வெள்ளி, 23 அக்டோபர், 2020

 என் அருமை தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பள விருட்சத்தின் துடிப்புமிக்க உறுப்பினர் ..தம்பி அறக்கட்டளையின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செல்லும் பாங்கு வெகு நேர் தியாக இருக்கும் ..பொறுமை ,..சகிப்புத்தன்மை ..அனைவரையும் அரவணைத்து  வழிகாட்டியாகவும் பணியாற்றுவார் ..இயற்கை விவசாயம் , பால்பண்ணை முகவரும் கூட ....

தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

9944966681...

🦜வணக்கம் 🙏..... குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு.....

🦜வணக்கம் 🙏..... 

குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு..... 

மதுரையை மீட்ட  சில்லவார்குல சகோதரர்கள் நால்வர்...  கருங்குளம் (வீரப்பூர்)கம்பையாநாயக்கர் ... மருங்காபுரி பூச்சய்யாநாயக்கர்.. நத்தம் லிங்கமநாயக்கர்  ... மணப்பாறை  லட்சுமிகாமயநாயக்கர் (லெக்கயநாயக்கர் )...ஆவார்கள்.... இதில் லெக்கயநாயக்கர்க்கு சிற்றரசு  பட்டம் சூட்டி  மதுரை மன்னர்  விஸ்வநாதநாயக்கரால்  பாளையகாரர் ஆக்கி நிலம் பிரித்து கொடுத்து ஆள சொன்னது....   ஆலம்பட்டி புதூருக்கு தெற்கு...  விராலிமலை கோயிலுக்கு மேற்கு....   கருப்பூருக்கு வடக்கு...  அய்யலூர்  ஸ்ரீ வண்டி கருப்புசாமி கோயில் கிழக்கு வரை பத்து மக்களை குடி அமர்த்தி..ஆடு மாடுகள் உற்பத்தி பண்ணி.. நிலம் நேர்த்தி செய்து தானியங்கள் விளைவித்து...   வரிவசூல் செய்து நல்லது செய்து ஆண்டு அனுபவித்து வர உத்தரவு கொடுத்தார்....அதன் பிரகாரம் மணப்பாறையில் முதல் கோட்டையும்... பிறகு வையம்பட்டி அருகில் குமாரவாடியில்  அரண்மனைகட்டி ஜீவித்து..  அங்கே நீண்ட நெடிய சுற்றுசுவர் கொண்டு மத்தியில் அழகான ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் கட்டி ஆண்டு வந்து உள்ளனர்... விராலிமலை முருகன் கோயில் கல் மண்டபம் கட்டி..  முருகனுக்கு  உண்டான பூஜைக்கு  அனைத்தும்  செய்து உள்ளனர். .  


இன்றும் லெக்கயநாயக்கர் பூச்சய்யநாயக்கர் சிலைகள் உள்ளன... மணப்பாறை மாமுண்டி நல்லாண்டவர் கோயில் பறந்த பரப்பளவு கொண்ட கோவில்...தைபூசம்  பழனி முருகன் பாதையாத்திரை பக்தர்கள்....  சமயபுரம் பக்தர்கள்... தங்கி உணவு அருந்தி  இளப்பாரி  வருகிறார்கள்..இந்த  கோவில் பரம்பரை அரங்காவலர் குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனையார் குடும்பம் பார்த்து வருகிறது....அரண்மனை தொடர்பு கொண்ட புதுக்கோட்டை அரண்மனை  தொண்டைமான் குடும்பமும் சினேகம் செய்து...அரண்மனையில் வேட்டை ஆட அனுமதி கொடுத்து உள்ளது.....இந்த மந்தை 14 மந்தையில் சிறந்த  காட்டு சீல் நாயக்கர் மந்தையாகும்... கரைபெந்தல் நாயக்கரும் உள்ளார்.... அரண்மனையில் நடைபெரும் நல்லது கெட்டதும் அணைத்துக்கும் முன்நின்று  செய்து வருகிறார்கள்... 


அரண்மனையார் பெயர்... தெய்வதிரு. குமாரலெக்கையநாயக்கர்.. இவருக்கு மகன்கள் மூவர்.. பட்டத்து அரண்மனையார்..1 உயர்திரு. துரைச்சாமி @KRK.குமாரலெக்கயநாயக்கர்.... 2.KRK. ராஜகோபால் லெக்கயநாயக்கர் நாயக்கர்.. 3.முத்துராமலிங்க லெக்கயநாயக்கர் ஆவார்கள்.... இவர்கள் குடும்பம் சம்பந்தம்..  சுக்காம்பட்டி அரண்மனையார் உயர்திரு. பாலமுகொண்ட முத்தையா  பாலகிருஷ்ண ஆண்டிவேல்சாமி நந்தகுமார் @பாலமுருக முத்து ராமசாமி நாயக்கர் அவர்கள் தொடர்பு கொண்டது ஆகும்...  (தொடரும் ).....


நன்றி ...தகவல் களஞ்சியம் ..அய்யலு கிருஷ்ணசாமி 

செவ்வாய், 20 அக்டோபர், 2020

இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

கேள்வி : இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

என் பதில் :.


எனக்கு பொம்மை போல இருக்கும் பெண்களைவிட இயல்பா, கொஞ்சம் கெத்தா, புத்திசாலியா இருக்கும் பெண்கள்தான் கவர்ச்சியா தெரிவாங்க. உங்க கருத்து என்னோட மேட்ச் ஆகலன்னா பரவாயில்ல, இப்படியும் ரசிக்குறவங்களுக்கு இந்த லிஸ்ட். இவங்க மூன்று பேரும் வித்தியாசமான ‘அழகி’கள், சாதாரண இந்தியப்பெண்களின் பிரதிபிம்பங்கள்,யோசிக்கும் திறன் படைத்தவர்கள்.


இவங்களுக்கு ஒரு பாணி உண்டு, பட நாயகர்களையும் தாண்டி நிற்கும் நடிப்புத்திறனும் உண்டு. ஒருவர் இயக்குவார், இன்னொருவரின் பேட்டிகள், படத்தேர்வுகள் அபாரம், காது, இமை என உடலில் ஒவ்வொரு பாகமும் நடிக்கும், மூன்றாமவர் எவ்வளவு மொக்கையான படம் என்றாலும் தூக்கி நிறுத்துவார், நளினமாக, பொய்யாக எல்லாம் இருக்க மாட்டார், குபீர் சிரிப்பு, கிண்டல் என் எப்போதும் அதிரடி, சரவெடி (live wire) தான், காஜோல் ஒரு ஏஞ்சல்.https://youtu.be/eJF4DSekiKU


நந்திதா தாஸ்...https://youtu.be/YD3320LD78c


திங்கள், 19 அக்டோபர், 2020

நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?

 கேள்வி : நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?


 பதில் :.


வீட்டில் சமையல் சிலிண்டர்களை டெலிவரி செய்வதற்கு நவம்பர் 1 முதல் ஓடிபி எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது எரிவாயு சிலிண்டர்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது, 85 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.


நாடு முழுமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை சிலிண்டர் வழங்கும் போது, டெலிவரிபாயிடம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் சிலிண்டர் கிடைக்கும். மாறாக, ஓடிபியை காண்பிக்கவில்லை எனில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காது.


வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், மொபைல் ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரி முறையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.


இந்தப் புதிய நடைமுறை முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் உள்ள நிலவரத்தையும் மக்களிடமிருந்து வரும் கருத்துகளையும் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கான முன்னோட்டம் ஏற்கெனவே ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறை மிகவும் சுலபமானதுதான். அதாவது சிலிண்டருக்கு இனி முன்பதிவு செய்யும் போது அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை சிலிண்டர் டெலிவரி பெறும் போது காட்டினால் போதும்.


ஒருவேளை உங்களது மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம். அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.


இந்த புதிய நடைமுறை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரிக்கு ஓடிபி எண் கட்டாயம் ..இனி இது கட்டாயம்!..




சனி, 17 அக்டோபர், 2020

 என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை முகநூலில் எட்டு  வருடங்களுக்கு மேல் என் நட்பு வட்டத்தில்  இருப்பவர் ..இவரின் பதிவுகள் ,கட்டுரைகள் ..விழிப்புணர்வு கருத்துக்கள் ..அருமையாக பகிர்பவர் ...கடந்த வியாழன் அன்று கொடுமணல் அகழ்வாராய்ச்சிஇடத்தில் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ...என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

எங்களின் அருமை தென்கொங்கு நாட்டு கம்பளத்து சொந்தம் பொய்கைப்பட்டி அரண்மனை இளவரசி திருமதி .பாக்கிய லட்சுமி குமாரராஜா அவர்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமத்தின் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கம்பளவிருட்சம் அறக்கட்டளை -க்கு..தன்னாலான தகந்த ஆலோசனைகள் வழங்கி சிறப்பான நிகழ்வுகள் நடத்த உதவிகள் செய்து தருபவர் ...நன்றி மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

9944066681..


பொய்க்கப்பட்டி பாக்கிய லட்சுமி

புதன், 14 அக்டோபர், 2020

 கேள்வி : உங்கள் எதிரியின் வெகுளித்தனத்தை எப்பொழுதாவது உணர்ந்தது உண்டா?


என் பதில் :. என் மதிப்புமிக்க அதிக வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலும் பணிபுரிவதால் ..இத்தகைய கேள்விகளை பேசும் பகிர்ந்த கொண்ட சில நிகழ்வுகள் ..என் மதிப்பு மிக்க onsite வாடிக்கையாளர் நித்ய கோபாலன் அவர்களின் அவர்குஏற்பட்ட நிகழ்வுகள் .. 


கார்ப்பரேட் அலுவலகத்தில் நாம் வேலை செய்யும் போது நட்பா? எதிரியா? மறைமுக துரோகியா? என்று கண்டுபிடிப்பது கடினம் ஆகி விடும் அதாவது சில நாட்கள், 1 மாதம் கூட ஆகும் புது ப்ரொஜெக்ட் என்றால்.


வெகுளி எனும் வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு. அதிக கோபம் ஒண்ணு மற்றும் அப்பாவித்தனம்


அதிக கோபம் உள்ள மேலதிகாரிகள் பார்த்திருக்கிறேன். அந்த கோபத்தோடு அழுக்காறு, தற்பெருமை இப்படி பல சேர்ந்து வரும். ஒரு பேக்கேஜ் மாதிரி


கோபம் கொள்ளும் போது கொஞ்ச நாளில் அவர்களே விழுவது மாட்டிக்கொள்வது உறுதி.


வெறுப்பினால் ஏதாவது தேவை இல்லாத நடவடிக்கை எடுப்பார்கள்.


நான் மிக கடினமான ப்ரொஜக்ட்டில் வேலை செய்த போ, எனக்கு கிளைன்ட் நன்றாக வேலை செய்தாய் போன்ற மின் அஞ்சல் அனுப்புவாங்க. இதனை பார்த்து ஆத்திரம் உற்ற மேலதிகாரி வேறு யாரோ இன்னோர் கிளைண்ட் கிட்ட தானே கேட்டு..விஷயம் எப்படியோ மிக உயர் அதிகாரிக்கு தெரிய வந்து அசிங்கமா போய் விட்டது அவங்களுக்கு.


மேலும் நான் அழகான ஸ்கிர்ட் (லாங் முழங்கால் தாண்டி தான் இருக்கும் ) அதனை அணிந்து சென்றேன். அதனை பார்த்து அவர்கள் அசூயை பொறாமை பட்டு திரும்பவும் கோபப்பட்டதை மொத்த குழுவும் கவனித்து விட்டார்கள்.


பசங்கள் இது போன்ற விஷயத்தில் ஷார்ப் என்பதால் "இவர்கள் ஏன் சம்மந்தம் இல்லாமல் மின் அஞ்சல் அனுப்புகிறார் ட்ரெஸ் code பற்றி. நீங்கள் சரியாக தானே அணிந்து உள்ளீர்கள் ..?இதனால் இவர்கள் பொறாமை தான் வெட்ட வெளிச்சம் ஆனது" என்றனர் . இது போன்ற கோபம் கொண்டால் அவர்களே தப்பு செய்து மாட்டி கொள்வார்கள்.



அடுத்தது எதிரி இடத்தில் அப்பாவித்தனம்...ஹ்ம்ம்ம் இது யோசிக்க வேண்டிய விஷயம்,


ஆம் ஞாபகம் வந்தது. அது மிக பெரிய ப்ரொஜெக்ட்..ஆனால் என் பாஸ் அவர்கள் திடீர்னு கொஞ்சம் பிடிக்காமல் நடந்து கொள்ள தொடங்கினார் என்னிடம்.


ஏனெனில் எங்க இருவருக்கு அடுத்த லெவல் VP அவருக்கு என்னை பிடிக்கும். நல்லா வேலை செய்வேன்...presales என்பதால். மற்றும் கிரெடிட் கார்டு வேலைகளில் ஒவ்வோர் ஜாப் எடுத்து கொள்ளும் நேரத்தை நான் குறைத்து கொடுத்துவிட்டேன்.


மற்றும் என் குழுவுக்கு அதற்கு முன் இருந்த பாஸ் micromanage செய்ததால் குழு மிகவும் நொடிந்த நிலைமையில் இருந்தார்கள் போலும். நான் வந்த 2 மாதத்தில் குழு சந்தோஷத்தோடு காணப்பட்டதையும் அவர் அறிவர். ஏனனில் நான் இல்லாத நேரத்தில் ஒவ்வொருத்தரிடம் புது பாஸ் எப்படி என்ற feedback வாங்கி வைத்து இருந்தார்.


இப்போது..இந்த எங்கள் நடு நிலைமையில் உள்ளவர்க்கு இதெல்லாம் பிரச்சனை. அவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவும் நானே...வேற வேலை பார்க்கும் முடிவில் resignation கொடுத்து விட்டேன்.


வேற வழி இல்லை. இவர் என் பாஸ் அவர்களும் சென்னை region ஹெட். ஆனால் இப்படி நடந்து கொள்கிறார்.


இஷ்டத்துக்கு மின் அஞ்சல் போடுகிறார் HR எல்லோருக்கும் "இவள் இப்போது வந்தாள் இப்போது கிளம்பினாள்" போல அதெல்லாம் பார்த்து VP அவர்களுக்கும் கிண்டல்! HR எல்லோருக்கும் தெரியும் யார் மீது பிரச்சனை என்பதும்....என்னை இருக்க சொன்னனாலும், நான் வேற முடிவு செய்து விட்டு பிறகு வேற நாட்டுக்கு போய் விட்டேன்....!


அந்த 3 மாசம் என் immediate boss செய்த அனைத்துமே அவருடைய அதிகாரிக்கு, எனக்கு மற்றும் எங்கள் region HR எல்லோருக்குமே கொஞ்சம் வெகுளியாக தான் இருந்தது....


"என்னடா இந்த மனுஷர் இப்படி நடந்து கொள்கிறாரே?" என்றும்....இடையில் என் தந்தையும் மறைந்து போக..நானும் பணியை முடித்து கொடுத்துவிட்டு கிளம்ப...அந்த மனுஷருக்கு மன சாட்சி உருத்தி இருக்கலாம்..!!.


ஆனால் கார்ப்பரேட் வாழ்க்கையில் எல்லா மாதிரி முதலாளிகள் நமக்கு வருவாங்க. நம்முடைய அப்போதைய அதிர்ஷ்டம் தான் எல்லாமே. 

நன்றி !!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


 கேள்வி :  10 வருட காலத்தில் மனை தங்கம் பங்கு எது சிறந்த முதலீடு?

என் பதில் :..

எந்த வித சந்தேகமும் இல்லாமல் மனை தான்.

வணிக ரீதியாக மனை வாங்கி தொழில் செய்வது

நிறைகள்

ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்து கிடைக்கும்

ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்

பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்

சமயோசிதமாக பேசும் ஆற்றல் வரும்...

சமீபத்தில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை உற்று கவனித்தீர்களா? நேற்று ஏறியது, இன்று இறங்கியுள்ளது. விலை ஏறினாலும் தங்கம் கிடைத்துவிடும்.

ஆனால் பூமியில் நிலப்பரப்பு என்பது குறைவு. இனி கடலை துத்து நிரப்பி நிலத்தை உருவாக்க முடியாது. (சீனா போன்ற நாடுகள் அதையும் செய்ய தயார்!). இன்னும் சில காலங்களில் வாங்குவதற்கு நிலம் கிடைப்பதே அரிது. மனையில் கட்டிய வீட்டுக்கு கொடுப்பினை எத்தனை பெயருக்கு உள்ளது. இப்போது கிடைப்பது எல்லாம் வெறும் சிமெண்ட் டப்பாக்களான அபார்ட்மெண்ட் தான்.

கொரோனா காலத்தில் பங்கு சந்தை படும் பாட்டை கண்டீர்களா! அதுல பணம் போட்டு எடுக்க நிறைய தில் வேண்டும்.

நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 13 அக்டோபர், 2020

இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.. அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

 இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்..

அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

உலகம் முழுக்க ஆம்பளைக எப்படி ஹார்ட் அட்டாக் அதிகமா சாகறானோ,

அதே மாதிரி தான் பொம்பளைக கேன்சர் ல சாகறாங்க..

இதுல உசுரப் பறிக்கற கேன்சர விட,

மார்பக புற்றுநோய்,

கர்ப்ப வாய் புற்றுநோய்ல பாதிக்கப்படுற பெண்கள் தான் ஜாஸ்தி..

அதுக்கு காரணமும் நாம தான்..

ஒரு ஆம்பள வெளி இடத்துக்கு போயிட்டு,

வீட்டுல நொழஞ்சதும் சட்டை, பேண்டு, ஜட்டி, பனியன்னு அத்தனையும் தூக்கி வீசிட்டு, பப்பரக்கான்னு சிங்கிள் லுங்கியோட செட்டிலாயிடுவான்..

வீட்டுல இருக்க, அல்லது வேலைக்குப் போற எந்தப் பொண்ணா இருந்தாலும் நாலு லேயர் தடிமனான கச்சையக் கட்டிட்டே தொங்க முடியாது..

நீ ஒரு பனியன், ஒரே சட்டை போடுற..

அவங்க ப்ரா, ஜாக்கெட், பாவாடை,

பொடவ அல்லது நைட்டி, அதுக்கு மேல சால் னு எத்தனய சுமக்கணும் தெரியுமா..?

இதுல சுடிதார்னா, பிரா மேல ஸ்லிப்பு, டாப்பு, ஷாலுன்னு பல சித்திரவதை இருக்கு..

தனக்கு உண்டான அளவு பேண்டீஸும், பிராவையும், நாப்கினையும் கடையில தைரியமாக் கேட்டு வாங்க முடியாத அளவு அவமானமாத் தான் நாம பொண்ணுங்கள வெச்சிருக்கோம்..

யாராவது பெண் போலீஸ், அல்லது பாரா மிலிட்டரியில இருக்கவங்க உங்க வட்டத்துல இருந்தா,

அவங்க போட வேண்டிய ட்ரெஸ் என்னென்னனு கேளுங்க..

ரத்தக் கண்ணீர் வரும்..

20 மணி நேரம் இறுக்கிப் பிடிக்கும் உடையில் டூட்டி பாத்துட்டு, ஒண்ணுக்குப் போகறதுக்குக் கூட முடியாத வேதனை புரியும்..

மார்பகப் புற்றுநோய் உங்க சொந்த பந்தந்ததில் யாருக்கும் இருந்தா விசாரீங்க..

அப்புறம் நக்கலா எப்பவும் பேச மாட்ட..

மார்பையே அறுத்தெடுத்துக் குடுத்த பொண்ணாட வலி எஎன்னன்னு புரியும்..

கர்ப்பப்பை புற்றுநோய் வரக் காரணம் என்ன தெரியுமா?

நீ உன்னோட ஆணவ உறுப்பை ஒழுங்கா சுத்தம் பண்ணாதது தான்.. 

அதுல உருவாகுற மாவுக் கிருமிகள் பொண்ணைத் தான் கொல்லும்..

சில சகோதரிகள் பதிவுல, #No_bra_day க்கு, சில தறுதலைகள் போட்டிருந்த எச்சைக் கமெண்டுகளுக்கு என் அட்டாக்..📚📚✍️✍️


 ஆசிரியர் பவானி ....

பாறையூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ...

குழந்தை செல்வங்களுக்கு  கண்டிப்பும் ..கனிவுடனும் ...சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ..இவர் இருக்கும் பள்ளி தொடக்கப்பள்ளி என்பதால் குறைந்தளவே சேர்க்கை இருந்தது ..இவர் பள்ளியில் பணியை தொடங்கியதும் ..மாணவ மணிகளின் சேர்க்கை அதிகரிக்க செய்யதது மகிழ்ச்சிக்குரியது ஆகும் ..


பள்ளிக்கும் சுற்றி இருக்கும் கிராமங்கள் தூரம் அதிகம் என்பதால் ..பள்ளிக்கு நேரத்திலேயே வருகை தந்து ..தன் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் குழந்தைச்செல்வங்களை தன் இரு சக்கர வாகனத்திலேயே பள்ளிக்கு அழைத்து வந்துவிடுவது இவரின் அன்றாட பணியில் இருப்பது சிறப்புஅம்சம் ..


கடந்த ஆண்டு மகளீர் தினத்தன்று உடுமலை கிளை நூலகம் எண் 2- சார்பில் இவருக்கு ..சிறந்த மகளீருக்கான  சிறப்பு விருதும் வழங்கப்பட்டது ..

இன்று ஆசிரியர் பவானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..



திங்கள், 12 அக்டோபர், 2020

கேள்வி : மார்வாடிகள், குஜராத்திகள் இனத்தவர்கள் பின்பற்றும் நிதி மேலாண்மை பண்புகளில் நீங்கள் அறிந்தவை எவை?

கேள்வி : மார்வாடிகள், குஜராத்திகள் இனத்தவர்கள் பின்பற்றும் நிதி மேலாண்மை பண்புகளில் நீங்கள் அறிந்தவை எவை?


என் பதில் :.என் இனிய நண்பர் மற்றும் என் மதிப்புமிக்க வாடிக்கையாளர் 

கோவை ரங்கா ..என்னிடம் பகிரந்தகொண்டது ,குஜராத்திகளுடன் வியாபாரம் செய்த என் அனுபவத்தில் பதில் கூறுகிறேன் சிவா .....


வட அமெரிக்காவில் பல மாகாணங்களில் படேல் பிரதர்ஸ் என்று இந்திய மளிகை மற்றும் காய்கறிகள் விற்கும் செயின் அங்காடிகள் உள்ளன. பிரமாண்டமாக இருக்கும். நம் மக்கள் வார இறுதியில் அங்கு தான் கும்மி அடிப்பார்கள்.


வேலைக்கு செல்லும் மகளிருக்கு, சப்பாத்தி செய்வது கொஞ்சம் இம்சை பிடித்த வேலை. இதை புரிந்து கொண்ட படேல் பாய்ஸ், சப்பாத்தி தயாரிக்கும் மெஷின் ஒன்றை தருவித்து, தானியங்கி சப்பாத்தி தயாரித்து ஒரு பையில் 25 சப்பாத்திகள் $7 டாலர் என்று கல்லா கட்டுகிறார்கள். சில சமயம் திருப்பதி மாதிரி வரிசை நீளும்.


தமிழ், ஆந்திரா மக்களுக்கு மிக்ஸர், காராசேவு, ரிப்பன் பக்கோடா எல்லாம் உசுரு. பேரல் பேரலாக தயார் செய்து, குறைந்த விலையில் செம போணி.


இந்தியாவின் எந்த மாநில மக்கள் கடைக்கு வந்தாலும், அவர்கள் ஊரை தொடர்புபடுத்த ஒரு ஐட்டம் இருக்கும். பர்ஸை திறக்காம, ஒரு பயலும் வெளியேற முடியாது.


பொதுவான குண நலன்கள்:


பாந்தினி சில்க்ஸ் புடவையோ, பிள்ளையார் சதுர்த்திக்கு சிலையோ, அந்தந்த கால கட்டத்தில் எது நல்லா போகும்? என்று மக்களின் பல்ஸ் தெரிந்து சரக்கை இறக்குவார்கள்.

எந்த சரக்கும், 25 நாளைக்கு மேல் கிடங்கில் தேங்க விட மாட்டார்கள்.

கடை ஒன்று ஆரம்பித்தால், அந்த குடும்பம் மட்டுமல்ல, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அங்காளி, பங்காளி என்று ஒரு பஞ்சாயத்து வார்டே, தீயா வேலை செய்யும்.

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, லா ல லா!"

எல்லாருமே அமெரிக்காவில் குடும்ப விசாவில் வந்து க்ரீன் கார்டு வாங்கியிருப்பார்கள். கடுப்பாகி போன டிரம்ப், ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைங்கடா அந்த விசாவை! என்று ஆணை பிறப்பித்து இருக்கிறார்.

இந்த கடையில நீங்க கேட்ட பொருள் இல்லைனா, அவங்க சொந்தகாரங்க கடையில் இருக்கும். ஆக, அந்த குடும்பத்தை தாண்டி சல்லி பைசா வெளியே போகாது.

இதை படித்ததும் உங்களுக்கு தமிழகத்தில் உள்ள சில குடும்பங்கள் நியாபகத்துக்கு வரலாம்.

"டிவி இலவசம், கேபிளுக்கு மட்டும் காசு கட்டுங்க, உங்க நடு வீட்டில் மானும் ஆடும், மயிலும் ஆடும்.!".

தமக்கு பிடித்த தலைவர் பெயரோ, தன் முன்னாள் டாவு பெயரை எல்லாம் கம்பெனிக்கு வைக்க மாட்டார்கள்.

தங்கள் தாத்தா பெயரோ அல்லது விதை யாரு முதலில் போட்டாரோ அவரின் தாத்தா பெயரோ தான் அக்கடைக்கு பெயராக இருக்கும். மார்வாடிகளை பொறுத்த வரை, பொருளுக்கு தரம் தான் முக்கியமே தவிர, பெயர் ஒரு பொருட்டல்ல.

"ஹால்டிராம்ஸ் சுவீட்ஸ், கன்ஷிராம் ஸ்னேக்ஸ்"

எந்த வியாபாரமென்றாலும் 30 சதவீதம் லாபம் இருந்தால் தான் தொடுவார்கள்.

சில சமயம், லாபத்தை குறைத்து வைப்பார்கள், ஆனால் ஒரு பொருள் வாங்க சென்ற நீங்கள், நாலு பொருட்கள் வாங்கி வருவீர்கள். தொட்ட கல்லு, பெத்த லாபம்.

தேவையற்ற ரெட் டேப் பிசினஸ் கிடையாது. காரிய கமிட்டி டெல்லில, அடுத்த அம்மாவாசைக்கு கூடி எங்க தலைவர் யார்னு முடிவெடுக்கும்! போன்ற வெண்டைக்காய் பிசினஸ் கிடையாது.

"என் சரக்கை சந்தைப்படுத்த முடியுமா?" என்று ஸ்டொர் மேலாளரை கடையில் சந்தித்தேன். நீண்ட ஒரு விவாததுக்கு தயாராக சென்றேன். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. எனக்கு மூணு வாரம் கழித்து பில் செட்டில் செய்தனர்.

பல நேரங்களில், வெளியாட்களிடம் எல்லாம் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தங்கள் ஊரில் அவரது மச்சானோ, சகலையோ பருப்பு சாகுபடி செய்வார். அதையே ஒரு பிராண்டாக மாற்றி, அங்கிருந்து கப்பலில் இங்கு வந்து விடும்.

ஒரு தொழில் ஆரம்பிக்குமுன் தீர்க்கமான கள ஆய்வு செய்திருப்பர். கடை லொகேஷன் எங்கே? சுத்தி எத்தனை மைலுக்கு கஸ்டமர்கள் உளர்? போட்டியாளர் யார்? அங்க இல்லாதது என்ன? எல்லா தரவும் துல்லியமாக இருக்கும்.

தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் தொழிலேயே முதலீடு செய்வார்கள். பணம் என்பது நதி போல ஓடிக் கொண்டிருக்கும், தேவைப்படும் பொழுது குடத்தில் மொண்டுக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஏழு தலைமுறைக்கு ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து வைக்க மாட்டார்கள். ஆனால் அண்டார்டிகாவுக்கு போனால் கூட எஸ்கிமோக்களிடன் எப்படி ஐஸ் விற்க வேண்டும்? என்று தம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து விடுவர்.

என்ன தான், குடும்பத்தில் அப்படி இப்படி சண்டை வந்தாலும், வெளியே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 

எல்லாத்தையும் அண்ணன் கணக்குல எழுதிக்குங்க

தமிழகத்தில் அண்ணாச்சி கடைகளும் இதே டெக்னீக் தான் பின்பற்றுகிறார்கள். இந்த பதிலில் மார்வாடி/குஜராத்திகள் என்பதற்கு பதில் அண்ணாச்சிகள் என்று மாத்தி போட்டு படித்துக் கொள்ளுங்கள்.

"ஏல, என்ன எருமை மாதிரி நிக்க? கஸ்டமருக்கு என்ன வேணும்னு கேலுல!"

"பச்சை மார்வாடியா இருந்தா இதை ஷேர் செய்யவும்!" என்று மீம்ஸ் எல்லாம் போட்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அடுத்த கடையை எங்கு ஆரம்பிக்கலாம்? என்று போய்க் கொண்டே இருப்பார்கள்.

உலகின் சிறந்த சொல் "செயல்" தானே? செஞ்சுருவாங்க.


நன்றி :...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 10 அக்டோபர், 2020

கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


என் பதில் :.என் இனிய பள்ளிக்கால நண்பர் பாஸ்கரன் பழனிச்சாமி தற்பொழுது கோவையில் இருக்கும் (Aerospace)..இல் பணிபுரிகிறார் அவருடைய மேலாளருக்கும் அவருக்கும் நடந்த சுவையான அன்பு மோதல் ...குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டது .


2006 இல் நான் கோயம்புத்தூரில் ஒரு பிரபலமான இயந்திர பாகங்கள் மற்றும் ஆகாய விமானம் உருவாக்கும் தொழிற்சாலைக்கு உதவும் சிறு பாகங்கள் மற்றும் கருவிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். (ஒரு பாகத்தையோ அல்லது அசெம்பிளியையோ ஆரம்பம் முதல் உருவாக்கி, சோதனை செய்து, ஒன்றாக அசம்பிள் செய்து முடித்து , பேக் செய்து வாடிக்கையாளருக்கு அனுப்புவதுதான் என் பணி)


அங்கு பல்வேறு விதமான இயந்திரங்கள் காணப்படும் அவற்றில் அதிநவீன சிஎன்சி மெஷின் முதல் சாதாரண லேத் மில்லிங் மெஷின் (CNC machine- Lathe & milling machine) வரை அனைத்து விதமான இயந்திரங்கள் காணப்படும். இந்த இயந்திரங்களை கொண்டுதான் சாதாரணமான இரும்பில் இருந்து அனைத்து விதமான பாகங்கள் உருவாக்கப்படும். Raw material to Finished part/Assembly.


அங்கே பல்வேறு உலோகங்களால் ஆன , துல்லியமான அளவுகள் கொண்ட , குண்டக்க மண்டக்க (complicated எனவும் அர்த்தம் கொள்ளலாம்) வடிவத்தில் உள்ள பாகங்கள் என ஒவ்வொன்றும் பல்வேறு இயந்திரங்களால் உருமாற்றம் பெற்று அதன் கடைசி வடிவத்தை அடையும்.


பெரும்பாலும் அனைத்து உதிரி பாகங்கள் அல்லது அசெம்பிளிகளில் அவற்றின் வரிசை எண் & மற்றும் சில தகவல்களை அதன் மேற்பரப்பில் இயந்திரங்களால் பொறிக்கப்படும்.


எந்த ஒரு தட்டையான பரப்பு கொண்ட பாகங்களில் மிக எளிதாக எழுத்துக்களை பொறிப்பதற்கு என்று தனியாக ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. அந்த இயந்திரத்தை இயங்க வைத்து அந்த பாகத்தின் மேல் எழுத்துக்களைப் பொறித்து முடிக்க ஆகும் செலவு என்பது மிக மிகக் குறைவாக இருக்கும்.


ஆனால் கூம்பு வடிவில் உள்ள பாகத்தில் எழுத்துக்களை பொறிப்பதற்கு ஐந்து அச்சுகளை (5 axis) கொண்டு இயங்கும் சிஎன்சி மெஷின் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்படி சிஎன்சி மெஷின் இந்த வேலையை செய்வதற்கு ஒருவர் மெனக்கெட்டு கணினி நிரலாக்கம் (CNC programming) செய்து, பின்னர் அந்தப் பாகத்தை மிகக் கச்சிதமாக இயந்திரத்திற்கு உள்ளே பொருத்தி, அதற்கென்று மேலும் நிறைய வேலைகள் செய்து அந்த எழுத்துக்களை பொரிப்பதற்கு ஆகும் மொத்த செலவானது சில மடங்கு அதிகரித்துவிடும்.


ஒரு நாள் இந்த செலவு அதிகமுள்ள சிஎன்சி மெஷின் இல் செய்யும் வேலையை சாதாரண சிறிய மிஷின் கொண்டு செய்து முடிப்பதற்கு நானும் என் நண்பனும் சேர்ந்து புதியதாக முயற்சி செய்து கொண்டிருந்தோம்.


நாங்கள் செய்வதை பார்த்த எங்கள் மேலாளர் "இதில் எல்லாம் செய்யவே முடியாது, வாய்ப்பில்லை ராஜா" என்பது போலவே சிரித்தார் . அவருடன் சேர்ந்து பக்கத்து டிபார்ட்மெண்ட் மேலாளரும் சிரித்தனர்.


சற்று கோபம் வந்தாலுமே நாங்கள் நினைத்த வேலையை முடித்துவிட்டு தான் அன்று வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்து இருந்தோம்.


சிலபல கடினமான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.


மிக்க மகிழ்ச்சி அடைந்தோம், பல்வேறு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அன்று இரவு அங்கிருந்து சந்தோசமாக கிளம்பினோம். கிளம்பி செல்லும்பொழுது மேலாளர் சிரித்தது எனக்கு நினைவுக்கு வரவே, உடனே என்னுடைய அலைபேசியை எடுத்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்.


யார்கிட்ட...

Every NEW IDEA is a joke, until someone achieves it.


வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை எந்த ஒரு புதிய முயற்சியும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்படும்.


அந்த மேலாளர் ஒரு மும்பை காரர். அடுத்தநாள் வந்து நாங்கள் செய்து முடித்து இருந்ததை பார்த்த என் மேலாளர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை பாராட்டினார். அதோடு நிறுத்தாமல் அந்த மாதத்திற்கான சிறந்த ஊழியர் என பாராட்டி பரிசும் கொடுத்தார். இத நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல...


நாம் ஒரு வேலையை தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை நம்மை நோக்கி வரும் ஏளனங்கள், தொல்லைகள் போன்றவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டால் வெற்றியை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும்.


பதிலடி என்பது செயலில் இருக்க வேண்டும். ஆனால் அந்த பதிலடி என்பது நமக்கு ஏதாவது பயன் தருவது போலவும் மற்றவர்க்கு தீங்கு தராது என்றால் மட்டும் செய்வது நல்லது.


நன்றி.

Sivakumar.V.K👍✈️✈️


(Home Loans,Home Loans To NRIs) 


Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms🥰👍🏡🏡✈️✈️

siva19732001@gmail.com📚✍️✍️

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

🥰Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.🥰

என் இனிய மருமகள் ரித்திகா விஜயக்குமார்-க்கு(ஜெய்வந்த் காஸ் ஏஜென்சி -உடுமலைப்பேட்டை ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

 என் இனிய மருமகள் ரித்திகா விஜயக்குமார்-க்கு(ஜெய்வந்த் காஸ் ஏஜென்சி -உடுமலைப்பேட்டை )  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

கோவையில் இருக்கும் தன் அத்தையை போன்று குணம் ..மனம் ..மாறாத ..மருமகள் ..தன் அத்தையை போன்றே எடுத்த ஒரு காரியம் என்றாலும் பன்முக தன்மை கொண்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள் ..

தன் அத்தையை போன்றே படிப்பு விசயத்திலும் எந்த காரணம் கொண்டு


பின்னடைவு அடைவதில்லை ..விளையாட்டிலும் ..சிறப்பாக பங்கேற்று சிறப்பு செய்பவர் ..

தன் அத்தையை போன்றே வெளியிடம் சென்றாலும் ..சரியாக கணித்து துணிக்கடை ..மளிகைக்கடை ..ஆபரணகடை ..மற்ற எந்த ஒரு பொருளையும் வாங்குவது என்றாலும் சரியாக தேவையானதை கணித்து வாங்குவார்கள் ...

தன் அத்தையை போன்றே ..தனக்கு பிடிக்கவில்லையென்றாலும் ..நாசூக்காக அடுத்தவர் மனம் புண்படும்படி  இல்லாமல் ..அழகாக சொல்லிவிடுவார் ..


என் இனிய மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...