வியாழன், 7 மார்ச், 2019

மகளிர் தின வாழ்த்துக்கள் நமது கம்பளசமுதாயத்தில் பெண்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள் -நமது கம்பளசமுதாயத்தில் பெண்கள்

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

நமது கம்பள சமுதாயத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர் திருமதி பத்மா பெருமாள்சாமி M.Sc (Nsg), Associate Professor, KMCH college of Nursing, Coimbatore
படிப்பு -Bsc-KG college 2003,திருமணத்துக்கு பின் Msc 2008-  Ramakrishna cbe
இவருடைய கல்வி பயணம் பன்னிரண்டு வருடங்கள்  மருத்துவத்துறை சார்ந்தே இருப்பதால் ..இவரிடம் நமது வளரும் குழந்தை செல்வங்கள் தக்க ஆலோசனை கேட்டு கல்விமேற்படிப்புக்கு ஆலோசனை பெறலாம் ..இவரின் சொந்த ஊரு வீரம் விளைந்த தேனீ நகரம் அருகே உள்ள அ .வாடிப்பட்டி கிராமம் ..இவரின் கணவர் பெருமாள்சாமி அவர்களின் பதவி உயர்வுக்கு மேலும் பக்க பலமாக இருந்து வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார் என்பதில் பெருமைகொள்வோம் ..இவர்களின் குழந்தைச்செல்வங்களும் பள்ளிக்கல்வியிலும் .விளையாட்டு போட்டியிலும் மின்னுவதற்கு கால அர்ப்பணிப்பு எண்ணிலடங்காது ..வாழ்த்துக்கள் .

திருமதி மல்லிகா பாலகிருஷ்ணன் B .Sc., B.Ed.,அரசுப்பள்ளி  ஆசிரியை- அரசூர் -
படிப்பு Bsc- chemistry, NGM college -Pollachi,திருமணத்துக்கு பின்
DTT, B.Ed படித்து...கொங்கல் நகரம்- உடுமலைப்பேட்டை  கிராம சூழலில் இருந்து இன்று வருங்கால இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பள்ளிக்குழந்தைகளை சிற்பங்களாக மின்னுவதற்கு இவரும் ஒரு காரணமாவர் ...இவருக்கு இரண்டு பெண்குழந்தைச்செல்வங்கள் ..வாழ்த்துக்கள்

உடுமலைப்பேட்டை ..நித்தியா  மணிகண்டன் M .Com  படித்து இவர் தற்பொழுது அணில் அம்பானி குழுமத்தில் ..கணக்காளராகவும் ,தகவல் நுட்ப துறையில் பணிபுரிந்துவருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் ..



உடுமலைப்பேட்டை திருமதி சுதா தமிழரசன் .M .Com  படித்து ..நோக்கியோ நிறுவனத்தில் கணக்காளராகவும் ,தகவல் நுட்ப துறையில் பணிபுரிந்துவருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள்

உடுமலைப்பேட்டை திருமதி .சாந்தமணி பொன்னுராஜ் -கல்வி -பள்ளிப்படிப்பு முடித்து உடுமலையில் சஷ்டிகா ஹாலோ பிளாக் நிறுவனத்தை நடத்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் ..
திருமதி .V .தங்கரத்தினம் மகேஷ்குமார் .M .S c .M .P hil ..படித்துவிட்டு தற்பொழுது VPS பஞ்சாலை நிறுவனத்தில் கணக்காளராகவும் ,நிறுவனத்தை மேலாண்மை சார்ந்த பணிகளையும் நிர்வகித்து வருகிறார் ..சொந்த ஊர் .பழனி அருகே உள்ள .R .வாடிப்பட்டி கிராமத்தில் தாய் தந்தையர் விவசாய குடும்பத்தில் பிறந்து வாழ்வில் வெற்றிநடை போடுவது மிக்க மகிழ்ச்சி ...

நம் கம்பள சமுதாயத்தில் பெண் கல்வி என்பது இந்த தலைமுறையில் வருடத்திற்கு வருடம் அதிகமாகி வருவது கல்வி விழிப்புணர்வு பெற்று வருவது எதிர்கால கம்பள சமுதாயத்திற்கு நல்ல முன்னேற்றம் ஆகும் ..இனி வரும் காலம் பல துறைகளில் வெற்றி பெற்று நம் கம்பள பெண்களின் பெருமையை கொண்டாடுவோம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..


V. Thangarathinam M. SC., M. Phil., working in cashier and also management of VPS textiles [India]pvt Ltd,R.Vadipatty.


மீள்பதிவு ...நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸாப்ப் எண் ...👍🌷🌷🌷🌷🌷





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக