ஞாயிறு, 15 அக்டோபர், 2017

Thiru Murthy added 2 new photos.
கத்தரிக்காய் கால்ப்பணம் .!
சுமைகூலி முக்கால் பணம் ..!!
என்பதைபோல என்கதை ஆகிவிடகூடாது என்பதால் இந்த முடிவு..
பவர் டில்லருக்கு : 28,000 ரூபாய்,
மினி டிரேக்டருக்கு : 66,500 ரூபாய்,
பெரிய டிரேக்டருக்கு : 36,000 ரூபாய்
******************;*
ஆக மொத்தம் 1,30,500 ரூபாய்
கடந்த பதிமூன்று மாதங்களில் டிரேக்டர்காரர்களுக்கு எனது பனிரெண்டு ஏக்கர் பூமியை உழ நான் கொடுத்த வாடகைதான் இது ங்க..

கணக்கு போட்டு பார்த்தேன் சம்பாதிக்கும் பணத்தில் பாதி வாடகைக்கே போயிவிடும் போல தெரிந்தது..
முகநூல் சொந்தமான Therkutheru Er Sathieshskj அண்ணாவிடம் ஏதாவது பழைய மினி டிரேக்டர் இருந்தா சொல்லுங்க வாடகை கொடுத்து ஓட்ட சிரமமாக இருக்கிறது என்று விபரத்தை சொன்னேன்..(சதீஷ் அண்ணா நன்றி ங்க)
அடுத்த தினமே "மதுரையில் அக்ரி மார்ட் வெங்கடேஷ்வரா மிட்சுபிஷி ஷோரூமில் 2014 மாடல் 18.5 HP குறைந்த பயன்பாட்டில் ஓடிய வண்டி இருக்கிறது வாங்க பார்க்கலாம் "என்றார்..
சென்றேன்...
பத்து மாதத்தில் அறுபது மணிநேரமே ஓடியிருந்தது ..
ரோட்டரி, வண்டியும் சேர்த்து 2,30,000 ரூபாய் சொல்லி எட்டாயிரம் ரூபாய் குறைத்து கொடுத்தார்..
புதிய வண்டியை விட அறுபது ஆயிரம் ரூபாய் விலை குறைவாக கிடைத்ததால் எடுத்து விட்டேன்..
இந்த வண்டியில் ரோட்டாவேட்டர் பொருத்தி பலதானியத்தை மடக்கி உழலாம்..
மூன்று கலப்பை பொருத்தி நிலத்தை உழலாம்..
கேஜ் வீல் பொருத்தி சேற்று உழவு ஓட்டலாம்..
பார் கலப்பை பொருத்தி பார் ஓட்டலாம்..
வாழைக்கு மண் அனைக்கலாம்..
டிரெயலர் மாட்டி குப்பை ஓட்டலாம்..
((இதற்கெல்லாம் தனித்தனி உபகரணங்கள் தேவை))
மூன்று வருடங்களுக்கு முன்னே அரசு மானியத்தில் இந்த வண்டியை வாங்க விண்ணப்பித்தும் இதுவரை வந்தபாடில்லை..
இனி எழுபது ஆயிரம் மானியத்தை பாத்தால் கதைக்கு ஆகாது என்றுதான் இந்த வண்டியை வாங்கிவிட்டேன்..
மானியம் எங்கள் பகுதியில் இல்லை என்று சொல்கிறார்கள்..
ஆனால் மதுரையில் இருக்கிறது..
மானியத்தில் புது வண்டி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்..
அக்ரி மார்ட் மதுரை M.ராதாகிருஷ்ணன்...
கைபேசி எண் 98430 53744..
மானியத்தில் எடுக்க விரும்புவோர் மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கள் ஆகியவைகளை இவரிடம் கொடுத்தால் போதும்..
டிராக்டர் சாணி போடாதுனு எனக்கும் நல்லா தெரியு ங்க..!
விவசாய ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், மண்ணை மலடாக்கும் களைக்கொல்லியை ஒழிக்கவும்
இது போல தேவையான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றால் நான் விவசாயத்தில் தாக்கு பிடிக்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை..



உடுமலையில் எனது பள்ளி கால வாழ்க்கையில் ...எனக்கு நினைவு தெரிந்து நூலகத்துக்கு சென்று படித்த  முதல்  நூல் எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவின் நூல் தான் ...அதுவும் பயணக்கட்டுரை தான் நான் படித்தது நினைவுக்கு வருகிறது...சிவசங்கரி எழுதிய நூல்கள் அனைத்தும் அருமையான நாவல்கள்..

சிவசங்கரி அம்மாவின் பதிவுகளிலிருந்து .......

பச்சை பட்டுடுத்தி நிற்கும் மலை, மலையின் நடுவே பயணிக்கும் தார்ச்சாலை, சாரல் மழையில் குளித்தபடி மரங்கள், மிதமான வேகத்தில் பேருந்து, கணவன் தோளில் சாய்ந்தபடி காதல் மனைவி. அவளின் கைகளில் ஒரு புத்தகம். இயற்கை காட்சிகளில் விழிகளை தொலைக்காமல், புத்தகத்தின் அர்த்தமுள்ள எழுத்துக்களில் மனதையும் தொலைத்து, பேருந்தில் இருந்து இறஙகிய தம்பதிகளிடம் ஒரு கேள்வி.... "பயணம் சுகமாக இருந்ததா?' பதில்.. "அர்த்தமுள்ளதாக இருந்தது!' சொன்னவர்கள் கைகளில் எழுத்தாளர் சிவசங்களியின் "சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?' புத்தகம்.

இப்படி மனித உணர்வுகளை மயிலிறகால் வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று போயிருக்கிறது. காரணம்...

எழுதணுங்கற கனவோ, எழுத்துல சாதனை புரியணுங்கற வெறியோ இல்லாம, எதேச்சையா எழுத தொடங்குனேன். இப்போ... போதும்!னு தோணுச்சு நிறுத்திட்டேன்.

மறுபடியும் எழுதணும்னு தோணுச்சுன்னா நிச்சயம் எழுதுவேன்!' மனதில் தெளிவு சிவசங்கரியின் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கிறது.

அம்மாவுக்கு என்னென்ன பிடிக்கும்?
பௌர்ணமி நிலவு, அன்னையின் தாலாட்டு, குழந்தைகளின் சிணுங்கல், உள்ளத்தை சாந்தப்படுத்தும் சங்கீதம், மனதையும் நிறைக்கிற சாப்பாடு, கண்ணீர் விடாத ஆண்கள், அழகு நிரந்தரமில்லை!ன்னு ஆணித்தரமா நம்புற பெண்கள், எந்த சூழ்நிலையிலும் தோள் கொடுக்க தயாராக இருக்கிற நண்பர்கள், தன் வாழ்க்கைக்கு எது தேவை?ன்னு தெளிவா தெரிஞ்சு வைச்சிருக்கிற மனிதர்கள்... இப்படி நிறைய பிடிக்கும்.

எந்த ஒரு விஷயத்தையுமே, கண்களால் பார்க்காம மனசால பார்க்க பழகிட்டா, நமக்கு பிடித்தமான விஷயங்கள் இந்த உலகத்துல நிறைய தெரியும். இந்த பழக்கத்துக்கு நான் அடிமையாகி பல வருஷங்கள் ஆச்சு!

மனம் வருடும் நினைவுகள்....
14 வயசுல, தேசிய மாணவர்படை நிகழ்ச்சிக்காக தேர்வாகி டெல்லிக்கு போன நாட்கள், 15 வயசுல வாணி மஹால்ல நடந்த என்னோட முதல் அரங்கேற்றம், என் திருமண நாள், காதல் கணவரோட வாழ்ந்த அழகிய நாட்கள், பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோட இரண்டு முறை வெளிநாடு சென்ற அனுபவங்கள், அன்னை தெரசா நோபல் பரிசு வாங்குன மறுநாள் காலையில், முதல் பத்திரிக்கையாளரா வாழ்த்து சொன்ன தருணம், ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வரை உழைத்த ஆரம்ப கால நாட்கள், நம்ம பாரம்பரிய உடைகளோட கடந்து போற அழகான பெண்கள்... இப்படி நிறைய இருக்கு. ஆனா, நான் கடைசியா சொன்ன விஷயம் மட்டும் நினைவுகளாகவே இருக்கறதுல வருத்தம் இருக்கு. யாரையும் சார்ந்து இல்லாம, பெண்கள் தன்னம்பிக்கையோட வாழ பழகியிருக்கறது சந்தோஷமா இருந்தாலும், நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும் இவ்வளவு வேகமா மறந்துட்டு வர்றது வேதனையா இருக்கு. பெத்த தாயை தெரியாது?ன்னு சொல் மாதிரிதான், இந்த இரண்டு விஷயங்களை மறக்கறதும்!

இளமை இழப்பு, உறவு இழப்பு, நம்பிக்கை இழப்பு, பண இழப்பு, பொருள் இழப்பு, மானம் இழப்புன்னு இழப்புகள்ல பலவகை இரக்கு. ஆனா, எந்த இழப்புமே சாபம் இல்லை. ஒரு சின்ன உதாரணம்... 1972ல் சஞ்சய் காந்தியை இந்திரா காந்தி பறிகொடுத்த நேரம். அவங்களை நான் சந்திச்சப்போ கேட்டேன். "உங்க மனசுல வலி இல்லையா?' அவங்க சொன்ன பதில்... "வலி இருக்கும்மா? ஆனா வலியோட வாழ பழகிட்டேன்!' அவங்க சொன்னதோட அர்த்தம் எனக்கு அப்போ புரியலை

1984ல் என் கணவர் சந்திரசேகரனோட மறைவுக்கு பின்னாடிதான், வலியோட வாழ பழகறதுன்னா என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இழப்புகள் நிச்சயம் வலி கொடுக்கும். ஆனா, அந்த வலிகளை தாங்க பழகிட்டா, நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.

வாழ்க்கையில விழுந்த கருப்பு புள்ளிகளை மட்டுமே நினைச்சுட்டு இருக்காம வெண்மை பிரதேசங்களையும் பார்க்க பழகணும், இது எல்லாத்தையும்விட, "நமக்கும் கீழே நிறைய பேர் இருக்கறாங்க!'ங்கற உண்மையை எப்பவும் மனசுல வைச்சுக்கணும்!

அடிக்கடி மலரும் கனவு....
வயது 70 ஆயிடுச்சு. நிறைய எழுதிட்டேன். நிறைய உறவுகளை சம்பாதிச்சு வைச்சிருக்கேன். ஆசைப்பட்ட எல்லாமும் எனக்கு கிடைச்சிருக்கு. இப்போ, என் கவனம் முழுக்க சமூக சேவையில்தான்... ஏதோ, என்னால் முடிஞ்ச அளவுக்கு செஞ்சுட்டு வர்றேன். குடும்பம் நடத்த தேவையான அடிப்படை பொருட்களோட, இதுவரைக்கும் 80 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வெச்சிருக்கேன். 100 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வைச்சுடணும்னு மனசுல ஆசை இருக்கு. என் கணவருக்கும் இந்த ஆசை இருந்துச்சு! நமக்குதான் குழந்தைகள் இல்லையே!... நாம ஏன் இந்த சமுதாயத்தை தத்து எடுத்துக்க கூடாது?ன்னு அவர் அடிக்கடி கேட்டுட்டே இருப்பார். அவரோட கனவுதான் இப்போ என் கனவும்!

எதிர்பார்ப்புகள்...
நதி மாதிரி ஓடணும்னு ஆசை! அப்படித்தான் ஓடிட்டு இருக்கறேன். நிறைய கத்துக்கறேன். என் வீட்டுல வளர்ந்த ஷியாமா(நன்றியுள்ள பிராணி)வோட மறைவுக்கு வருந்துற அளவுக்கு, மனசுல ஈரத்தோட இருக்கறேன். போதும் தம்பி! மனசு திருப்தியா இருக்கு. இனிமே என்ன?

"வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து பிரியற மாதிரி, உயிர் இந்த உடம்புல இருந்து வெளியேறிடணும்...' யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்துட கூடாது. அவ்வளவுதான்!

முட்கள் மீது நடந்து சென்று...
பூப்பறிக்கும் வைபவம்தான் வாழ்க்கை!
மனதா... முள்ளை மற! பூவை நினை...
எழுதியபடியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா, உங்கள் காலத்தில் வாழ்வதை நினைத்த பெருமைப்படுகிறோம்!

இழப்புகள் நிச்சயம் வலி கொடுக்கும். ஆனா, அந்த வலிகளை தாங்க பழகிட்டா, நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில விழுந்த கருப்பு புள்ளிகளை மட்டுமே நினைச்சுட்டு இருக்காம வெண்மை பிரதேசங்களையும் பார்க்க பழகணும், இது எல்லாத்தையும்விட, "நமக்கும் கீழே நிறைய பேர் இருக்கறாங்க!'ங்கற உண்மையை எப்பவும் மனசுல வைச்சுக்கணும்! = ,மிகவும் நெகிழ்ந்து விட்டேன்

 பட்டியலில் முக்கியமாகச் சேர்க்க வேண்டிய நூல், “அவன்” என்ற நாவல். எனக்குத் தெரிந்து பணத்திற்காக அயராது ஓடும் பெற்றோர்களால், குழந்தைகள் போதைக்கு அடிமையாகும் ஆபத்தைச் சொன்ன முதல் தமிழ் புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவரின் படைப்புகளில் (நான் படித்த வரை) ஆகச் சிறந்த படைப்பாக “அவன்” நாவலைத் தான் சொல்வேன்.
அதீத போதையின் பிடியில் ஏற்படும் உடல்/மன அனுபவங்களை அணுவணுவாக விவரித்திருப்பார். இளம்பிராயத்திலேயே இந்தக் கதையைப் படிக்கச் செய்து விட்டால், எந்த இளைஞனும் போதையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான்.

நாம ஏன் சமூகத்தை தத்தெடுக்க கூடாது//இந்த எண்ணம் கொண்டவர்கள் யாராகினும் அவர்களின் வார்த்தைகளும், எழுத்துக்களும் அழுகு மிளிரும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் சிவசங்கரி அவர்களின் வாழ்க்கை...

- திருமதி சிவசங்கரி அம்மாவுக்கு அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

சிவசங்கரி நாவல்கள்

01.47 நாட்கள்

02.அடிமாடுகள்

03.அம்மா பிள்ளை

04.அம்மா ப்ளீஸ் எனக்காக

05.அது சரி அப்புறம்

06.சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது

07.எதற்காக

08.இனி

09.இன்னொரு காரணம்

10. இவர்களும் அவர்களும்

11.காளான்

12.கண் கெட்ட பின்

13.கப்பல் பறவை

14.கருணைக்கொலை

15.காத்திருக்கிறேன்

16.காற்றுள்ள போதே

17.கிணற்று தவளைகள்

18.கோழைகள்

19.குட்டி

20.மலையின் அடுத்த பக்கம்

21.மெல்ல.. மெல்ல..

22.நான் நானாக

23.நண்டு

24.நப்பாசை

25.நதியின் வேகத்தோடு

26.நெருஞ்சி முள்

27.நூல் ஏணி

28.ஒரு மனிதனின் கதை

29.ஓவர் டோஸ்

30.பாலங்கள்

31.பட்டாம்பூச்சியும் தூக்கமும்

32.போக போக

33. புல் தடுக்கி பயில்வான்கள்

35.ராட்சசர்கள்

36.சுறா மீன்கள்

37.சுட்ட மண்

38.தான் தன் சுகம்

39.தப்பு கணக்கு

40.தவம்

41.திரிவேணி சங்கமம்

42.டிரன்கால்

43.உரத்த சிந்தனை

44.வேரில்லாத மரங்கள்

45.வெட்கம் கெட்டவர்கள்

46.ஏன்

47.சிறுகதை தொகுப்பு-1

48.சிறுகதை தொகுப்பு-2




.

 ...
நேரம் ....
சுமதி அக்கா.....இரவு பன்னண்டு மணிக்கு தூங்கபோயிட்டு ...காலையில் கண்ணைக்கசக்கிக்கிகிட்டே எந்துரிச்சு ...ஸ்ட்டேவ் பத்தவைச்சு ..குக்கரில் நாலு சொம்பு தண்ணி ஊத்திவைச்சு ...ரெண்டு டம்பளர் அரிசி எடுத்து கழுவி ரவுண்டு குண்டாவில் வைத்து ..அதுக்கு மேல் தட்டைவைத்து சின்ன குண்டாவில் தக்காளி ,ரெண்டு கை பருப்பு டன் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊத்திவைத்து குக்கரை மூடி வைத்துவிடுவேன் ...

குக்கரில் 5 விசில் வரதுக்குள்ள ...பெரியவெங்காயம் ,ரசத்துக்கு கொஞ்சம் புளியும் ,தண்ணீரில் ஊற வைத்துவிடுவேன் ..அப்படியே பக்கத்துக்கு ஸ்டேவுல கொஞ்சம் சுட.. சுட ..காப்பி போட்டு ,..எங்க வீட்டு பிரதம மந்திரிக்கும் ,எங்க வீட்டு இளவரசர் கும் .கொடுக்கவேண்டும் ...பட்டும் படாமல் ...தட்டி தூக்கத்திலிரிந்து எழுப்பி ..தப்பி தவிர கூட குண்டுஊசி விழும் சத்தம் இல்லாமல் எழுப்பவேண்டும் ..அதிரடியா எழப்பினால் அந்த நாள் ..திண்டாட்டம் தான் ..கவனம் தேவை ...

5 விசில் வந்தவுடன் குக்கரை கீழே இறக்கி வைத்து விட்டு ..எங்க வீட்டு பிரதம மந்திரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவேன் ..அதற்கு பிறகு அவர்கள்  வடை சட்டி எடுவைத்து ..அதில் நல்ல எண்ணெய் ஊற்றி கருகப்பில் ,கொத்துமல்லி தழை ,போட்டு ..சீரகம் ,கடுகு போட்டு தாளித்துவிட்டு குக்கரில் ரெடியாக இருக்கும் பருப்பு எடுத்த கலக்கி கொஞ்சம் சூடான பின்பு இறக்கி வைத்து விடுவார்கள் ..குக்கரில் பருப்பில் வைத்த தண்ணீர் கொண்டு ..மறுபடியும் வடைச்சட்டியில் ,கடுகு ,கொத்துமல்லி தழை ,சீரகம் ,மஞ்சத்தூள் ,கொஞ்சம் ரசப்பொடி போட்டு பதமாக சுடவைத்தால் சூடான ,அருமையான ரசம் ரெடி ...இது எல்லாம் முடிக்கும்வரை ..நாம பக்கத்தில் இருந்து கை காண சுட்டுக்கமாக கண்ணும் கருத்துமாக ..பார்த்துக்கொள்ளவேண்டியது நம் பொறுப்பு ..இதில் சிறு தவறு நடந்தால் கூட ...அடுத்த நேரத்தில் பொறுப்பு நம் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைத்துவிடுவார்கள் ..கவனம் தேவை ...


அட அத சொல்லிட்டு நம்ம அடுத்தவேளை விட்டுட்டேன்ப்பாருங்க காபி குடித்து ... அப்பறம் எங்க இளவரசரை ..காலை முக்கிய பொறுப்புகளைமுடித்து ..அடுப்பில் சூடான தண்ணீரை பக்கீட்டில் ஊற்றி கொஞ்சம் மெது மெது பான குளித்த வைத்து ...அவருக்கு பள்ளியின் யூனிபார்மை போட்டுவிட்டு ரெடி பண்ணவேண்டியது அண்டராட கடமை...இதில் சிறு பிசிறுகூட தவறு நேர்ந்துவிடக்கூடாது ..

வீட்டு பிரதம மந்திரி ...எனக்கும் ,இளவரசருக்கும் ,மதியம் சாப்பிடுவதற்கு டிபன் பாக்ஸில் வைத்து எங்கள் முதுகில் கட்டி விடுவார்கள் ....

முதுகில் ஆனந்த சுமையுடன் கிளம்பி ...இளவரசரின் பள்ளிக்கு சென்று அவரது வகுப்பில் உட்காரவைத்துவிட்டு ...நம்ம அப்படிக்கா ..நம் அலுவுலகத்தற்கு சென்று கடமை ஆற்றவேண்டும் ...எந்த வேலையாக இருந்தாலும் ..மாலை சரியாக இளவரசரின் பள்ளிக்கு சென்று ..இளவரசரை வீட்டில் சேர்க்கவேண்டியது நம் தலையாய கடமையாகும்....மாலை வீட்ற்கு செல்லும் போது வீட்டில் இருந்து தகவலின்படி ..கோதுமை மாவோ ,இட்டிலி மாவோ வாங்கி கொண்டு சொல்லவேண்டியது பெரும் கடமை...இதிலும் எதாவது சொதப்பினால் ...தண்டனையாக ..நம் பர்ஸ் காலியாகிவிடும் ..நம்மளே நம்ம பர்ஸுக்கு சூனியம் வைத்துக்கொள்ளக்கூடாது .....இரவு டிபனுக்கு ...கூட ..மாடா ...சமையல் வேலை தெரிந்துகொள்ளவேண்டியது மிக மிக முக்கியம் ..நல்ல வேலை எங்கள் அம்மா எனக்கு சிறுவயதிலிருந்து சமையல் கற்று கொடுத்தினால் தப்பித்தேன் ..அவர்களுக்கு கோடி புண்ணியம் ..எங்க வீடு இளவரசர்கூட என்கூட சேர்ந்து சமையல் செய்வதை பார்த்தும்,கேட்டுக்கொண்டும் கொண்டு இருக்கிறார் ...இது நல்ல முன்னேற்றம் கூட ..வெளியூர் ,வெளி நாடு படிப்பு ,வேலை விசியமாக சென்றால் சாப்பாடுக்கு கவலைகொள்ளத்தேவையில்லை ...

இத்தனை வேலையும் முடித்துவிட்டு ..இந்த முகநூல் ,வாட்ஸாப்ப் ,புத்தகம் படிப்பது ,உங்களிடம் தகவல்களை பரிமாறிக்கொண்டு உள்ளேன்....மறுபடியும் நேரம் ..நாம் தான் ஒதுக்கி கொள்ளவேண்டும் ...தகவல்களை பரிமாற்தற்கு ,
 நம் சொந்தங்களை தெரிந்து கொள்ள ,நண்பர்களை தெரிந்துகொள்ள ,நாம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.....





















 
உடுமலைப்பேட்டை ...Siva Cva...... கரப்பாடி முதல் காஷ்மீர் சிம்லா வரை .

சிவா cva மாப்பிள்ளையை இரண்டு முறைதான் சந்தித்து உள்ளேன் முதன்முறையாக மடத்துக்குளம் ...விழாவில் ,மஞ்சநாயக்கனூர் அவர்கள் பாட்டியின் வீட்டில் சந்தித்துள்ளேன் ..நேரில் அதிகம் பேசியது இல்லை ..

நம்ம மாப்பிள்ளையின் செயல்பாடுகள் நம் சொந்தங்களின் மூலம் அறிந்துள்ளேன்..கரப்பாடி என்றவுடன் நம்ம மாப்பிள்ளையின் சிவா மாப்பிளையின் முகம்தான் நினைவுக்கு .வருகிறது ..நம்ம திருப்பூர் கார்த்தி மாப்பிளை ,நந்தா ,சசிவர்மா  ,எங்க பாப்பா நிவேதா நினைவுக்கு வருகிறார்கள்..

சிவா மாப்பிளை சிறப்பாக கல்வியில்..தன்னம்பிக்கையுடன் தேர்ச்சிபெற்று ..வேலைவாய்ப்பும் யாருடைய உதவியின்றி கடினமான நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்று ..உலகத்தரம் வாய்ந்த MNC யில் பணிபுரிந்து வருகிறார் ..நம் சமுதாயத்தில் கொஞ்சம் ,கொஞ்சமாக வளரும் இளையதலைமுறைகளில் இவரும் ஒருவர் ..சிவா மாப்பிள ..தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருக்கும் நம் சொந்தங்களையும் கல்வி ,வேலைவாய்ப்பு பற்றி அறிந்து வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...

மாப்பிள எந்த மெட்ரோ சிட்டிக்கு வேளைக்கு சென்றாலும் ..தான் பிறந்த கிராமத்து மண்ணையும் .நம் பண்பாடு ,கலாச்சாரத்தையும் ..ஒரு துளியும் விட்டுக்கொடுப்பதில்லை ...இப்போது இருக்கும் மெட்ரோசிட்டி டிரஸ் அணிந்தாலும் ..தலையில் கட்டும் நம் மஞ்சள் துண்டை விடுவதில்லை ..நான்  இவரிடம் கற்றுக்கொண்ட பாடம் ..பொங்கல் அன்று சும்மா கரப்பாடியே  அதிரும் அளவுக்கு,சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ..தன் நண்பர்கள் கூட்டத்துடன் ஒன்றியிருப்பர்...அந்தளவுக்கு மாப்பிளயின் எளிமை இருக்கும் ...

சிவா மாப்பிள்ளை ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினராக இருப்பது எங்களுக்கு பெருமையும் கூட ...வெகு தொலைவியில் பணிபுரிந்தாலும் ..நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு முன்னேற்ற கருத்துக்களையும் ,வழங்கி வருவது அறக்கட்டளைக்கு ஊக்கமாக இருக்கிறது ..

சிவா மாப்பிள்ளையும் முதலில் அறிமுகமானது முகநூலில் தான் என்பது வெகு சிறப்பு ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு சிவா C va மாப்பிளைக்கு ...






 

சனி, 14 அக்டோபர், 2017



இந்திய விடுதலைக்கு பாடுபட்ட விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டேபர் 16ல் 218வது புகழ்அஞ்சலி விழா தொடர்பாக

இன்று மாலை உடுமலைப்பேட்டை எண் 1.வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள நமது பண்பாட்டு கழக அலுவுலகத்தில் கோவை ,திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது ...தவறாமல் கலந்துகொள்ளவும்..

இங்ஙனம் ...
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
உடுமலைப்பேட்டை ..


வெள்ளி, 13 அக்டோபர், 2017

வானகத்தில்... அன்று..
ஒரே.. நம்மாழ்வார்தான்...
ஆனால்... இன்று..
தினம் ..தினம்....
நுாறு ..நம்மாழ்வார்கள்..
வானகத்தில்..
கம்பள விருட்சம் கார்த்தி  என்று அடைமொழி யானா கார்த்திSR ..

என் வருங்கால மருமகனே என்று செல்லமாக அழைப்பேன் ...

கார்த்தி |SR   ...இவரின் செயல்பாடுகள் அனைத்தும் நெற்றிதெறிக்கும் விதகமாக இருக்கும் ...மாப்பிள்ளையின் நட்பு 30 வருடநட்பு போன்று இருக்கிறது ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் எந்த ஒரு சிறு பணியாலும் அழகா அற்புத்தகமாக முடித்து தருபவர் ...திருப்பூர் ,கோவை மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக வேலையானலும் சரி இவரின் பங்களிப்பு இருக்கும் ...அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம் ஆனாலும் சரி செயற்குழு கூட்டம் ஆனாலும் சரி ,பொதுக்குழு கூட்டம் ஆனாலும் இவரின் பங்களிப்பும் ,ஆர்வம் ,முன்னேற்ற கருத்துக்கள் ,வளர்ச்சி காண செயல்பாடுகள் ...அனைத்தும் ஒருமித்த கருத்தோடு ,பெரியவர் முதல் சிறியவர் முதல் அரவனைத்து அற்புதமாக பேசி தன செயல்பாட்டால் கவரும் தன்மை கொண்டவர் நம்ம மாப்பிளை கார்த்தி ..

மேடை பேச்சும் ..இந்த சிறுவயதில் அனைவர்க்கும் வராது ..நம்ம மாப்பிள்ளைக்கு எப்படி பேசவேண்டும் ,ஒரு சிறு தவறு இல்லாமல் தன் மேடை பேச்சால் கவரும் தன்மைகொண்டவர் ..வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் ,நம் சமுதாயத்திலும் ,பொது தளத்திலும் முன்னேற்றம் அடைவார்.

நம் கம்பள சமுதாய வரலாறுகளையும் ,மன்னர்களின் ஆட்சி முறையும் ..நம் இளைய சொந்தங்களுக்கு பொது தளத்திலும் வெளியிட்டு கொண்டு உள்ளார் ..இவருக்கு முகநூல் ,வாட்ஸாப்ப் சொந்தங்களும் அதிகம் ...நம் கம்பள இளையசொந்தங்களுக்கு கார்த்தி SR தெரியாத சொந்தங்கள் மிக சிலரே ..

இவரின் எலெட்ரிக்கல் வயரிங் சுயதொழில் வேகமாக முன்னேறி வருபவர் .மின்துறை .இன்ஜினியரிங் தொழில் இருப்பவர்கள் ..நம்ம மாப்பிள்ளை வெகு பிரபலம் ...சில மாதங்களுக்கு முன் சிறு பள்ளி ,கல்லூரி ,சம்மந்தமான ப்ராஜெக்ட் ஒர்க் எனது நண்பர் மூலம் அறிமுகம் செய்தேன் ...தனியார் துறையும் ,பொதுத்துறையும் சம்மந்தமானது ..அதன் மூலம் தொடர்புகொண்டு வெகு சிறப்பாக செய்துகொண்டு உள்ளார் ...எந்த ஒரு பணியும் தக்க நேரத்தில் சென்று முடித்து வருபவர் ..இவரின் ஒரு பயண மைல்கள் குறைந்தது 120 சுற்றளவு மைல்களில் இருக்கும் ..வண்டியின் பாதுகாப்பான வேகமும் இவரை போன்று நேர்தியானது ..என்ன மாப்பிளை கூட வண்டியில் போகும் போது கண்ணை மூடிக்கொள்ளவேண்டும் இளம் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகம் ...வண்டியில் போகும்போதும் சரியான பாதுகாப்பான தலைக்கவசத்துடன் சென்று வருபவர் ...இப்போது இருக்கும் இளம் வட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் ... இவரின் பணியின் வேகம் ..பணியின் செயல்பாடு ...,வெகு அருமை ..வாழ்த்துக்கள் மாப்பிள்ளை ..

இவரின் பொது தளம் ..உடுமலையின் வரலாற்று மையத்திற்கு இவரின் பங்களுப்பு அருமை ..உடுமலை வட்டார ஊர்ப்பெயர் வரலாறுகளை சேகரித்து தந்துஉள்ளார்..இவரின் கோவில்களின் வரலாறுகளை நம் திருப்பதி தேவராஜன் மாப்பிளையுடன் இணைந்து வரலாற்று நூல்களை வெளியிட உள்ளார்கள் ...இவரின் எழுத்து நடை ,கவிதை நடை பொதுத்தளத்தில் வெகு பிரபலம்..சரியான தகவல்களை சேகரித்து ..அதை வெளியிடுபவர் வாழ்த்துக்கள் ..நன்றி...என்ஜினீயர்  திருப்பதி தேவராஜன் மாப்பிளைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...கம்பள விருட்சம் அறக்கட்டளை ..இது ஒரு கள பட்டறை ..வெறும் கற்களாக இணைந்து ..அழகான சிற்பங்களாக மின்னுபவர்கள் ..

குறிப்பு :...கார்த்தி SR மாப்பிளைக்கு ...எதிர்கால வாழ்க்கையின் தேடல்களுக்கு  பல ஊர்களிருந்து திருமண பந்தத்துக்கு எனக்குஅழுத்தம் வருகிறது ...எனக்கு என்று ஒரு மகன் தான் ..எனக்கு திருமண வயதில் மகள் இருந்திருந்தால் ..நான் பெண் கொடுத்திருப்பேன் ..நம்ம கார்த்தி மாப்பிள்ளைக்கு ..கார்த்தி மாப்பிள்ளை பெற்றோரின் முடிவு ..கார்த்தியின் முடிவு ...இறுதியானது ..

வாழ்த்துக்கள் மாப்பிள ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் விருச்சத்தின் விதைகளாகி ...ஆலமர விழுதுகளாக வளர வாழ்த்துக்கள் என் வருங்கால செல்ல மருமகனுக்கு ......
























வியாழன், 12 அக்டோபர், 2017

நீலக் குறிஞ்சியை வரவேற்கத் தயாராகிறது மூணாறு…!
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறு என வந்ததாக பெயர்காரணம் உள்ளதாக வரலாறு உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூத்துக்குலுங்கும்.
நீலக்குறிஞ்சி பூக்கும் சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் இருக்கும். எனவே நீலக்குறிஞ்சி விருந்தளிக்கும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களுக்கு மூணாறுக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் அதிக அளவிலான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்வது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
நீலக்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அடுத்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை நீலக்குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலமாகும். இந்த சீசனில் ஏறக்குறைய 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மூணாறின் பல்வேறு இடங்களில் நீலக்குறிஞ்சி பூக்கும் என்றபோதிலும் மூணாறு நகரிலிருந்து 8 கிலோ மீட்டர் தெலைவில் அமைந்துள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மிக முக்கியமான இடமாகும். பயணிகளின் எப்போதும் இல்லாத அளவிலான வருகையைக் கணக்கில் கொண்டு அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்வது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நீலக்குறிஞ்சியைக் கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த முறையில் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் அத்துடன் தேசிய பூங்காவைப் பாதுகாப்பதற்குமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென கூட்டம் முடிவு செய்தது.
மூணாறில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வந்து செல்ல இயலும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்திட வேண்டுமென முதல்வர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முன்னதாகவே விளம்பரப்படுத்திட வேண்டும்.வாகனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் தேவையான வாகன நிறுத்துமிட வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும். குப்பைகளை அழித்தொழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாத ரிசார்ட்டுகள் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலத்தில் மூணாறு பிரதேசம் முழுவதையும் மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். தேவையான துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் செய்துதர வேண்டும். மூணாறில் அனைத்துச் சாலைகளையும் பொதுப்பணித்துறை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். முதலுதவிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். விபத்துக்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருத்தல் அவசியம்.
இந்த சீசனில் எந்த அளவிற்கு வாகனங்கள் வரும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்திட’நாட்பாக்’கிடம் பொறுப்பை ஒப்படைப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சாலையோர வியாபாரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. எனவே அதற்கும் கட்டுப்பாடுகள் தேவையா என்பதைக் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும். வாகனங்களைச் சோதனையிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களில் மது பாட்டில்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.
இரவிக்குளம் தேசிய பூங்காவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அதிக அளவில் பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. 50 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். பூங்காவிற்குள் நுழைவதற்கான நேரம் அதிகரிக்கப்படும். ஆனால் ஒரு நபர் எவ்வளவு நேரம் பூங்காவிற்குள் இருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு இருக்கும்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
நீலக்குறிஞ்சி பூக்கும் சீசனை கேரள சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார் .

  நல்ல திட்டமிடல்...இது அரசாங்கம்...நம் அருகே இருக்கும் எழில் கொஞ்சும் மூணார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலா இடம் ..இந்த வருடம் விடுமுறைக்கு திட்டமிடுங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ......நண்பர்களுடன் ...சொந்தங்களுடன் ...

எப்படி எடுத்தாலும் எல்லா புகைப்படத்திலும் அழகாய் இருக்கின்றனர் புன்சிரிப்பு  குழந்தைகள்...!!!!!!!

இந்த உதட்டை கடித்துக்கொண்டு புன்னைக்கும்போது ...ஷ்யாமின் தாய்மாமனை நினைவு படுத்துகிறார் ...இது தான் ரத்தபந்தமோ .....

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பண்டிகைகளும் ஊடகவியலாளர்கள் ....

பத்திரிகைக்காரரா நீங்க, கலைஞர் கருணாநிதிய நேர்ல பாப்பீங்கல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கவர்னரை நேர்ல ,பாப்பீங்களாமே..அன்னைக்கு டிவில உங்களைப்பார்த்தேன், தளபதி பக்கத்துலையே நின்னீங்க.
ரகுமான், இளையராஜா நிகழ்ச்சிக்கெல்லாம் டிக்கெட் ஈசியா கிடைக்குமாமே. எந்த அதிகாரிககிட்டக்கூட நீங்க சுலபமா பேசலாம். பஸ்சு, டிரெயின்ல வேற சலுகையெல்லாம் கிடைக்குமாமே.
காதில் இன்பத்தேன் வந்த பாயும் பத்திரிகையாளனின் ஒருபக்கம் இதுதான்.
ஆனால், மறுபக்கம் இத்தனைக்கும் 200 மடங்கு எதிரான தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடமாடும் ஒரு எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினரே முதலில் நம்ப மாட்டார்கள்.
ஊரே தீபாவளி கொண்டாடும், குடும்பத்தினர் காத்திருக்க தெருத்தெருவாக அலைந்து பட்டாசு விற்பனை, துணி விற்பனையை செய்தி சேகரித்துக்கொண்டிருப்பார். தன் குடும்பத்திற்கு எடுககக்கூட நேரம் இருக்காது. சொந்தங்களைப் பார்க்க லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில்களில் செல்வதைச் செய்தியாக்கிவிட்டு, ஆளே இல்லாத கோவையில் ,சென்னையில்,மதுரையில் ,திருச்சியில் , உடுமலையில் ,காய்ந்துபோன பரோட்டாக்கடைகளைத் தேடிக்கொண்டிருப்பார். ஊரே விடுப்பில் இருக்க இவர் மட்டும் அலுவலகத்தில் காதில் பட்டாசு சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு ,மனதை கல்லாக்கிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருப்பார்.
உலகம் விழிக்கும்போது உறங்கப்போவார். உலகம் உறங்கப்போகும்போது விழித்தெழுவார்.
உண்மையில் ஊடகவியலாளர்கள் பணி ஒரு மிகுந்த அர்ப்பணிப்பு ,தியாகம் ,சுகதுக்கங்களை மறந்து பணியாற்றும் பணி ....ஒரு துறை பத்திரிகை மற்றும் ஊடகத் துறைதான்...இந்த பதிவு ...பத்திரிகைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தீபாவளி தின வாழ்த்துக்கள் :)
-

திங்கள், 9 அக்டோபர், 2017

கவலைப்படாதீங்க மாப்பிள உங்களுக்கும்திருமண காலம் ஒரு வெகு அருகில்..வாழ்த்துக்கள்  .மல்லிகை பூ விக்கிற விலை ..கையில் காசு இருக்காது ...மனது வாங்கத்தோணும் ...பட்ஜெட் பத்மநாபன் மாதிரி கணக்குபோடுபோது தெரியும் அந்த வலி ...மனைவி என்னடா இந்த மனுஷன் ஒரு மொழம் பூ கூட வாங்கி கொடுக்கமாட்டேங்கறேன்னு மனதில் திட்டிக்கொண்டு இருப்பார்கள் ...கிரமமாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் ..இந்த கோவை நகர வாழ்க்கை ..நரக வாழ்க்கை ...நான் சொல்லுவது விலைவாசி ...

மல்லிகை பூ ...வாசம் என் செல்ல ஷ்யாமுக்கு பிடிக்கவே பிடிக்காது அவருக்கு விவரம் தெரிந்ததிலிருந்து ..வருடம் 2011...மூன்று வயதிலிருந்து ..ஷியாம் அம்மா தலையில் வாங்கி பூவைத்தால்..அதை கொத்தாய் பிடித்து பிடிங்கி வீசிவிடுவார் ...என் கஷ்டம் தெரிந்தோ என்னவோ ..என் மனதை அறிந்தவன் .2011 பிறகு ஷியாம் அம்மா தலையில் பூ  சூடி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது .எனக்கு தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை ...இப்பொழுது ஷ்யாமின் வயது 10...இப்பொழுது ஷ்யாமின் மன நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாது ....பூ சூட அனுமதி கொடுத்திவிட்டார்களா என்று தெரியவில்லை ..

Sivakumar Kumar is feeling wonderful with in Monday .மார்க்கெட் ..Udumalaippettai.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் காய்கறி சந்தைக்கு சென்று வந்தேன் ...எப்பவும் அழைக்க மாட்டார்கள் ..சிறு வயது இருக்கும்போது(30வருடங்களுக்கு முன் ) அழைத்து செல்வார்கள் ...என்னமோ தெரியவில்லை சந்தைக்கு வரியா கண்னு என்று அழைத்தார்கள்.. சரிங்கஅம்மா..  நானும் வருகிறேன் என்று அவர்களுடன் சென்று வந்தது மனதுக்கு ஆத்மார்த்தமான நிம்மதி .காய்கறி விலை எல்லாம் கொஞ்சம் அதிகமாக பட்டது...எப்பொழுதும் காய்கறி கடையில் பேரம் பேசி வாங்குவார்கள் ...எதுவும் கேக்காமல் வாங்கியது ஏன் என்று தெரியாமல் ...ஏன் நான் சிறு வயது இருக்கும்போது பேரம் பேசி வங்கவீர்களே ஏன் இப்பொழுது வாங்கவில்லை என்று கேட்டேன் ...இல்ல கண்னு ..புரட்டாசி மாதம் எல்லாம் மழைபெயுது காய்கறி விலை குறைந்து இருக்கும் ..இப்ப எங்க கண்ணு மழை பெய்து இருக்கிறது ?...இந்த விலைக்காவது காய்கறி கிடைக்காதே என்று சந்தோசப்பட்டுக்கினும்...காய்கறிகடைக்காரர்களுக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது .....என்று கூறியது ..நம்மை சுற்றி இருக்கும் கால சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று உணர்த்தியது ...இந்த படிக்காத மேதையிடம்....

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இன்றய புத்தக திருவிழா .....

நிறைவு நாள் என்று சொல்வதைவிட ..2018 வரும் ஆரம்ப நாள் என்று சொல்லலாம் ...ஆரம்பித்த நாள் முதல் ...நிறைவு நாள் வரை ..காலில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு விழா கருத்துரை வழங்கிய தலைவர்கள் ,அறிஞர்கள் ,முனைவர்கள் ,படித்த புத்தக அறிவு ,நடைமுறை அனுபவ கருத்துக்களை உடுமலை மக்களுக்கு  ..சிந்தனை ,அறிவுபூர்வமான கருத்துக்கள் பகிர்ந்தது...வாழ்க்கையில் உயர்வதற்கான எண்ணங்களை செதுக்கியது புத்தக திருவிழாவின் உடுமலை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் ...

இன்று வரவேட்புரை திரு .லால் அவர்களின் குரலோசையோடு ஆரம்பமானது ...

முன்னிலை ...
முனைவர் .சு .சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசகர் ,வித்யாசாகர் கலைஅறிவியல் கல்லூரி ,உடுமலை மக்களின் மனதில் இடம் பெற்ற இந்திய விடுதலை வேட்கை பாடல்கள் எழுதிய கவிராயர் நாராயணகவி ,இந்திய விடுதலைக்கு வித்திட்ட எத்தலப்ப மன்னரின் வரலாறுகளோடு ...பேச்சை ஆரம்பித்தது உடுமலை மக்களின் மனதை பெருமையடைய வைத்தது ..

எதிர்காலத்தில் குழந்தைகளின் வாசிப்பு ,நேசிப்பு புத்தகத்தினால்தான் கொண்டு வரமுடியும்..பேசி நிறைவு செய்தது அருமை ..

திரு .விவேகாநதந்தன் அவர்கள் ,காவல் துணை கண்காணிப்பாளர்  ,பேசும் பொழுது ..தான் சாதாரண அரசு பள்ளியில் படித்து ,கல்லூரி படித்து காவல்துறை பணிக்கு வந்ததை தன கல்வியின் அருமையை அழகாக கூறியது இன்றைய மாணவ செல்வங்களுக்கு ஊக்கம் அளித்ததாக இருந்தது ..அவர் சிறு வயதில் ..பொது நூல்களை தினம்தோறும் வாசிப்பு பழக்கத்தால் படித்து இந்த பதவிக்கு வந்ததை சுட்டிக்காட்டியது இந்த புத்தக திருவிழாவிற்கு பெருமைசேர்த்ததாக இருந்தது ..

உடுமலை வாட்டாச்சியர் திரு .அசோக் ..அவர்கள் பேசும்பொழுது ..இன்றய தொழில்நுட்ப்ப கருவிகள் ..பொழுது போக்கிற்கு அதிகம் பயன்படுத்தாமல் ..நூல்களை கற்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியது மகிழ்ச்சி ....உடுமலை ,டாக்டர் .M .அசோக் அவர்கள் ,திரு .சிவசக்தி ராமசாமி அய்யா அவர்கள் , புத்தக திருவிழாவின் அருமைகளை ..வாசிப்பு ..நேசிப்பு பலன்களை உடுமலை குழந்தைச்செல்வங்களுக்கு கொண்டு வந்ததை பாராட்டி பேசியது

இந்த புத்தக திருவிழாவிற்கு அனைத்து ஊடகவியலாளர் ,தினகரன் திரு .கண்ணன் அவர்கள் ,தினத்தந்தி திரு .ஸ்டீபன் அவர்கள் ,தினமலர் செந்தில்ராமன் ..அவர்கள் நியூஸ் 18..திரு .பரணிசங்கர் அவர்கள் ,தமிழ் இந்து .திரு .நாகராஜன் அவர்கள் ,தினம்தோறும் புத்தக திருவிழாவிற்கு கருத்துரை வழங்கிய தலைவர்களை அனைவரையும் வரவேற்று உபசரித்த தீக்கதிர் .மகாதேவன் அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் ...

நன்றியுரை ..என் அன்புக்கினிய வகுப்பு தோழர் திரு .பாலதண்டபாணி அவர்கள் விழாவை சிறப்பித்த விழா தலைவர்கள் ,புத்தக உரிமையாளர் ,விழா ஒலிபெருக்கி அமைத்த குமரன் சவுண்ட் சர்வீஸ் ,விழாமேடை அமைத்த பந்தல் பாய்ஸ் உரிமையாளரை அவர்களின் பணிகளை செம்மைப்பட வைத்ததற்கு நன்றிகள் தெரிவித்தார் ...

உடுமலை மண்ணின் மைந்தர்கள் ...பொதுசேவை என்றவுடன் நினைவுக்கு வருபவர்கள் ...திரு .நாகராஜன் அவர்கள் ,SM Travels ..உரிமையாளர் ..உடுமலைப்பேட்டை ,திரு .சத்தியம் பாபு அவர்கள் ,சத்தியம் பிரின்டர்ஸ் .உரிமையாளர் ..இவர்கள் தான் நம் கண்முன்னே தெரிகிறார்கள் ..கடுமையான பணிசூழ்நிலைகளுக்கு இடையில் ..விழாவிற்கு வந்த அனைவரையும் அன்போடு ,ஆதரவோடும் ..கூடவே இருந்து தன் சகா நண்பர்களாக விழாவில் வலம் வந்து உபசரித்தனர் ...புத்தக திருவிழாவிற்கு நகராட்சி தேஜஸ் மஹாலை  இலவசமாக அளித்து ..எதிர்கால தலைமுறைகளுக்கு ..இன்றைய இளைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக உள்ளது உடுமலை மக்களுக்கு பெருமையும் கூட ...இவர்களுக்கு விழாக்குழுவினர் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர் ...