ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மாம்ஸ ..அருமையான புகைப்படம் ....மஞ்சள் துண்டுடன் ..விவசாய நிலத்தில் இருப்பது நம் சமுதாயத்தின் முனேற்றதற்கு நல்ல அறிகுறி ..அருமையான விவசாய களப்பணி ..வாழ்த்துக்கள் ...எங்க அக்காவை (குஜ்ஜ பொம்மு )கல்யாணம் பண்ணுனதால ..இந்த காணி நிலத்தை  காப்பாற்றியிருக்கிறார்கள் ..


அருமையான பதிவு ....இந்த கூட்டத்திற்கு என் வேலைப்பளு காரணமாக செல்ல இயலவில்லை ..இன்று திருப்பூரில் நடந்த நிகழ்வுகளை ...ஒரேதடவை ...ஒரு கட்டுரையோடு ..முக்கியத்தலைவர்கள் பேசியது ..கூட்டம் ..ஒரு செய்தி மாதிரி எல்லோரும் பார்த்து பயனடைவார்கள் ..வீடியோ பதிவும் ..நன்றக இருக்கும் ..என் தனிப்பட்ட கருத்து ...
திரு .ஷாஜஹான் ...உடுமலைமருமகன் ...மறைந்த சட்ட அமைச்சர் சாதிக் பாஷா ..அவர்களின் உறவினர் ..தற்பொழுது நியூடெல்லி..செய்தியாளர் ..transalater ...டெல்லி தமிழ்ச்சங்க பொருளாளர் ..யாராவது உதவி என்று கேட்டால் ஓடிஓடி வருபவர் ..சென்னை மழைவெள்ளம் 2015..இவரின் பணி மதிப்பில் அடங்காது ...பிரதமர் அலுவுலகம் தொடர்புகொண்டு ..சென்னை மழைவெள்ளம் அப்போது ..தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு எல்லா டோல் கேட்டிலும் கட்டணம் இல்லாமல் போகுவரத்துக்கு உதவியவர் ..
நான் ஷாஜி சார்...என்று இவரை அழைப்பேன் ..இவரின் மனைவியாரின் தந்தை என் வரலாற்று ஆசிரியர் திரு .முல்க் அவர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி -உடுமலைப்பேட்டை )டெபாசிட் பற்றி ஒரு அருமையான பதிவு ...

சனி, 9 டிசம்பர், 2017

இன்றைய தேடல் எந்த ஊரு மாப்பிள .....மனோகர் மாப்பிள ...இந்த மலைக்கோவிலின் பின்பிறம் ...ஒரு குளம் இருக்குமே மாப்பிள ...அந்த குளத்தின் அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த மதில் சுவர் இருக்குமே ...தளி எதுலப்பர் சிலை இருக்குமே மாப்பிள ...அருமையான கோவில் ..இந்த மலைக்கோவில் திரைப்படங்களில் கூட காட்சி படித்தியுள்ளார்கள் ...இந்தமலையின்மேல் இருந்து பாரத்தால் அற்புதமான தென்னை மரங்கள் பச்சை உடுத்தி போன்று இருக்கும் மாப்பிள ..அருமையான தரிசனமாக உங்களுக்கு இருந்துஇருக்கும் ...இன்றைய பிறந்த நாளில் ...வாழ்த்துக்கள்



வெள்ளி, 8 டிசம்பர், 2017


உடுமலைப்பேட்டை நமது மாப்பிள்ளை ..C .மனோகருக்கு அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..மாப்பிள்ளை மனோகர் ..படித்தது உடுமலைப்பேட்டை ருத்திர வேணி பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் படித்து ..தன் சுயசார்புடன் தற்பொழுது
CM Engine service.... என்ற நிறுவனத்தை தொடங்கி ...நல்லமுறையில் தமிழ்நாடு ,கேரள ,கர்நாடக ஆகியபகுதிகளில் சென்று நல்லமுறையில் பணிசெய்து கொண்டுள்ளார் ...நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முனைவோரக இருப்பது நமக்கு பெருமையும் கூட ...நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ...நம் இளைய சொந்தங்களுக்கு தொழில் தொடங்கவோருக்கு ஒரு முன்னோடியாக வழிகாட்டுவார் ....

15 kva to 750 kva kirloskar  engine top overhauling. 

Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only . 

Service Engineer...Mr.Manoharan

Contact Number-9865024743 ...என் இனிய மனோகர் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

வியாழன், 7 டிசம்பர், 2017



திருமதி.ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளை
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )
ராஜாவூர் -உடுமலைப்பேட்டை

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...நமது அறக்கட்டளைக்கும் தன்னால் இயன்ற அளவு உறுப்பினர்களை சேர்த்தும் ..தன் சுற்றியுள்ள கிராமங்களில் பொது தளத்தில் பணிபுரிந்துகொண்டு சேவைமனப்பான்மையோடு நம் சொந்தங்களுக்கும்...அரசு சுயஉதவி குழுக்கள் மூலம் ,அரசு 100 நாள் திட்டத்தின் மூலமும் ..வங்கி சார்ந்த பணிகளை உற்சாகத்தோடும் பணியாற்றி கொண்டுள்ளார்.திருமதி ஜெகதீஸ்வரி  அவர்களுக்கு பக்கபலமாக கணவர் ஜோதிமுத்து அவர்கள் மளிகை கடையும் நடத்தி கொண்டு நம் சமுதாயத்தில் சிறு தொழில்முனைவோராக திகழ்வது மிக்க மகிழ்ச்சி கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமத்தில் தக்க ஆலோசானைகள் வழங்கி நம் வளரும் இளைய சொந்தங்களுக்கு  சுயதொழில் மூலம் வழிகாட்டியாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது  ..வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
www.kambalavirucham.in 
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை

புதன், 6 டிசம்பர், 2017

அருமையான போஸ்டர் செல்வம் அண்ணா  ....திருப்பூர் மாநகரில் நம் கம்பள சமுதாயத்தின் வலிமையை காட்டுவோம் ...பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்து குடியிருக்கும் திருப்பூரில் மாநகரில் சொந்தங்களை ஒன்று திரட்டுவோம் ...

திருப்பூர் வாழ் நமது சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள்  அனைவருக்கும் வணக்கம்🙏🙏..
வருகின்ற 03/01/2018 புதன்கிழமை அன்று நமது தேசதலைவர் மாவீரர் வீரபண்டிய கட்டபொம்மு நாயக்கர் அவர்களின் 259 வது பிறந்தநாள் வர இருக்கின்றதால்...
அத்தினத்தில் அவரது வீரத்தையும் நமது சமுதாய ஒற்றுமையை பரைசாற்றும் வகையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அமைந்துள்ள கட்டபொம்மு நாயக்கர் திடலில் அவரது பிறந்தநாளை நமது திருப்பூர் மக்கள் அனைவரையும் திரட்டி விழா எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நமது தொட்டியமன்னரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில்வருகின்ற 10/12/2017 ஞாயிறு அன்று நடைபெற உள்ளதால் நமது பகுதிவாழ் சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடத்துவதற்கு நல் ஆலோசனைகள் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்..🙏🙏🙏🙏


திங்கள், 4 டிசம்பர், 2017

செந்தில் சார் ...விவசாயிகளுக்கு நேரம் எங்கே உள்ளது ..என்று கேட்கறீர்கள் ...எனக்கு கோவை ,திருப்பூர் ஈரோடு ..கொங்கு பகுதியில் கவுண்டர் சமுதாயம் ..அதிகம் நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டு ...தங்களின் வேலையும் பார்த்துக்கொண்டு ..கிடைக்கும் சில மணி நேரங்களில் ..தோட்டத்தில் என்ன நடக்கிறது ..எத்தனை தேங்காய் விழந்தது ..என்று எண்ணிக்கொண்டுஇருப்பார்கள் .. என் NRI வாடிக்கையாளர் ..இப்போதும் நியூஜெர்ஸி லிரிந்து வீடியோ கான்பரென்ஸ் மூலம் தோட்டத்தில் விளையும் பயிர்களின் நிலையை அறிந்துகொண்டுள்ளார் ..எப்போது வேண்டும் என்றலும் தன் சொந்த நிலத்திற்கு வந்துவிடவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் ...நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் கூட

இன்னொரு வெளிநாட்டு வாடிக்கையாளர் ...தோட்டம் வாங்கவதற்காக தன் வெளிநாட்டுப்பணியில் இருந்து மாறுதல் வாங்கவந்து ...தான் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ...40 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி அதில் தோட்டம் வாங்கி விட்டு இப்பொழுது வெளிநாட்டு பணிக்கு சென்றுவிட்டார் ..அடமான கடன் ..பர்சனல் லோன் வங்கியில் தரமாட்டார்கள் ..வாடிக்கையளரின் நோக்கம் ..preplanning ..எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் ...நான் அவர்களுக்கு உதவியது பெருமை கொள்கிறேன் ...

எந்த ஒரு செயலுக்கும் ..மூலதனம் தேவை ...தனிநபரால் இயலாது ..அதற்கு தான் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை மூலம் நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்கு நல்ல ஆலோசனைகளை அறக்கட்டளையின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் வழங்கி வருகிறார்கள் ..இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறோம் ...



சனி, 2 டிசம்பர், 2017


Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
திருகார்த்திகை தீப ஒளி திருநாளில் வரத்துடன் சேர்த்து வரலாற்றையும் வேண்டி ஓர் தேடல் எத்ததைய திட்டமிடலும் இன்றி எளிதாய் தொடங்கியது இன்றைய பயணம்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கரப்பாடி அமணலிங்கேஷ்வரர் ஆலயம் முதல் தரிசனமாக அமைந்தது
ஆற்றங்கரையோரமாக அமைந்த அமரர் வாழ்ந்த இடங்களில் அமையும் சிவாலயங்களே ஓர் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமையும்
அத்தகைய வகையில் கோவிலை ஒட்டிய தடுப்பனையும் அதை சார்ந்து ஓர் முன்னோரின் திருபூத உடல் புதைந்த இடமும் முன்பொருகாலத்தில் ஆறு வாழ்ந்தை தெளிவாக சுட்டிக்காட்டியது
ஓர் கோவில் கட்டப்படும் அமைப்பும் அது சார்ந்த கணக்குகளும் பிற குறியீடுகளும் அக்கோவில் எழுப்ப பயன்படுத்திய கற்களிலேயே அமைத்து முழுமையான வெளிப்புறம் முழுதும் வட்டெழுத்துக்கள் கொண்ட கல்வெட்டே பல நூறு ஆண்டுகள் பழமையானது ஆலயம் என்று விழிதிகைக்க வைக்கிறது
கோவில் அமைந்திருக்கும் இடமும் அங்கு நிலவிய நிசப்தமும் ஆத்மதிருப்தி நிறைந்ததாய் விளங்கியது
அடுத்ததாக நாம் கண்டது
மழைவேண்டி வழிபடும் வழிபடும் அண்ணப்பையன்சாமி கோவிலும் கல்திட்டையும்
சித்திரை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுப் என்ற கூடுதல் தகவலுடன்
அடுத்ததாக சென்றது
தற்போது வரை ஆவலப்பட்டி ஜமீன் வம்சாவழிதார்களின்
நேரடி கட்டுப்பாட்டில் அமைந்த
கரப்பாடி காளியம்மன் கோவில்
உக்கிரமாய் அமைந்த சாக்த வாழிபாடு செய்யும் அம்மனாக காட்சியளிக்கும் காளியம்மனை மேற்புறமாக வைத்து சாந்த முகம் கொண்ட அம்மனாக புதிய வடிவம் கொடுத்து இன்றுவரை ஊர் கூடி வழிபட்டு தேரோடும் கோவிலாக காட்சியளிக்கிறது
இந்த ஆலயம்
இக்கோவிலில் இருந்து பார்த்தால் அமணலிங்கேஷ்வரர் ஆலயம் தென்படுவது மற்றும் ஓர் கூடுதல் சிறப்பாக அமைந்தது
வழிபாட்டுடன் சேர்த்து வரலாறும் வேண்டியதால் அடுத்ததாய் சென்றது
ஆவலப்பட்டியில் அமைந்த ஆவல்ஜோத்தமுத்தையன் திருக்கோவில்
குஜ்ஜபொம்மு குலத்தோரின் குலதெய்வமாய் அமைந்த மாலையும் அதன் அருகில் அமைந்த ஆவல் ஜோத்தமுத்தையன் சிலையும்
மெய்சிலிர்க்க வைத்ததாய் அமைந்தது
அக்கோவிலுக்கு மேற்புறம் மேலும் ஓர் ஆலயம் அமைந்திருப்பது அறிந்து அங்கும் சென்றோம்
வல்லக்கொண்டம்மன் நினைவாக முன்னோர்கள் வழிபட்ட இடமாய் அது அமைந்ததாக இருந்ததை தெரிந்து மேலும் ஓர் ஆச்சர்யமாகவே அமைந்தது
அனைத்து வழிபாடுகளும் முடிந்து பாசம்கொண்ட தங்கை நேசமாய் கலந்தளித்த தேநீர் புது உற்சாகத்தை ஊட்ட
அடுத்ததாய் பயணப்பட்டோம்
ஆதிகுலதெய்வமான ஹீ வல்லக்குண்ட நாத சுவாமி ஆலயம் நோக்கி
ஆயிரமாயிரமாய் பணம் செலவழித்தாலும் வாங்க முடியா ஆத்ம திருப்தி நிறைந்ததாய் அமைந்தது இன்றைய பயணம்
உடன் வந்த சொந்தங்களுக்கும்
உபசரித்த நெஞ்சங்களுக்கும்
கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் காணிக்கையாக!!!
இன்று அருமையான கார்த்திகை தீபத்திருநாள் பயணம் வெகு அருமை

மாப்பிள்ளைகள் ..கார்த்தி sr ,செந்தில்ராம் ..தம்பி பிரபாகரன் ,கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில் தரிசித்துவிட்டு ,அண்ணப்பையன்சாமி கோவிலில் தரிசித்துவிட்டு , ஆவல்ம்பட்டி ஜமீன்..கரப்பாடி ஜமீன் ,கொண்டேகவுண்டம்பாளையம் ஜமீன் ,ஜோத்தம்பட்டி ஜமீன் அடிவள்ளி ஜமீன் ,ராஜாவூர் ஜமீன் (விவேக் ,பாலமுருகன் )..நம் ஜோத்தமுத்தையன் சாமி கோவில் ,கரப்பாடி காளியம்மன் கோவில் ,குலதெய்வம் கோவில்களின் தீபத்திருநாள் வழிபாடு அருமையான பயண திருக்கார்த்திகை வழிபாடு மிக்க மகிழ்ச்சி தந்தது .. ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் நமது வல்லகொண்டம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டது வெகுசிறப்பு..அடுத்தவருடம் இன்னும் அறக்கட்டளை டிரஸ்ட் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று முதல்படி எடுத்தவைக்கப்பட்டது ..

வெள்ளி, 1 டிசம்பர், 2017

தம்பி தமிழரசன் தம்பதிகளுக்கு ..திருமணநாள் வாழ்த்துக்கள்

தம்பி தமிழரசன் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு மீதி இருக்கும் நேரத்தில் ..வாழ்க்கைச்சக்கரத்தில் சுழலும் சக்கரத்தில் காற்றின் அளவு (மனைவி )சரியாக பார்த்துக்கொண்டால் தான் வாழ்க்கைச்சக்கரவண்டி மிதவேகத்துடன் செல்லும் ...சிறிய அளவில் ஹாலோ பிளாக் வியாபாரம் செய்து தற்பொழுது வருமானம் வராது என்றாலும் ..உற்பத்தி ,விற்பனை ஆலோசனைகள் வழங்கி தற்போது இருக்கும் வியாபார நிலவரம் கருத்தில் கொண்டு மெதுவாக அடியெடுத்து நகர்ந்து செல்வது .மற்றும் கம்பள அறக்கட்டளையின் பொருளாளர் பதவியும் நிர்வகித்துக்கொண்டு,தம்பி அறக்கட்டளை வங்கி கணக்கு எண் தொடங்கவதற்கு வரும்போது தன் செல்ல மகளுடன் தோளில் சுமந்து  வங்கிபணிக்கு முடியும் வரை பொறுமை காத்தது அவரின் பொருளாளர் பதவியின் மதிப்பை அதிகப்படுத்தியது வாழ்த்துக்கள்   ..அருமையான சொந்தங்களின் துணையோடு ..நண்பர்களோடு .குட்டி தேவதையின் பணிகளை  பொறுப்பாக பார்த்துக்கொண்டு ..இந்தகாலக்கட்டம் மிகவும் சிக்கலானது ..அதை அழகாகக தன் மனைவியின் ஒத்துழைப்போடு நகர்ந்து செல்லும் தம்பிக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ..

வியாழன், 30 நவம்பர், 2017

இன்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்வு
மணமக்கள் -சு.பரமசிவன் -க .கோகிலா ..மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நம் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு ..மணமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புடன் சந்தோசத்தை கொண்டாடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது இன்றய புதிய தலைமுறையின் திருமணவிழா கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ..

மணமக்கள் இன்று அறக்கட்டளைக்கு நம் சமுதாயசொந்தங்கள் பயனடையும் வகையில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்து கொண்டு ..தங்களின் திருமணத்தின் ஒரு புதிய நிகழ்வாக அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது மற்றட்ட  மகிழ்ச்சி .நம் கம்பள விருட்சத்தின் கிளைகளை படற செய்துள்ளனர்.

நம் அறக்கட்டளையின் உறுப்பினர் நம்ம மாப்பிளை மனோகர் ..நம் சொந்தங்களை இன்று அறிமுகப்படுத்தினார் ..அவர்களுக்கு நம் அறக்கட்டளையின் சார்பில் புதிய தொழில் தொடங்க ஆலோசனையும் வழங்கியது  மனநிறைவை அளித்தது ..நன்றி மனோகர் மாப்பிள ..

இனிவரும் திருமணநிகழ்வுகள் .கோவில் விழாக்களில் இந்த நடைமுறை அறக்கட்டளையின் சார்பில் உறுப்பினர்கள் நம் இளைய சமுதாயத்துக்கு உதவும் வகையில் இனி நிகழ்வுகள் நடைபெறும் ..

திருமண நிகழ்வில் நம் ராஜகம்பள மணமேடை பற்றி செய்திகளை நம் இளைய சொந்தங்களுக்கு தெரிவித்து ராஜகம்பள திருமண தகவல் மையத்தில் பதிய தொடர்பு எண் அளித்து அறக்கட்டளையின் சார்பாக இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி ...தொடரும் கம்பள விருட்சத்தின் கிளைகளை விரிவடைய செய்யும் ...கம்பள விருட்சம் உறுப்பினர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டது திருமணவிழா மனதிற்கு ஆத்ம திருப்தி
விழாவாக  அமைந்தது ...













புதன், 29 நவம்பர், 2017

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தம் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'பேட் மேன்'
மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'பத்மன்' படத்தின் போஸ்டரை பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் வெளியிட்டார்.
அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியுள்ளது
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாகத் திகழும் அக்‌ஷய் குமார் தற்போது கோல்டு, மொகல், பேட் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் '2.O' படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்‌ஷய் நடித்து வரும் 'பேட் மேன்' படத்தை ஆர். பால்கி இயக்குகிறார். இந்தப் படம் மிலவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழில் அதிபரான அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப் படத்தில் சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம். இசை - அமித் திரிவேதி.
இதையடுத்து 'பேட் மேன்' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'சூப்பர் ஹீரோ வரும் 2018 ஜனவரி 26-ஆம் தேதி வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் படத்தின் நாயகி சோனம் கபூரும் படத்தின் போஸ்டரை ரீடுவிட் செய்திருக்கிறார். அதில், மகாத்மா காந்தி கூறிய பொன்மொழியான, 'உலகம் உன்னை கவனிக்க வேண்டுமென்றால் நீ ஒரு மாற்று சக்தியாக இரு' என்பதை குறிப்பிட்டு, 'ஒரு எழுச்சியூட்டும் கதையுடன் பேட் மேன் வரும் குடியரசு நாளில் வெளி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
உண்மைக் கதையுடன் காமெடி உள்ளிட்ட ஜனரஞ்சக அம்சங்கள் கலந்து உருவாகி வரும் 'பேட் மேன்' திரைப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


செவ்வாய், 28 நவம்பர், 2017

வேம்பு சதுக்கம் ..கிருபானந்த வாரியார் ....(உடுமலை -அரசு ஆண்கள்  மேல்நிலை பள்ளி )..
என் சிறு வயதில் நான் பயின்ற அரசு பள்ளியில் முருக பெருமானின் அருளை ..கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் ஆற்றியது இன்னும் என் மனக்கண்ணில் மலரும் நினைவுகளாக உள்ளது ..முகப்பு படம் அருமை ..

தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற அமைப்பு தற்போதும் இருந்துவருகிண்றது.அதில் தான் பல ஆண்டுகளாக  காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது  அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள்.  பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி  அவர்கள் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...