புதன், 11 மார்ச், 2020


காடுகளை வெட்டி ...
நிலவர்களை ஒடுக்கி
முல்லை நிலங்களை
எழில் கொஞ்சும்
மருத நிலங்களாக மாற்றி
நீர் மேலாண்மையில் சிறந்து
கொற்றம் புரிந்து
செங்கோலோச்சிய
எம் முன்னோர்கள்
நற்பயனை
நாங்கள் ..
இன்று ...
அறுவடை செய்கிறோம் ....
விருச்சத்தின் விதைகளாக ....
காணிக்கையாக கரும்பு நல்கிய
நிலவேந்தர் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி ...!
இடம்:- பெரிய குளம் பாசனப் பகுதி
உடுமலைப்பேட்டை

தேசிய பாா்வையற்றோா் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு விருதுநகர் தேசிய பாா்வையற்றோா் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு


 பாா்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்களை வென்ற விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா் கே.தினேஷை கல்லூரி பேராசிரியா்கள் பாராட்டினா்.இந்திய கண் பாா்வையற்றோா் கழகம் சாா்பாக தேசிய அளவிலான பாா்வையற்றோருக்கான தடகளப்போட்டிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த வரலாற்றுத்துறை பாா்வையற்ற மாணவா் கே.தினேஷ், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றாா். மேலும் 200 மீ. மற்றும் 100 மீ. ஓட்டப் பந்தயங்களிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.


 மாணவா் கே.தினேஷை, கல்லூரி முதல்வா் இசக்கித்துரை, துணை முதல்வா் பாண்டியராஜன், வரலாற்றுத்துறைத் தலைவா் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.



செவ்வாய், 10 மார்ச், 2020


உங்களின் வயது அதிகமாகிவிட்டது என்று அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்தும் விஷயங்கள் எவை?

 சிவக்குமார்  குமார் ....

வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் போது உங்கள் வயது என்ன என்பது தெரியாது.

என் வாழ்க்கை ஓட்டமும் அப்படித்தான்.

1995 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தவுடன் உடனே வேளையில் சேர்ந்தேன். அன்று தொடங்கிய இந்த ஓட்டம் 22 ஆண்டுகளாக தொடர்கிறது. இன்று கண்ணாடி முன் நின்று சுய பரிசோதனை செய்தால் நிறய மாற்றங்கள். இப்பொழுது 46 வயது ஆகிறது.

வாருங்கள் எந்த விடயங்கள் என் வயதை காட்டுகிறது என்ன உங்களிடம் பகிர்கிறேன்.

1. கண் கண்ணாடி/ மூக்கு கண்ணாடி

இன்று இந்த கண்ணாடி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாது.

வயது ஆகிறது என்பதை எனக்கு முதலில் உணர்த்துவது என் கண் பார்வை.


2.தலை முடி உதிர்தல்

நிறய முடி கொட்டி விட்டது. முன் நெற்றி முடி கொட்டி சொட்டை ஆகி விட்டது, என் மனைவி என் மகன்  தான் அதிகம் நகைக்கிரார்கள்.எனக்கு வயது ஆகிறதை சொல்லும் அடுத்த விடயம் என் தலை முடி.

3.நரை முடி

முடி கொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும் . நரை முடி என்ன செய்வது. இதில் எனக்கும் என் மனைவிக்கும் போட்டா போட்டி

நான் கட்டாயம் தலைக்கு கருஞ்சாயம் பூசுவது என்று. இன்று வரை அந்த கொள்கையில் பிடிவாதமாக உள்ளேன்.

தல அஜீத் புண்ணியத்தால் இன்று நரையும் அழகாக மாறி விட்டது.


நரை இறைவன் நம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும் வகை என்று எண்ணிக் கொள்கிறேன்.

சரிதானே!!!!!

4. நரை மீசை

தலை முடி நரை பரவாயில்லை , தேங்காய் எண்ணெய் போட்டு வழித்து சீவினால் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் இந்த ஆசை ஆசையாய் வைத்த மீசை ஒன்று இரண்டு மூன்று என வெள்ளையன் வர அதை வெட்டி வீழ்த்த இன்று வெள்ளயன் முழுமையாக ஆட்சி செய்கிறான். பல வருடங்கள் கழித்து ஆசையாய் மீசை வைத்தால் மனைவியும் மகனு ம் மற்றும் நண்பர்களும் ரொம்ப வயதானவர் போல் தெரிகிறது என்று சொல்ல மறுபடியும் மீசையை இழக்க வேண்டி இருக்கிறது.

5. பற்கள்

பல் போனால் சொல் போச்சு என்பார்கள் . நல்ல வேலை எந்த பல்லையும் இழக்கவில்லை ..ஒரு கடவாய் பல்லைத்தவிர ..எனது பல் மருத்துவர் நண்பர் வெங்கடேஷ் ம் கூட சொன்னார்கள் ..பல்ல எடுக்கவேண்டாம் ..நன்றக உள்ளது என்று ..ஒரு சிறு சொத்தை மட்டும் தான் ..அடைத்த விடலாம் என்று ..ஒரு பல்லவிட்டால் பரவி விடும் என்று எடுக்க சொல்லவிட்டேன் ..இப்பொழுதும் என்னை திட்டுவார் நண்பர் .

6. மறதி

வயதானால் மறதி வரும் என்பது அறிந்த விடயம் தான் என் மறதி சற்று நகைப்புக்கு உரியது.

தொலைக்காட்சி ரிமோட் பெட்டியில் வைத்து விட்டு அறை முழுதும் தேடுவது.

வலது கையில் அலைபேசி வைத்து கொண்டு தேடுவது.

எடுத்த பொருள் எங்கே வைக்கிறோம் என்று தெரிவதில்லை.

கட்டாயம் இந்த மறதி வயது ஆவதை தெரிவிக்கிறது.

இதில் கணக்கு என்றால் ரொம்ப பயம்.

7. பசியின்மை

முந்தியெல்லாம் பந்தி கட்டி சாப்பாடில் விளையாடிய காலம்.வீட்டு தோசை கறி குழம்பு என்றால் 5 ..6.. தோசை சாப்பிட்டு படிப்படியாக குறைந்து இன்று காலை ரெண்டு தோசை சாப்பிட்டால் மதியம் பசி எடுக்க மறுக்கிறது.

அதுவும் சாப்பாடு  என்றால் ஜீரணம் குறைவு.

இன்று உணவு கட்டுப்பாட்டில் உள்ளேன்.

காலை மற்றும் இரவு உணவு மட்டும் தான் மதியம் உணவு  அல்லது பழங்கள் மட்டுமே.

அப்பறம் இரவு உணவு கட்டாயம் எண்ணை உணவு தவிர்த்து .

8. சிரிக்க மறப்பது

முன்பெல்லாம் நாளெல்லாம் சிரித்து கொண்டிருந்த நான் இன்று அந்த சிரிப்பு குறைந்து விட்டது போல் தெரிகிறது..ஒரே டாம் அந்து ஜெர்ரி கார்ட்டூன் பார்த்து சிரித்த இந்த மனது பல வடிவேல், விவேக் சந்தானம் நகைச்சுவைக்கு சிரிக்க மறுக்கிறது.

இதுவும் வயதின் மூப்பு சொல்லும் காரணம்.

குழப்பம்

முன்பெல்லாம் மனது தெளிந்த நீரோடை போல் தெளிந்து புள்ளிமான் போல் ஓடும் , 2500₹ சம்பளம் வாங்கிய போது இருந்த தெளிவும் குழப்பம் இன்மை இப்பொழுது 25000  சம்பளம் வாங்கினாலும் குழப்பம் அதிகமாகி தெளிவு குறைந்து விட்டது.

கவலை அல்லது நாளை பற்றிய சிந்தனை.

23 ஆண்டுகள் கடுமையாக உழைத்து விட்டேன். அன்பான மனைவி , பாசம் நிறைந்த அன்பு மகன்  இன்று பள்ளி படிப்பு ல்  உள்ளார். இறைவன் அருளால் இந்த இந்து வருடா வன வாசம் பலனாக ஓரளவு சேமிப்பும் உள்ளது. ஆனாலும் நாளை எண்ணி மனம் கவலை அடைகிறது.

மனைவிக்கு ஒரு சொந்த வீடு வாங்கும் ஆசை.

அன்பு மகனை  நன்கு ஒரு பொறியியல்அல்லது அவருக்கு பிடித்த  படிப்பை துறை  பெற வைப்பது,

அக்கா ..தம்பிக்கு முடிந்த அளவு  பொருளுதவி செய்வது, அம்மாவை  கவனித்து கொள்வது,

நிரந்தர வருமானம் பெறுவது.

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த 23 வருட ஓட்டப் பந்தயம் கொஞ்சம் நிறுத்துவது என குழப்பங்கள் ஏராளம். ஆனால் கடவுள் அருள் மற்றும் என் தாயின் பாதுகாப்பு என்றும் எனை கை விடுவதில்லை.

கோபம் மற்றும் வெறுப்பு

இப்பொழுது கோபம் அதிகம் வருகிறது . முன்பெல்லாம் எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காது இப்பல்லாம் சிறு தவறு என்றாலும கோபம் வருகிறது. உயர் அதிகாரிகள்  சிறிது கோபம் பட்டாலும் வேலை விட்டு ஓடி விட தோன்றுகிறது.

வயதாக வயதாக இப்படி தோன்றுமா

தூக்கமின்மை

முன்பெல்லாம் ஏப்ப படுத்தாலும் உறக்கம் உடனே வரும் இன்று 12மணி இரவு ஆனாலும உறக்கம் வர மறுக்கிறது.

இப்பொழுதெல்லாம் தூக்கம் வருகிறது இல்லையோ கண்ணை மூடினால் திறப்பத

திறப்பது இல்லை. தூக்கம் குறைந்துவிட்டது.

இது புலம்பல் இல்லை உண்மை நாளை நீங்கள் 40 கடக்கும் போது இதுபோலl இல்லாமல் நீங்கள் சுகமாக இருக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நன்றி வாசித்ததர்க்கு.!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

திங்கள், 9 மார்ச், 2020

சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.


மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை. சம்பாதித்த பணத்தை பாதுக்காப்பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வருமானத்தை பெருக்குவதே முக்கியம். இப்பணியில் நிதி திட்டமிடலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நிதியை திட்டமிடுவதில் பணத்தை கையாளும் முறை பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் மக்கள் பாதுகாப்பான நிதியை எதிர்காலத்திற்கு திட்டமிடுவது இல்லை.

சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.

முதல் ஸ்டெப்:
நிதி இலக்குகளை அடைய ஒருவரின் தேவையை அறிய வேண்டும், அதன்பின் புத்திசாலித்தனமான நிதி, செலவு மற்றும் முதலீட்டுத் திட்டத்தைத் தீட்ட வேண்டும். முதலீட்டு துறையில் சில காரணிகள் உள்ளன அதை நம்மால் கையாள முடியாது, இருப்பினும் அதை கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிய இயலும்.

நிதி இலக்கு:
நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று தெரியாமல் இருந்தால் இலக்கை அடைவது எப்படி, வாழ்க்கை எந்த பாதை இட்டுச் செல்லவிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட நிதி இலக்கை அமைப்பது முதல் படியாகும்.

சிறப்பான நிதித் திட்டம்:
நிதித் திட்டத்தை வரையறுப்பது செலவுகளையும் முதலீடுகளும் கட்டுபடுத்த வழிவகுக்கும். தொகுத்திருக்கும் இலக்கு சாத்தியமானதாகவும் அடையத்தக்கதாக்வும் இருத்தல் வேண்டும். முதலில் நிதியியல் ரீதியாக இலக்கை நிர்ணயிக்கவும், முன்னுரிமைகளை வரிசைப்படுத்தவும்.

காலம் பொன் போன்றது:
பொதுவாக நிதி இலக்குகள் மற்றும் அதனை அடையும் வழிகளை வகுக்கவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறோம். விரைவாக இப்பணியை ஆரம்பிப்பது பெரும் நன்மையைத் தரும். முதலீடுகள் நீண்ட காலமிருப்பின் அதற்கான அதிகமான பலனை அனுபவிக்கலாம்.

பொறுமை அவசியம்:
சந்தை என்றும் நிலையானதல்ல, வேகமாக மாறக்கூடியது. முதலீடுகள் ஆபத்தில் இருப்பதாக தெரியலாம். ஆனால் முதலீட்டில் பொறுமை காத்தலே வெற்றிகரமான முதலீட்டாளர்களின் தாரக மந்திரம்.. நீண்ட கால முதலீட்டில் சந்தை ஊசலின் தாக்கம் குறைவே.

புத்திசாலித்தனமான முதலீடு:
ஒற்றை திட்டத்தில் பணம் முழுவதையும் அர்ப்பணிப்பது பெரிய ஆபத்து. இத்தகைய முதலீட்டில் பணத்தை இலக்கும் ஆபத்து அதிகம். பல்வேறு விதமான பங்குகளில் முதலீடு செய்வது நன்று.

மற்றவர்களை பின்பற்ற வேண்டாம்:
மற்றவர்ளை பின்பற்றும் பழக்கத்தை கைவிடுவது சற்று கடினமே. ஆனால் இப்பழக்கத்தை கைவிடாவிடில் நிதித்திட்டத்தில் வெற்றிக் காண்பது பகல் கனவே. ஒரு திட்டம் நண்பருக்கு வெற்றியை கொடுத்தால் அது நமக்கும் வெற்றி அளிக்கும் என்று பொருள் இல்லை. மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவதை கைவிடுங்கள். முதலீட்டு உலகத்தில் அறிவார்ந்த அணுகுமுறையை கொள்ளுங்கள்.

விடாமுயற்சி:
நம் கனவை நினைவாக்க பொறுமை எவ்வளவு அவசியமோ, விடாமுயற்சியும் அவ்வளவு அவசியமே. முதலீடுகளில் ஈடுபாட்டுடன் இருப்பது மட்டுமே நிதியை அதிகாரிக்காது. பேராசை மற்றும் ஆபத்து காரணமாக முதலீட்டாளர்கள் வெளியேறி விடுவர். முதலீட்டை சுற்றுகளில் பல்லாண்டுகளுக்கு பெருக வைக்க வேண்டும்.

எதிர்பாரா தருணங்கள்:
துரதிர்ஷ்டம் ஒருவரிடமே தங்கியிருப்பதில்லை, எதிர்பாராத சரிவு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இறக்கி விடும். எனவே, இந்த அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பானது மற்றும் புத்திசாலித் தனமானது. அவசரத் தேவைகளுக்காக பணத்தை எப்போதும் எளிதாக எடுக்கத் தகுந்தவாறு பிரித்து வைக்கவும்.

வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகளை உங்கள் நிதித் திட்டத்தில் அடக்கிக் கொள்ளுங்கள். வரிக் கொள்கைகளை பொறுத்து மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். சிறந்த முறையை கண்டறிந்து அதில் முதலீடுசெய்து அதிகபட்ச வரி நன்மைகளை அடையுங்கள், வரிப் பணத்தை சேமியுங்கள். பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் அதிக வரி நன்மைகளை கொடுக்க வல்லவை.

ஓய்வூதிய திட்டமிடல்:
ஓய்வூதிய திட்டமிடுதலில் முக்கியமானது வசதியான வாழ்க்கை மற்றும் அதை அடைவதற்கு இன்றைய வாழ்கை முறையில் பணத்தின் தேவை அதிகம். நிதித் திட்டமிடுதலில் ஓய்வூதிய திட்டமிடல் ஒரு முக்கியமான அம்சம் ஆகும் . ஓய்வூதியம் திட்டமிடுதலின் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை புத்திசாலித்தனமாக பாதுகாக்க முடியும். நாம் நீண்ட நாள் வாழ்வது போல நம் பணமும் நீண்ட நாள் வாழ வேண்டும்.

காப்பீட்டுத் திட்டம்:
காப்பீட்டுத் திட்டம் நிதித் திட்டம் மட்டும் அல்லாமல் நம் வாழ்கைக்கு மிகவும் முக்கியமானது. இக்காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் காப்பீடு கிடைக்கின்றது. குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானது. அவ்வாறான முதலீடுகள் அவசர காலத்தில் உதவும்.

Sivakumar.V.K
(Home Loans  ,Home loans NRIs )
Coimbatore,Polalchi,Udamalpet..
Mobile-9944066681..Whatsapp..9944066681

ஞாயிறு, 8 மார்ச், 2020



தாரணி அகில் .....
காலை 9 மணிக்கே உறவினர் இல்ல விழாவுக்கு திருமண மண்டபம் சென்றாகிவிட்டது. திருமண நிகழ்வுகள், சக உறவினர்களுடன் அரட்டை, இடையிடையே சாப்பிட, அருந்த பானங்கள் என ஒரு குறைச்சலும் இல்லை. மதியம் உணவருந்தி விட்டு நிற்கும் வேளையில் கவனித்தேன். விறகு அடுப்பு வைத்து கொஞ்சம் மறைவாக நான்கைந்து வயதான பெண்கள் மண்பானைகளில் ஏதோ கிளறிக் கொண்டிருந்தார்கள். அது ராகி களி என்று தெரிய வந்தது. காலம் காலமாக ராகி களி உருண்டை எனப்து மிகவும் பிரபலம் இங்கே கொங்கு மண்ணில். ஆனால் அதை செய்ய தனியாக ஒரு பி ஹெச் டி படிப்பு படிக்கவேண்டும். நமது பாட்டிகளை இந்த விஷயத்தில் யாரும் அடித்துக் கொள்ளவே முடியாது. அதன் பின் வாழ்ந்து வரும் தலைமுறையினருக்கு இது பற்றித் தெரியுமா என்று கூட தெரியவில்லை..ஆர்வம் மேலிட, நான் அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முற்பட்டேன். ஆனால் அவர்கள் அருகே கூட என்னால் நெருங்க முடியவில்லை. திருமணத்திற்கு வந்த அனைவரும் அந்த களி உருண்டையை விரும்பி உண்டார்கள் என்பது கண்கூடான உண்மை.
சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பெண்கள் அனைவரும் இன்று மகளிர் தினம் என்று போற்றப்படுகிறார்கள். ஆனால் தள்ளாத வயதிலும் போஷாக்கு நிறைந்த ராகி உருண்டை குணம் மணம் மாறாது தயாரித்து அனைவர் வயிற்றுக்கும் ஆரோக்கியம் சேர்த்த இந்தப் பெண்களுக்கு இது "உலக பெண்கள் தினம்" என்றால் புரியுமா?
பெண்ணை எப்போதும் மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக மட்டும் பார்த்து அவளுக்கு வாழ்த்து சொல்லும் உலகம் பெண் ஒரு தனிப்பட்ட மனுஷி என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறது. மனிதம் நேசிப்பதால் இது மனித தினம் என்று நான்
முடிவு செய்து, அவர்களிடம் எனக்கு தெரியாத ஒன்றைக் கற்றுக் கொண்டு, சந்தோசமாக அவர்களிடம் இது உங்கள் தினம் என்று மனதளவில் கூறிக் கொண்டு நகர்ந்தேன். வாழ்க இந்த மாமனுஷிகள்!
புனிதம், பெருமை என்ற வார்த்தைகள்

 ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். தனி மனிதர்களுக்குப் பிரச்சனையில்லை. இணையம் வந்த பிறகு அரசியல்வாதிகளுக்குத் தான் பிரச்சனையாக உள்ளது.

ஒரு பக்கம் தலைவர் என்பவர்களை மறுபக்கம் தறுதலை என்கிறார்கள். எது உண்மை? எது பொய்? என்பதற்கு அப்பாற்பட்டு முழுமையாக மாலையாக கோர்த்து தொங்கவிட்டு அஞ்சலி செலுத்துகின்றார்கள். எழுத்தை வாசிக்கும் போதே நாறுகின்றது.


முகநூல் ..வாட்ஸாப்ப் ..ட்விட்டரில் முகமில்லாமல் 90 சதவிகித போராளிக்கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ஆதி மொழி தான் அங்கே தொகுக்கவே முடியாத தமிழ் அகராதியாக உள்ளது.



நாம் இறப்பதற்கு முன் இணையத்தை விட்டுக் குறைந்த பட்சம் ஐந்து வருடம் ஒதுங்கியிருக்க வேண்டும். அதுவரையிலும் நம்மோடு பழகிக் கவனித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வைத்திருந்தவற்றைத் துப்புவதை நமக்குப் பின்னால் நம் மகன் மகள் பார்க்கும் துணிச்சலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து மறைய வேண்டும்.

சனி, 7 மார்ச், 2020

சிகரங்கள் தொட்டதில்லை....
பள்ளிக்கூடம் போனதில்லை....
வருடங்கள் பல கடந்தும்
மனதின் வைராக்கியம்
தொலைத்ததில்லை.......
அரசியல் அறிந்ததில்லை...
அறிவிலக்கியம் மொழிந்ததில்லை....
போர்முனை போனதில்லை
விண்வெளி அளந்ததில்லை....
வித்தைகளேதும் புரிந்ததே இல்லை....
கள்ளிப் பாலுக்கு நடுவே
முட்டி மோதி முளைத்து
வயல்வெளிகளில் வசந்தம் தேடி
வான் வெளியில் நிலவு தேடி
இன்னும் வாழ்ந்து வரும்
கிராமப்புற இந்தியாவின்
கீர்த்திமிகு சிற்பிகள் நாங்கள்......
வாழ்வதைச் சரித்திரமாக்குவர்களிடையே
வாழ்வையே சரித்திரமாக்குபவர்கள் நாங்கள்....
என்ன
எங்கள் சரித்திரம் எழுதப்படாதது
அவ்வளவே......
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்............
மகளிர் தின வாழ்த்துக்கள் ....

‘என் மனைவியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அவர்களை புரிந்துகொள் முடியும். எப்படி? இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…
1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.
2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.
4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.
6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.
7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.
8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?
10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.
பிறகு பாருங்களேன் உங்கள் மனைவியின் அன்பையும் உபசரிப்பையும்..
சர்வதேச பெண்கள் தினம்:
“மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்”.!
...என்று பாடி பெண்மையைக் கொண்டாடினான் யகபுருடன் பாரதி.!
சங்க காலம் முதல் இன்று வரை, பெண்களின் அண்மை இல்லாமல் ஆண்கள் இல்லை.
அன்னையாக ஒரு மழலையை வளர்ப்பதில் தொடங்கி, ஒரு மழலையை பெற்றுத் தந்து, அவனை சான்றோனாக்கும் வரை எல்லாவற்றுக்கும் பெண் துணையின்றி இயலாது.
பெண் என்ற எண் இல்லையென்றால் ஆண் பூஜ்யம் தான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கடவுளே ஒப்புக் கொண்டதாக திருவிளையாடல் புராணம் சொல்கிறது.
அன்பு,நிதானம், சகிப்புத் தன்மை, மன உறுதி, சம்யோஜித புத்தி ஆகிய 5 முக்கிய‌ குணங்களைக் கொண்டிருக்கும் பெண்ணிடமும், ஆண்மை தேவையான சம்யங்களில் வெளிப்படும்.
நல்ல பெண், கெட்ட பெண் என்ற டி.வி. சீரியல் பிரச்சினை எல்லாம் ஒரு புறம் இருக்க, பெண்மை உயர்வானது, பெண்களும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது தான் இந்தப் பகிர்வின் நோக்கம்.
கோபன்ஹேகனில், 1910ம் ஆண்டு நடந்த, சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி பேசப்பட்டு, பின்னர் 1911ல் மீண்டும் விவாதிக்கப்பட்டு, ஆரம்பத்தில், மார்ச் 19ம் தேதி, முதன் முறையாகவும், அதன் அய்ரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, 1913ம் ஆண்டு முதல், அய்க்கிய நாடுகள் சபை ஒப்புதலுடன், மார்ச் 8ம் தேதியை, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.
மேரி க்யூரி,அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...
"எட்டும் அறிவினில்
ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண்
என்று கும்மியடி''...
என்ற மகாகவியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. மிகச் சரியாக கணித்தால்,
இந்த வருடம் 108 ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் என்றும் சொல்லலாம்.
அனைத்து மதிப்பிற்குறிய
தோழிகளுக்கும் ,
சகோதரிகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.
மாநகர பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்களில் காலை வெயிலில் பதட்டத்துடன் வியர்த்த படி செல்லும் ஒரு பெண்ணை சென்னை,கோவை ,வாசிகள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்..

அவள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்திருப்பாள். பொறியியல் படித்துவிட்டு கனவுகள் பல கண்டு சென்னைக்கு வந்திருப்பாள்..

அவள் முதல் தலைமுறை பட்டதாரி. உறவுகளில் உதவ ஆள் இருக்காது.. முதல் ஒரு வருடம் பெரிய நிறுவங்களில் வேலை தேடி அலைந்து பின் கிடைத்த சிறிய நிறுவனத்தில் வேலைக்கு செல்ல துவங்கியிருப்பாள்..

காலை அவசரமாய் உணவு, பேருந்து உரசல்கள், மேனேஜர் திட்டு, மாதாந்திர வலி என எல்லாம் பழகியிருக்கும். நிச்சயம் ஒரு காதல் தோல்வியும் பின் இருக்கும்..இரவு சில சமயங்களில் ஹாஸ்டலில் உணவும் இருக்காது.

"வேலை வேண்டாம் வீட்டிற்கு வா" என சொல்லுமளவு குடும்ப நிலை இருக்காது..அவள் மாத சம்பளத்தில் தான் ஊரிலுள்ள அவள் குடும்பம் இயங்கும்..

அவள் பேஸ்புக்கில்,வாட்ஸாப்பில் , பெண்ணியம் பேசுபவள் அல்ல,  தான் ஆணுக்கு நிகர் என்று சொல்லிக்கொள்பவளும் அல்ல. ஆனால் உண்மையில் அவள் 10 ஆண்களுக்கு நிகர்..

பெண்கள் தின வாழ்த்துக்கள்
பெண்கள் தின வாழ்த்துகள்....

. பெரும்பாலும் அவை பெண்களை ‘’மாதா நீயே சக்தி’’ டைப்பில் தூக்கி நிறுத்தி வழிபடுகின்றன. இது மிக வசதி. திருவிழாவன்று பிரசாதம் படைத்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் போய்விடலாம். அடுத்த வருடம் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்...

இன்னமும் மீதி டைப் வாழ்த்துகள்... அம்மாவாய், தங்கையாய், மனைவியாய், மகளாய் சேவை செய்யும் பெண்களே, நீங்கள் இன்னமும் நூறாண்டு வாழ்ந்து சேவையைத் தொடருங்கள் என்கிற ரீதியில் இருந்தன... இவையெல்லாம் உங்களை சார்ந்திருக்கும் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தி விடும் என நினைக்கிறீர்களா நண்பர்களே!

இங்கே நம் குடும்ப அமைப்பில், பெரும்பாலும் ஆண் பெண்ணை அடக்கி ஆளுகிறான். விதிவிலக்காக சில குடும்பங்களில் பெண்கள் இந்த அடக்குமுறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மாற்றாக, ஆண், பெண் சமத்துவத்தின் தேவையை இந்த நாட்களிலாவது புரிந்து கொள்ள முற்படுவோம்.

ஒரு பெண் எப்போது தன்னை மகிழ்ச்சியாக உணரத் தொடங்குகிறாள்? அவள் தனக்கென எதையாவது செய்யத் தொடங்கும்போது தான். சுய பொருளாதாரத்திற்காக எதோ தேர்வெழுதி வேலைக்குப் போவது மட்டுமல்ல, அவளுக்கான வாழ்வு. அவள் கனவுகளை அவள் பின் தொடரும் வாய்ப்புள்ள ஒரு வாழ்வு. ஒரு பயணம், இசை, தன் நண்பர்கள் என தனக்காக அவள் செலவழிக்க ஒரு வாரத்தில் சில மணி நேரங்களேனும் வாய்க்கக் கிடைக்கும் ஒரு வாழ்வு. அடுக்களையில், குழந்தை வளர்ப்பில் அவள் வெந்து சாகாமல் அதை பகிர்ந்து கொள்ளும் மனதுள்ள குடும்பம் அமைகின்ற வாழ்வு..

திருமணத்திற்கு பிறகு தவறாமல்... ‘’24 மணி நேரமும் நொச்சு நொச்சுன்னு என்னைப் போட்டு படுத்துறாடா ‘’ என முணுமுணுக்கு கணவன்கள் ஒன்றை யோசித்திருக்கிறீர்களா? உங்கள் லைசன்ஸை அவள் போட்டுக் கொள்ளும் முன் அவளுக்கென ஒரு வாழ்விருந்தது. அதில் உங்களைத் தவிரவும் நபர்கள் இருந்தார்கள். சந்தோஷங்கள் இருந்தன. நீங்கள் தான் அதில் இருந்து முற்றாக அவளைத் துண்டித்தீர்கள். நீங்கள் ஒருவரே அவள் உலகமாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தீர்கள். தனக்கான உலகின் மீது தொடர் கவனம் இருப்பது இயல்பு தான் இல்லையா? இந்த உறவு உங்களுக்கே இவ்வளவு சலிப்பைத் தந்தால், அவளது சலிப்பின் கனத்தை யோசித்திருக்கிறீர்களா?

அன்பு, காதல் என்பதெல்லாம் நீ எனக்கு மட்டுமேயானவள் என்பதில் அல்ல. நீ எப்படியாக இருந்தாலும் என்னால் உன்னை நேசிக்க முடியும் என்பதில் தான். என் கனவுகளை நான் பின் தொடர்கிறேன், உன் கனவுகளை நோக்கி நீ ஓடு.. ஆசுவாசப்படுத்த நேரம் கிடைக்கும்போது நாம் இணைந்து மகிழலாம் என்பதில் தான் சமத்துவம் இருக்கிறது. இதையெல்லாம் பேசுவதற்கு ஒரு பெண் எந்த வயதிலும் பொருளாதாரத்தில் யாரையும் சாராமல், தனித்திருத்தல் மிக மிக அவசியம் ஆகிறது. பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தன்னைப் பற்றி யோசிக்கும் வலுவைத் தரும்...

தாய்மை, பெண்மை, கண்மை என்கிற வார்த்தைகளை எல்லாம் தூக்கிக் கிடாசி விட்டு, பெண்களை அவர்களாக இருக்க அனுமதியுங்கள் தந்தைகளே, கணவர்களே, அண்ணன்களே...

’’நான் காலேஜ்ல இருந்து, ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போகும்போது காஃபி கொடுக்க அம்மா இருக்கணும், என் ஆஃபீஸ் லஞ்ச் பாக்ஸ்ல அம்மாவோட சாம்பார் சோறு இருந்தாத்தான் செத்தா மோட்சம் கிடைக்கும்’’ என்றெல்லாம் ரொமாண்டிஸைஸ் செய்யாமல் அம்மாவிற்கு உங்களைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என அறிய முற்படுங்கள்...

அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் உங்கள் மனைவிஅன்றைய இரவில் பத்திரமாக இருப்பாளா என்கிற பயத்தில் தூங்காமல் விழித்திருக்கும் உங்கள் செக்யூரிட்டித் தனத்தின் பெயர் காதல் அல்ல. நம்பிக்கையின்மை என்பதை உணர முற்படுங்கள்.

’’எங்கம்மா கிட்ட நான் அஞ்சு வயசு வரை பால் குடிச்சேன், நீ குழந்தைக்காக ஒருவருஷம் வேலையை விட மாட்டேன்னு சொல்றதெல்லாம் ஓவர்’’ என வெடிக்கும் முன் அவளது இந்த வேலைக்காக அவளது இருபத்தைந்து, முப்பது வருடங்களை செலவழித்திருக்கிறாள், உங்களைப் போலவே இதே வேலைக்காகத் தான் ஒரு மாநகர் நோக்கி அவள் நம்பிக்கையுடன் பயணித்தவள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா காலங்களிலும் மகள்களை தோள்களில் சுமக்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் அப்பாக்களே. உங்கள் முதுகுக்குப் பின்னே அவள் மறைந்து கொள்வதில் பெருமிதம் கொள்ளாதீர்கள். சுயமரியாதையுள்ள, தைரியமான பெண்ணாக அவளை வளர்த்தெடுங்கள்.

மிக சுருக்கமாக உங்களோடு உள்ள பெண்களை நம்புங்கள். நேசியுங்கள். சமமாக நடத்துங்கள். பெண் என்பதால் அவளுக்கு அதிகப்படியான மரியாதையோ, உதவியோ தேவையில்லை என்பதை உணருங்கள். ‘’அய்யோ பாவம் அவள் பெண்”’ என்கிற கரிசனமும், இரக்கமும் கூட தேவையில்லை.. சமத்துவம் அதுவே இன்றைய தேவை. வாட்ஸஅப்ப் , ஃபேஸ்புக்கிலேயே இத்தனை நல்லவர்கள் இருக்கும் உலகில் பெண்ணுக்கு என்ன அநீதி நடந்து விடப் போகிறது?

பெண்கள் தின வாழ்த்துகள்!

வெள்ளி, 6 மார்ச், 2020

திருமதி .சுதா சின்னச்சாமி -பல்லடம் ...
சாதனா ஆடை வடிவமைப்பாளர்
Sathana Fashion Designer-Palladam
ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் திருமதி .சுதா சின்னச்சாமி . இவரின் கைவண்ணத்தில் சாதாரணத் துணியும் பளபளக்கும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது.
பல்லடம் ..பா வடுகபாளையத்தை சேர்ந்த நமது சொந்தம் திருமதி சுதா சின்னசாமி , அந்தப் பகுதியின் பெயர் சொல்லும் டிசைனர். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர். மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் திருமதி சுதா சின்னசாமி விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை சுதா சின்னச்சாமி அறிமுகம் செய்துவிடுவார்.திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் கடந்த 15 வருடங்களாக பெண்கள் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் ..பொள்ளாச்சி ,பல்லடம் ,பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ..இவர் வடிவைமைத்த பெண்கள் ஆடைகள் தமிழ்நாட்டையும் தாண்டி பிரபல துணிக்கடைகளில் விற்பனையாகி உள்ளது என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறது கம்பளவிருட்சம் தொழில் குழுமம் ..
பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன.
சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி
பண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடும், செட்டுகள் நிறைந்தவாறு உருவாக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு என பெண் குழந்தைகள் அணியும் ஆடை சற்று பிரம்மாண்ட தோற்றத்தை அளித்திட வேண்டும். அது மட்டுமின்றி அழகிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண சேர்க்கை, லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடு என அனைத்திலும் தனி கவனத்துடன் நேர்த்தியான நுணுக்க வேலைப்பாட்டுடன் ஆடைகள் உருவாகின்றன.
பெண் குழந்தைகளுக்கு என லெஹன்கா, அனார்கலி, சுடிதார், பிராக், பாவாடை - சட்டை, மாடர்ன் டிரஸ்ஸிங், ஜீன்ஸ் டி-ஷர்ட் என பலவிதமான ஆடைகள் உள்ளன. இவையனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட ஆடைகளாய் புதிய வடிவமைப்புகள் தரப்படும். அத்துடன் தீபாவளி ஸ்பெஷல் என்றவாறு சில ரகமும் வெளிவரும்.
தீபாவளிக்கு உகந்த பாரம்பரிய ஆடைகள் :
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிவது உண்டு. தீபாவளி என்பதில் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகள்தான் அணிவது உண்டு. அதாவது முன்பு பாவாடை சட்டை. பிறகு சுடிதார், பைஜாமா, அனார்கலி போன்றவை பாரம்பரிய ஆடைகளின் வரிசையில் இணைந்தன. சுடிதார் மற்றும் சல்வார் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனார்கலி போன்றவை வந்தன. தற்போது மஸ்தானி, சல்வார் நீட்ஸ், லெஹன்கா சோளி, பாட்டியாலா சூட்ஸ், ரிவர்சுபின் ஜாக்கெட் போன்றவை வந்துள்ளன.
புதிய நெட் லெஹன்கா சோளி ஆடைகள் :
பெண்களின் ஆடைகள் அதிக பளபளப்பும், பிரகாசமான வண்ணத்திலும் இருக்கும். லெஹன்கா ஆடைகளின் பாவாடை மற்றும் மேல் சோளி சட்டையும் அதற்கேற்ற துப்பட்டாவும் உள்ளன. இதில் பாவாடை அமைப்பு அதிக பிரகாசமான வண்ணத்துடன் நெட் துணிவகையில் தங்க சரிகை வேலைப்பாடு முழுமையாகவும், கீழ்புறம் அகலமான லேஸ் பார்டர் (அ) சரிகை பார்டர் கொண்டவாறு உள்ளது. இதற்கேற்ற மேல் சட்டை அமைப்பு இடுப்பு பகுதி வரை நீண்டவாறு கீழ்பகுதியில் பார்டர் உள்ளவாறு உள்ளது.
லெஹன்கா சோளி செட்டில் கூடுதலாக நெட் துணியிலான மெல்லிய கோட் அமைப்பு கொண்ட மாடல்களும் வருகின்றன. இதிலேயே சில வகைகள் இரட்டை பாவாடை அமைப்பு கொண்ட முழு ஆடை அமைப்பாய் உள்ளது. இதில் கீழ் வரை பெரிய பாவாடை மற்றும் மேல் சற்று உயர்ந்த குட்டை பாவாடை மேல்புறமாய் உள்ளவாறு உள்ளது. மேல் சட்டை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழகுடன் விளங்குகிறது.
புதிய வரவான மஸ்தானி :
திரைக்கு வந்த ஒரு பாலிவுட் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைதான் தற்போது மஸ்தானி என்றவாறு தீபாவளி புதிய வரவாக வந்துள்ளது. இது லெஹன்கா போன்றதும் அல்ல, சோளி அமைப்பும் அல்ல. இரண்டிலும் சற்று மாறுப்பட்ட ஆடை அமைப்பு. அதாவது மேல் சட்டை அமைப்பு கால் பகுதி வரை நீண்டவாறு உள்ளது. இதன் நடுவே ஸ்ட்ரெயிட் கட் உள்ளது. இதற்கு இணையாக கீழ் பகுதி பாவாடை அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி செய்ய கோட் அமைப்பும், ஸ்லீவ்லெஸ்-யும் கச்சிதமான தோற்றத்துடன் உள்ளன. மஸ்தானி ஆடை பெண் குழந்தைகளுக்கு மிடுக்கான தோற்றத்தையும், பிரம்மாண்ட அமைப்பையும் தரவல்லதாக உள்ளது.
நமது சொந்தம் திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் ,சின்னச்சாமி அவர்களுக்கு தன் குடும்பத்தின் சுமைகளை பெரும் பொறுப்புகளை பொறுப்புடன் இரண்டு குழந்தைச்செல்வங்களையும் பேணிக்காத்து ..தங்களின் வளரச்சி யே சமுதாயவளர்ச்சி என்று கம்பள பெண் தொழில் முனைவோர் முதன்மையாகயாகவும் நம் கம்பள பெண்குழந்தைச்செல்வங்கங்ளுக்கு வழிகாட்டியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ..நமது கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் ..அவர்களுக்கு வியாபார வளர்ச்சிக்கு தகந்த வங்கி கடன் உதவி ஆலோசானைகள் வழங்கும் .நமது கம்பள விருட்சம் தொழில் குழுமத்தில் அவரின் பங்களுப்பும் உள்ளது ..அவரின் ஆலோசேனைகள் கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமத்திற்கு நமது பெரும் உதவியாக உள்ளது நன்றி..விருச்சத்தின் விதைகள் ..இனி ஆலமரமாக தன் விழுதுகளை கிளைபரப்பும் ..
இங்ஙனம்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கம்பள விருட்சம் தொழில்சார் குழுமம்
உடுமலைப்பேட்டை .
www.kambalavirucham.in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
🥰🥰மகளிர் தினம்....மார்ச் 8...2020...🥰🥰

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

மகளிர் தினம்🌱🌱🌳🌳🥰
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

திருமதி  .சிவரஞ்சனி சரவணகுமார் -வழக்கறிஞர் -கோவை

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே..

திருமதி .சுமதி மோகன் குமார் -கடவூர் இளவரசி
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..

திருமதி .சத்யா ஷியாம் சுதிர் ...-தனியார் துறை -கோவை
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில் நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம் செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் ..

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு xerox .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர்

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள் ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார் ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..

ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent & Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி... அதிகபட்சமானது அப்பொழுது. இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...

திருமதி கோமதி மணி -முன்னாள் கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .

திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..
திருமதி .சுசிலா -முன்னாள் கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....

திருமதி  .பிரேமலதா செல்வகுமார்  -தனியார் துறை -உடுமலை பாப்பனுத்து

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..
திருமதி  .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார்

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸாப்ப் எண் ...👍🌷🌷🌷🌷🌷