சனி, 28 ஜூலை, 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை ...(Google...)

நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை என்று ..சும்மா ..கூகுளை தட்டினேன் ..நமது செய்லபாடுகளை ..அழகா விவரிக்கிறது ...செயல்பாடுகள் ஒன்றே நமது விருட்சத்தின் விதைகள் . ...விழுதுகள் ...ஆலமரமாக தன் கிளைகளை பரப்புகிறது ...
நம்ம தேவராட்டம் ..
கரப்பாடி ...கார்த்தி ,சிவா மாப்பிள ..எப்படி இருக்கிறது என்று ..ஏதோ நமக்கு தெரிந்த தேவராட்டம் ..வாழ்க்கையில் ஆடியதே இல்லை ..சும்மா ஆடி பார்க்கலாமே .தத்தக்க பித்தக்கா ..என்று ஆடியது ...என்று ஆடினேன் ...நல்ல இருக்க மாப்பிள ..அடுத்த வருஷம் ..சும்மா பட்டய கிளப்பலாமா ..பயிற்சி எடுத்துக்கொண்டு ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

தளி எத்தலப்ப மன்னர்....

இந்த பாடல் எடுக்கும் பொழுது ...அருமையான சூழ்நிலை ..எனது பெரியம்மா ..திருமலையம்மாள் (தளி ஜல்லிபட்டி )..அருமையான பாடல்வரிகளுடன் பாடிய நாட்டுப்புறக்கலைபாடல்கள் அருமையான பாடல் வரிகளுடன் இன்றும் மனதில் பதிந்து விடுகிறது ...பள்ளிப்படிப்பு என்பது இவர்கள் மொழியில் அறவே இல்லாமல் ..எப்படி பாடமுடிந்தது ..தினம் தோறும் எண்ணிப்பார்க்கிறேன் ...வியப்பே மேலிடுகிறது ...அவர் மறைந்தாலும் அவர்களை என் கேமரா கண்களில் படம் பிடித்து ...தேவையான பொழுது கேட்டு மகிழ்கிறேன் ...உங்களுக்கும் பகிர்வதில் எனக்கு பெருமை ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681.... 

வியாழன், 26 ஜூலை, 2018

இன்று அருமையான தென்கொங்கு நாட்டின் வரலாற்று நூலை பரிசாக அளித்ததது ..மிக்க மகிழ்ச்சி

உடுமலை அரசு கலைக்கல்லூரி  முதல்வர் பாலசுப்ரமணி  அவர்களுக்கு உடுமலை வரலாற்று  ஆய்வு நடுவத்தின்             வெளியீடான           தென் கொங்கு  நாட்டின்  முதல் "விடுதலைப்  போர்  நூலினை       முனைவர்  மதியழகனுடன்  பேராசிரியர்  கண்டிமுத்து         ஆய்வாளர்  சிவக்குமார்     அமராவதி தங்கராஜ்


தென்கொங்கு  நாட்டின்  முதல்  விடுதலைப்போர்   நூலை  தென்கொங்கின்  ஆய்வாளர்   தென்கொங்கு  சதாசிவம்      அவர்களுக்கு   நூலினை   வழங்கிய போது  உடன்  பேராசியர்  கண்டிமுத்து  சிவக்குமார் ,  ஈழவேந்தன்....

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் தமிழ் துறை மாணவர்கள் ..பேராசியர்  கண்டிமுத்து,ஆய்வாளர் பொதிகை அச்சகம் அருட்செல்வம் என்பது பெருமை ..


செவ்வாய், 24 ஜூலை, 2018

உடுமலைப்பேட்டை .மலையாண்டிபட்டிணம் .ஊர்புற கிளை நூலகம் திருப்புவிழாவில் ...நாட்டுப்புற கலைஞர் திரு .வேலுமணி அவர்கள் பாடிய ..தளி எத்தலப்ப மன்னரின் வீரம் நிறைந்த பாடல் ...


நாட்டுப்புறக்கலைகள் -தமிழ்நாடு ..

கோடாங்கிபட்டி தேவராட்டம்....

கம்பளத்து மக்களின் தேவராட்டம் ...



மீள்பதிவு ....ஷ்யாமுடன் வெங்கடேஷ் மாப்பிள ..(.Cognizant -சென்னை )
4 years ago
வரும் நம் தலைமுறைக்கு என்ன கற்று கொடுக்க போகிறோம்  ....? அன்புமட்டும்தான் ....

வேட்டை ...
நம் கம்பள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டியகாலம் தற்பொழுது ....தடைசெய்யப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் உள்ளது ...காலத்திற்கு ஏற்ப நம் சமுதாயம் மாறவேண்டும் ...

இந்து
சமய புராணங்கள் அரசர்கள்
வேட்டையாடுதலை
பொழுதுபோக்காகக்
கொண்டிருந்தனர் எனக்
கூறுகின்றன.
வேட்டையாடுதலுக்கு ஒரு
நீண்ட வரலாறு உண்டு. நம்
முன்னோர்களுக்கும்
முந்தைய ஆதி மனிதர்கள்
விலங்குகளை வேட்டையாடி
இறைச்சி உண்கின்ற போது
ஆரம்பித்ததன் பழக்கம் இன்று
வரை இருக்கலாம். பெரிய
விலங்குகளிடம் இருந்து
தம்மைத் தற்காத்துக் கொள்ள
ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர்
உணவுப் பழக்கமாகவும் மாறி
இருக்கலாம். நாகரிகம்
அடைந்து சமவெளிகளில்
குடியேறுவதற்கு முன்னரும்,
விவசாய நிலங்களை
உருவாக்கிப் பயிரிடுதலைக்
கற்றுகொள்வதற்கும் முன்னர்
வேட்டையாடுதல்
உணவளிக்கும் ஒரு செயலாய்
இருந்து வந்தது. ஆடி மாசம் ஆடுடா வேட்டை ஆடுடா...பார்ப்போம் நெருப்புடா...நெருங்கடா பார்ப்போம் ....நெருங்கினா...பொசுக்கிறா...கூட்டமடா... ஆடுடா வேட்டை ஆடுடா...ஆடிமாசம் வேட்டையாடுடா அரசாண்டா கம்பளத்தான்டா....

ஞாயிறு, 22 ஜூலை, 2018

தளி எத்தலப்ப மன்னர்க்கு ...ஆங்கிலேய காலத்தில் இந்திய விடுதலை போராட்டக்களங்களில் எப்படி சுக துக்கங்களில் ஹசன் முகமது எப்படி உதவி புரிந்தாரோ ..அதுபோல் .என் சுக துக்கங்களில் கூடவே இருக்கும் என் இனிய நண்பன் ..அப்சல் நூர் -க்கு .. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... — feeling happy with Afzal Noor.

Afzal Noor ...MD 



"insta-redeem" & "Hurry4Curry" together @ #BNI Oscar meet.....
Hurry4Curry - "Munch our Mutton, Cherish your apetite with our fresh chicken, Nothing fishy except fish & become our loyal kings by "insta-redeem"....
Soon, We "Hurry4Curry" will going to deliver fresh meats at your door-step within 45mins all around Coimbatore....Get diamond points and discounts by downloading our "insta-redeem"....
Intro
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்...9944066681... 

செவ்வாய், 17 ஜூலை, 2018


நான் வாசித்த புத்தகம் ...

நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் -துணை செயலாளர் -வழக்கறிஞர் சிவரஞ்சனி -கோவை ,கம்பளவிருட்சம் தங்கமான உறுப்பினர்கள் -லலிதா -காவல்துறை--கோவை ,செல்வகுமார் -காவல்துறை -பழனி , தம்பி நந்தகோபால் -வனத்துறை -கோவை ,வழக்கறிஞர் .ரமேஷ் -பெரியகோட்டை ,வழக்கறிஞர் -கார்த்தி -கோவை ,வழக்கறிஞர் படிப்பை படிக்க தொடங்கியிருக்கும் ..தங்கமான சுபாஷினி -சென்னை , இவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது இந்த புத்தகம் வாங்கி படியுங்கள் ..உங்களுக்கும் ,நம் வளரும் சமுதாயத்திற்கும் நன்மையாக இருக்கும் ...வாழ்த்துக்கள் ..

சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியல் குளறுபடிகளைக் கண்டு மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இவரையும் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் பல விசயங்களை இவர் செய்து காட்டியிருப்பதற்குப் பின்னால் இவர் எதையெல்லாம் இழந்திருக்க வேண்டும்? என்பதனை பல முறை யோசித்ததுண்டு. இவரின் சொந்த விசயங்களைப் பற்றி இணையத்தில் பகிர்ந்ததும் இல்லை. ஆனால் இவரின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பின் வாயிலாகக் காவல்துறை, நீதிமன்றம் என்ற இரண்டு துறைகளைப் பற்றி அதன் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் புத்தகமாக எழுதியுள்ளதை வாசித்து முடித்த போது மனதில் உருவான தாக்கம் மறைய அடுத்த இரண்டு நாள் ஆனது.

அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி தேவைப்படாது. அரசு எந்திரத்திற்கு ஆன்மா என்பது தேவையில்லை. அதிகாரிகளுக்குக் கட்டளையை நிறைவேற்றுதல். தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுதல். உருவாகும், உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நிகழ்வு. இதற்கு நாம் அழைக்கும் பெயர் ஜனநாயகம். இதனைத்தான் இங்கே மக்களாட்சி என்கிறோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் சாதாரணக் கீழ்மட்ட அரசு ஊழியராகப் பணிபுரியும் ஒருவர் நாம் இவற்றைச் சகித்துக் கொள்ளக்கூடாது, நடந்து கொண்டிருக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தன்னால் ஆன முயற்சிகளை மறைமுகமாகச் செய்யும் போது உருவான தலைகீழ் மாற்றங்கள் தான் இன்று இவரை எழுத்தாளர் ஆக மாற்றியுள்ளது. இணையத்தில் நண்பர்கள் அளவுக்கு எதிரிகளையும் உருவாக்கியுள்ளது. பெயரைச் சொன்னாலே பலருக்கும் அலறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காவல் நிலையம் வரைக்கும் செல்ல வேண்டியிருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள். காரணம் அதன் அமைப்பு அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து அங்கு அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், கேலிகளும் தாண்டி முதல் தகவல் அறிக்கை பெற்று விட்டால் கூட அதுவே மிகப் பெரிய சாதனை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அலையும் அலைச்சலில் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தவர்கள் அங்கே போகாமல் இருக்க வைக்கின்றது.

ஆனால் நீதிமன்றம் இதனை விட வித்தியாசமானது. உள்ளே என்ன நடக்கின்றது? என்பதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அமைப்பு வேறொரு தளத்தில் இயங்குகின்றது. இன்று வரையிலும் இது தான் சரி என்று பிரிட்டிஷார் உருவாக்கிய இத்துப் போன நடைமுறைகளைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. காரணம் வெளிப்படையாக, எளிதில் அணுகக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் கோர முகம் மக்களுக்கு எளிதில் தெரிந்து விடும் அல்லவா? மக்கள் பேசும் மொழியும் அலுவல் மொழியும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எவரும் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக முயற்சிக்கவும் மாட்டார்கள். அப்படியே முயற்சித்தாலும் காலம் கடந்து போயிருக்கும்.

இப்படித்தான் இங்கே சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகின்றது. காலம் முழுக்க கையேந்தி வைத்துக் கொண்டிருப்பதே அரசாங்கத்தின் வெற்றியாகவும், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்வதே மக்களின் வெற்றியாகவும் இங்கே உள்ளது.

அதனைத் தான் இந்தப் புத்தகம் உயிருடன் இன்னமும் வாழும் பல அதிகாரிகளின் உண்மை முகம் வழியாக நமக்குப் புரியவைக்கின்றது.

இரண்டு துறைகளிலும் நல்லவர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிற்கு இருப்பதால் மட்டுமே சங்கர் இந்தப் புத்தகம் எழுதும் அளவிற்கு உயிரோடு இருக்க முடிந்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளர் என்பவர்கள் எழுதி எழுதிப் பழகியவர்களுக்கு மட்டுமே அதன் சுவராசிய சூட்சமம் கைகூடும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இந்தப் புத்தகத்தை நள்ளிரவு தாண்டியும் வாசித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு மனதில் பதட்டத்தை உருவாக்கியதோடு தொடர்ந்து படபடப்பையும் வாசிப்பவனுக்கு உருவாக்கியதில் முழுமையாகச் சங்கர் வெற்றியடைந்துள்ளார்.

இதில் வாசித்துக் கொண்டே வந்த போது மிகவும் ரசித்த விசயம் ஒன்று இதில் உள்ளது.

இப்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா வீட்டுக்குச் சோதனை போடச் சென்ற போது அவர் கண்ணாடியில் பொட்டு வைத்துக் கொண்டு இயல்பான நின்றதும் இவர்களைக் கண்டதும் சோகமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்பதும் போன்ற காட்சிகள் வாசிக்கும் போதே அந்த நிகழ்வை யோசித்துப் பார்த்துச் சிரிக்கத் தோன்றுகின்றது.

அதே போல மன்னார்குடி குடும்பம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் தஞ்சாவூர் வீடு எங்கே உள்ளது என்பதனை அறிய அலைந்த சம்பவங்களையெல்லாம் வாசிக்கும் எந்தக் காலமாக இருந்தாலும் காத்திருந்து சங்கறுக்கும் கலையைக் கற்ற அந்தச் சமூகத்தின் செயல்பாடுகள் பெரிதாக ஆச்சரியமளிக்கவில்லை.

இவர்களையும் ஏ1 குற்றவாளி கட்டி மேய்த்துள்ளார் என்பதனைத்தான் ஆச்சரியமாகச் சொல்லத் தோன்றுகின்றது.

சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.


மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்தப் புத்தகத்தை நிச்சயம் சட்டக்கல்லூரி மாணவர்களும், காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் உள்ளேயிருக்கும் ஆன்மா அழுகிப் போய்விடக்கூடாது என்ற சங்கல்பத்தை இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவர்களுக்கு ஏதொவொரு வகையில் உணர்த்தியே தீரும். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இந்த இரண்டு துறைகளின் மேல் பொது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. அதனையும் சங்கர் அங்கங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட ஒன்று கலைஞர் குறித்த அவர் ஆளுமை பற்றிய புரிதல்.

ஆட்சியில் இல்லாத போது போராடிக் கொண்டிருந்ததைப் போல ஆட்சியில் இருந்தாலும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே தான் இருந்துள்ளார். அதன் மூலம் உருவான பல அனர்த்தங்களைச் சங்கர் சில இடங்களில் மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரின் வலைதள வீச்சின் காரம் இதில் குறைவு. ஆனால் வாசிப்பவனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்து நகர வைக்கும் சூட்ச எழுத்தாள திறமையை அனாயாசமாகக் கைப்பற்றி வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் குறை என்று பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில் ஜம்ப் ஆகி அதனைப் பற்றி முழுமையாக விவரிக்காமல் சென்று விடுவது இயல்பாகப் பல இடங்களில் உள்ளது. ஒரு வேளை சங்கர் Shankar Aஇதன் தொடர்ச்சியாக அடுத்தப் புத்தகம் எழுதினால் இன்னமு😋ம் தைரியமாகப் பல விசயங்களைச் சுட்டிக் காட்டுவார் என்று நம்புகிறேன். 😁

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681


திங்கள், 16 ஜூலை, 2018

என் அன்பு தோழியின் அழகான நிதர்சனமான பதிவு ....
Shan Karuppusamy கொங்கு பகுதிகளில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்து இருந்தார்.
அது கொங்கு இல்லை .ஐயர் சமுதாயம் முதல் பல படித்து முன்னேறிய பல இடங்களில் நடப்பதுதான்.
பெண்கள் காதல் திருமணம் என்று வரும் பொழுது சமுதாயம் யோசிப்பதில்லை. ஆண்கள் இன்னும் பின் தங்கியே இருப்பதாய் தோன்றுகிறது. நிதர்சனம் அறிவதில்லை.
இன்னொன்று பெண்களுக்கு நடக்கும் கொடுமையால் பல பெண் குழந்தைகளுக்கு திருமணம் மேலேயே ஆர்வம் போய்விட்டது. இப்பொழுது இருக்கும் திருமண கட்டமைப்பில் இருந்தும் பலர் வெளியேற விரும்புகின்றனர் ..
நிஜம்தானே . அடிமையாய் நடத்தி நடத்தி ஒரு கட்டத்தில் பெண்களுக்கு இதன் மேல் கசப்பு வராமல் என்ன செய்யும்?
நேற்று சிங்கிளாய் இருக்கும் தோழியிடம் மறு மணம் பற்றி கேட்டேன் .."எனக்குன்னு வீடு இருக்கு, இங்க உங்க எல்லாருக்கும் பின்னாடி ஒரு சுமை..எப்போ வீட்டுக்கு வருவன்னு போன் ..எப்பவும் வீடு பின்னாடியே இருக்கீஙக..நான் நிம்மதியா எந்த கேள்விக்கும் ஆளாகமல் இருக்கேன்..காலையில் எப்ப வேணா எழுந்துப்பேன்..வீடை எப்படி வேணா போட்டு வைப்பேன். காபி ஏன் லேட்டு, ஏன் வீடு இப்படி இருக்குன்னு கேள்வி கேக்க என்னை எப்பொழுதும் வேலை ஏவ யாருமில்லை..இன்னொருத்தருக்கு அடிமையாகதான் நமக்கு எதுக்கு திருமணம் .அது இனிமே எனக்கு தேவையே இல்லை" என்றார்..
இன்னொரு தோழி "காசுக்கு திருமணம் என்றால் அதுக்கு வேறு தொழில் செய்யலாம் .அன்புக்குதான் குடும்பம் .அது நமக்கு கிடைக்குதா?" என்றார்.
பெண்களிடம் அன்பாக நடக்கும் தலைமுறையாக மாறுவதும், மாற்றுவதிலும்தான் பதில் உள்ளது..
அதே சமயத்தில் கணவன் காசு கொடுக்கும் இயந்திரமில்லை. நமக்கும் எல்லா கடினத்திலும் சம பங்கு இருப்பதை பெண்களும் உணர வேண்டும் அப்பொழுது நல்ல மாற்றங்கள் சமுதாயத்தில் உருவாகும்
மாற்றத்தை நோக்கி செல்லும் காலம் பிறந்துவிட்டதை உணர முடிகிறது..
இயற்கை சமம் செய்யும் காலம் இது.
இந்த மாத பண்பாட்டு கழக மாத இதழ் ...எப்படி சொல்வது என்று தெரியவில்லை ..படித்ததில் இருந்து ஒரே சிந்தனை ...பீலிங் sad ...

ஆமாங்க சார் ...இன்னும் நமது அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் ...
திருப்பூரில் எதுலப்பர் மகாஜனசங்கம் ஆரம்பித்து ...இரண்டு வருடங்கள் ஆரம்பித்துவிட்டு ...பண்பாட்டுக்கழகத்திடம் பேசி அவர்கள் பதவி வாங்கிவிட்டு ...மகாஜன சங்கத்தை களைத்து விட்டார்கள் ..ஆனால் நாம் மாறாமல் ...நம் டிரஸ்ட் முறைப்படி பதிவு செய்து ..இப்போது தான் கொஞ்சம் ஒரு அடி வைத்தோம் ..விட்டால் ஆலமரமாக வளர்ந்து விடுவார்கள் என்று இங்கே கம்பள விருட்சம் ..அங்கே ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை வளர்ந்துவிடும் ..யாரோ சொல்பேச்சை கேட்டு நம்ம நசுக்க பார்க்கிறார்கள் ..இதற்கும் நாம் அவர்களுடன் இணக்கமாக தான் சென்றேன் ..உங்களுக்கு தேவையான படித்த பண்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்களை நானே பண்பாட்டு கழகத்திற்கு ...அளிக்கிறேன் என்று கூட சொல்லிப்பார்த்தேன் ..நீதிபதியிடம் ,ராமகிருஷ்ணன் ,சங்காரவேல் ,முருகவேல் ..அன்பாக பேசி ..சுமுகமாக தான் கொண்டுசென்றேன் ..களப்பணி செய்து இரண்டு வரலாற்று நூல்களையும் ..அவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திவிட்டேன் இதைவிட எதை எதிர்பார்க்கிறார்கள் ..எல்லாம் பண்பாட்டு கழகம் செய்யவேண்டும் ..என்று நினைக்கிறார்கள் ...பண்பாட்டு கழக பெயரை நம் மாப்பிளைகளிடம் ,தம்பிகளிடன் சொன்னால் ..கோபப்படுகிறார்கள் ...எப்படி கையாள்வது கொஞ்சம் சிரம படவேண்டியதாக இருக்கிறது ..பார்ப்போம் ..

இப்பொழுது எங்கு திருப்பினாலும் அறக்கட்டளைகள் பற்றி பேச்சு ..உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் நிலங்கள் ..,


ஞாயிறு, 15 ஜூலை, 2018

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் மிக மகிழ்ச்சியானவர்களாகி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு ஒரு சமையல்காரி கிடைத்து விடுகிறாள். ஒரு சலவைத் தொழிலாளி கிடைத்து விடுகிறாள். ஒரு செவிலி கிடைத்து விடுகிறாள். ஒரு துப்புரவுத் தொழிலாளி கிடைத்துவிடுகிறாள். குடும்ப நிறுவனத்திற்கான ஒரு ஊதியமற்ற மனேஜர், அக்கவுண்டன்ட் கிடைத்து விடுகிறாள். இவை அனைத்திற்கும் மேலாக "கண்ணியமான" ஒரு தாசி கிடைத்து விடுகிறாள்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மகா நடிகைகளாகி விடுகிறார்கள். அவர்கள் தாங்கள்தான் உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவது மட்டுமல்ல, அப்படியே நம்பி நடித்தபடியே வாழ்ந்து முடிக்கிறார்கள்.
7 வது புத்தக திருவிழா  ..மாணவ,மாணவிகளுக்கான  போட்டிகள் 2018..

இன்று காலை ஞாயிறு ...வெளுத்து வாங்கும் வெள்ளந்தியான குழந்தை செல்வங்களுடன் அழகான மழையும் பொருட்படுத்தாமல் ,தங்களின் பெற்றோர்களுடன் 10 மணி என்று அறிவித்து இருந்தபோதும் ...காலை 9 மணிக்கே குவிய தொடங்கி விட்டனர் ..போட்டிக்கான ஏற்பாடுகளை புத்தக திருவிழா தோழர்களுடன் செய்துகொண்டிருந்தோம் ..வருடம் வருடம் புத்தக திருவிழாவிக்கான  போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ..வருங்கால குழந்தை செல்வங்களின் புத்தக தேடல்களை போல் ...
அதுவும் இன்று தமிழ்நாட்டின் கல்விக்கண்  கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளன்று ..கட்டுரை ,ஓவிய ,பேச்சு போட்டிகள் நடை பெற்றது கூடுதல் சிறப்பு ...இப்போட்டிகள் .ராஜேந்திர ரோட்டில் அமைந்துள்ள அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது ....குழந்தை செல்வங்கள் கலந்துகொண்டது மிக சிறப்பு ...பள்ளி குழந்தைச்செல்வங்கள் தன் பிஞ்சு கரங்களால் பசுமை நிறைந்த வளங்களையம் ,இந்திய விடுதலைக்கு  வித்திட்ட தலை வர்களை வரைந்த ஓவியங்கள் அருமை ..அருமையான தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவி செல்வங்கள் பேச்சு போட்டிகள் ..பள்ளியே அதிரும் அளவிற்கு பேசியது அருமை ..இதில் கலந்துகொண்ட மாணவ ,மாணவி செல்வங்களுக்கும்  ,சான்றிதழ்களும் அனைவருக்கும் ..உண்டு ..வரும் ஆகஸ்டு 12 ..பரிசு வாங்கும் நாள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பது போல் நம் மனதும் காத்திருக்கிறது ....வாழ்த்துக்களுடன் ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

சனி, 14 ஜூலை, 2018

அருமையான பேச்சு ....

திரு.அண்ணாமலை.IPS
கர்நாடக மாநிலத்தில்
சிக்கமகளூர் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரி.
ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில்
வள்ளுவரையும் காமராஜர் ஐயாவையும்
கக்கன் அவர்களையும் மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.வாழ்க தமிழ்! வளர்க தமிழ்-கன்னட நட்புறவு.

Thiru. Annamalai IPS.......வேறு யாரும் இல்லை ..நமது உடுமலை சத்தியம் பிரிண்டர் நிறுவனரின்  மாப்பிள்ளை.உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கண்டிப்புக்கு பெயர்பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்னசாமிக்கவுண்டரின் பேத்தியின் கணவர்.கரூர்...இந்தியா அளவில் முதல் 10 ஐ பி ஸ் வரிசையில் உள்ளார் என்பது நம் உடுமலை மக்களுக்கு பெருமை ...

எலுமிச்சம்பழம் 
கோவில் வரலாறு ...

அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவராய பெருமாள் ஸ்ரீ அனுமந்தராய பெருமாள் திருக்கோவில் கரட்டுமடம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம்.
இத்திருக்கோவிலின் புனரமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. .இக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஆனி மாதம் 27 ஆம் நாள் (11.7.2016), திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 30 மணிக்குள் நடைபெற வுள்ளது அனைவரும் வருகை தந்து அருள் பெற வேண்டுகிறோம்..
ஒவ்வொரு பகுதியின் வரலாற்றையும், மக்களின் வாழ்வியலையும், பாதுகாத்து வந்த பழங்கால கோவில்கள், பராமரிப்பில்லாமல், பரிதாப நிலைக்கு செல்வதும், அதை புனரமைக்க, கிராம மக்கள், போராடுவதும் தொடர்கதையாகவே உள்ளது. பல போராட்டங்களை சந்தித்தாலும், பழங்கால கோவிலை புனரமைத்து, வரலாற்றை பாதுகாத்துள்ளனர் கரட்டுமடம் கிராம மக்கள்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் இணையாமல், தனித்திருக்கும் சிறிய மலைக்குன்றுகள் அனைத்துக்கும் வரலாற்று சிறப்புகள் உள்ளன.
இதற்கு உதாரணமாக, கல்லாபுரம் துருவமலை போன்று, கரட்டுமடம் மலையும் தனிச்சிறப்பு பெறுகிறது. கரட்டுமடம், ராவணாபுரம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் எங்கிருந்து பார்த்தாலும், காணக்கிடைப்பது மலைக்குன்றில் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள், அனுமந்தராய சுவாமி கோவில்களாகும்.
கிராம மக்களுக்கு, காலை கண்விழிக்கும் போதே, தென்படும் கோவிலின் நிலையை பார்த்து, வருந்தாத, நாட்களே இல்லை.
தனிச்சிறப்பு
சிறிய மலைக்குன்றின் அமைந்துள்ள இந்த கோவில், கற்றளியாக கட்டப்பட்டு, விஜயநகர பேரரசு காலத்தில், கோபுரம் கட்டப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்துள்ளது. பின்னர், தளி பாளையக்காரர் எத்தலப்பரால், பல்வேறு புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய குன்றாக இருந்தாலும், கோவிலின் பின்புறம் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். சிறிய சுனை போன்ற அமைப்பும் இருந்துள்ளது. மலைக்குன்றை சுற்றியும் அகழி வெட்டியது போல, பெரிய குழிகள் அமைந்துள்ளன.
பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இதர காரணங்களால், பராமரிப்பு குறைந்து, பரிதாப நிலைக்கு சென்றது சஞ்சீவிராய பெருமாள் மற்றும் அனுமந்தராய சுவாமி கோவில். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சினிமா படப்பிடிப்புகளும், கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டன. இருப்பினும், கோவிலை புனரமைத்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது சுற்றுப்பகுதியை சேர்ந்த, 75க்கும் அதிகமான கிராம மக்களின் தவமாக இருந்தது.
இதற்கு, குறிப்பிட்ட நாட்களில், கிராமத்திலிருந்து மலைக்கு, சப்பர ஊர்வலம் நடத்திய இளைஞர்கள், அடித்தளமிட்டனர். பின்னர், கோவில் பெயரில் திருக்கோவில் அறப்பணி மன்றம் உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள்
நடந்தன.
கோவில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான கிராம மக்களின் கனவு,காலை, 6:00 மணிக்கு நடக்கும் கும்பாபிேஷகத்தால், நனவாகிறது.
நன்றி :தினமலர்