப்பிள்ளைகள் கார்த்தி SR ,,கவிதை அரசர் ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ...ஆய்வாளர் அருட்செல்வம் ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ..சந்தித்த இடம் வல்லகுண்டபுரம் அவரது பசுமை நிறைந்த தோட்டத்தில் ...மகிழ்ச்சி ...

வரலாற்று சிறப்புமிக்க தளி பாளையக்காரர் ஆட்சிபுரிந்த மண்ணில் இருக்கும் ..தளி காவல் நிலையம் ..காவல்துறை ஆய்வாளர் .திரு .ப .அய்யாசாமி அவர்களை சந்தித்து ...தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ...அவரிடம் 30 நிமிடங்கள் ..வரலாறு பற்றி விவாதித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ..

நேற்று ..இன்றும் ..பயண நிகழ்வுகள் மனதிற்கு நிறைவை  தந்தது ...

என்றும் அன்புடன் ...உடுமலை சிவக்குமார் ...9944066681...



,

சனி, 16 ஜூன், 2018

திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் -சங்கீதா ...(ஜமீன் உசிலம்பட்டி -பூவலபருத்தி )

மாலை நேர திருமண நிகழ்ச்சி ...

நம்ம தம்பியின் கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா மாலை நேர திருமண நிகழ்வுக்கு ...முகம் மலர தென்மேற்கு பருவக்காற்றுடன் ஆனைமலை சாலையில் பயணம் ...கரட்டுமடம் சஞ்சீவராயன் மலையடிவாரத்தில் எத்தலப்பர் மண்ணில் ...புகழ்பெற்ற காந்தி கலாநிலையம் பள்ளியின் எதிரில் அமைந்து இருக்கும் திருமண மண்டபத்தில் முகப்பில் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் திருமண பதாகை நம்ம வரவேற்றது ..பார்த்தவுடன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ...மணமக்களின் தாய் தந்தை நம்மை வரவேற்றனர் ...மண்டபத்தில் நம் சொந்தங்களுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது ..சென்னை சொந்தங்கள் என் அன்பு தம்பி இளங்கோ ராஜா ,சுப்புராஜ் வருவது தெரிந்தது ...அவர்களை வரவேற்று சிறிது நேரம் பேசிக்கொண்டு ,,நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ,புதுமாப்பிள்ளையோடு பேசிக்கொண்டு இருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது ..இரவு நேர உணவு ...தம்பியின் புன்னகை போன்று வெள்ளை பூசணிகாய் அல்வா அருமையாக இருந்தது ...அதுமுடிந்து மணமக்களுக்கு அன்பு பரிசாக ..கொடுங்கியம் தம்பி ஆனந்த் ,மாப்பிள சண்முகம் ,தம்பி யோகராஜ் ..திருமண வரவேற்பு நிகழ்வில் குட்டி குழந்தை செல்வங்களோடு உற்சாகத்தோடு கொண்டாட கேக் வெட்டி ,மணமக்களுக்கும் ,வந்துஇருந்த குழந்தைச்செல்வங்களுக்கு அளித்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அருமையாக இருந்தது ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக ..கௌரவ தலைவர் ,தலைவர் ,துணை செயலர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது மகிழ்ச்சி ....

வெள்ளி, 15 ஜூன், 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்

இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்டத்தில் அங்கத்தினராக இருப்பவர்கள்.

1. அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். 24 மணி நேரமும் மொபைல் போனை நோண்டிக் கொண்டே இருக்கிறாள். சொன்னால் கேட்கவே மாட்டுறா? என்றாள். மகளைப் பார்த்தேன். நீங்களே சொல்லுங்கள்? தினமும் 1.5 ஜிபி இலவசமாகக் கொடுக்குறாங்க. வீணாப் போயிடாதா? இந்த அப்பாவுக்குப் புரியவே மாட்டுது என்றார்.
•••••••
2. மகள் ரூபாய் 4000 க்கு அருகே உள்ளே ஆங்கில வழிக்கல்வியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். அப்பாவுக்கும் மகளும் தினமும் சண்டை. உன்னோடு படிச்சவங்க சென்னை, பெங்களூரென்று கிளம்பிப் போய் எப்படிச் சம்பாறிக்குறாங்க. இவ இதை விட்டுக் கிளம்பவே மாட்டுறா? இவளுக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். நான் இனி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா நகைக்கு எங்கே போறது?

மகளைப் பார்த்தேன்.

+2 முடித்தவுடன் நான் விரும்பிய ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பாமல் பல்லடம்  அருகே உள்ள பொட்டைக் காட்டுக்குள் உங்களை யார் கொண்டு போய்ச் சேர்க்கத் சொன்னது? நான் வெளியே எங்கேயும் வேலைக்குப் போக மாட்டேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு என் உயிரை எடுப்பானுங்க. எனக்கு இந்த வேலை புடுச்சுருக்கு. நிம்மதியா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துடலாம். நீங்க மாப்பிள்ளை பாருங்கள். கஷ்டம்ன்னா சொல்லுங்கள் நானே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறேன்.

அப்பா கத்திய கத்தலில் சென்சார் செய்யப்பட்டாலும் வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

••••••••••••••
3. மகன் விருப்பத்தை மீறி இதற்குத்தான் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குன்னு எல்லாரும் சொல்கிறார்கள் என்று கணினி சார்ந்த துறையில் மகனைத் தனியார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. மகனின் குணாதிசியம் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும். அவன் ஒரு எந்திரப் பிரியன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பைக் கில் ஏதாவது பிரச்சனை என்றால் அவனே கழட்டி மாட்டி விடுவான். அவன் மெக்கானிக்கல் விருப்பத்தையும் மீறி கணினித் துறையில் சேர்த்து விட்டார். பாதிப் படித்துப் பாதி முடியாமல் இப்போது அவனுக்குப் பிடித்த ஒர்க் ஷாப் வேலைக்குச் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பா தினமும் கத்திக் கொண்டிருக்கின்றார்.
••••••••••••••••

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் மனைவியிடம் வந்து உங்களுக்கு மேக்கப் போட பிடிக்காதா? என்று கேட்டது அந்தக் குழந்தை. எப்படி ஆடைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படி ஐ புரே தடவ வேண்டும் என்று பாடம் நடத்தியது. மிரண்டு போனேன். இத்தனைக்கும் அவர்கள் அப்போது எந்த நாகரிமும் எட்டிப் பார்க்காத கிராமம். எப்படி இந்தக் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியும்? என்று யோசித்ததுண்டு. எப்போதும் போல அப்பனும் ஆயியும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஈஈஈ படிப்பில் சேர்த்து விட்டார்கள். ஏழெட்டுப் தாள்களை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் பணிக்குச் சென்று விட்டார். சம்பளம் பத்தாயிரம். விடுதி உணவுக்கு 4000 போக மீதிப் பணத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கின்றார். அப்பனும் ஆத்தாளும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
•••••••••••••

5. அவர்கள் குடும்பத்தில் அவன் தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பாவும் அம்மாவும் படிக்காதவர்கள். தன் ஊரை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். ஊருக்குள் வேலை பார்ப்பவர்கள். ஒரே மகன். ஆனால் மகனை மகள் போலவே வளர்த்துத் தொலைத்து விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்து வேலை உடனே கிடைக்கும் என்று பாலிடெக்னிக் கொண்ட போய்ச் சேர்த்தார்கள். யாருடனும் பேச மாட்டான். வீட்டுக்கு ஓட்டமாக ஓடி வந்து விடுவான்.

மறுபடியும் ஈஈஈ யில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உறவுக்கூட்டம் இதற்கு உதவியது. படித்து முடித்து நான் பரிட்சை எழுதி பெரிய இடத்திற்குச் சென்று விடுவேன் என்று சொன்னதை நம்பி கடன் வாங்கிக் காசை இறைத்தார்கள். ஆனால் திருச்சி தாண்டி வேறு ஊர் என்றால் செல்லமாட்டான். ஒரு முறை சென்னை சென்று விட்டு வந்தவன் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தானாம். காரணம் கேட்ட போது சென்னையில் பேசுற தமிழே புரியவில்லை என்றானாம்.

இப்போது நான் ஊரே விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்ற சொல்லி எல்ஐசி முகவராக மாதம் பத்தாயிரம் வருமானத்தில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். பெண் கிடைப்பது தான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கின்றது என்றார் அம்மா.

இதை எழுதுவதற்குக் காரணம் நீட் பரிட்சை எதிர்ப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்கள் மூலம் சுரண்டப்பட்டு இருக்கின்றது என்று.

அப்படியே பி.ஈ பக்கம் வண்டியைத் திருப்பினால் ஒரு மாணவர் குறைந்த பட்சம் 4 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கடந்த பத்தாண்டுகளில் படித்து முடித்து வேலை இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றவர்கள், இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், முழுமையாக முடிக்காதவர்கள் என்பவர்களின் பட்டியலிட்டுப் பார்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் யார் வீட்டுக்குச் சென்று இருக்கும் என்பதனை ரயிலில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.

தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை நான் மேலே சொன்னவர்கள் அசிங்கமாகத்தான் உச்சரிக்கின்றார்கள் என்பது தனிச் செய்தி.

ஊருக்கு வெளியே பொட்டைக்காடு. பாதிப் பட்டா நிலம். மீதி தானாகவே இருக்கும் செல்வாக்கு வைத்து சுரண்டிக் கொண்ட நிலம். முதல் வருடம் ஒரு தளம். கல்லூரியின் கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சம்பளம் தகுதி குறித்தும் கவலையில்லை.

ஐந்து வருடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் போன்ற வளர்ச்சி. அடுத்தச் சில வருடங்களில் கிளைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று தொடங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 500 ஏக்கர் வரைக்கும் சுனாமி போலச் சுருட்டியவர்கள் அனைவரும் இன்று இந்நாள் முன்னாள் அமைச்சர்கள். அமைச்சர்களுக்கு உதவியவர்கள், சொந்தக்காரர்கள் என்று பட்டியலிட்டால் தமிழகத்தில் ஃபேர்ப்ஸ் பத்திரிக்கைக்குத் தெரியாத பத்தாயிரம் பேர்களாவது தமிழகத்தில் இருப்பார்கள்.


தமிழகத்தில் கல்வி என்பது முழுமையாகச் சுரண்டல் தொழிலாக மாறி விட்டதால் முன்னே பின்னே இருக்குமே தவிர ஒருத்தனும் மாணவர் நலன் என்று பேச யோக்கியதை இல்லாதவனாகத்தான் இருக்கின்றான்.

இப்போது தான் அண்ணா பல்கலைக்கழகம் பி.ஈ படிப்பைக் கணினி வழியே ரேண்டம் எண் வழியே முறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்ததும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அலறினார்கள். காரணம் அடிமடியில் சூடு வைத்தால் பொறுக்க முடியுமா?

பாவம் வசதியில்லாதவர்களும், கிராமப்புறம் சார்ந்த மாணவர்களும். உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் அவர்களைத்தான் நேரிடையாக மறைமுகமாகத் தாக்குகின்றது. அவர்கள் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றுகின்றது. அவர்கள் மீண்டு வருவதற்குள் இங்கே மாண்டவர்களின் எண்ணிக்கை பட்டியலிட்டு பார்க்க முடியாத அளவிற்கு நீண்டதாக இருக்கப் போகின்றது.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ....9944066681

நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள  பெண்களுக்கு கணவர் தவறு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து பிரிந்து வாழும் சூழலில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா?இல்லையா?

நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள ஆண்களுக்கு பெண்ணுக்கு கணவரை பிடிக்காத காரணத்தால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து வாழும் சூழலில் பாதிக்க பட்ட அந்த ஆண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா ? இல்லையா ?
திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் (கார்த்தி ஸ்மார்ட் )

என் அன்பு தம்பியை கார்த்தி ஸ்மார்ட் பார்த்தது ..திருப்பூர் கீர்த்தி வீரர் எத்தலப்ப மகாஜன சங்கம் மீட்டிங்கில் முதன் முறையாக சந்தித்தேன் ..நம் சொந்தங்களை தேனீ ,போடி ,தூத்துக்குடி ,ஜமீன் உசிலம்பட்டி ,திருப்பூரில் சந்திப்பதற்கு தளி எத்தலப்ப நாயக்கரின் ஆசிர்வாதத்தால் புது சொந்தங்களை ஒருங்கிணைத்தது மிக்க மகிழ்ச்சி ..அதுவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் முருகராஜ் ,கரப்பாடி மாப்பிளை கார்த்திகேயன்,ஜெகவீரபாண்டியன் மாமா , கம்பளத்து காவலன் செல்வம் என்கிற தாதா நாயக்கர் ,முத்துசாமி ,முத்துராஜ் ,முருகன் அவர்களின்  பங்கு வாழ்வில் மறக்கமுடியாதது ..நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் ,அறக்கட்டளையின் விளம்பரம் இல்லாமல் உதவிகளை செய்து வருவபர் ...அவரின் அழகான புன்னைகையில் முதல் சந்திப்பிலேயே நீண்ட வருடம் பழகியது போன்று நம்முளடன் இணைந்துவிடுவார் ..தூத்துக்குடி பகுதியில் எந்த ஒரு விழா என்றாலும் நமக்கு அழைப்பு வந்துவிடும் அதுபோன்று தான் ராஜ்குமார் அப்பணசாமி மாப்பிள்ளையின் புதுச்சொந்தம்  கிடைத்தது ..அதுவும் முகநூல் 5 வருட நட்புகள் ...இன்று கம்பள விருட்சம் போன்று ...கொடுங்கியம் மேகானந்தன் ,மாப்பிள ஷண்முகம் ,தம்பி யோகராஜ் ,தம்பி சீனு அக்கினி குர்ரம் பாய்ஸ் யாக ,விருட்சத்தின் விதைகளாக உடுமலைப் பகுதியில் புது சொந்தங்களாக திருமண வாழ்க்கையில் அடி எடுத்துவைக்கும் ...B கார்த்திகேயன் ,R .சங்கீதா ..மணமக்களுக்கு ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது ....

வரும் 17/6/2018 ஞாயிற்றுக்கிழமை  
திருமணம் நடைபெறும் இடம்:
உடுமலைப்பேட்டை to ஆனைமலை ரோடு கரட்டுமடம்
ஸ்டாப்: கரட்டுமடம் 
மண்டபம்: நாச்சிமுத்துகவுண்டர் சரோஜினியம்மாள் திருமண மண்டபம் கரட்டுமடம்








வியாழன், 14 ஜூன், 2018

இன்றைய தலைப்பு ...நல்லுறவு மேலாண்மை ....எனது பணியிலிருந்து தொடர்கிறேன் ....

முதலில் கட்டுநர்களுக்கும் பிற தொழிலதிபர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கட்டுநர்களுக்கு ஏன் தனித்தன்மையான மேலாண்மை அம்சங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
எல்லாத் தொழில்களிலுமே பொருள் உற்பத்தி செய்யப் படுகிறது நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. ஆனால், நுகர்வோரும் பொருள் உற்பத்தி செய்வோரும் நேருக்கு நேர் பார்த்து அறியாதவர்களாகவே இருப்பர். விவசாயம், ஆடை உற்பத்தி, உணவுப்பொருள் தயாரிப்பு, சூப்பர் அங்காடி, திரைப்படம் உருவாக்கம் என எதை எடுத்தாலும் உருவாக்கு வோருக்கும், நுகர்வோருக்கும் இடையே விற்பனை என்கிற களம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர்கள் உருவாக்கும் பொருட்களின் தரத்தின் பற்றி விற்பவர்கள் தான் கவலைப்படவேண்டும். ஏனெனில், அவர்கள் தான் நேருக்கு நேர் நுகர்வோரை சந்திப்பவர்கள்.
அதாவது, தயாரித்தலும், மார்கெட்டிங்கும் தனித்தனி பிரிவுகளாக மேற்கண்ட தொழில்களில் இயங்கும். ஆனால், கட்டிடத்தொழிலில் விற்பனை என்கிற தனிக்களம் கிடையாது.
இங்கு பொருள் என்பது வீடு, அல்லது கட்டுமானம். எங்கு தயாரிக்கப்படுகிறதோ அல்லது உருவாக்கப்படுகிறதோ அங்கு தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதுதான் விற்பனைக்களம்.வீடுகளை உருவாக்குபவர்களே அதை விற்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும், மேம்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக கட்டுமானத்தொழில் என்பது மற்ற சாதாரண தொழில்களைப் போல சீசன் டைம் தொழில் அல்ல.மற்ற பொருட்களை ஆண்டுக்காண்டு, மாதந்தோறும், நாள்தோறும் நுகர்வோர்கள் வாங்குகிறார்கள் என்றால் ,
நமது பொருள் (வீடு) ஒரு தலைமுறைக்கும் ஒன்று விற்பனையானாலே அதிசயம்.வீடு என்பது வாழ்விடம் என்பதால் அதை கட்டித்தரும் கட்டுநர்களும், புனிதமிக்கவர்களாக, நல்லவர் களாக இருக்க வேண்டும் என இச்சமூகம் விரும்புகிறது.
நல்ல கட்டுநர் என்பதற்கு இச்சமூகம் பல்வேறு காரணிகளை வைத்திருக்கிறது.
குறைவான விலை, தரமான வீடு, சொன்ன நேரத்தில் வீடுகளை ஒப்படைத்தல், ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதமின்மை, மறைமுக கட்டணங்கள் வசூலிக்காமல் இருத்தல், சொன்னபடி குறிப் பிட்ட பிராண்டட் கட்டிடப் பொருட்களையே உபயோகித்து கட்டுதல், வேண்டிய சிறு சிறு மாற்றங்களை உடனுக்குடன் செய்துதருதல், விதிகளை மீறாமல் வீடு கட்டுதல், வீடுகளை கட்டி முடித்த பின்பும் சிறு சிறு மரமாத்து வேலைகளை செய்து தருதல், விற்பனைக்கு பிந்தைய சேவையை 24x7 செய்தல், லொகேஷன் காரணமாக வீட்டின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருத்தல், கட்டுநர்கள் - வாடிக்கையாளர்கள் உறவு தாண்டி குடும்பத்துடன் நல்லுறவு பேணுதல் என சகல விஷயங்களும் ஒரு கட்டுநருக்கு ஒன்றிணைந்து இருந்தால் தான் அவரிடம் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறார்கள் நுகர்வோர்கள். அவர்கள் வீடு வாங்குவதற்கு செலவழிக்கிற 30, 40 லட்ச ரூபாய் என்பது அவர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் தான் இத்தனை எதிர்பார்ப்புகள், இத்தனை விசாரணைகள்.
இதை எல்லாம் கனக்கச்சிதமாக நிறைவேற்றித் தர வேண்டுமென்றால் ஒரு கட்டுநருக்கு அஸ்திவாரமாக விளங்க வேண்டியது அவரது அலுவலகம். தனது தனிப்பட்ட உதவியாளர் முதல் நிர்வாக மேலாளர், துணை மேலா ளர், விற்பனை அதிகாரி, சேவை அதிகாரி, கணக்காளர், காசாளர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர் வரை உங்களுக்காவும், உங்கள் நிறுவனத்துக்காகவும் உங்களது விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்காகவும் சிரத்தையுடன் பணியாற்றக் கூடிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் கொண்ட ஒரு அலுவலகம் உங்களுக்கு இருந்தால் தான் சாத்தியம்.
விற்பனை முடிந்த பிறகு ஒரு வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வதில் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்றால், போட்டி.
பொதுவாக வீடு விற்பனை என்பது ஒரு தொடர் சங்கலியைப் போன்றது. 100 சதவீதம் மனதிருப்தியடைந்த உங்கள் வாடிக்கையாளர் கிட்டத்தட்ட உங்களது மார்கெட்டிங் மேலாளருக்கு இணையானவர். உங்களுக்காக அவரது உறவினர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோரிடம் பரிந்து பேசுவார். சொல்லப்போனால், உங்களது மார்கெட்டிங் அதிகாரியை விட இவர் சிறப்பாக பேசுவார். சம்பளத்துக்காக பேசும் பேச்சில் ஒரு வேலை பொய் கலந்து இருக்கலாம். ஆனால், உங்கள் சேவையில் திருப்தியுற்ற ஒரு வாடிக்கையாளர் பேசுகையில் சத்தியமே மேலோங்கி நிற்கும்.
அதனால் தான் எல்லா கட்டுநர்களும் தங்கள் இணையதளங்களிலும், புரவுrர்களிலும் டெஸ்டிமோனியல் என்கிற வாடிக்கையாளர் கருத்துகளை கல்வெட்டுகளாக கருதுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து 4,000 திருப்தியுற்ற வாடிக்கை யாளர்களை வைத்திருக்கும் கட்டுநர்கள் தங்கள் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளின் விற்பனைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.
அப்படியயனில் இத்தனை சிறப்பு பெற்ற வாடிக்கையாளரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஆகவே, ஒரு புராஜெக்ட்டை திட்டமிட்டு, மேற்கொண்டு, நிறைவேற்றுவது என்கிற மூன்று பெரிய பணிகளுக்கு மட்டுமல்ல, புராஜெக்ட்டை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்து தக்க வைத்துக் கொள்ளமட்டுமல்ல, சமூகத்திலும், துறையிலும் போட்டியாளருக்கு மத்தியில் நற்பெயர் பெற்று விளங்குவதற்கும் ஒரு அலுவலகம் சிறந்த பங்காற்றுகிறது என்பது இதன் மூலம் உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். எனவே, இனி வரும் அத்தியாயங்களில் ஒரு அலுவலகத்தின் கட்டமைப்பு, செயல்பாடு போன்ற பல்வேறு நிர்வாக காரணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது பற்றி அறிந்து காெள்ள வேண்டும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...Home Loans...9944066681

புதன், 13 ஜூன், 2018

அருமையான சந்திப்பு ....திரு .திருமுருகன்...பழனி

மதியம் அழைப்பு திருமுருகன் மாமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு .. ....குரலை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை ...பழனி செல்லும் பொழுது பார்த்து பேசிவிட்டு வருவது உண்டு... மகள்  திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு வந்துஇருந்தார் ..உடுமலை யில் அவரின் நண்பர்கள் வட்டம் பெரியது ...அவரின் நண்பர்கள் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து கொண்டுஇருக்கிறார்கள் ...தேனீ பள்ளியில் சிறுவயது நண்பர்கள் .
இன்னும் சில பேர் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் ..எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ..பணப்பரிவர்த்தனை பணியும் ,ரியல் எஸ்டேட் வியாபாரமும் ...அவருக்கு பிடித்த நாடக நடிகராகவும் தற்பொழுது தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டு உள்ளார் என்று செய்தி சொன்னார் ..எனக்கு நாடக தொடர் அதிகம் பார்ப்பதில்லை ...அவர் சொன்ன நாடக தொடர் பார்த்தது இல்லை ..சரவணன் மீனாட்சி தொடர் என்று சொன்ன ஞாபகம் ...நமது சொந்தங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அவருடன் இருந்த சிலமணி நேரங்கள் ..பள்ளிகால வாழ்க்கை தன் நண்பர்களுடன் மலரும் நினைவுகளாக பகிரும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது...தொடரும் பந்தங்கள் ....
என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...  

செவ்வாய், 12 ஜூன், 2018




Book on chieftain who fought along with Kattabomman released
By TOI | Monday | 21st May, 2018



“Messengers could had been sent by the British after it came to know that Ethalappar had lead chieftains in the second Panchalankurichi war. The event was attended by minister for animal husbandry ‘Udumalai’ K Radhakrishnan and collector K S Palanisamy. Ethalappar was believed to have died after suffering injuries in a bomb attack in 1801.The book — ‘Then Kongunattin Mudhal Viduthalai Por’ — was written by M Mathiazhagan, professor of Economics department in Udumalpet Government Arts College. “This is the first time the government is recognizing Ethalappar,” he said. Katie was one of the messengers,” said Arulselvan.👍🌷🌷🌷🌷🌷

திங்கள், 11 ஜூன், 2018

தளி எதுலப்ப மன்னரின் ...அன்புப்பரிசு ...

கடந்த ஒருவார காலமாக ...அரசுத்துறை சார்ந்தவர்கள் வரலாற்றுநூலை வாங்குவதில் அதிகம் வாசிக்க துவங்கியது மிக்க மகிழ்ச்சி ...இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒருமுறை பதிவிடுகிறேன் ...

நெடுஞ்சாலை துறையில் பணியாற்றுக்கொண்டுருக்கும் ..திரு .முத்துராமன் அவர்களுக்கும் ,உடுமலைப்பேட்டை தலைமை தாசில்தார் ,தளி கிராம நிர்வாக அதிகாரி ,திருமூர்த்தி மலை கிராம நிர்வாக அதிகாரி ..ஆகியோர்களுக்கு வழங்கியது மகிழ்ச்சி ...எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலுக்கு இவர்களின் பங்கு அளப்பறியாதது ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

யாராவது ஒருவர் ..கம்பள விருட்சம் டிரஸ்ட் இருக்கா...செயல்படு தா ...கேட்ட ...முதல் சாட்டை ...உங்களுக்கு தான் ...


Sivakumar Kumar is feeling happy.
சென்றவருடம் ..மூணாறு செல்லும் வழியில் தளஞ்சி மலைப்பகுதியில் பயணம் ...தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலுக்கு சென்றபொழுது ...வன அரசர்களின் குழந்தைச்செல்வங்களுடன் ....

ஞாயிறு, 10 ஜூன், 2018

இன்று ஞாயிறு இனிமையான முத்தான மூன்று நிகழ்வுகள் ...
அன்புக்கும் ..மரியாதைக்கும் உரிய மக்கள் விரும்பும் எழுத்தாளரை நண்பராக பெற்றது ..பெருமையே ....நன்றி ..

1.பொதுப்பணிக்கு ....உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில்  நூலக வாசகர் வட்ட  துணைத்தலைவராக தேர்வு
2.சமூக நல்லுணர்வு ...இன்று இப்பத்தார் நேன்புக்கு சென்று வந்தது ..
3.இன்று நமது கோவில் வரலாற்று நூலுக்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மூலம் கலந்துத்தாய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டது ..

அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681


சிஞ்சுவாடி ..பணிகள் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ..முழு ஈடுபாட்டுடன் ..முன்னெடுத்து செய்துகொண்டுள்ளார் ..தொலைபேசியில் தொடர்பு கொண்டுகேளுங்கள் ..வாழ்த்துக்கள் ..

ஈஸ்வரன் மாப்பிள ......கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,பத்திரிகையாளர் எழிலன் ,வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,ஆய்வாளர் அருட்செல்வம் ..இதில் இதில் கலந்துகொண்டவர்கள் ..முன்னாள் அமைச்சர் ..சண்முகவேல் அய்யா அவர்களின் நட்பு இன்று கிடைத்தது ..நமது தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போரில் நமது தளி எதுலப்ப மன்னருக்கு உற்ற தோழனாக இருந்து ..தன் உயிரை கொடுத்த இஸ்லாமியரின் ஈகை பற்றி வரலாற்று ஆசிரியர் மதியழகன் அவர்கள் பேசியது மிக அருமையான மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது


மதிப்புக்கும் மரியாதைக்குரிய எனது நண்பர் ..குறிச்சிக்கோட்டை ...வருவாய் ஆய்வாளர் ..விஷ்ணு ..அவர்களின் பதிவுரை ..
Intro
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட தளி கிராமத்தினை மையமாக கொண்டு கி.பி 1750 - 1801 வரை ஆட்சி புரிந்து ,ஆங்கிலேயர்களால் அழித்து ஒழிக்கப்பட்ட தளி எத்தலப்ப நாயக்கர் எனும் சிற்றரசரின்வரலாற்றினை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன் வைத்துள்ளார். நான் பணிபுரியும் உள் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என்பதால் பணி நிமித்தமாக நான்செல்லும் பழங்குடி யினர் வாழ்ந்து வரும் மலைப்பகுதிகளிலோ,திருமூர்த்தி அணையை ஒட்டிய பகுதிகளிலோ, வயல்களிலோ கற்சிலைகளாக , கட்டிட எச்சங்களாக ஆயிரம் கதைகளையும், தன்னுள் சோகங்களையும் சொல்லி கொண்டு நின்று கொண்டிருக்கும் , இப்புத்தகம் தளி எத்தலப்பர் எனும் சிற்றரசரின் வளர்ச்சி,ஆட்சி முறை மற்றும் அழிக்கப்பட்ட துயரம் பற்றி பேசுகிறது. வாசிப்பு ஆர்வம் படைத்த வாசகர்கள்8838572584 -அருட்செல்வன் அவர்களை அணுகி பெறலாம்




வியாழன், 7 ஜூன், 2018


29 years of togetherness. Thanks GOD.
29 வருட திருமண தின வாழ்த்துக்கள்


என் அருமை கம்பள விருட்சம் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ...கொடுங்கியம் ஷண்முகம் மாப்பிளைக்கு ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

கம்பளத்து இளவரசிக்கு வாழ்த்துக்கள்  .....
 எங்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளராக பொறுப்பு வகிக்கும் .எங்கள் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...என்ன திடீர்னு வாழ்த்துக்கள் என்று நினைக்க வேண்டாம் ..

நமது கம்பள சமுதாயத்தில் பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவைத்த பெற்றோர்க்கு எங்களின் வாழ்த்துக்கள்..வரும் சனிக்கிழமையன்று நடைபெரும் நீதிபதி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் எங்கள் குல செல்வி .சிவரஞ்சினிக்கு வாழ்த்துக்கள் ..நம் சமுதாயத்தில் எந்த ஒரு பொறுப்புக்கும் வராத இக்காலத்தில் ..உறுப்பினராக வந்து சேர்ந்து ..அவர்களின் செயல்பாட்டால் ..தற்பொழுது துணை செயலராக தன்னம்பிக்கையுடன் ,அவருடன் செயல் திட்டங்களை செயல்படுத்தி வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்... தேர்வில் வெற்றி பெற பெருமையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...

குறிப்பு ...இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் வீட்டு ராஜா ..ஷியாம் சுதிர் சிவக்குமார் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு நீதிபதி தேர்வுக்கு வாழ்த்துத்தெரிவித்தபொழுது ...