புதன், 3 நவம்பர், 2021

 கேள்வி : வாழ்க்கையில் மக்கள் அடிக்கடி மிகவும் தாமதமாகக் கற்றுக் கொள்ளும் பாடங்கள் யாவை?


என் பதில் : 


முடி திருத்தம் செய்பவர் எப்போதுமே நமக்கு ஏத்த மாதிரி அமைய மாட்டார். அவங்க எப்படி வெட்டி விடுறாங்களோ அதை தான் நாம ஏத்துக்கணும். அந்த மனப்பக்குவம் வாழ்க்கையில லேட்டா தான் வரும்.


என்ன தான் புல்லட்டே வெச்சியிருந்தாலும் ஸ்கூட்டி பெப்பை ஓவர் டேக் பண்ண முடியாது.


மொட்டையே அடிச்சிட்டு வந்தாலும் அம்மா இன்னும் முடிய சின்னதா வெட்டிருக்கலாம்டான்னு தான் சொல்லுவாங்க.


ஆபிஸ்ல லீவு கேட்க்கும் போது தான் தெரியும் நீங்க இல்லாமல் ஆபீஸே ஸ்தம்பிச்சி போயிடும்னு.


எப்பவுமே உங்க லல்வரை அழகாயிருக்குற பிரண்ட்கிட்ட இன்ட்ரோ குடுக்க கூடாது.


பணத்தை செலவழிப்பது ஈஸி சம்பாதிப்பது கஷ்டம்.


பணத்தை தண்ணி மாதிரி செலவு பண்ணுறவங்க அதை சம்பாதிரிச்சிக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் போதே அதன் மதிப்பு புரியும்.


நம்மளுடைய பலவீனம் என்னன்னு யாருக்கும் தெரியாத வரைக்கும் தான் நாம பலசாலியாக இருக்க முடியும்.


பிடித்தவர்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட நம்மை பிடிக்கலைன்னு சொன்னவர்களை கவனிப்பதிலேயே அதிக நேரம் செலவழிப்போம்.


அழகாய் இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு வெற்றி பெற்றாலும் நீ அழகாயிருக்க அதான் உனக்கு எல்லாம் ஈஸியா கிடைச்சிட்டுன்னு சொல்லுவாங்க. பணக்காரர்களுக்கும் இது பொருந்தும்.


புக்குல படிச்சி தெரிஞ்சிக்கிட்ட அறிவை விட வாழ்க்கை சொல்லி தரும் பாடத்திற்கு மதிப்பு அதிகம்.


தனியா வருவோம் தனியாவே போவோம்.


முடிந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் கிடையாது.


தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களும் சாதாரண நாள் மாதிரி கடந்து போகும். அது பெரிய விஷயமாக வயசான பிறகு தோணாது.


வீட்டுல திட்டும் போது உம்முன்னும், யாராவது உனக்கென்னடான்னு வெருப்பேத்தும் போது கம்முன்னும் இருந்தால் போதும் வாழ்க்கை சும்மா ஜம்முன்னு போகும்.


நன்றி ......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக