வியாழன், 19 ஆகஸ்ட், 2021

 கேள்வி : தன் பெண் பிள்ளை திருமணம் வேண்டாம் என்று கூறினால், அதை ஏன் பெற்றோர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள்?


பதில் :


எல்லாம் இந்த உதவாத சமுகத்திற்காக தான்.அவர் என்ன சொல்வார்,இவர் என்ன சொல்வார், சொந்த காரர் என்ன சொல்வார்கள் என்று புலம்பி தள்ளுகின்றனர்.


ஒரு பெண் திருமணம் வேண்டாம் என்றால் அதற்கான காரணம் என்ன?


உளவியல் ரீதியாக எப்படீ சரி செய்யலாம்.


எதற்காக பயப்படுகிறார்?


அவள் பார்வையில் திருமணம் என்றாலே என்ன இருக்கிறது?


மனதில் என்ன குழப்புகிறாள்?


பாலியல் தொல்லை அனுபவித்து இருப்பாளோ?


நம்மை விட்டு பிரிய மனமில்லயா? இல்லை சந்தித்த ஆண்கள் நம்பிக்கை உரியவர்களாக இல்லையா?


என் பலகோணத்தில் யோசிக்க வேண்டும்.


பெண்ணிடம் மனம் விட்டு பேச வேண்டும்.தேவைபட்டால் கவுன்சிலிங் அழைத்து செல்லலாம்.


வாழ்க்கையில் திருமணம் ஒரு பகுதி தான்.அதை தாண்டீ சாதிக்க நிறைய இருக்கிறது. சுய சம்பாத்தியம் செய்யும் திறமையை வளர்த்து விட வேண்டும்.பிரச்சினை என்றால் சமாளிக்க உன்னால் முடியும்.என மனரீதியாக தயார் செய்த பின்னர் திருமணத்திற்கு தயாராகலாம்.


ஊருக்காக அழுது , புலம்பி திருமணம் செய்து வைத்தால் மேலும் பெரிய பிரச்சினை தான்.


திருமணம் என்பது இருவர் சம்பந்தபட்டடது.ஒருவரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைத்தால் மற்றொருவர் வாழ்க்கையும் கேள்வி குறி ஆகிவிடும்.


இது முற்றிலும் என் மனகருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக