இன்று கோவையில் வீடு கட்டுவதற்கு இடம் விலை எப்படி உள்ளது ? ..
நிலம் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
என் பதில் :
முதலில் வாங்கும் நிலம் பட்டாவா அல்லது புறம்போக்கா என தெளிவாக தெரிந்து கொள்ளவும்.
தற்போது அனைத்து பட்டா நிலங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.எனவே நீங்களே கணினி மூலம் சரிபார்த்து கொள்ளவும்.
நிலம் எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பதை பட்டாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது நன்செய்,புன்செய் அல்லது மானாவாரி என சுருக்கமாக குறிப்பிடபட்டிருக்கும்.
அதன்பின் அளவீடுகள் சரியாக உள்ளதா என புல வறைபடத்துடன் சரி பார்க்கவும்.
மேற்படி நிலம் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கக்கூடாது.
நில உச்ச வரம்பில் கவரப்பட்டு இருக்க கூடாது.
நில எடுப்பு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா.
அதன்பின் விற்பவருக்கு உரிமை உள்ளதா,சிக்கல் ஏதும் உள்ளதா என ஒரு வக்கீலிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
தாய் பத்திரத்தில் இருந்து தொடர்பு உள்ளதா என பார்க்க வேண்டும்.
மனை வாங்கும் போது அது உரிய அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதா என பார்க்கவும்.
நிலம் வாங்கும் முன் நன்கு விசாரித்து வாங்கவும்.
நன்றி ...
சிவக்குமார் V .K
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக