ஏன்? எதற்கு?
தொழில்/ வியாபாரம்/ பணம்/ சம்பாதித்தல்.
கல்வி மிக அவசியம். அதை விட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே பல விஷயங்களை நமக்கு தரும்.
ஒரு பெண் பொருளாதார தன்னிறைவு அடையாமல் பெண் முன்னேற்றம் பேச முடியாது.
ஒரு வீடும், சமூகம் ஏன் நாடும் பொருளாதார முன்னேற்றத்தில் மேல் வருவது மிக மிக அவசியம்.
அதும் கோவிட்டுக்கு பிறகான இந்திய பொருளாதாரம் அத்தனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இதற்கு ஷேர் மார்க்கெட் மட்டும் அளவுக்கோல் இல்லை.
ஒட்டு மொத்த சமூகமும் மேல் வர வேண்டும்.
அதற்கு கூடி உழைப்பது அவசியம்.
இணையத்தில் வியாபாரம் செய்வது தவறா? அதை நக்கல் செய்கிறார்கள் என. .
மார்க்கே வியாபார நோக்கத்தில்தான் ஃபேஸ்புக் ஆரம்பித்துள்ளார். இங்கு எதுவும் இலவசமில்லை..எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அதனால் நமக்கு தெரிந்த அளவில் நம் ப்ராடக்ட்ஸ் பத்தி பேச வேண்டும். நாமே நம் சர்வீஸ்/ ப்ராடக்டுக்கு மதிப்பு தந்து இடம் தராவிடில் யார் தருவார்?
இக்காலத்தில் செல்ஃ பிராண்டிங், இமெஜ் பில்டிங் எல்லாம் அளவோடு அவசியம். அது நம் வியாபரத்துக்கு என்றுமே உதவும். இல்லாவிடில் தனி மனிதராய் சமூகத்திற்கும் உதவும்.
நல்லது செய்தாலும் அதை இங்கே எழுதி விளம்பரப்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து நெட்வொர்க்கிங் மூலம் நல்லதுகளை தொடர முடியும்.
அதே சமயம் உங்கள் பொது பக்கத்தை வெறும் வியாபாரம் மட்டும் செய்ய பயன்படுத்தினால் யாரும் படிக்க மாட்டார்கள்.
நம் பக்கம் எல்லாருக்குமானதாக இருக்கும் பொழுது நம் செய்திகளும் எழுதும் பொழுதுதான் அதற்கு வீயூஸ் இருக்கும்.
அதிகமாய் பகிர வேண்டுமெனில் முழு வியாபார பக்கங்கள் தொடங்கி அதை அவ்வப்பொழுது பகிரலாம்.
நாம் வியாபாரப்படுத்தும் ஒரு விஷயம் சமூகத்தை மாற்றக்கூடும் எனில் அதிகம் பகிரலாம்.
பணம் சம்பாதிப்பது தவறு, பணக்காரனாக ஆசைப்படுவது பேராசை, வியாபாரம் ,விளம்பரம் சரியில்லை என யாராவது சொன்னால் ..
கபாலி வசனம்தான்.. அதும் கால் மேல் கால் போட்டு..
சொல்லனும் .
" நான் அப்படிதாண்டா சம்பாதிப்பேன்"
ஏன் எனில் டேக்ஸ் கட்டுவதுதான் மிகப்பெரும் தேச சேவை.
அதை துணிவாக செய்வோம்.
நாமே சம்பாதித்து.
#ஏன்_எதற்கு......
நன்றி ...
பவித்ரா வேலுமணி ...
Bavithra Velumani
E-Commerce Buisness Entrepreneur
Karapadi, Pollachi
95002 69348.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக