வெள்ளி, 25 அக்டோபர், 2019

 தீபாவளி நினைவுகள் – 2
—————————————–

வாங்கிவைத்திருக்கும் வெடிகள் கொஞ்சமாகவே தெரியும் ஒவ்வொரு தீபாவளிக்கும். நண்பர்களின் வீடுகளில் வாங்கியிருப்பது எப்போதும் அதிகமாகவே தெரியும். எல்லோரும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெடிகளை வெடிக்கத் தொடங்கியிருப்பார்கள். இங்கோ தீபாவளிக்கு முதல் நாள்தான் வெடியே வாங்கலாமா என்று யோசிப்பார்கள். எல்லாம் வறுமைதான். அது அப்போது புரிந்ததே இல்லை. வெடிப்பவர்களின் வீட்டின் முன் ரெண்டு காலையும் அகற்றி நின்றுகொண்டு கைகளைப் பின்பக்கம் பிணைத்துக்கொண்டு ஸ்டாண்- அட்- ஈஸில் அவர்கள் வெடிப்பதை நானே வெடித்ததாய் நினைத்து சந்தோஷம் கொண்டிருப்பேன்.

வீட்டில் சகோதரர்களுடன், ரொம்ப லேட்டாக வாங்கிய வெடியைப் பிரித்துக்கொள்வதில் அவ்வளவு சீக்கிரம் உடன்பாடும் காணமுடியாது. வழக்கம்போல நான் இளிச்சவாயனாகி நிறைய கேப் டப்பாக்களோடு லொடுக்கு சீட்கள் கிடைத்த அதிமுக கூட்டணிக் கட்சிமாதிரி வருவேன். கொடுத்த ஒரே ஒரு சர வெடியையும் டிஸ்மேண்டில் செய்து ஒத்தை வெடிகளாக்கி ரொம்ப நேரம் வெடிப்பேன். மதியம் அப்படி வெடித்துக்கொண்டிருந்த ஒரு நாள், தூக்கம் கெட்டுப்போன கடுப்பில் எல்லாவற்றையும் பிடுங்கி சாக்கடையில் போட்டுவிட்டான் பக்கத்து வீட்டுக்காரன். யாரிடமும் சொல்லாமல், வெடிக்காத வெடிபோல நான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தேன்.

ஒரு தீபாவளின் நாளின் முன்தினம் வெடிவாங்கப்போகும் குழுவில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டு டவுனுக்கு ஐந்து மைல் நடந்துபோனோம். வெடி வாங்கப்போகும் உற்சாகத்தில் நடப்பது ஒன்றும் ஸ்ரமமாகத்தெரியவில்லை. வரும்போது பஸ்ஸில் வந்துகொள்ளலாம் என்று பெரியவர்கள் தீர்மானம் செய்து கொண்டதில் எனக்கு ஒன்றும் பங்கு இல்லை என்றாலும் கூட்டணி தர்மத்தில் சிறிய கட்சிகளின் கருத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது எனக்கு அப்போதே தெரிந்திருந்தது. பெரிய கடைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருப்பதிலேயே வெளிச்சம் கம்மியான கடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து ( அங்குதான் ரேட் கொஞ்சம் கம்மிஎன்று டேபுலேஷனில் தெரிந்தது) வெடிகளை ரெண்டே செகண்டுகளில் ஆர்டர் செய்துவிட்டார்கள். எனக்கு அங்கு இருந்ததிலேயே ஒரு ராக்கெட்மட்டும்தான் பிடித்திருந்தது. சந்திராயன்போல இருந்த அதை ரொம்ப அலங்காரம்பண்ணி பாதுகாப்பாக வைத்திருந்தான் கடைக்காரன். தாய்க்கலன் சந்திரனில் நிற்பதுபோல நின்றுகொண்டிருந்தது அது. நான் பார்த்துகொண்டிருந்ததை கவனித்த கடைக்காரன், அது ஐந்து ரூபாய் என்று காங்கிரஸ் சின்னத்தைக்காட்டினான். அதோடு, அந்த ராக்கெட் மேலேபோய் ரெண்டு தடவை வெடிக்கும் டபுள்ஷாட் என்று பில்ட் அப் கொடுத்தான். ரஷ்ய க்ரயோஜனிக் உதவியோடு செய்ததுபோல அதை வாஞ்சையோடு எடுத்து தடவிக்கொடுத்தான். ஒரு பக்கம் பார்த்தால் கட்டிங் ப்ளேயர் போலவும் இருந்தது அது. சிகப்புக் கலர் பேப்பர் அலங்காரத்தில் மெல்லிய பளபளப்பான பாலித்தின் பேப்பர் சுற்றப்பட்டிருந்ததில் குண்டு பல்பின் வெளிச்சம் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருந்தது.’ மொத்தமாகவே ஐம்பது ரூபாய்க்குத்தான் பட்டாஸ் வாங்குவார்கள் போலிருந்த சமயத்தில் ஒரு ராக்கெட் மாத்திரம் ஐந்து ரூபாய்க்கு வாங்குவார்களா என்ன’, என்ற கேள்வியெல்லாம் காதல் கொண்ட மனதிற்கு தெரியுமா என்ன? நான் ஒன்றுமே பேசாமல் ப்ரமை பிடித்ததுபோல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த திக்கில் என் பெரிய அண்ணனும் பார்க்க நான் அந்த ராக்கெட்டை நோக்கிக் கைகாட்டினேன். அதெல்லாம் நம் குடும்பத்துக்கு சரிவராது ; வேண்டுமென்றால் இதை வாங்கிக்கொள் என்று இருப்பதிலேயே ஒல்லிப்பிச்சானாய் இருந்த ஒரு ராக்கெட்டைக்காண்பித்தான் என் அண்ணன். எனக்கு அழுகை பிய்த்துக்கொண்டுவர, கடைக்காரன் ” புள்ள கேக்குதில்ல, வாங்கிக்குடுங்க சாமி. வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே” என்ற உபரியான தகவலையும் கொடுத்தான். என் அழுகை இன்னும் பெரிசாகியது, வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே என்ற சோகத்தினால். இப்போது எதிர்பாராமல் என் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார் எப்போதும் சாந்த ஸ்வருபீயான என் அப்பா. நான் இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தேன். சீன் கிரியேட் ஆவதைத் தவிர்க்க உடனே என் அண்ணன் என்னைக் கூட்டத்திலிருந்து தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்னைக் கூட்டிக்கொண்டுவந்ததே தப்பு என்றும் ஒரு முறை திருப்பதியில் நான் டெம்பரரியாகக் காணாமல்போயிருந்தபோது தேடிக்கண்டுபிடித்திருக்கவே கூடாது என்றும் இன்னும் ஃப்ளாஷ் பேக்கில் போய் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கௌண்டில் சரிசெய்யமுடியாத திருத்தங்களை வார்த்தைகளில் போட்டுக்கொண்டிருந்தான். இதனிடையே, அப்பா மீண்டும் சாந்தஸ்வரூபியாகி, என்னை அடித்ததற்கு ப்ராயச்சித்தமாயாய் அந்த ராக்கெட்டையே வாங்கிவந்திருந்தார். கடைக்காரனும், என்னை செட்யுஸ் பண்ணினதற்குப் ப்ராயச்சித்தமாய் ஒரு ரூபாய் டிஸ்கௌண்ட் கொடுத்திருந்தான் ( மொத்தத்தில்தான் ). கதை இங்கே முடியவில்லை.

தீபாவளி அன்று ராக்கெட்டை லான்ச் செய்வதென்றும் வீட்டிற்கு எதிரே உள்ள ட்ரைனேஜ் மூடியை லான்ச்சிங்க் பேடாகவும் இஸ்ரோ ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம் நானும் என் அன்புத்தம்பியும். எங்களின் பெருமைமிகு தருணமே அந்த தீபாவளியின் இரவாக இருக்கப்போவதாக பகலையெல்லாம் சாதரணமாகச் சில்லரை விஷயங்களில் கவனம் செலுத்தாது கழித்தோம். அந்தக் குறிப்பிட்ட சுபயோக வேளை நெருங்க நெருங்க அட்ரீனலின் ரொம்பப்படுத்தியது. தம்பிக்கு அந்த ராக்கெட், நிலாவில் போய் லேண்டாகி வெடித்தால் அங்கு வடைசுட்டுக்கொண்டிருக்கும் கிழவிக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்து நிலா க்ளீன் ஸ்லேட்டாகிவிடுமோ என்ற அச்சம்வேறு. ” எல்லாரும் போந்தாரோ போந்தென்றெண்ணிகொள்” என்று சரஸ்வதி டீச்சர் சொல்லிக்கொடுத்த திருப்பாவையின்படி தம்பி வந்த நண்பர்களை எண்ணிக்கொண்டிருந்தான். மழைவேறு ராகெட்டை விண்ணுக்குள் செலுத்துவதைத் தடை செய்ய சதிபண்ணிக்கொண்டிருந்தது. சரியாக 7.31க்கு கௌண்ட் டவுன் ஆரம்பித்து நானும் என் தம்பியும் சேர்ந்து அந்த ராக்கெட்டின் அனியாயத்துக்குக் கொஞ்சமான திரியில் நடுங்கிக்கொண்டே எரியும் கம்பிமத்தாப்பை வைத்தெடுத்தோம். ஒரு புள்ளி நெருப்பு ஒட்டிக்கொண்டிருந்து எப்போதுவேண்டுமானாலும் அணைவேன் என்று பயப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லோரும் மகரஜோதிக்குக் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்போல காத்திருந்தார்கள். தம்பியோ ரெண்டு மூன்றுதடவை டாய்லெட் போய்வந்தான்.
கடைசியாக யாரும் எதிர்பாரா தருணத்தில் ராக்கெட் கிளம்பி சரியாகப் ப த்தடி மேலெழும்பி ஒருதடவையும் உடனேயே அவசரமாக மறந்துபோய்விடக்கூடாது என்பதுபோல ரெண்டாவது தடவையும் வெடித்துவிட்டுத் தாயகம் திரும்பிவிட்டது. நண்பர்களெல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் ஏதோ அபர காரியத்துக்கு வந்தவர்கள்போல் ஓடிவிட்டார்கள். எங்களால் அன்றிரவு மட்டுமல்ல சில வாரங்களுக்கே தூங்கமுடியாமல் போயிற்று. அந்தத் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சமிருந்ததையும் வெடிக்கமனமில்லை. ஆனால் என் பெரியண்ணன் மட்டும் ரொம்ப சந்தோஷமாயிருந்ததுபோல எனக்குப்பட்டது.

வியாழன், 24 அக்டோபர், 2019

அங்கீகாரம்....

பொதுவாக எந்த ஒன்றை செய்யும்போதும் அதற்கான அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கும். வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைத்தாலே தவிர நீங்கள் செய்வதை உங்களாலேயே அங்கீகரிக்க முடியாமல் மனம் தவிக்கும்.

அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு செயலுமே உங்களுக்கு சாதனையாகவே தெரிய மறுக்கிறது. ஆனால் அந்த அங்கீகாரத்திற்கான ஏக்கமே, அது கிடைக்காத போது உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் பிறரது அங்கீகாரமென்பது அவர்களின் விருப்பு வெறுப்பிற்கும் பல் வேறு விதமான கோணங்களுக்கும் உட்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அங்கீகாரத்திற்காக இல்லாமல் ஆத்ம திருப்திக்காக செயல் படத் தொடங்கி விடுவீர்கள்.

அதனால், எதை செய்தாலும் நீங்கள் செய்யக் கூடிய அந்த விஷயம் முதலில் உங்களுக்கு திருப்தி தரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையோடு செயலைத் தொடருங்கள்.

பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லையென்றால் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பிடித்தமானதாக உருவாக்கிக் கொள்ள உங்கள் எண்ணத்தை சீர் செய்யுங்கள். எந்த மாதிரியான எண்ணம் உங்கள் ஆற்றலை தூண்டி விட்டு நீங்கள் செய்யும் வேலையை உங்களுக்கு சுவாரஸ்யமானதாக மாற்றக் கூடும் என் சிந்தித்துப் பாருங்கள்.

வெற்றி என்பது பணத்திலோ அல்லது புகழிலோ இல்லை. உங்கள் செயலால் இந்த பிரபஞ்சம் அடையும் பலனில் இருக்கிறது.

அது ஒருவருக்கானதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நாட்டுக்கோ இந்த உலகிற்கோ ஆனதாக இருந்தாலும் சரி, அந்த செயலைத் தொடர்ந்து செய்வதற்குப் பெருமைப் படுங்கள்.

பொதுவாக நம் கனவுகளோடும் கற்பனைகளோடும் எப்போதும் நம் வாழ்க்கையை ஒத்து பார்த்து நிறைவில்லாத தன்மையில் பெரும்பாலும் உழல்கிறது மனம்,

அதனால் நாம் செய்து கொண்டிருக்கும் எந்த வேலைக்கும், நம்மிடம் இருக்கும் எந்த பொருளுக்குமான மதிப்பு நமக்கு தெரியாமலே போகிறது.

எத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் நீங்கள் விரும்பி, நடக்காமல் நழுவிப் போகும் அந்த ஒன்றில் உங்கள் முழு கவனமும் தேங்கி, சறுகிய பாறையில் வழிந்தோடும் நீராக மகிழ்ச்சியெல்லாம் வழிந்தோட ஆற்றாமையும் வெறுமையுமாக மனம் பாசி படிந்து போகிறது. எனக்கு எதுவுமே சரியாக அமைவதில்லை நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று இயலாமையாக தோன்றி விடுகிறது. மகிழ்ச்சி அந்த கிடைக்காத ஒன்றில் மறைந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட, வாழ்க்கை சலிப்பு தட்டுகிறது.

உண்மையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதை இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால் அதன் மதிப்பு உங்களுக்கு பெரிதாகத் தோன்றும். வாழ்வின் அர்த்தம் புரியும்.

அதாவது, நீங்கள் எது செய்தாலும் ஏதோ என் கடமையை செய்கிறேன் என்றில்லாமல் எதற்காக செய்கிறோம் என்னும் அந்த புரிதல் இருந்தால், அதனோடு ஒரு குறிக்கோளை இணைத்துக் கொள்ள முடிந்தால், அந்த வேலை சலிப்பில்லாத சந்தோஷத்தை தரும்.

ஏனென்றால். எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று புரிந்து செய்யும் போது, அதை ஈடுபாட்டோடு செய்ய முடியும். தவிர உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது, அதில் முன்னேற்றத்தை பார்க்கும் போது, அதன் வெற்றியை தரிசிக்கும் போது வாழ்க்கை தொய்வில்லாமல் struck ஆகாமல் சுவாராஸ்யமானதாக இருக்கும்.

உண்மையில் வாழ்வின் முன்னேற்றம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தை எட்டிப் பிடிப்பது மட்டுமல்ல. உங்கள் அன்றாட செயல்களை அழகான முறையில் அமைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. அது உங்கள் கைவசமே இருக்கிறது.

உற்சாகமான உழைப்பும், புத்திசாலித்தனமான சிந்தனைகளும் இருந்தால் எதிலும் புதுமை படைக்கலாம். ஒரு மணி நேரம் செய்யக் கூடிய வேலையை பயிற்சியின் மூலம் அதற்கு முன்பாக முடிக்குமளவு செய்ய தேர்ச்சி பெறுவதும் முன்னேற்றம்தான்.

உங்களுடைய எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு முறை செய்யும் போதும் அதன் தரத்தை, அதன் வேகத்தை இன்னும் நேர்த்தியாக கூட்டுமளவு செய்வதும் ஒரு சாதனை தான். உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் சின்ன சின்ன சாதனைகளே பெரிய சாதனைகள் படைக்க உங்களை ஈர்த்து செல்லும்.

உங்களுடைய ஒரு நாள் எப்படி போகிறதென்று சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலுமே லிஸ்ட் போட்டு பாருங்கள். நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று எழுதி பார்க்கும் போது, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புலப்படும் அல்லது இன்னும் நேர்த்தியாக பயனுள்ளதாக நேரத்தை செலவிடலாமே என உங்களை productive ஆக சிந்திக்கச் செய்யும்.

அப்படி நீங்கள் உங்கள் அன்றாட செயலை பட்டியலிடும்போது உங்களுடைய ஒரு நாளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது நடக்கிறது, உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எத்தனை செய்கிறீர்கள், அதை உங்கள் மனம் எந்த அளவு ஏற்றுக் கொண்டுள்ளது அல்லது முரண்படுகிறது, என்பதை அலசிப் பார்க்க முடியும். உங்கள் சூழலில் உங்கள் திறமைக்கு தீனி இருக்கிறதா அல்லது திறமை அற்ற விஷயங்களில் உங்கள் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்.

தவிர, உங்களுக்கு பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் எந்த வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பது புலப்படும். அப்படி புலப்படும்போது, உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் விரிவடையும். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் திறமை அகன்று கொடுக்கும். என்னால் முடியும் எனும் உந்து சக்தி எழும்.

மொபைல் ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்த புதிதில் அவற்றில் பயன்படுத்திய சிம்பியன் ஓ.எஸ் பற்றி அறிவீர்களா? மனிதர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்பில் இருக்கும் மொபைல் ஃபோன் இயங்குவதற்கு ஒரு இயங்கு தளம் தேவை என்ற ஒற்றை குறிக்கோளில்தான் அந்த சாஃப்ட்வேரை உருவாக்கினார்கள்.

இன்று உலகையே உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிம்பியன் ஓ.எஸ் உருவாக்கியவர்களுக்கு எந்த அங்கீகாரமும் தேவைப் படவில்லை. David Potter ஆரம்பித்த PSION Software Co கொண்டு வந்த அந்த செயலியை இன்று பெரும்பாலானவர்கள் அறிந்திருக்காததைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் இந்த உலகை தங்கள் இணைக்க வேண்டும் என்பதுதானே தவிர அதற்கான அங்கிகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதல்ல.

பொதுவாக எது செய்தாலும் என்ன purpose க்காக செய்கிறோம் என்பதை யோசியுங்கள் அல்லது ஒரு ஆக்கபூர்வமான் purpose சை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சேர்த்தே நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


புதன், 23 அக்டோபர், 2019

அந்த தீபாவளி நினைவுகள்...
தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில   துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட  துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல  பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன்  டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு  கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..













தீபாவளி நினைவுகள் -பலகாரம் 

தீபாவளி நினைவுகள் — 1
——————————————-

நடு வயதுக்காரர்களுக்கு இப்போதும் தீபாவளி பற்றிய பழைய ஞாபகங்கள் பக்ஷணங்கள்போலவே சுவையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு மனசு தயாராகிவிடும். நண்பர்களோடு பேச்சு தீபாவளியைப் பற்றி மாத்திரமே இருக்கும். எத்தனை ஸ்வீட், எத்தனை ட்ரஸ், எவ்வளவு பட்டாசு என்ற பேச்சில் நிறைய புருடாக்கள் இருக்கும். மிஷினுக்குப்போய் மாவு அரைத்து வருவது எனக்குப் பிடிக்காத வேலை. முதல் காரணம் கும்பல். இரண்டாவது, மிளகாய்ப் பொடி அரைக்கவும் மற்றவை அரைக்கவும் தனித்தனி மிஷினும் தனித்தனி வரிசையும். நான் ஒருவனே இரண்டையும் அரைத்துவர அனுப்பப்படுவேன். அண்ணன், தம்பி அக்கா எல்லோருக்கும் நிறைய ஹோம் வொர்க்கோ அல்லது திடீர் வயிற்று வலியோ வந்துவிட நான் மட்டும் பைத்தியம் போல் மாட்டிக்கொள்வேன். கூட இரண்டு முறுக்கு தருவதான பொய் வாக்குறுதியில் ஏமாந்து சிங்காரவேலன் கமல் மாதிரி உடம்பெல்லாம் பைகளையும்( அழுக்கு வெய்ட் வேறு) பாத்திரங்களையும் சுமந்துகொண்டு போய் அம்மாவின் அன்புக்கும் பாத்திரமாவேன்.

மாவு அரைக்கும் மில்லில் முதல் நாளே கல்லை அடையாளமாகப் போட்டுவிட்டுப்போனவர்கள் நான் போய் ஒரு மணி கழித்துத்தான் வந்தாலும் அவர்கள்தான் ஸீனியர்களாகக் கருதப்பட்டு பரமபதத்தில் பாம்பு கடிபட்டவனாய் கடைசிக்குப்போய் விடுவேன்.( இதைச் சொன்னால், எனக்குத் துப்பு இல்லை என்று சொல்வான் வயிற்று வலியால் துடித்துகொண்டிருந்து நான் கிளம்பிப்போன பத்து நிமிஷத்திற்கெல்லாம் வயிறு சரியாய்ப் போகும் என் தம்பி ). ரெண்டு வரிசையிலும் பாத்திரங்களையும் பைகளையும் வைத்துவிட்டு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நமக்கு முன் கேழ்வரகு அரைக்க வைத்திருந்தால் நாம் அரிசியோ கடலைப்பருப்போ அரைக்க முடியாது. மறுபடியும் சீனியாரிட்டி தள்ளிப்போகும். அதை வேறு கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் துப்புக்கெட்டுப்போய்விடுவேன் என்பதோடு இல்லாமல் முறுக்கும் ஐயர்ன் டானிக் சாப்பிட்டவன் டாய்லெட் போல கருப்பாக இருக்கும். ” ஏன்  முறுக்கு செவந்துபோச்சு?” என்று கேட்பதற்கு பதிலாக,” ஏன்  கறுத்துப் போச்சு?” என்று கேட்கும்போதெல்லாம் எல்லோரும் என்னையே முறைப்பார்கள். அடிஷனாலாக இரண்டு இல்லை, எல்லா முறுக்கையும் எனக்கே கொடுத்துவிடுவார்கள்.

கடலை மாவை கடலைமாவு அரைத்தபின்னும், அரிசியையும் அணிமாறாமலும் அரைத்துவரவேண்டும் என்றால் யாரவது ஒருவர்  வீட்டில் திட்டு வாங்கியே ஆகவேண்டும்.
இது தவிர மிளகாய் வரிசையின் பக்கம் கண் வைத்துக்கொள்ளவும் வேண்டும். அங்கும் ஹைப்ரிட் ஆகிவிடக்கூடாது. போஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷனைவிட இது கஷ்டம். இதுதவிர, மில்காரன் அம்மாசொல்லிவிட்ட அளவை ஒத்துக்கொள்ளமாட்டான். அரை கிலோ அதிகம் என்று சொல்லி கூடக்காசு வாங்கிவிடுவான். நானே அளவுகளை மாற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. மிளகாயோடு மல்லி, மஞ்சள், எள், இலை தழை குச்சி என்று எதெதையோ போட்டு வைத்து ( வாசனைக்காம்) அதற்கும் மில்காரனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும். சிலசமயம் இந்த கூட்டணி தான்யங்களால் மிஷின் நின்றுபோனதும் உண்டு. தனித்தனியாய் ( தனியா என்று இதனால்தான் பெயரோ?) லோகல் பாடி எலெக்ஷன் போல அரைத்துவரவும் கட்டளை இருக்கும். இவ்வளவு தடைகளைமீறி அரைத்தபின், பாத்திரங்களை உடனே மூடிஎடுத்துக்கொண்டு வர முடியாது. கொஞ்சம் காற்றாட வைத்துக்கொண்டு வரவேண்டும். பலசமயங்களில் காற்று ரொம்ப ஆடிவிட அதனால் வந்த துன்பங்களும் அதிகம். மிளகாய் அரைக்கும்போது வந்த தும்மலின் தொடர்ச்சியோடு வீடு போய்ச்சேரும்போது மணி எட்டாகியிருக்கும். அம்மா மட்டும் சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். குழைந்த சாதமும் ரசமும் ” உனக்கு மாத்திரம்தான்” என்று போடும் வடாமும் அம்மாவின் அன்பை ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் காட்டும்...

தீபாவளி நினைவுகள் நாளையும் தொடரும் ...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கேள்வி :நீங்கள் எதற்காக மலரும் நினைவுகளாக எதை நினைத்து சிரித்தீர்கள்?

பதில் :


மூன்று வருடங்களுக்கு  முன் நான்‌ பண்ண வேலையே தான்!

இடம்: சமையலறை

செய்யும் வேலை: புதினா சாதம் செய்வது

அரைக்க வேண்டியவற்றை வதக்கி ஒரு தட்டில் வைத்திருந்தார் அம்மா

“நான் அரைக்கிறேன் மா” என்று நானே வாயை கொடுத்தேன்

“இதில் இருப்பதில் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். அது அரைந்ததும் இன்னும் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். மிக்ஸி ஜார் குட்டியா இருக்கு பாத்து அரைக்கனும்”

“கவலையே வேண்டாம் எல்லாம் பக்காவா பண்ணிடுவேன்.”


சரி என்று என்னை நம்பி என்னிடம் கொடுத்து விட்டு, வெங்காயம் நறுக்குவதற்காக இரண்டு அடி தள்ளி தரையில் உட்கார்ந்தார் அம்மா. நமக்கு தான் மூளை வேற லெவல்ல யோசிக்குமே.

வதக்கி வைத்த புதினாவை கொஞ்சம் மிக்ஸியில் போட்டேன். “அடடே! இன்னும் கொஞ்சம் இடம் இருக்கே. இன்னும் கொஞ்சம் போடுவோம்.” இப்படியே இடம் இருக்கிறது என்று தட்டில் இருந்த மொத்தத்தையும் முதல் சுற்றுக்கே திணித்து விட்டேன்.


“சூப்பர்! ஒரே சுத்துல வேலை முடிஞ்சிரும்‌. அம்மா பாராட்ட போறாங்க.” என்று நினைத்துக் கொண்டே மிக்ஸியை சுற்றியது தான் தாமதம் நான் அழுத்தி வைத்த அழுத்தம் தாங்காமல் மிக்ஸி மூடி பறந்து போக‌, என் அம்மா வேறு தரையில் உட்கார்ந்திருந்தாரா அவரின் முடியெல்லாம் பசுமையாக மாறி விட்டது.

"ஆத்தாடி! இன்னிக்கு இருக்கு கச்சேரி." எனக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதர ஆரம்பித்து விட்டது‌‌. ‌

அம்மாவோ நிமிர கூட இல்லை. ஹாலிலிருந்து அப்பா வந்து “பரவாயில்லையே! உங்கம்மாக்கு பச்சை கலர்‌ Dye கூட நல்லாருக்கு” என்றாரே பார்க்கனும் அம்மா குபீர் என்று சிரித்து விட்டார்.

எனக்கு சிரிக்கலாமா என்று கூட சரியாக தெரியவில்லை

ஹி…. ஹிஹி… ஹிஹிஹி…
கேள்வி : வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்கள் எவை?

பதில் :நான் எழுதும் விஷயங்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்ககையில் நடந்தவை

வசதி இல்லையென்று சொந்தகாரர்கள் நம்மை வெறுப்பதும் மற்றும் தள்ளி வைப்பதும்.
குடும்பமாக வாழ நினைக்கும்போது சொந்தங்களின்  பேச்சைக்கேட்டு தனிக்குடித்தனம் செல்வதும்.
வாழ்க்கையில் ..கணவன் மனைவி வேளைக்கு சென்று .10 வருட சொந்த முயற்சியில் .கொஞ்சம் கொஞ்சமாக ..சொத்து ..வாகனம் ..குழந்தைச்செல்வம் ..அழகா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு செல்லும் வேலையில் ..நண்பர்களோ ..சொந்தங்களோ ..குடும்ப வாழ்க்கையை நிலைகுழைய செய்வது ..

சக மாணவர்கள் என்னிடம் என் அண்ணன் வாங்கி கொடுத்தான்,என் அக்கா வாங்கி கொடுத்தார்கள் என்று சொல்லும் போதும்,நமக்கு யாருமே இல்லையெ என்று எண்ணிய நேரம்.
பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்கும்போது அவன்லாம் படிச்சு என்னத கிளிக்க போறான்னு என்று சொன்னவர்களின் வாக்கியங்களும்.
பிள்ளைகள் கேட்பதை வாங்கி தர முடியாத சூழ்நிலை உள்ள தாய் தந்தையர்களின் நிலைகளும்
நமக்கு உடுத்த துணி எடுத்து கொடுத்து அவர்கள் கிழிந்த துணியை தைத்து போட்டு கொண்டு நிற்கின்ற நேரம்
நமக்கு இரவு உணவு கொடுத்து தாய் தந்தைக்கு உணவு இல்லாமல் தண்ணீரை பருகுகின்ற நேரம்.
நிறைய உண்டு இதுவே போதும் என நினைக்கிறேன்..

வியாழன், 17 அக்டோபர், 2019

நீங்கள் கண்டிப்பான பெற்றோரா?❤👍✒📚

'பிரம்பை எடுக்காத பிள்ளை கெட்டு போகும்' என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றும் பெற்றோரா? இப்படி கண்டிப்புடன் நீங்கள் நடந்து கொண்டால், உங்கள் குழந்தைகள் மூர்கத்தனமாக நடந்து கொள்வார்கள். மேலும் தங்கள் பெற்றோரின் குணங்களையும் குழந்தைகள் கவனித்து, அதையும் பின்பற்றுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

கண்டிப்பான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் வாழும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். மேலும் குழந்தைகளின் சுய மரியாதையையும் அது குறைத்துவிடும். மேலும் இது குழந்தையின் மன வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்தால், பயம் மற்றும் பதற்றத்துடன் அவர்கள் வளர்வார்கள். இதன் விளைவாக அவர்கள் பாதுகாப்பின்மை உணர்வுடன் கூடிய மனிதர்களாக மாறுவார்கள். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு விருப்பம் உள்ள காரியங்களை அவர்களை செய்ய வையுங்கள். அதற்கு போதிய வழிமுறையையும் அக்கறையும் செலுத்துங்கள்.

பெற்றோர்கள் ஏன் கண்டிப்புடன் நடக்கக்கூடாது என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம். கண்டிப்புடன் நடப்பதற்கும், ஒழுக்கத்துடன் வளர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கண்டிப்பு என்பது குழந்தைகளுக்கு மத்தியில் பயத்தை உருவாக்கும். இதுவே ஒழுக்கம் என்பது நல்ல மனிதனாக வாழ தேவைப்படும் நல்ல குணங்களைப் பின்பற்ற வைக்கும்.

உங்கள் குழந்தை பயத்தில் வாழும்:

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தை எப்போதும் பயத்தில் வாழும். தங்கள் சொந்த வீட்டிலேயே எந்த குழந்தையும் பயத்துடன் வாழ கூடாது. உங்கள் கண்டிப்பின் அளவை கட்டுப்படுத்துங்கள். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உங்களை எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும் என்ற எண்ணம் உங்கள் குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.

மோசமடைவதற்கான மாற்றம்:

கண்டிப்பான வீட்டில் வளர்ந்த குழந்தைகள் காற்று நிரப்பப்பட்ட பலூன்களை போலே, எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும். பலூன் வெடிக்கும் போது அவர்கள் முழுமையாக ஒரு புது மனிதனாக மாறுவார்கள். வாழ்க்கையில் அவர்கள் ஈடுபடும் காரியங்களும் சுருங்கி போவதால், இந்த மாற்றம் இன்னும் மோசமடைய தான் செய்யும்.

உங்கள் குழந்தைக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்காது:

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், பயத்துடனான சூழ்நிலையில், உங்கள் குழந்தை எப்போதும் சந்தோஷமாகவே இருக்க மாட்டார்கள். பெற்றோராக, உங்கள் குழந்தைக்கு நிபந்தனையற்ற அன்பையும் சந்தோஷத்தையும் வழங்கிடுங்கள். மாறாக அவர்களுக்குள் பயத்தை விதைக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் மனப்பாங்கை மாற்றும்:


கண்டிப்பான பெற்றோராக இருந்தால், அது குழந்தையின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் குழந்தைக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையென்றால், அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தையை மன ரீதியாக ஆரோக்கியமாக வளர்க்க நீங்கள் அன்பான, அதே சமயம் ஒழுக்கமான பெற்றோராக இருக்க வேண்டும்.👍👍👍📚📚📚
தோல்வியில் பாடம் கற்று வெற்றியை நோக்கி முன்னேறுவது எப்படி?

தோல்வி என்பது தொழில்முனைவு பயணத்தின் ஒரு அங்கம் என்பதால் அதன் வகைகள் மற்றும் காரணங்களை அறிந்து கொள்வது மற்றும் தோல்வி, வெற்றியடைந்த தொழில் உதாரணங்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இது சற்று நீளமான புத்தகம் என்றாலும், பல வகையான தோல்விகளில் கவனம் செலுத்தும் புத்தகமாக இருக்கிறது.

’தி அப்சைடு ஆப் டவுன்’; ’வை பெயிலிங் இஸ் தி கீ டு சக்சஸ்’, எனும் இந்த புத்தகத்தை எழுதிய மேகன் எம்க் ஆர்டல் (Megan McArdle) வாஷிங்டன் போஸ்ட் பத்தியாளர் மற்றும் அதற்கு முன், தி அட்லாண்டிக் மற்றும் தி எக்கனாமிஸ்ட் இதழ்களில் செய்தியாளராக இருந்தவர்.

பத்து அத்தியாயங்கள் கொண்ட இந்த 300 பக்க புத்தகம், வர்த்தக ஊழல்கள், திரைப்பட தோல்விகள், தொழில் தோல்விகள், கல்வி குறைபாடுகள் மற்றும் தண்டனைச்சட்டம் ஆகியவறை பற்றி பேசுகிறது. பொருளியல் வல்லுனர்கள், உளவியல் வல்லுனர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் நடத்திய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தோல்வி வகைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக புத்தகம் உணர்த்தும் எட்டு முக்கிய அம்சங்கள்: வேகமான, இணைக்கப்பட்ட மற்றும் சிக்கலான உலகம் பரிசோதனை, சுய ஆய்வு, முடிவு எடுத்தல் ஆகியவற்றில் மேம்பட்ட திறனை கோருகிறது என்கிறார் மேகன். வெற்றிக்கு நடுவே அடிக்கடி தவறுகள் ஏற்படுவது வழக்கம் தான். செயல்திறன் வாய்ந்தவர்கள், ஆரம்பத்திலேயே, அடிக்கடி, அதிக பாதிப்பில்லாமல், கண்ணியமாக ஏன் மகத்தானதாகவும் தோல்வி அடைகின்றனர்.

1. தோல்வியில் இருந்து மீள்வது பல வர்த்தக ஜாம்பான்கள் தோல்வியை சந்தித்துள்ளன. சில நேரங்களில் பிரம்மாண்டமாகவும் சந்தித்துள்ளன. ஆனால் சில நிறுவனங்கள், நியூட்டன் சாதன தோல்விக்கு பின் ஆப்பிள் வெற்றி பெற்றது போல, அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன. பின்னடைவுகளில் இருந்து மீண்டு வருவது தொழில்முனைவோர்களை வெற்றிக்கான புதிய பாதையில் பயணிக்க வைக்கிறது. கர்னல் சாண்டர்ஸ் நெடுஞ்சாலை பணி காரணமாக தனது டிரெக் மையத்தை இழந்தாலும், அவர் பிரைடு சிக்கன் வர்த்தகம் பற்றி யோசித்து புகழ்பெற்ற கேஎப்சி வர்த்தத்தை துவக்கினார். வேலை இழப்பு விரக்தியை தரலாம் என்றாலும் புதிய வாய்ப்புகளை தேட வைத்து, மேம்பட்ட வாழ்க்கைகான வழிகாட்டலாம். தொடர்ந்து வலைப்பின்னலை உருவாக்குவது, பகுதி நேர பணிகள் மற்றும் தன்னார்வ முயற்சிகள் புதிய வாய்ப்புகளை அளிக்கும். நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு முன் பல தோல்விகளை சந்திக்கும் விற்பனை பிரதிநிதிகள் போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் பயன் அளிக்கும்.


இலக்கில் தெளிவு, செயல்பாடுகளை குறிப்பெடுப்பது, திட்டங்களை தயாரிப்பது ஆகியவை மூலம் நிராகரிப்பு அச்சத்தை வெல்லலாம். மேகன் இதற்காக புகழ்பெற்ற வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார்.  “அனுபவம் மூலமே சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அனுபவத்தை மோசமான முடிவுகள் மூலமே பெற முடியும்.“  தோல்வி மற்றும் விபத்தில் இருந்து மீண்டு வருவது உறுதியான அடையாளமாக விளங்கும். இது தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் மற்றவர்களுடனான உறவுக்கும் பொருந்தும்.

2. தடைகளை கண்டறிவது திட்டமிடுதல் மற்றும் பரிசோதனை ஆகியவை தோல்வியை தவிர்ப்பதற்கான வழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் பரிசோதனைக்கு கூட எல்லை உண்டு. கோகோ கோலாவின் சோதனைகள் நியூ கோக் வெற்றி பெறும் என உணர்த்தினாலும் இந்த தயாரிப்பு 3 மாதம் மட்டுமே தாக்குபிடித்தது. வெற்றிகரமான முன்னோட்ட திட்டத்தின் சாபத்திற்கான சரியான உதாரணம் இது என்கிறார் மேகன். நுகர்வோர் இலவச கோக் மாதிரிகளை விரும்பியதாக கூறினர். ஆனால் கடையில் காசு கொடுத்து வாங்கவில்லை. வேறு ஒன்றில் கவனம் செலுத்துவதால் பளிச் என தெரியும் தவறுகளை கோட்டை விடும் கவனிக்காத பார்வையற்றத்தன்மை தோல்விக்கான மற்றொரு காரணமாகிறது. சிபிஎஸ் தொலைக்காட்சி குழுவான டான் ரேதர் மற்றும் மேர் மேப்ஸ் தங்கள் செய்தி ஒன்றுக்கு அடிப்படையாக கருதப்பட்ட ஆவணங்கள் போலியானவை என உணராத சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.

ஜிஎம் நிறுவனம் கார் தயாரிப்பில் பல வகை மாதிரிகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்தி அவற்றுக்கான நிதி வாய்ப்புகளை அளித்தாலும், 2009 ல் நிதி நெருக்கடி காரணமாக கடின போட்டியை எதிர்கொண்ட போது ஊழியர் சலுகைகள் மற்றும் டீலர்கள் திட்டங்களை குறைக்க வேண்டியிருந்தது. வெற்றிகரமான நிறுவனங்கள் மாற்றத்தை கடினமாக உணர்ந்து தங்கள் வெற்றியின் பலிகடாவாகலாம். “நிலைமை சரியில்லாத போது எல்லாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்வதற்கு, சகஜநிலை சார்பு என உளவியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர் என்கிறார் மேகன். இது தோல்விக்கு வழி வகுக்கலாம்.” மேலாளர்கள் தோல்வி திட்டங்கள் மீதான ஈடுபாட்டை அதிகமாக்கி, தங்கள் தவறுகளை விடாப்படியாக பிடித்துக்கொண்டிருக்கலாம். தோல்வி வெறுப்பு அல்லது தவறுகளை ஒப்புக்கொள்ள முடியாத தன்மை மனித இயல்பு தான்.  நம்முடைய தவறுகளில் உணர்வு பூர்வமாக ஒன்றி போய்விடுவது மோசமான வழக்கமாக இருக்கிறது என்கிறார் மேகன். தோல்விகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் தன்மை நிறுவனங்களுக்கும் உண்டு. இதை குருப்பிடிட்டி என்கிறார் மேகன். அதாவது குழு மடத்தனம். என்ன செய்வது மந்தை உணர்வும் மனிதர்களுக்கு இருக்கிறதே. தோல்விக்கான காரணங்கள் சிக்கலானவை என ஒப்புக்கொள்வதற்கு பதில் ஆலோசனை நடத்துவது அல்லது பலிகடா தேடுவது என்பது தொடர்புடைய நிகழ்வாகும். 2009 நிதி நெருக்கடியின் போது மேட் ஹாட்டர்ஸ், மூச்சர்ஸ், கான்மென் மற்றும் கார்ப்பரேட் ஷில்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டன என்கிறார். ஒரு விளக்கத்தின் ஆறுதலை எதிர்நோக்குவது மனித இயல்பு தான். சதி பற்றிய காரணங்களை கூறுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

சில நேரங்களில் மனிதர்கள் தங்களை தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தகவல்கள் திரிக்கவும் செய்கின்றனர். இது உறுதிப்படுத்தல் சார்பின் விளைவாகிறது. இதன் காரணமாக சரியான ஆனால் கடின கேள்விகளை கேட்க தடையாக அமையலாம். மாற்று கோட்பாடு கொண்டவர்களின் விமர்சனங்களையும் நாம் நிராகரிக்கலாம். தவறுகளை ஒப்புக்கொள்ள துணிச்சல் தேவை. தவறான முடிவுகள் தார்மீக மீறலுக்கு வித்திடக்கூடாது. நுகர்வோர் பழக்கங்களை கண்டறிவது மற்றும் மாற்றுவது கடினமானது என்பதாலும் தயாரிப்புகள் தோல்வி அடைகின்றன. பலர் ஆரோக்கிய உணவை விரும்பி, உடற்பயிற்சி செய்ய விரும்புவதாக கூறினாலும் நிஜம் வேறு விதமாக இருக்கலாம். இது பல லட்சிய திட்டங்களை தோல்வியில் ஆழ்த்தலாம்.

3. கலாச்சாரம், அரசியல் “நிதி கொள்கை போலவே தார்மீக தன்மை மீதும் சந்தை அதிகம் சார்ந்திருக்கலாம். அமைப்பு போலவே சமூக பழக்கமும் முக்கியமானது என்கிறார் மேகன்.
 சமூக பொருளாதார சூழலுடன், தனிப்பட்ட குணங்கள் மூலம் தோல்வியை கணிக்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தோல்வி, ரிஸ்க் தொடர்பான மாறுபட்ட விதிகள் மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளன. சிலிக்கான் வேலியின் தோல்வி என்பது பெருமையானது மற்றும் தொலைநோக்கு கொண்டவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஐரோப்பாவில் பொறுப்பற்றத்தன்மையாக கருதப்படலாம் என்கிறார் மேகன்.



அமெரிக்காவில் திவால் சட்டம் நிறுவனர்கள் புதிதாக ஆரம்பத்தில் இருந்து துவங்க வழி செய்கிறது. “அமெரிக்கா உலகின் திவால் தலைநகராக விளங்குகிறது. மற்ற இடங்களில் எல்லாம் அது களங்கமாக, அவமானமாக பார்க்கப்படுகிறது என மேகன் விளக்குகிறார்.  தோல்வியின் விலையை குறைப்பதன் மூலம் திவால் சட்டம் ரிஸ்க் எடுப்பதை ஊக்குவிக்கிறது. தோல்விடைந்த வர்த்தகத்தின் செலவுகளில் இருந்து விடுவிப்பதன் மூலம் அவர்கள் புதிதாக முயற்சிக்க ஊக்கம் பெறுகின்றனர் என்கிறார் அவர். அலைந்து திரிதலில் இருந்து விவசாயம் சார்ந்த பரிணாம வளர்ச்சி சமூக போக்கு மற்றும் புதிய வகை ரிஸ்குகளுக்கு வித்திட்டது. வேட்டையாடியவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் சார்ந்திருந்தனர் என்றால் விவசாயிகள் அலைதலைவிட கடின உழைப்பை நம்பியிருந்தனர். ஆக, ஐரோப்பா தொழில்முனைவை விவசாயம் போல கருதுகிறது என்றால் அமெரிக்கா அதை வேட்டை போல கருதுகிறது என்கிறார் மேகன்.

4. தோல்வி மற்றும் கொள்கை அமெரிக்காவில் பாரம்பரிய எண்ணம் கொண்டவர்கள் மற்றும் தாராளவாதிகள் மத்தியில் தோல்வி மற்றும் நியாமாக நடத்துவது தொடர்பாக அணுகுமுறை மாறுகிறது. தாராளவாதிகள் சமத்துவம் பற்றி கவலைப்படுகின்றனர் என்றால் பாரம்பரிய மனதினர் அளவு பற்றி கவலைப்படுகின்றனர். இது வரி விதிப்பு, பாதுகாப்பு திட்டம், வேலையில்லா காப்பீடு போன்ற சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அவர்கள் அணுகுமுறையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில் கொள்கை மாற்றங்களை எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், சமூக பரிசோதனைகளை நடத்துவது கடினமானது மற்றும் நீண்ட காலம் பிடிப்பது என எச்சரிக்கிறார் மேகன். ஒரே புள்ளிவிவரம் அரசியல் சார்புக்கு ஏற்ப வேறு விதமாக புரிந்து கொள்ளப்படலாம்.

5. திரைப்படங்கள்; வெற்றி, தோல்வி ஆய்வு, வல்லுனர்கள், அனுபவம் உங்கள் வசம் இருந்தாலும் வெற்றி தோல்விகளை கணிப்பது எத்தனை கடினமானது என ஹாலிவுட் உணர்த்துகிறது. பெரும் பொருட் செலவில் உருவான டைட்டானிக் திரைப்படம் தோல்வி அடையும் என கணிக்கப்பட்டு, பின்னர் மெகா ஹிட்டானது. ஆனால் வாட்டர்வேர்ல்டு விஷயத்தில் நேர் எதிராக அமைந்தது. ஸ்டீவன் ஸ்பில்பெர்க் தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் தோல்வி படம் கொடுத்தார்.  “கடந்த கால வெற்றிகள் எதிர்கால பலனுக்கான உத்திரவாதம் அல்ல என்கிறார் மேகன். அதே நேரத்தில் மனித இயல்பு முற்றிலும் கணிக்க முடியாதது அல்ல. சிக்கலான அமைப்புகளுக்கு ஏற்ப மேலும் பரிசோதனைகள் தேவை என்றாலும், அவற்றுக்கு எல்லை உண்டு.

 6. மருத்துவ தவறுகள் தவறுகள், தோல்விகள் மற்றும் விபத்துகளை பகுத்துணர மருத்துவ உலகம் கற்றுத்தருகிறது. விபத்துகளை எதிர்பார்க்கவோ திட்டமிடவோ முடியாது. தவறுகளை எதிர் நோக்கலாம் ஆனால் மோசமானவை அல்ல. தோல்விகள் தீவிரமானவை. இவை தவறான கணிப்பு அல்லது பொறுப்பற்றத்தன்மையால் நிகழலாம். அமைப்பு வடிவமைப்பு, மருத்துவ செயல்முறைகள், மருத்துவ கருவிகள் மற்றும் மனித முடிவுகள் ஆகியவற்றில் தவறுகள் ஏற்படலாம். மேலும் பல காரணங்களினால் தவறுகள் நிகழலாம். மருத்துவ ஊழியர்கள் முறையான செயல்முறை பின்பற்றப்படாத போது தவறுகள் நிகழலாம்.

7. சந்தை தோல்விகள் சந்தை நிர்வாக விதிகள் வகுக்கப்படும் விதத்தில் பிரச்சனைகள் தோன்றலாம். மோசமான எண்ணம் கொண்டவர்கள் ஒட்டைகளை பயன்படுத்தி ஏமாற்றலாம். என்ரான் விஷயத்தில் இப்படி தான் நடந்தது. “எழுதப்பட்ட விதிகளுடன் எழுதப்படாத விதிகளும் வலுவாக இருக்கும் போது சந்தை செயல்பாடு சிறப்பாக அமைகிறது,” என்கிறார் மேகன்.  வழக்கமான பொருளாதாரத்தைவிட, பரிசோதனை பொருளதாரம் போன்ற உத்திகள் இத்தகைய சந்தையை உருவாக்க உதவி, தவறுகளை முன்னதாகவே உணர உதவலாம்.


8. நீண்ட கால எதிர்வினை அறிவியல் மற்றும் இலக்கிய வெற்றியில் தான் கல்வி அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் வெற்றிக்கு முந்தைய போராட்டங்களில் அல்ல. திறமை மட்டும் அல்லாமல் கடின உழைப்பும் வெற்றிக்குக் காரணம் என்கிறார் மேகன். மாணவர்கள் தோல்வி அடைய மற்றும் மீண்டு வர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏழை பள்ளிகள் இந்த வாய்ப்புகளை அளிப்பதில்லை. இந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயம், குற்றவாளிகள் குணத்தை மாற்றுவதில் தண்டனை அமைப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது.

கடின தண்டனைகள் அல்லது பழிவாங்கல் பதிலாகாது. சரியான மாற்று நடவடிக்கைகளே பொருத்தமாக இருக்கும். பெற்றோர் காட்டும் கடின அன்புடன் இதை மேகன் ஒப்பிடுகிறார். தவறுகள், தோல்விகள், விபத்துகள், பேரழிவுகள் ஆகியவற்றை வகைப்படுத்த இந்த புத்தகம் வழிகாட்டுகிறது. கணிப்புத்தன்மை, தாக்கம், மறுசீரமைப்பு வாய்ப்பு, எதிர்கால திட்டமிடல் தாக்கம் ஆகிய அம்சங்களை இது கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் தோல்வி குறித்த கலாச்சார பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். முறையான ஆவணப்படுத்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மூலம் துறைகளுக்கு ஏற்ப தோல்வி அனுபவத்தை வகைப்படுத்த முடியும். உதாரணமாக ஸ்டார்ட் அப் அல்லது என்.ஜி.ஒ அமைப்புகளுக்கான வர்த்தக மாதிரி கண்டறியப்பட்டு பலவீனமான அம்சங்களை கணித்து, தோல்வி வாய்ப்புகளையும் முன்கூட்டியே கணிக்கலாம். “உறுதியான சமூகம் தோல்வியை அனுமதித்து அதன் தாக்கம் அந்த கணத்தில் மட்டுமே இருக்க அமைகிறது. இது மீண்டு வர வழி செய்து அதன் பலனை அனைவருக்கும் அளிக்கிறது என்கிறார் மேகன்.













அறிவு பெரிதா? அரசியல் பெரிதா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வித்துறையில் இருக்கும் அமைச்சர்கள், மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்  தான் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பதக்கப் பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பட்டச் சான்றிதழ்களையும் அவர்கள் கையால் வழங்குகின்றார்கள்?  ஏற்புடையதா?

இரவு பகல் கண் விழித்து, பாடங்களோடு உருண்டு புரண்டு, ஆசிரியர்களை கவனித்து, அனுசரித்து, கல்விக்கூடங்கள் அறிவுறுத்தும் ஒழுக்க விதிகளை நம்பி, அதனை கடைபிடித்து, கடன் வாங்கி, சேமிப்பு பணத்தை எடுத்து, தண்ணீர் போல பணத்தை செலவளித்து நாம் படித்து முடிக்க வேண்டும். பட்டம் வாங்க வேண்டும். அது நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்தும் என்ற நம்பிக்கையை கைவிடாமல் இருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடத்தில் கண் துடைப்பாக நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வ்யூ உண்மை தான் என்று நம்ப வேண்டும். நேர்முகத் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் உண்மை தான் நம்பித்தான் ஆக வேண்டும். நம் திறமைகளை புடம் போட்டுப் பார்ப்பார்கள். தேறாவிட்டால் குடும்பத்தினர் அடையும் கவலைகளை விட நம் மேல் நமக்கு உருவாகும் கழிவிரக்கத்தை கடந்து வந்து நிற்க வேண்டும். மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்லாமல் சொல்லும் பட்டமளிப்பு விழா மிக முக்கியம். ஆனால் நம் எதிர்கால வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஆதார காரணமாக உள்ள கல்லூரி வழங்கும் பட்டங்களை கொடுக்க வரும் நபர்களைப் பற்றி அவர்களின் தகுதிகளைப் பற்றி, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைப் பற்றி, அவர்களின் நிகழ்கால அயோக்கியத்தனங்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் மேடையில் ஏறி பட்டத்தை வாங்கும் போது எடுக்கப்படும் புகைப்படத்திற்கு விரும்பாவிட்டாலும் புன்னகை பூக்க வேண்டும்.

காலம் முழுக்க இந்த நபர்களும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். என் தலைமுறைக்கும் இவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும்? முழுமையாக சொல்லவும் முடியாது. ஆனால் இவர்கள் என்னுடன் என் வாழ்க்கை முழுக்க வந்து கொண்டேயிருப்பார்கள்.

நான் வாங்கும் அந்த பட்டத்திற்கு என்ன மதிப்பு?

என்னை ஒழுக்கமாக வாழ்ந்தால் தான் உயர்வுண்டு என்று போதித்த பாடங்களுக்கு என்ன மரியாதை?

திருடினால் நிச்சயம் தண்டனை உண்டு என்ற சொல்லும் சட்டங்கள் என்பது மட்டும் எப்படி அரசியலில் மட்டும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது?

வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். மனிதர்களுக்கு அல்ல என்ற போதனைகளை இன்னும் எத்தனை நாளுக்கு நான் நம்பித் தொலைக்க வேண்டும்?

வள்ளுவர் சொன்ன ஒழுக்கம் என்றால் என்ன?
சமூகம் சொல்லும் தகுதி என்றால் என்ன?

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அண்மையில் நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?
(வருடம்  2008 )மலரும் நினைவுகள்
எனது மகனை ஒரு மாதம் கழித்து பார்க்க சென்றேன்.மனைவி சொல்லியிருந்தாள் எல்லோரையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான் என்று.எனக்கு ஒரு பயம் இவன் பார்த்து சிரிப்பானா இல்லையா என்று.காணொளி பேசியில் மனைவியிடம் பேசும்போது தூங்கி கொண்டு இருப்பான்.ஆனால் அன்று நடந்ததை வேறு,என்னை பார்த்தவுடன் அந்த பொக்கை வாய் சிரிப்பு அதை எதிர் பார்க்கவில்லை.அன்று என்னை எப்பொழுதல்லாம் பார்ப்போனோ அப்பொழுதெல்லாம் சிரித்து கொண்டே இருந்தான்.அந்த முதல் நிமிடம் நான் சிரித்த அழுகையுடன் கூடிய சிரிப்பு இன்று நினைத்தாலும் மகிழ்வாக உள்ளது.
மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களுக்கு இட்ட 10 கட்டளைகள் எவை?
(வருடம் ...2004)
என் மனைவியும் எனக்கு கட்டளைகள் இட்டார்.இந்த கேள்வியை நானே என் மனைவியிடம் கேட்டுப் பெற்றேன்,(வருடம் ...2004)

ஒருநாள் இரவு உணவுக்குப் பின் 11 மணிக்கு உறங்க தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவியிடம் நான் விளையாட்டாக 10 கட்டளைகள் இட்டாள் நான் அதை கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று சொன்னேன்,

உடனே கேட்ட மகிழ்ச்சியில் கட்டளைகள் இட தயாரானார் என் மனைவி, எனக்கோ மனதில் ஒரு பதட்டம் ஒரு வேலை சொல்லிவிட்டார் என்றால் என்ன செய்வது என்று அவரின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை பார்த்தபடி பயப்படாத டா கைப்புள்ளனு எனக்குள் கூறிக்கொண்டு கேட்க தயாரானேன்.

கட்டளை 1: வாரத்தில் ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் அவருடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

கட்டளை 2: நான் கைப்பேசி அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது.

கட்டளை 3: நண்பர்களுடன் சேர்ந்து உலாவுதல் கூடாது.

கட்டளை 4: தன்னுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்வைகள் அலைபாயக் கூடாது.

அடுத்து என்று யோசித்து கொண்டிருக்க…

முதல் கட்டளையே விழி பிதுங்க வைத்து விட்டது அதுவும் நான்காவது கட்டளை சொன்னவுடன் இதற்கு மேல் பொருக்க முடியாது குருநாதா என்று யோசிக்கும் பொழுது என் மனைவி அவ்வளவு தாங்க பத்துலாம் இல்ல இந்த நான்கு கட்டளைகளை கடைப்பிடிங்க என்றார்.

நான் உடனே அதெல்லாம் இல்ல பத்தும் சொன்னால் தான் நான் கடைப்பிடிப்பேன் மீதி ஆறு கட்டளைகள் சொல்லவில்லை என்றால் அந்த நான்கையும் கடைப்பிடிக்க மாட்டேன் என்றேன்..

ஓ அப்படியா என்று யோசிக்க..

எப்படியாவது இந்த ஆட்டத்தை கலைத்துவிடனும்னு இன்னும் இருபது நிமிடத்தில் அந்த ஆறு கட்டளைகளையும் சொல்லிடனும்னு கெடு வைத்தேன்.

என் மனைவி யோசித்து ஒவ்வொன்றும் சொல்ல அவை யாவும் இந்த நான்கிற்குள் அடங்குதுனு சமாளிக்க இப்படியே மீதி ஆறு கட்டளைகளை சொல்ல விடாமல் சமாளித்து இருபது நிமிடத்தை கடக்க வைத்து, நான் நான்கையும் கடைப்பிடிக்க முடியாது என்று சொல்ல

பிறகு என்ன இடியுடன் கூடிய அடை(டி) மழை பொழிய.

கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு இருக்க தூங்கிடுனு தூங்கிட்டேன்.

3.75 சென்ட் இடத்தில் நல்ல வீடு கட்ட முடியுமா?

1.5 சென்ட் இடத்தில் கூட உங்கள் வீட்டை போதிய தேவைக்கு உருவாக்கிக் கொள்ள முடியும். எல்லாம் கட்டமைப்பில் தான் இருக்கிறது

சரி, 3.75 சென்ட் என்றால் 2.5 சென்டிற்கே உங்களால் அழகான இடவசதி கூடிய வீட்டை அமைத்துக் கொள்ள முடியும்

மேற்கண்ட வரைபடம் 2.5 சென்டிற்கான மாதிரிதான் , அதுவும் முதல் தளத்திலேயே

முதலில் உங்கள் இடத்தின் அமைப்பு, உங்களுக்கான தேவையை நல்ல பொறியாளரையோ இல்லை காண்ட்ராக்டரையோ பார்த்து கேளுங்கள். என்னை பொறுத்தவரை இரண்டு சென்ட் இடம் என்பதே தாராளம் தான், கார் பார்க்கிங் உடன்.


மேலும் தகவல் தெரிய, என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிச்சயம் உதவுகிறேன்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

திங்கள், 14 அக்டோபர், 2019

தெரிந்தோ தெரியாமலோ ....

 ஆசாமி யூட்யூபில் பேமஸாகி விட்டார். இரண்டு யூட்யூப் சானல்களில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இவரது வீடியோக்கள் பேஸ்புக்கிலும் வாட்ஸாநிறைய ஷேர் செய்கிறார்கள். மிடில் க்ளாஸுக்கு எழும் பொருளாதார பிரச்சினைகள், பணம் ஈட்டுதல், எதிர்காலம் குறித்த கேள்விகள் இவரிடம் முன்வைக்கப்படுகின்றன.
முன் வைக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பொருளாதாரம், நாட்டு நடப்பு இவற்றில் கொஞ்சமாக புள்ளி விபரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு டான் டான்  பதில் கூறுகிறார். இவர் வாயிலிருந்து இதுவரை வாழ்க்கையில் முன்னேற ஒரேயொரு உருப்படியான ஆலாசேனையைக் கூட வந்ததில்லை.

சார்.. ஷேர் மார்க்கெட்ல பணம் போடலாமா?
போடாதீங்க.. தொடைச்சிட்டு போயிரும்
ம்யூட்சுவல் ஃபண்டு?
வேனாம்.. மொத்தமா அடிச்சிட்டு போயிடும்..
சிறு தொழில் ஆரம்பிக்கலாமா?
இப்ப வேனாம்.. சரியான நேரம் இது இல்ல.. ஒரு பத்து வருஷம் போவட்டும்..
சார்.. இடம் வாங்கலாமா?
வானவே வானாம்.. ரியல் எஸ்டேட் டவுன் இப்ப..
அபார்ட்மெண்ட்?
எதுக்கு..? அதுல அப்ரிசியேஷனே கிடையாதுங்க..
கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் ஸார்..
அந்தமாறி நெனப்பிருந்தா இப்பவே மனசுல இருந்து அழிச்சிடுங்க.. உங்களால செலவ சமாளிக்க முடியாது
ஸார்.. எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சி.. கொழந்தயாச்சும் பெத்துக்கலாமா?
நோ வே... இருக்கற பணத்த எல்லாம் அதுங்களுக்கு செலவு பண்ணிட்டீங்கன்னா கடைசி காலத்துல சோத்துக்கு என்ன பண்ணுவீங்க..!!
நல்லதா ஒரு சேவிங்க்ஸ் ஸ்கீம் சொல்லுங்க சார்..
மூனே மாசத்துல ஏதாச்சும் பெருவியாதி வந்து செத்துருவீங்க.. இல்லனா நாளைக்கே சுனாமி வரலாம்.. எங்கயாச்சும் எரிமலயோ பூகம்பமோ வெடிக்கலாம்.. எதுக்கு உங்களுக்கு சேவிங்ஸூன்னேன்!!
இப்படியாகத்தான் அவரது பதில்கள் இருக்கின்றன. இவரது சித்தாந்தத்தின் படி மிடில்கிளாஸ் என்றால் எல்லாக் கனவுகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு மூனு வேளை சோத்துக்கு வழிபண்ணிக்கொண்டு ரிஸ்கே எடுக்காமல் காலம் தள்ளவேண்டும். அதுதான் வாழ்க்கை. சின்னச்சின்ன ரிஸ்க் இல்லாமல் இந்த அவசர உலகத்தில் ஒரு கேசத்தில் ஒரு இழையைக்கூட புடுங்க முடியாது என்று யாராவது இவரிடம் தெரிவியுங்கள்.
அண்ணாத்தை எப்போதும் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டிக்கொண்டுதான் பேசவே ஆரம்பிக்கிறார். ஆனால் ஆலோசனை பெறுகிறவர்களை மட்டும் எப்போதும் ரவா கஞ்சியே காய்ச்சி குடித்துக் கொண்டிருக்க வழி சொல்கிறார்.