வியாழன், 17 ஜூன், 2021

 கேள்வி :  ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?


என் பதில் : 


குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம் என்றாள் அதிலே நாம் ஒருவர் தான் சம்பாதிக்கிறோம் என்றால். சிக்கனமாக செலவு செய்தாலும் குறைந்தது மாதம் பத்தாயிரம் ரூபாய் வேண்டும். கொஞ்சம் நல்லபடியாக சாப்பிட வேண்டும் என்றால் 12000 ரூபாய் வேண்டும். (என்னைப் பொருத்தவரை எனக்கு எட்டாயிரம் ரூபாய் போதும்)


நிலைமை இப்படி இருக்க ஒரு சராசரி மனிதன் நமக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ, அந்த அளவுக்கு உழைக்க வேண்டும். அல்லது பணம் வருகிற வழியை தேட வேண்டும். என்று நினைப்பது இல்லை. 


தனக்கு வருகிறவருமானம் போதிய செலவுக்கு பத்தாது என்பது தெரிந்தும்.. ஒரே வேலையிலேயே முப்பது வருடம் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு மாதமும் செலவுபற்றாக்குறைக்கு, கடன்களை வாங்கிக் கொண்டும். தன்னைச் சேர்ந்தவர்களிடம் கையேந்திக் கொண்டும். காலத்தை கழிப்பார்.


ஒரு குடும்பத்தலைவனுடைய இந்த நிலைமையை கண்டு.. தனது மனைவியும் பிள்ளைகளும் சமூகத்தின் மத்தியில் எந்த அளவு கூனிக்குறுகி நிற்கிறார்கள்? _அவர்களுக்கு உரிய கௌரவம் எப்படி தேடித்தர வேண்டும்? என்பதை துளியளவு கூடநினைத்துப் பார்ப்பது இல்லை.


தன்னுடைய சிந்தனையற்ற செயல்பாட்டினாள்.. தன் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை என்பது_ இவனுக்கும் கீழாக சரிந்து வருவதை உணர்வது இல்லை. உன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப சமம் உடைய நட்பும் சுற்றமும் தான் உன்னை சூழ்ந்து இருக்குமே தவிர.. உன்னைவிட திறமையிலோ, படிப்பிலோ, செல்வாக்கிலோ நிறைந்தவர்களை.. ஒருவித தயக்கம் காரணமாக, தாழ்வு மனப்பான்மை காரணமாக, நீயும் நெருங்க தயங்கி.. அவர்களும் உன்னிடம் நட்புக்கு அழைக்காமல்.. உலக நடைமுறை வாழ்க்கையின்.. எதார்த்தங்களோ, முன்னேறுவதற்கான இலகுவான வழிவகைகளோ.. எதுவுமே தெரியாமல்.. கூலித் தொழிலாளியாகவே கடைசி வரை வாழ்ந்து. உனக்கு அடுத்து இன்னொரு கூலி தொழிலாளியாக உலகத்துக்கு உன் பிள்ளைகளை விட்டுவிட்டு.. சளியும் இருமலுமாய்.. வீட்டிற்குள் ஒரு மூலையில் முடங்கிப் போகிறாய்…?


அல்லது இடையில் தப்பான யோசனைகளை யாராவது சொன்னால் அதைக்கேட்டு_தப்பான பாதையில் தடுமாறி.. சக மனிதர்களுக்கும் அந்நியப்பட்டவணை.. வேறு எங்கோ முடங்கிப் போகிறாய்? இதெல்லாம் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் தானே!


நன்றாக சம்பாதிப்பவர்களை கவனிக்கணும். அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். என்பதை தெரிஞ்சிக்கனும். நாலு நல்ல மனிதர்களோடு நல்லா பழகனும். இன்னும் நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கணும். அல்லது கத்துக்கணும். 


*நரம்பு வெடித்து வெளியில் தெறிக்கும் அளவு.. உடம்பில் ரத்தம் சூடேறி கொதிக்கும் அளவு.*. உழைக்கனும். 


அதுவும் கருத்தோடு, சாதுரியத்தோடு, திறமையாக உழைக்கணும்.நம்மை ஏமாற்றி இன்னொருவன் பிழைப்பதற்காக அல்ல.. நம்முடைய குடும்பம் உயர்வதற்காக என்ற எண்ணத்தோடு உழைக்கணும். (அதுவரை எனக்கு என்று எந்த ஆசாபாசமும் அறவே இருக்கக்கூடாது) என்று நினைக்கனும்.


இப்படி அல்லாமல்.. ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்.. வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். என்பதே அர்த்தம். 


நன்றி.



கேள்வி :  பெரும்பாலான இளைஞர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் விஷயங்கள் என்னென்ன?


என் பதில் : 


பெட்டி நிறைய பணம் இருந்தால் அதை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம்.. என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


அந்தப் பெட்டி நிறைய பணம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? 

எப்படி இருக்க வேண்டும்? 

எதை சேர வேண்டும்? என்பது புரிந்து கொள்வது இல்லை.


நிறைய எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வைத்திருக்கிறார்கள்?


குடும்பத்தினர் நம்மை எண்ணி வைத்துள்ள எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என்ன என்பது புரிந்து கொள்வது இல்லை.


தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.


பெண் கேட்டு செல்கிற இடத்தில்.. எந்தத் தகுதியை கேட்கிறார்கள்? என்பது புரிந்து கொள்வது இல்லை.


தாயை தந்தையை மிகவும் நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள்.


இவர்களுக்கு செய்யவேண்டிய கைமாறு என்ன? என்பது புரிந்து கொள்வது இல்லை.


திரைப்படத்தின் கதாநாயகனின் பர்சனாலிட்டி தெரிந்து இருக்கிறார்கள்.


தன்னுடைய பர்சனாலிட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது புரிந்து கொள்வதில்லை.


தன்னுடைய எதிர்காலத்தை, ஆசைகளை, கனவு காண்கிறார்கள்.


மற்றவர்களுடைய எதிர்காலத்தை, ஆசைகளை.. எந்த அளவுக்கு தன்னால் நிறைவேற்றித் தர முடியும்? அதில் தன் பங்கு என்ன? அதற்காக..உபயோகமான சிந்தனை. உபயோகமான செயல். உபயோகமான முயற்ச்சி. என்ன? என்பது புரிந்து கொள்வது இல்லை.


பெத்த வயிறும், வளர்த்த நெஞ்சும்,நித்தம் நித்தம் இவர்களை எண்ணி பரித விக்கின்ற போதும், இவர் வருந்துவதில்லை.சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கி.. மகனுக்காக அப்பா புரோட்டா வாங்கி வந்தால்.. என்னா ஆம்லெட் வாங்கலையா? என்று கேட்பார். பக்கத்துக் கடையில் கடனுக்கு அரிசி வாங்கி அம்மா புளிக்குழம்பு வைத்தாள்.. ஏம்மா என்னை கொல்லுற என்பார்.


பலர் அல்ல சில இளைஞர்கள். வாழ்க்கையை தவறாக வாழ்ந்து.. புரிதல்கள் இல்லாத புதிர்களாக இருக்கின்ற போது. சாக்கிரட்டீஸ் பற்றியும், தினேஷ் மல்கோத்ராவை பற்றியும், அறிந்துதான் என்ன பயன்.


வாழ்க வளர்க . அனைவருக்கும் நன்றி.


புதன், 16 ஜூன், 2021

கேள்வி : தற்போது முதலீடு செய்ய சிறந்த கிரிப்டோகரன்சி (Cryptocurrency) எவை?


என் பதில் : 


இது ஒரு நிதி ஆலோசனை அல்ல.


2010 ஆம் ஆண்டு பிட்காயின் வாங்குவது குறித்து நானும் எனது நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டது. அப்போது கிரிப்டோகரன்சி என்றால் என்னவென்று கூட தெரியாது. அது குறித்து அறிய முயன்ற போது பெரிதாய்ப் புரியவில்லை என்றாலும், decentralization கொள்கை பிடித்திருந்தது. அப்போது பிட்காயின் விலை சந்தையில் கத்திரிக்காய் வாங்கும் விலையை விடக் குறைவுதான். ஒரு 4 கிலோ வாங்கி இருக்கலாம். எப்படி வாங்குவது, அந்நிய செலாவணி, இந்தியாவில் கிரிப்டோ ஒருவேளை தடை செய்யப்பட்டால் என்று அந்த காசு முழுவதற்கும் கத்திரிக்காய் வாங்கி பொரிச்சாவது சாப்பிடலாம் என்று பொங்கித் தின்று விட்டோம். நமக்குச் சோறுதானே முக்கியம். இன்றைக்குக் கிட்டத்தட்ட 2.87 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு படி - 200900000/-). கொஞ்சம் காஸ்டலியான கத்திரிக்காய் பொரியல்.


சரி அதுக்குப் பின்னாலாவது கொஞ்சம் சுதாரித்து வாங்கி இருக்கலாம். அதுக்குள்ள பிட்காயின் விலை $1000 தாண்டிப் போய் விட்டது. அவ்ளோ காசுக்கு நான் எங்க போவேன்னு அப்டியே விட்டுட்டேன்.


2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் பிட்காயின் விலை $50000/- தாண்டியது. சரி எப்போவோ விட்ட ப்ராஜக்டை கொஞ்சம் தூசி தட்டுவோம் என்று கொஞ்சம் கிரிப்டோ ஆராய்ச்சியில் இறங்கினேன். நிறைய வாசித்து கொஞ்சூண்டு தெரிந்து கொண்டேன். சில்லறை விலையிலும் கிரிப்டோ வாங்கலாம் என்று தெரிந்து கொண்டது பேரதிர்ச்சி. அதாவது ஒரு பிட்காயினின் விலை $50000/- என்றால் நீங்கள் $100 கொடுத்து அதற்கான பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம். (மளிகை கடையில் நாம் வாங்கும் ரூ. 30/- க்கு முந்திரி போல. நாளைக்கு வெண் பொங்கல் பண்ணனும்). இத்தனை நாளாய் இது தெரியாது போச்சே என்று நினைத்துக்கொண்டு மேலும் ஆராய்ச்சியில் இறங்கினால் பல்லாயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சி சந்தையில் இருப்பது தெரியவந்தது. கத்திரிக்காயில் இந்தியாவில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு.


சரி இதை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று வாசித்து அறிந்து கொண்டது. ஒவ்வொரு காயினின் அடிப்படையும் அந்த காயினை உருவாக்கும் நிறுவனத்தின் தொழில் சார்ந்தது. தற்போது இருக்கும் பல்வேறு வகையான வணிகமும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் மேலும் பாதுகாப்பாகவும் (?), decentralized ஆகவும் செயல்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களில் நான் தேர்ந்தெடுத்த சில கிரிப்டோ கரன்சிகள் கீழே. கிரிப்டோ கரன்சிகளின் விலை நாள்தோறும் மிக வேகமாக மேலும் கீழும் போகும். ஆகவே இது தினசரி டிரேடிங் செய்ய உகந்ததல்ல. ஒரு 10 வருடத்திற்கு (குறைந்தது 3) சேமிக்க நினைத்துச் சேர்க்கலாம். அதிலும் ஒரு சில நாணய மதிப்பு மட்டும் உயரும் வாய்ப்புள்ளது. சில மாதங்களிலும் உயரலாம். ஆகவே ஒரு மிகச் சிறிய சேமிக்க இயன்ற பணத்தை மட்டும் (கிணற்றில் போடுவதாய் நினைத்து) கிரிப்டோவில் போட்டால் மண்டை பத்திரமாக இருக்கும்.


1. Bitcoin - கிரிப்டோ உலகின் ராஜா. இதன் விலை 1 மில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என்று கூறுகிறார்கள். தற்போது ஒரு பிட்காயின் இந்திய ரூபாய் மதிப்பின் படி - 4061001.76/- .


2. Ethereum - நம்ம சந்தையில் தங்கத்திற்கு ஒரு வெள்ளி மாதிரி கிரிப்டோவில் பிட்காயின் தங்கச்சி. வேகமாக மதிப்பு உயர்ந்து வரும் இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 283821.55/-


3. XRP - ரிப்பில் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த நாணயம் கிரிப்டோ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. இந்த நிறுவனத்தின் மீது US SEC (US Security Exchange Commission) ஒரு வழக்கு தொடுத்தது (வழக்கு என்னன்னு நமக்கு தேவை இல்லாத ஒன்று. அவங்க ஊரு வாய்க்கா தகராறு). வழக்கு காரணமாக இந்த நாணயத்தின் விலை பல மாதங்களாக உயரவே இல்லை. தற்போது இந்த வழக்கில் SEC வாய்தா மேல வாய்தா கேட்டு இழுத்து அடித்துக் கொண்டிருக்கும் போதும் இதன் விலை சற்றே மேலே சென்றது. இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 103.23/-


4.Binance coin - மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த நாணயம் 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நிறுவப்பட்டது. Ethereum ப்ளாக்சைன் வடிவமைப்பில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அதிகம்.அதைக் குறைக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. தற்போதைய கிரிப்டோ சந்தை மதிப்பின் படி உலகின் 3வது சந்தை மூலதனம் உள்ள நிறுவனம். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 47185.88/-


5.Tron - இணையத்தில் இருக்கும் Netflix, Amazon prime போன்ற OTT தளத்தை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கொண்டுவர நினைக்கும் நிறுவனம். இதன் மூலம் குறைந்த செலவில் பல உள்ளடக்கங்களை உருவாக்கி மிகக்குறைந்த சந்தாவில் மக்களுக்கு வழங்க இயலும். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 9.29/-


6. Cardano - நிறுவனங்கள் மிகப்பெரிய project செய்யும் பொழுது ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். அந்த ஒப்பந்தங்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கொண்டுவர நினைக்கும் நிறுவனம். மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பம். இதன் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி 120.07/-


7. Dogecoin - இது ஒரு meme கிரிப்டோவாக நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாணயம். இது உண்மையில் இது வரை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதை உருவாக்கியவர் இதன் வளர்ச்சி குறித்து தற்போது வரை ஆச்சரியத்தில் உள்ளார். இந்த நாணயத்தின் தற்போதைய விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி - 33.95/-


இவை தவிர்த்து sushi, bake, cake, banana, vechain, btt, stellar, matic, shibu, chia, safemoon, ravencoin எனப் பல்லாயிரக்கணக்கான நாணயங்கள் உள்ளன. நீங்கள் எதை வாங்கினாலும் அது குறித்து வாசித்து நன்கு அறிந்து பின்னர் வாங்குங்கள்.


இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி தடை செய்யவிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்திய அரசின் நிலையை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் முதலீடு செய்யுங்கள்.


இது ஒரு நிதி ஆலோசனை அல்ல.


நன்றி ....

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 15 ஜூன், 2021


 கே .கே .சண்முகம்..(85)பழனி ..

(அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்-ஓய்வு பணியாளர்  ) 


இன்று இறப்பு நிகழ்வு ..வயது மூப்பின் காரணமாக ..பழனி வரை சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது...எனது அக்காவின் கணவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்களின்  அப்பா என்பதாலும் .எங்கள் முதல் சம்பந்தி என்பதாலும் ..அவருக்கு செய்யவேண்டிய ..சடங்குகள் செய்து வழியனுப்பியது மரியாதையாகவும் அஞ்சலியாகவும் அமைந்தது .என் அப்பாவுடன் ..விசேஷ நிகழ்ச்சிகள் ..எங்கள் சொந்தங்களிலும் அவர்களின் சொந்தங்களிலும் கண்டிப்பாக கலந்துகொண்டு .இனிய நிகழ்ச்சிகளை பேசி மகிழ்வுடன் செல்வர் ..என் தந்தையின் இறப்பு நிகழ்வில் உங்கள் அப்பா அருமையான நண்பராக ,அருமையான தந்தையாக பொறுமை ,சகிப்புத்தன்மை ..எப்பொழுதும் நான் வரும்பொழுது சிரித்த முகத்துடன் வரவேற்பார்.என்னிடம் சொன்னது பசுமையான நினைவுகளாக இருக்கிறது ..எனது தந்தைக்கு தன் இறுதி ஆத்மார்த்தமாக அஞ்சலியை செலுத்தி சென்றார் . 


நான் சிறு வயதில் விவரம் தெரிந்து மாதம் தவறாமல் கார்த்திகை தினத்தன்று பழனி சென்று முருகனை நீண்ட நேரம் நின்று வரிசையில் தரிசனம் செய்வது என்னுடைய வழக்கமாக இருந்தது ..எனது திருமணம்  2004 வருடம் நடந்தது .அன்று முருகனை தரிசிப்பதற்கு என் மனைவியுடன் சென்றபோது முருகனை அருகில் நின்று தரிசிப்பதற்கு எனக்கு மிகவும் உதவினார் ..இந்த நிகழ்வு வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நின்றபோது என் மனதில் முருகனின் தரிசனம் தான் வந்துபோனது ...நமது சொந்தங்கள் யார் வந்தாலும் அவர் பணியில் இருந்தால் ,சிறப்பு தரிசனம் செய்ய அழைத்துச்செல்வார் ,


அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அவரின் பேரப்பிள்ளைகள் பூக்கூடை எடுத்து ,தீபம் ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவர் வாழந்த வாழ்வுக்கு அர்த்தம் உள்ளதாக இருந்தது ..


அவரின் இறுதி அஞ்சலிக்கு கோவையில் இருந்து சொந்தங்களும் ,பொள்ளாச்சி யில் இருந்து வேதா அக்ரி பார்ம்ஸ் வேதா மேடம் ,தம்பி அரவிந்த் அவர்களும் வந்து இறுதிஅஞ்சலி செலுத்தினர் ..பெரியகோட்டை முன்னாள் கவுன்சிலர் சுசிலா அவர்கள் தன் சித்தப்பாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் . 


இறுதி அஞ்சலி நிகழ்வுநடக்கும்பொழுது ..தந்தை இழந்து  சோகத்தில் இருக்கும் போது ,அடுத்தடுத்து நிகழ்வுகளை  அண்ணன் செந்தில்குமார்-ம் ,எனது அம்மாவும் ,என்னென்ன சடங்குகள் செய்யவேண்டும் என்பதை இறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மிக்க உறுதுணையாகம் ,அவருக்கு செய்யவேண்டிய இறுதி மரியாதையாக அமைந்தது ..உடுமலைஅவருக்கு செலுத்தவேண்டிய இறுதி மரியாதையை செலுத்திவிட்டு மலைமேல் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியை நோக்கி தரிசனம் செய்து உடுமலைநோக்கி வரும்பொழுது  சாரல் மழை பெய்துகொண்டே இயற்கை தன் அஞ்சலியை செலுத்தியது.


குறிப்பு : தன் பேரக்குழந்தைகளைக்கு   சரியான கல்வி கொடுத்து இன்று மருத்துவராகவும் ,பொறியாளர்களாகவும் ,வழக்கறிஞர்களாகவும்,தொழில்முனைவோர்களுக்கு  ,பேரக்குழந்தைகளுக்கு அருமையான சொந்தங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து தன் உயிர்மூச்சை தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டார்  இந்த உலகில் ......


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681..    


 

சனி, 12 ஜூன், 2021

 இயற்கை குளுகுளு வசதி ....

என் நீண்டகால நண்பன் அவருடைய தம்பி கல்யாணம் விசாரிக்க சென்றிருந்தேன் .மணி மதியம் 12 . 50 இருக்கும் .புதிதாக கான்கிரீட் வீடு கட்டி இருந்தார்கள் . எதிரே ஓட்டு வீடு இருந்தது . முதலில் ஓட்டு வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தேன் . காற்றாடியை போட்டார்கள் . அனல் காற்று பயங்கரமாக வீசியது . சரி என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு , புதிதாக கட்டிய வீட்டிற்கு போக கூப்பிட... கான்கிரீட் வீடு என்பதால் அனல் காற்று அங்கு இன்னும் அதிகமாய் இருக்குமே என பயம் !
சரி என்று வீட்டிற்கு சென்றேன்... குளுகுளுவென இருந்தது ஆனால் A / C வசதி இல்லை . எனக்கு ஒரே ஆச்சரியம் . என்ன குளுகுளுவென இருக்கிறதே என்ன செய்தீர்கள்? என கேட்டேன்... அது ஒன்னும் இல்லை தென்னை மட்டை மாடியில் கிடக்கு அதனால் இப்படி இருக்கு என்றார்கள் . போய் மாடியில் பார்த்தேன் . வரிசையாக தென்னை மட்டை போட்டிருந்தார்கள் . தென்னை மட்டைக்கு இப்படி ஒரு அற்ப்புதம் இருப்பதை பார்த்து வியந்துவிட்டேன். மின்சாரம் இல்லாமல் இலவச குளுகுளுப்பு தன்மையை கொடுக்கும் சக்தி இயற்கைக்கும் இதுக்கும் மட்டுமே...
( மழை காலங்களில் எடுத்து விடுவார்களாம் )

அழகு_எது ??????

என் மனம்  நீண்ட நாட்களாக விடை தேடிய ஒரு கேள்வி

அனுபவம் கூறிய. விடை

அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்

அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்;

அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்;

அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.

 எது அழகு ?

சிவந்த நிறமா? 

கூறான மூக்கா?

 வேல்போன்ற விழிகளா? 

வனப்பான உடல் அமைப்பா?

 வண்ண,வண்ண உடைகளா? 

வித விதமான சிகை அலங்காரங்களா?

 விலை உயர்வான நகை அலங்காரங்களா?

 இவைகளெல்லாம் அழகுதான். 

ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல

 1.குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

 2.  அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு.

 3. மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.

 4. கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.

 5.பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

 6.நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.

 7.  செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

 8.தொழிலில் அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு.

 9. கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககார்ர்கள் அழகு.

10.  பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

11.பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.

12.  சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.

 13. பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.

 14.அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.

 15.   சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.

16.  பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.

17.மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு.......

https://youtu.be/xdhY-uRL0Gw

கேள்வி : வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் என்ன?

 கேள்வி : வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் என்ன?


என் பதில் :..இப்பொழுது கொரோன காலம் WORK FROM HOME ..


1. டீம்ஸ் காலில் இருக்கும் போது, மறந்தும் வீடியோ ஆன் செய்யாதீர்கள்..


சமீபத்தில் மேனேஜர் ஸ்கில் நடத்தும் ஒரு டீம்ஸ் மீட்டிங்கில், வேற ஏதோ அணியில் வேலை பார்ப்பவர் போல, தெரியாமல் வீடியோ ஆன் செய்து விட்டார்..


மனிதர் சட்டை போடாமல், வெறும் கால் சட்டை தான் போட்டு இருப்பாரு போல.. இந்த லட்சணத்தில் காலை வேற லேப்டாப் இருந்த டேபிள் மேல் வைத்து கொண்டு இருந்தார்


பின்னால் பார்த்தல் மாட்டு கொட்டஹை போல் இருந்தது..


நல்ல வேலை வாயில் இருந்த பானை, பொளிச் என்று திரையில் துப்ப வில்லை.


2. குழந்தைகைளை தயவு செய்து அலுவலக கணினியை தொட அனுமதிக்காதீர்கள் . உங்கள் மேனேஜர் சிறிது நேரம் கழித்து போன் செய்து கழுவி ஊற்றினால் ஏன் என்று கேட்காமல் வாங்க தயார் ஆகிக்கொள்ளுங்கள்


3. நல்ல பிராட்பேண்ட் பிளான் எடுத்துக்கொள்ளவும், 2 வருஷம் ஆக போகிறது. இன்னும் சிலர் டாங்கில் வைத்துக்கொண்டு வேலை செய்வது எல்லாம் டூ மச்


4. அடுத்தது, வீட்டில் இது நாள் வரை இன்வெர்டர், பேக்கப் இல்லை என்றால் வாங்கி கொள்ளுங்கள்.. 2 வருடம் கழித்து கூட எங்கள் ஏரியா வில் கரண்ட் இல்லை, நான் 2 மணி நேரம் கழித்து லாகின் செய்கிறேன் பேர்வழிகளாய் சுற்றாதீர்கள்


5. முடி வெட்ட முடியாது தான்.. ஆனால் ஆண்கள் முகச்சவரம் செய்யலாம்.. ஏதோ ஆதித்யா வர்மா படத்தை உங்களை வைத்து பாலா மாமா எடுக்கப்போவது போல் ஏன் இந்த கண்றாவி


6. அலுவலக கணினியை, படம் பார்க்கவோ, ஒன்லைன் புக் செய்யவோ, குழந்தைகளுக்கு அசைன்மென்ட் பிரிண்ட் கொடுக்கவோ வேண்டாம்.. வேலையே போய்விடலாம்.. ஜாக்கிரதை...

நன்றி ...


 சிமெண்ட் செலவை குறைக்கபோய் ஏடாகூடமா சிக்கிக்கொண்டவர்களின் அனுபவம் இருந்தால் பதிவுவிடமுடியுமா ?


என் பதில் : 


புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு சிமெண்ட் தேவையானது 100க்கும் மேற்பட்ட மூட்டைகளாக  இருக்கும்போது, ஏஜென்டுகள் மூலமாக வாங்காமல் நேரடியாக ஃபேக்டரியிலே வாங்கி கொள்ளலாமே? என்ற எண்ணம் வீடு கட்டுபவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். எப்படியாவது காசை மிச்சம் செய்துவிட மாட்டோமா? என இருக்கும் எல்லா வழிகளையும் யோசித்து கொண்டிருப்பார்கள். அதில் ஒன்று தான் சிமெண்ட் மூட்டையை நேரடியாக ஃபேக்டரியிலே சென்று எடுத்துக்கொள்ளும் ஐடியா. 


நேரடியாக ஃபேக்டரியிலே சென்று வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் 200 மூட்டையாவது வாங்க வேண்டும். வாகன வசதி நாம் தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஃபேக்டரி ரொம்ப தூரத்தில் உள்ளதென்றால் வாகன செலவு எகிறிவிடும். இப்படி வாங்க நினைத்தால், சிமெண்ட் கம்பெனியின் அந்த மாநிலத்திற்கு உரிய அலுவலக எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. 


நாம் டீலரிடம் வாங்கும்போது பேரம் பேச வாய்ப்புண்டு. ஆனால் ஃபேக்டரியில் வாங்கும்போது விலை ஃபிக்ஸ்ட் ரேட் தான். அதுவே டீலர்களுக்கு ஃபேக்டரியில் சிறப்பு சலுகை உண்டு. ஒரேமுறை மட்டும் வாங்கும் நமக்கு தள்ளுபடி கிடையாது. அதுவே டீலர்கள் என்றால், அடிக்கடி டன் கணக்கில் லோடு எடுப்பார்கள்.


அதேபோல் ஃபேக்டரியில் வாங்கும்போது சொன்ன தேதிக்கு டெலிவரி செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஸ்டாக் இருக்காது. வந்த உடனே கொள்முதல் செய்யப்பட்டுவிடும். இது இல்லாமல் டீலர்கள் ஏற்கனவே புக் செய்திருப்பார்கள். அவர்களுக்கு கொடுத்தது போக மீதி தான் நமக்கு கொடுப்பார்கள். வீடு கட்டுபவர்கள் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். சிமெண்டை நேரடியாக ஃபேக்டரியிலே சென்று வாங்கி கொள்ளலாமே? என்று. அது புத்திசாலித்தனம் அல்ல. டீலர்களிடம் வாங்குவது தான் நல்லது என கூறவே இந்த பதிவு. 


நன்றி ...கனவு இல்லம் நிறைவேற வாழ்த்துக்கள் ..

சிவக்குமார் VK 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

வெள்ளி, 11 ஜூன், 2021

 கேள்வி :  நகைக் கடன் வாங்கி, வீட்டுமனை வாங்குவது நல்ல முதலீடு திட்டமாக இருக்குமா?


என் பதில் : 


உங்களுக்கு சில கேள்விகள்.


1. உடனே வீடு கட்டுவதற்காக மனை வாங்குகிறீர்களா ?


நீங்கள் வீட்டுமனையினை நீங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கும் பட்சத்தில், வீட்டுக் கடன் வங்கியில் கிடைக்கும். அத்தகைய கடனில் சில அம்சங்கள் உள்ளன.


வட்டி விகிதம் குறைவு.

அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு.

வீடு அடிப்படைத் தேவை. வாடகையின் மூலமாக பணம் வீணாவதைத் தடுக்கும்.

வீட்டுக் கடன் வாங்குங்கள்.


2. மனை வாங்கி எதிர்காலத்தில் வீடு கட்டப் போகிறீர்களா ?


அல்லது, நீங்கள் சிறிது காலம் கழித்து வீடு கட்டப் போகிறேன். அதுவரை, மனையாக வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கும் மனைக் கடன் வங்கிகளில் கிடைக்கிறது. அதற்கு சில அம்சங்கள் உண்டு.


அது வீட்டு மனையாக இருக்க வேண்டும். விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது.

எதிர்காலத்தில், வீடு கட்டும் போது, இந்தக் கடனை வீட்டுக் கடனாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட இரண்டு கடனும் அத்தியாவசிய தேவைக்கான கடன். தங்க கடன் இன்றி மற்ற கடன்கள் வழியாக சமாளிக்கலாம். தங்கத்தை அடமானம் வைக்கத் தேவையில்லை.


3. மனையினை முதலீட்டிற்காக, தங்க நகை கடன் வாங்குகிறீர்களா?


இப்போது, நீங்கள் மனையினை முதலீட்டிற்காக, நகைக் கடன் எடுத்து வாங்குகிறீர்கள் என்றால், பல விதங்களில் உங்களது பணம் இழப்பு.

நகைக் கடனில், மாதா மாதம் வட்டி செலுத்த வேண்டும்.

நகைக் கடனானது, நகையின் மதிப்பில் 80% - 90% வரை மட்டுமே வாங்க முடியும். நகையின் மொத்த மதிப்பினை பயன்படுத்த முடியாது.

நகைக் கடன் வாங்கும் போது, பல்வேறு கட்டணங்கள் வாயிலாக பண விரயம்.

மனையில் உங்களுக்கு எந்த ஒரு லாபமும் வராது. அது சும்மா இருந்துக் கொண்டு இருக்கும். பணம் ஈட்டித் தராத படியால், முதலீட்டுப் பணம், வீட்டினில் கிடைக்கும் வாடகை போல், கடனை அடைக்க உதவாது.

அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமென்றால், மனை விலை ஏறாமல் போனால், அதனை விற்க வேண்டுமென்று நினைத்தால், உடனே விற்பது எளிதல்ல. அதற்கு நீர்ப்புத் தன்மை குறைவு. நஷ்டத்தில் விற்றால் பண இழப்பு நேரலாம்.

ஏதோ காரணத்தினால், தங்க கடனிற்கு தவணை செலுத்த முடியாமல் போனால், மொத்த தங்கத்தினையும் இழக்க நேரிடலாம்.

எனவே, சொந்தப்பணத்தில் வாங்குவது நல்லது.

என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு முதலீடும் சொந்த பணத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏதேனும் காரணங்களால், முதலீடானது பொய்த்துவிட்டால் , உங்களது சொந்தப் பணம் என்றால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். கடன் பணம் என்றால், கடன் காரருக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.

மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வதென்பது, பண இழப்போடு ஆரம்பிக்கும் முதலீடு. முதலீடானது, கடன் வட்டித் தொகையினை விடவும், அதிகமான லாபத்தினைக் கொடுத்தால் மட்டுமே, அந்த முதலீடு நிஜமாகவே நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். இல்லையேல், நஷ்டம் தான் மிஞ்சும்.

சொந்த பணத்தைக் கொண்டு, எந்த ஒரு முதலீடும் செய்வோம்.


நன்றி ..

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் ,

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

கேள்வி : பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எது?

 கேள்வி : பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எது?


என் பதில் : 


"கையில் வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்யிக்கு அலைந்தானாம்"

மேற்குறிப்பிட்ட பழமொழிக்கு தகுந்தவாறுதான் இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலையும் உள்ளது. எதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் இன்று மலையாளம்,கன்னடம், தெலுங்கு திரைப் படங்களை பார்த்துவிட்டு தமிழ் படம் அந்த அளவுக்கு ஏன் இல்லை என்று இங்க  சில கேள்விகள் வலம் வருவதை பார்க்க முடிகிறது.


தமிழிலும் பல அபாரமான படங்கள் உள்ளது. அதுவும் தமிழில் நாம் கேள்விபடாத பல நல்ல படங்கள் தமிழ் ரசிகர்களாலே இறுதிச்சடங்கு நடத்தி சமாதிகட்டி விட்டனர்....ஏனென்றால் நாம்தான் சிறிய பட்ஜட் படங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே..சினிமா துறையில் 10 பேர் வாழ்ந்தார்கள் என்றால் 100 பேர் அடையாளம் தெரியாமல் காணமல் ஆக்கப்படுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை. ஆதலால் பெரிய பெரிய ஸ்டாருங்க படத்தை மட்டும் கொண்டாடாமல்..இது போன்ற சில நல்ல படங்களையும் ஆதரியுங்கள் தோழமைகளே!


இந்த கேள்விக்கு ஏற்கனவே ரசிகர்களிடம் பாரம், நெடுநல்வாடை போன்ற பெரும் வரவேற்பை பெறாத சில நல்ல தமிழ் படங்களை சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் நான் பார்த்த சில நல்ல தமிழ் படங்களை இங்கு பட்டியலிடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.


1.ஒரு கிடாயின் கருணை மனு.

2017 இல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் தரமான ஒரு படம் என்று நான் இங்கு சொல்லுவேன். அதற்கு முக்கிய காரணம் ஒரு எதார்த்தமான திரைப்படம் என்பதாலே.புதுமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.. நாயகி ரவீணா (அறிமுகம்).மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.. கிராமத்தினரின் அடாவடி, அலப்பறை, நக்கல், நய்யாண்டி என சிரிப்பலையுடன், சென்டிமண்ட் என பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் ஒரு படம்.. படத்தில் சில திருப்பங்களுடன் மனித உயிரைக் குறித்து இவ்வளவு கவலை கொள்ளும் சக மனிதர்கள், ஆடு, மாடுகளைப் பற்றி ஏன் கவலையேபடாமல் வெட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம்...இந்த படத்தை பற்றி இன்னும் நிறையா சொல்லிக்கிட்டே போகலாம். ஆதலால் பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்.


2. கமலி From நடுகாவெரி.

இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிட்டார்கள். தனுஷ் நடித்த கர்ணன் என்ற திரைப்படத்துடன் வெளியானதால் இந்த படத்தை யாரும் அவ்வளவாக கண்டு கொல்லவில்லை என்பதே உண்மை.. புதுமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்...கதாநாயகி, நாயகன் எல்லாம் கயல் ஆனந்திதான்... பெயரளவில் நாயகனாக ரோகித் சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரதாப் போதன், இமான் அண்ணாசி போன்ற பல நடிகர்களும் நடித்துள்ளனர். சண்டைக் காட்சி, கலவரம் என்று எந்தவித தொந்தரவும் இல்லாத அருமையான ஒரு படம்.. எந்த வித வசதியும் இல்லாத கிராமத்திலிருந்து தான் நினைத்ததை அடைய(ஒரு தலை காதலுக்காக) கமலி (கயல் ஆனந்தி) என்ற பெண் ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்து எவ்வாறு வெற்றி காண்கிறாள் என்பது தான் கதையின் கரு..ஒரு வகையில் பெண் பிள்ளைகளின் படிப்பின் அவசியத்தையும் இந்த படம் உணர்த்துகிறது.இந்த படத்தை பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்..


3. இஃக்லூ (Igloo)

இந்த பெயரை கேட்டவுடன் வேற்று மொழி படம் என்று நினைக்க வேண்டாம். இஃக்லூ என்பதற்கான அர்த்தம் இந்தப் படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.இந்தப் படம் ஒரு வெப் மூவி என்பதால் யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஜீ5 ப்ளாட்பார்மில் இந்த படம் உள்ளது. பரத் மோகன் என்னும் புதுமுக இயக்கனரால் படமாக்கப்பட்டது. இது ஒரு ரொமாண்டிக் டிராமா வகையை சார்ந்த படமாகும்..இந்த படத்தை நீங்கள் பாருங்கள் கண்டிப்பாக உங்களை நெகிழ வைக்கும். ஒரு சிறந்த படம் பார்த்த அனுபவம் உண்டாகவில்லை எனில் என்னை கேளுங்கள்.. படத்தின் நாயகி புற்று நோயால் அவதிப்பட்டு இறுதியில் நாயகனை விட்டு உயிர்விடும் போது நம் நெஞ்சை உலுக்கி நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது..படத்தில் ஒரு சில லிப் லாக் காட்சிகள் உள்ளதால் முதலில் நீங்கள் பார்த்து விட்டு குடும்பத்துடன் பார்க்கலாமா என முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தரமான படம். படத்தின் இறுதி காட்சியில் நீங்கள் அழுதால் நான் பொறுப்பல்ல.


4. குற்றமே தண்டனை.

இந்த படம் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தை நான் ஜீ திரை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பார்த்த முதல் கனமே திரையரங்கில் பார்க்காமல் தவற விட்டுவிட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு ஒரு தரமான கிரைம் திரில்லர் மூவி. ஏன் இந்த படம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. காக்கா முட்டை இயக்குனர் M.மணிகண்டன் என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.நாயகி ஐஸ்வர்யா , பூஜா தேவாரியா மற்றும் ரகுமான், நாசர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.....இந்த படத்தை புதிதாக பார்ப்பவர்கள் படத்தின் இறுதியில் ஒரு பெரிய தரமான டிவிஸ்ட் காத்துகிட்டு இருக்கு என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.2016 இல் வெளிவந்த இப்படத்தை பார்க்காதவர்கள் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


5. டுலெட் (ToLET)

கண்டிப்பாக உலகம் போற்றக்கூடிய ஒரு தமிழ் படம் என்றால் இதை சொல்வேன்.ஏன் என்றால் நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத இந்தப் படத்தை இயக்கிய செழியன் அவர்கள் ஒவ்வொரு காட்சியும் உணர்வுப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் செதுக்கி வைத்திருப்பார்.. எழுத்தாளராக இருக்கும் நாயகன் தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடி பெயர நினைக்கிறார். ஆனால் வறுமையின் காரணமாக படாத பாடு படும் நாயகன் எப்படி வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடிபெயர்ந்தார் என்பது தான் கதையின் கரு. அவருடைய வறுமையை காட்சிப்படுத்தும் விதம் கண்டிப்பாக படம் பார்க்கும் நமக்கும் வலியை ஏற்படுத்தும். இந்த படத்தை எந்தக் காரணம் கொண்டும் தவற விடாதீர்கள். நெட்ப்ளிக்ஸில் உள்ளது. தேசிய விருது பெற்ற இப்படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் பாருங்கள்.


6. அப்பா

2016 இல் இயக்குனர் சமுத்திரகனியால் இயக்கி நடிக்கப்பட்ட ஒரு படம்தான் இது..இந்த படம் வெளியான சமயம் ரஜினி நடித்த காலா படமும் வெளியிடப்பட்டதால் அப்பா படத்திற்கு ஒரு சில திரையரங்கமே கிடைத்தது. இந்தப் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்பா மகனுக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதை அழுத்தம்,திருத்தமாக சொல்லக்கூடிய ஒரு படம். நல்ல திரைக்கதை, நல்ல நடிப்பு என குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு சிறந்த படம் இது. பார்க்காதவர்கள் பார்த்து மகிழுங்கள்.


7. கே.டி என்னும் கருப்புத்துரை.

2019இல் வெளியான இந்த படத்தை மதுமிதா என்ற பெண் இயக்குனர் இயக்கி இருப்பார்.ஒரு வயதானவரையும், ஒரு சிறுவனையும், வைத்துக் கொண்டு, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என இரண்டையுமே எதார்த்தமாக கையாண்டிருப்பதோடு, வாழ்க்கையின் மறுபக்கத்தை ரொம்ப சாதாரணமாக விளக்குவது தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படத்தின் கதை கரு. எழுத்தாளர் மு.இராமசாமி கருப்புத்துரையாகவும், குட்டி என்ற சிறு வயது கதாபாத்திரத்தில் நாகவிஷால் ஆகியோர் தங்களது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். வயதாகிவிட்டால் எல்லாமே முடிந்துவிடாது என்பதை உயிரோட்டமாக விளக்குகிறது இந்த படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தரமான படம் இது.


8.8 தோட்டாக்கள்.

இந்தப் படம் ஆக்ஷன், கிரைம், திரில்லர் வகையை சார்ந்த படம். 2017 இல் வெளிவந்த இந்தப் படம் புதுமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்பவரால் இயக்கப்பட்டது. படத்தின் நாயகன் சத்யா மற்றும் நாயகி அபர்ணா இருவரும் அறிமுகங்களாக இந்த படத்தில நடித்துள்ளனர். மேலும் நாசர், பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.....இந்த படத்தை அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்ம ஆளுக ஆகா ஓகோ என்று கொண்டாடி தீர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.புதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் (நாயகன்) ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழங்குகிறார். அதை தன் கவனக்குறைவால் தொலைக்கும் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் இந்த "8 தோட்டாக்கள்" படத்தின் கரு. நேரம் கிடைத்தால் இந்த படத்தையும் பாருங்கள். கண்டிப்பாக விருவிருப்பாக இருக்கும்.


9.தேன்.

ஓர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் வலிகளை எதார்த்தமாக கூறியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் கணேஷ் விநாயகன். நாயகன் தருண்குமார், நாயகி அபர்ணா..... படத்தின் முடிவில் சில அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் சொல்லி இருக்கிறது இப்படம்.. படம் முடிவில் சில காட்சிகள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.


10.மெஹந்தி சர்க்கஸ்.

குக்கு, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜெந்திரனின் அறிமுக படம் தான் இந்த மெஹந்தி சர்க்கஸ். 2019 இல் வெளியான இந்த படத்தின் பாடல் (கோடி அருவி, வெள்ளாட்டு கண்ணழகி) அனைவரும் கேட்டிருப்பீர்கள்.ஆனால் படத்தை பார்த்திருப்பீர்களா என்று எனக்கு தெரியாது. ஒரு தரமான காதல் கதை படம் இது. நாயகனின் காதுலுக்கு பல தடைகள்,தடங்கள்கள் ஏற்படுகிறது இதனை முறியடித்து எவ்வாறு தனது காதலியை கரம் பிடித்தார் என்பதே கதையின் கரு. இறுதி காட்சியில் சர்கஸ் கேங்கில் இருக்கும் நாயகியை பல அடி தூரம் நிற்க வைத்து அவர் மீது கத்தி படாமல் நாயகன் வீசும் காட்சி நம்மை பதைபதைக்க வைக்கும்.அனைவரும் பார்க்க கூடிய ஒரு சிறந்த தரமான படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.


11. மேற்கு தொடர்ச்சி மலை.

இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பெறுமை சேர்த்த படம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு தரமான படம். லெனின் பாரதி என்பவரால் இயக்கப்பட்ட இந்த படம் மலைவாழ் மக்களின் கடினமான வாழ்வியல் முறையை பிரதிபலிப்பதாக இருக்கும். படத்தின் நாயகன் ஆண்டினி, நாயகி காயத்திரி தங்களது நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்....விவசாயம் செய்ய நிலம் வாங்க ஆசைபடும் நாயகன் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து முடிவில் நிலம் வாங்க முடியாத காரணத்தையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் அழுத்தம், திருத்தமாக சொல்லும் படம்தான் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை. பார்க்காதவர்கள் இருப்பீர்கள் ஆனால் இன்றே பாருத்துவிடுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு உணர்வு பூர்வமான படம் இது.


12. செத்தும் ஆயிரம் பொன்.

இந்தப் படத்தை பலரும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.2019 இல் வெளிவந்த இப்படத்தை ஆனந்த் இரவிச்சந்திரன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கி இருப்பார்... படத்தை பொறுத்த வரையில் பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களே நடித்துள்ளனர். முக்கியமாக பாட்டிக்கும், பேத்திக்கும் இடையில் நடக்கும் ஒரு கதைதான் இது... தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வரலாம் ஆனால் சில படங்களே அந்த படத்தை பற்றி உங்களை பேச வைக்கும்.நிச்சயமாக இந்த படம் உங்களை பேச வைக்கும்.... இயற்கையின் அமைப்பில் இறப்பின் முக்கியத்துவமும், மனித வாழ்வில் அதன் மகத்துவமும் பற்றி பேசுகிறது இந்தப் படம். மரணத்தை கொண்டாடுவதே இறந்தவரின் வாழ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர்.....குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம். நிச்சயமாக இந்தப்படத்தை குடும்பத்துடன் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.


இது போன்று பலருக்கு தெரியாத கொண்டாட வேண்டிய படங்கள் தமிழில் பல உள்ளது. இப்பதிவை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் பார்ப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருப்பதற்கு இது போன்ற சில சிறிய பட்ஜட் படங்களும் பெறும் பங்காற்றுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இது போன்ற நல்ல படங்கள் எதற்காக திரையரங்கத்தில் ரசிகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது தான் புதிராகவே உள்ளது.

இது போன்று எவ்வளவோ படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட தவறவிட்டு விட்டனர் என்பது தான் ஒரு வருந்தத்தக்க விடயம்...இவ்வளவு ஏன் இங்கு  கூட பல நல்ல தரமான பதில்களும் பலரது கண்களுக்கு தெரியாமல் உள்ளது என்பது மற்றொரு வருந்ததக்க விடயம். ஆக நல்ல சினிமா படங்களை கொண்டாடுங்கள் அது மட்டும் இல்லாமல்  பலர் எழுதும் நல்ல பதில்களையும் ஆதரியுங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்.


நன்றி! வணக்கம்.

வியாழன், 10 ஜூன், 2021

 கேள்வி : பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நாம் செய்த எந்த தவறினை மிகப்பெரிய தவறாக நினைத்துள்ளீர்கள்? 

மேலும் அந்த தவறினை இனி எப்போதும் செய்ய கூடாது என நினைத்துள்ளீர்களா?



என் பதில் : 


முதலில் ஆரம்ப காலங்களில்  15 வருடங்களுக்கு முன் நான் பங்கு சந்தை வர்த்தகத்தில் செய்த மிகப்பெரிய தவறு தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டதுதான்.



தினசரி வர்த்தகம் என்பது இருமுனை கத்தி மாதிரி. எப்படி பார்த்தாலும் ரத்தம் பார்க்காமல் விடாது.


தினசரி வர்த்தகத்தில் நுழைய சில தகுதிகளை நிச்சயம் வளர்த்து கொள்ள வேண்டும்.


இதற்கு Chart analysing என்பது மிக மிக முக்கியம்.


பங்குசந்தையை பொறுத்தவரை chart ம் indicators ம் ஜாதகம் போன்றவை . இது தெரியாமல் தினசரி வர்த்தகத்தில் இறங்கினால் அதோ கதிதான்.


ஆகவே பங்கு சந்தையில் லாபம் ஈட்ட விரும்பும் நபரகள் நிச்சயம் chart தெரிந்து வைத்து கொள்வது மிக மிக அவசியம். அதற்கென மெனக்கெட்டு நேரம் ஒதுக்கினாலும் பலன் உண்டு.


தினசரி வர்த்தகத்தின் ஆரம்பத்தில் லாபமும் வரும் நட்டமும் வரும் ஆனால் வர்த்தக முடிவில் நிச்சயம் நாம் நட்டத்துடன்தான் வெளியேறுவோம்.


அதற்கு நமது மனோபாவம்தான் முக்கியம்.


நட்டம் வரும்போது லாபம் வரும் என காத்திருக்கும் நாம் லாபம் வரும்போது ஆஹா கிடைத்த வரை லாபம் என உடனடியாக பங்குகளை விற்று விடுவோம். ஆனால் சரிவில் இருக்கும் பங்கு விலை ஏறும் என ரொம்ப நேரம் காத்திருந்து நட்டத்தை அதிகப்படுத்தி கொள்வோம்.


இன்னொன்று average செய்தல் என்ற ரீதியில் மேலும் அதே பங்குகளின் மீது முதலீடு செய்தல். உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் (A) பங்குகளை வாங்குகின்றீர்கள் அது சரிய தொடங்குகிறது. அதன் பங்குகள் 10% சரியும் போது மீண்டும் வாங்குகிறீர்கள் என்றால் மீண்டும் 5% உயர்ந்தால் கூட போதும் நட்டம் 0 என்ற அளவில் வந்து நிற்கும்.


ஆனால் நடப்பது என்னவோ மீண்டும் ஒரு 5% சரிவு. விளைவு பலத்த நட்டம்.


அடுத்தபடியாக hedging எனப்படும் ஒரு வகை trading.


பங்கு சந்தையின் சக்கர வியூகம் என்று கூட கூறலாம்.


ஒரு கம்பெனியின் பங்கை. Buy செய்யும் நாம் அதே சமயம் இன்னொரு contract ல் நுழைந்து sell செய்தல்.


இரண்டையும் லாபம் வரும் போது வெளியே வந்து விடலாம் என புத்திசாலித்தனமாக நினைப்போம்.


சில சமயம் ஒரு பங்கு பலத்த நட்டத்தை நோக்கி போகும் போது அதற்கு எதிராக செயல்படும் மனோ பாவமே இதற்கு காரணம்.


அதாவது ஒரு பங்கை வாங்குகிறோம் அது மிக மோசமாக சரிகிறது.உடனே சரி இன்னொரு contract ல் நுழைந்து விற்றால் என்ன புத்திசாலித்தனமாக யோசித்து sell செய்வோம்.


ஆனால் நடப்பது நமக்கு நேர் எதிராக இருக்கும்.திடீரென sell செய்யப்பட்ட பங்கு நட்டத்தில் போக ஆரம்பிக்கும். இப்போது பங்கு எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதில் குழப்பம் ஏற்படும். இதில் எதை முதலில் cut செய்வது என்பதில் பலத்த குழப்பம் வரும் அதில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும்.


கடைசியாக பார்த்தீர்கள் என்றால் அந்த பங்கு வர்த்தகம் தொடங்கிய இடத்திற்கே வரும் ஆனால் நாம் பலத்த நட்டத்துடன்தான் வெளியேறுவோம்.



ஆகவே hedging என்பது மிக தேர்ந்த நிபுணர்களால் கையாளப்படும் முறை அதில் எக்காரணத்தை கொண்டும் இறங்கிட வேண்டாம்.


Average முறையில் கூட 50% வாய்ப்பு உண்டு hedging ல் அதுவும் இல்லை.


ஆக தினசரி வர்த்தகம் என்பது முதலைகள் நிறைந்த ஆற்றில் நீச்சல் அடிப்பது போன்றது.


இது போன்ற அனுபவங்களால் பொருள் நஷ்டத்துடன் மன உளைச்சலும் சேர்ந்து கொள்ளும்.


பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதை விட முதலீடு செய்வது மிக சிறந்த வழி.


நல்ல பங்குகளை தேர்ந்தெடுங்கள் மாதம் தோறும் உங்களால் முடிந்த அளவு சிறுசேமிப்பு போல முதலீடு செய்யுங்கள்.


பத்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்து பார்த்தால் உங்கள் முதலீடு பெரிய ஆலமரம் போல படர்ந்து விரிந்து இருக்கும்.


உங்கள் முதலீடுகளை ஒரே பங்கில் போடுவதை விட நான்கைந்து விதமான கம்பெனிகளில் போடுவது நல்லது.


பங்கு முதலீட்டாளர்களே இந்திய பங்கு சந்தை வரும் காலங்களில் பல உயரங்களை தொட்டு சாதனை படைக்க உள்ளது. அதன் பலனை பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனுபவிக்க போகிறார்கள். அதே சமயம் நாமும் கொஞ்சமாவது அதில் லாபம் பார்ப்பதில் என்ன தவறு??

நன்றி ...

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

 கேள்வி : மாதவிடாய் பற்றி பெண்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயங்கள் என்ன?


என் பதில் : இதற்கு பதில் எனது நண்பர் ராஜி சுகாதார தொழில்துறையில் பணிபுரிந்து வருகிறார் ..அவர் பதில் அளிப்பது சிறப்பானது, உங்களுக்காக ..


முன்குறிப்பு


நான் எழுதுவது தமிழ்நாட்டில் குடும்பத்தோடு அமர்ந்து படிப்பதற்கு என அறிவேன், அதனாலேயே படங்கள், வார்த்தைகள் எல்லாமே ஜாக்கிரதையாக சேர்ப்பேன். கொஞ்சம் பெரியவர்கள் ‘நீ ஏம்மா இதெல்லாம் எழுதிட்டு நாங்க பொண்ணு மாதிரி நினைச்சோமே’ என்பார்கள். And I understand this sentiment. விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு.


மாதவிடாய் என்றால் என்ன? The basics


படத்தில் உள்ளது போல பெரும்பாலான பெண்களுக்கு இரு ovaries இருக்கும், இந்த ovaries, கருமுட்டைகளை வெளியிடும், வெளியான கருமுட்டை uterus எனப்படும் கர்ப்பப்பையில் தங்கி, தனக்கான மகாராஜா, அதாங்க விந்தணு (semen) க்காக காத்து இருக்கும். இந்த சேர்க்கை நடந்தால், கரு உண்டாகும். உருவாகிய கரு வளர, முன்னரே பெண் உடல், கர்ப்பப்பையை சுற்றி cushion போல திசுக்களை உருவாக்கும். (பாப்பா வளர சுற்றம் புசுபுசுன்னு இருக்கணுமே?) இந்த கர்ப்பப்பையை சுற்றிய திசுக்கள், (walls/tissues) சேர்க்கை நடக்காது, கரு உண்டாகாது இருந்தால் உடலால் வெளியேற்றப்படும். இந்த வெளியேற்றம் தான் மாடவிடாய், monthly periods/menstruation. கர்ப்பம் ஆகிவிட்டால் periods வராதுபோக இதுதான் காரணம்.


மாதவிடாய் சைக்கிள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். 24–38 நாட்கள் இருக்கலாம் பொதுவாக.

ரத்தபோக்கும் 3–8 நாட்கள் இருக்கலாம். ‘அந்த மூன்று நாட்கள்’ என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குதான்.

12–51 வயதுவரை மாதம்தோறும் சீரான இடைவெளியில் வரலாம். மாதவிடாய் நிற்பது, பரம்பரை/உடல்நிலை பொறுத்து மாறுபடும்.

Premenstrual syndrome என்பது ovulation அதாவது கருமுட்டை ovary இல் இருந்து ரிலீஸ் ஆகையில் உள்ள ஹார்மோனல் மாற்றங்களால் வரும் மனநிலை தடுமாற்றங்களை குறிக்கும். ஒரேநாளில் 😊🥺😱😭😡😈 இப்படி மாறு்வோம், பார்த்து அனுசரனையாக இருங்கள் ப்ளீஸ். எல்லாருக்கும் PMS இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

பொதுவாக மாதவிடாய் நேரத்தில் மொத்தமாக 5–35 மில்லிவரை ரத்தம் வெளியேறலாம். 80 மில்லிக்கும் அதிகமாக சென்றால், அது heavy bleeding, அதிக ரத்தப்போக்கு எனப்படும், மருத்துவரிடம் சென்று கேளுங்கள்.

துணியை பயன்படுத்துவதை தவிருங்கள், நீங்கள் டெட்டால் பயன்படுத்தி சுத்தப்படுத்தினாலும் துணி சுகாதாரம் இல்லாதது, அதனால் fungal/bacterial infection வரலாம்.

சானிட்டரி நேப்கின்/டேன்பூன்/கப் என பயன்படுத்தி, உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்யுங்கள். Sanitary pad 5 ml வரை ரத்தம் உரியும், அதற்குமேல் மாற்றிவிடவேண்டும். இரவு நேரத்திற்கும், பகல் நேரத்திற்கும் வேறுபட்ட pad உண்டு. பார்த்து வாங்குங்கள்.


பெரும்பாலான பெண்கள் உடல் அசதி, வயிற்றுவலி, எரிச்சல், கால் உளைச்சல் என அவதியுறுவார்கள். சிலருக்கு pain killer மாத்திரைகள் தேவைப்படலாம். அந்நாட்களில் உங்கள் மகளை/மனைவியை/தாயை, குழந்தைபோல பாவித்து அன்பாய் இருங்கள். உங்களை மனதார வாழ்த்தி விரும்புவார்கள்.

திருமணமாகி, குழந்தையை எதிர்பார்ப்பவர்கள் period tracker app பயன்படுத்தலாம். Apple/android store இல் தேடுங்கள்.

இதைத்தவிர poly cystic ovarian Syndrome, fibroids என பல பிரச்சினைகள் கர்ப்பப்பையில் வரலாம் மாதவிடாய் ரத்த நிறத்தை வைத்தே ஓரளவு அடையாளம் காணலாம் ஏதும் பிரச்சினையா என, அதைப்பற்றி மருத்துவர்களிடம் ஆலோசியுங்கள்.


வருடந்தோறும் பெண்கள் master health checkup செய்கையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சோதனை செய்கிறார்கள் அமெரிக்காவில் (cervical cancer checkup). இந்தியாவிலும் இருக்கலாம், இல்லாவிட்டால் நீங்களே கேட்டு பரிசோதியுங்கள். குறிப்பாக மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ளவர்கள்.

ஒரு பெண்ணை, பெண்ணாக உணரவைப்பது தாய்மை என வாய் கிழிய பேசும் நாம், அந்த தாய்மையின் ஒரு பகுதியான மாதவிடாயை இழிவாக கருத தேவையில்லை. இது taboo இல்லை. நான் சிலவருடங்களுக்கு முன், gym இல் ஆண் personal trainer உடன் train செய்கையில், ‘உனக்கு பீரியட் இருக்கா’ என கேட்டுவிட்டு துவங்குவார், அதற்கேற்ற பயிற்சிகள் வழங்க. என்கூட வரும் எந்த பெண்ணுக்கும் ஒரு ஆண் எப்படி இப்படி கேட்கலாம் என்ற கேள்வி எழவில்லை, மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேச கூச்சப்படாதீர்கள் பெண்களே. பெண் உடலைப்பற்றி பேசும் ஆண்கள், மோசமானவர்கள் அல்ல. இது நம் கலாசாரத்தில் மாறவேண்டிய சிந்தனை.இந்த பதில் படிக்கும் ஆண்கள், உங்கள் மனைவிக்கு தைரியமாக சென்று pad வாங்கித்தர, சகோதரிக்கு ஆடையில் கரையிருந்தால் எச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவே ஒரு Gen X பெண்ணாக என் வேண்டுகோள்.


நானும் ஒரு பெண்...

நன்றி ராஜி அவர்களுக்கு ....

செவ்வாய், 8 ஜூன், 2021

 கேள்வி :  பணத்தை சேமிக்க உதவும் சிறந்த தந்திரங்கள் எவை?


என் பதில் : 


ஒரு ரூபாய் ஆனாலும் கையை விட்டுப் போனால் அது பணம் தான். அதனைப் பார்த்து செலவு செய்ய வேண்டும். ஏனெனில், பெருமளவில் வீணாவதை விட சிறு சிறு வழிகளில் செலவு ஆவதே அதிகம்.

நூறு ரூபாய் செலவு செய்ய யோசிக்கும் நாம் நூறு முறை ஒரு ரூபாய் செலவு செய்ய யோசிப்பதில்லை.

யோசிக்காமல் செலவு செய்யும் ஒரு ரூபாய் தான் சில்லறை வியாபாரிகளின் லாபம்

பெரிய நிறுவனங்கள் எதுவும் நூறு, இருநூறு என்று வாங்குவதில்லை. ஏதாவது சொல்லி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று ஒவ்வொருவரிடமும் வாங்கி அதை பெருமளவில் செய்கின்றனர்.

ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குமிடத்தில் அந்த பங்கில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் வசதியை அவர்கள் மேம்படுத்த நாம் பணம் கொடுக்கிறோம்.

தங்கம், பணம் இவை இரண்டும் கையில் இருந்து உபயோகமில்லை. தேவைக்கு வைத்துவிட்டு மீதம் இருப்பதை வேலை செய்ய வைக்க வேண்டும்.

சேமிப்பு - வங்கியில் இடலாம். Interest கிடைக்கும்.

முதலீடு - வீடு கட்டலாம். வாடகை கிடைக்கும்.

முதலீடு - வண்டி வாங்கி வாடகைக்கு விடலாம்.

முதலீடு - வியாபாரம் / தொழில் தொடங்கலாம்

சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் என்ன தொடர்பு -


1000 ரூபாய் இருந்தால் ஒரு சில வருடங்களில் அது Interest மூலமாக 1500 - 3000 ரூபாய் வரை வரலாம்.

அதே 1000 நன்கு ஆராய்ந்து முதலீடு செய்தால் அதன் மதிப்பு பன்மடங்காக அதிகரிக்கும்...


நன்றி ....


🏠சிவக்குமார் V.K 

🏠வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

🏠Sivakumar.V.K

🏠(Home Loans,Home Loans To NRIs) 

🏠Coimbatore,Pollachi, Udamalpet

🏠Mobile --09944066681 Call or sms

🏠siva19732001@gmail.com

🏠CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE🏠