செவ்வாய், 8 ஜனவரி, 2019

கம்பளத்தார் தளம் ...விடுதலை களம் .அரசியல் மாநாடு -ஜனவரி 6-2019....அரசியல் பழகு ...கம்பளத்தார் விழுப்புணர்வு மாநாடு ..

எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை களம் ..கம்பளதார்களின் உரிமைக்கான குரலாக தமிழகம் எங்கும் ஓலித்து கொண்டு உள்ளது ...மதிப்புக்குரிய கொ .நாகராஜன் அவர்களின் எங்காவது கம்பளத்தர்களின் சிறு பிரச்னை என்றாலும் ...அடுத்த நாள் களம் இறங்கவிடுவார் ...அவர் இறங்குவதற்கு முன் அரசு துறைகள் அதற்கான தீர்வு வழிமுறைகளை தேடி அதற்குண்டான முடிவுகளை  கம்பளதார்களுக்கு தந்துவிடும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் இருக்கும் ..பத்திரிகை  செய்திகளை நாமக்கல் ..சேலம் ,ஈரோடு பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன் ...ஆறு வருடங்களுக்கு முன் அண்ணரை முதன் முதலில் பார்த்தது வத்தலகுண்டு சென்றாயப்பெருமாள் சன்னதியில் பார்த்து பரஸ்பரம் செய்திகளை பகிர்ந்துகொண்டோம் ..அதன் நட்பு நடக்கும் நிகழ்வுகள் தொலைபேசியில் பேசி கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம் ..நம் கம்பளத்தர்களின் குரலாக இன்று தமிழக பட்டி தொட்டியெல்லாம் இவரின் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துள்ளன ..கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பாஞ்சாலைக்குறிச்சியில் கோவில் விழாவில் சிறு பிரச்சனையில் கம்பளத்தர்களை வெளுத்து வாங்கியதை கேள்விப்பட்டு களத்தில் இறங்கி போராடியதை கம்பளத்தார் மறக்கமாட்டார்கள் ..பலமுறை போராட்டக்களங்களில் போராடி கம்பளத்தர்களின் குரலாக சிறை சென்று உள்ளார் ..இதனால் இன்றும் குடும்ப வாழக்கையை மறந்து கம்பளத்தர்களின் குரலாக தமிழகம் முழுவதும்  சுற்று பயணம் செய்துவருகிறார் ..அண்ணாருக்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் நல்ல நட்பு பாராட்டி .நல்ல இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் ..கம்பளத்தர்களின் உரிமைகளுக்காக
கல்வி ,வேலை வாய்ப்பு ,என்று பல தளங்களில் நமது கம்பள மக்களுக்கு சேவை செய்துவருவது மிக்க மகிழ்ச்சி ..இன்று சட்ட சபையில் ,பாராளமன்றத்திலும் நமது கம்பளகுரலுக்கு ஒலிக்க செய்வதற்காக எளிமையாக அரசியல் பயணமாக களத்தில் இறங்கி இருப்பது வரவேற்க வேண்டிய ..அவசியமான ஒன்று ..தற்காலத்தில் அரசியல் இல்லாமல் கம்பள மக்களின் வளர்ச்சி இல்லை என்பதை அறிந்து விடுதலை களம் அமைப்பை அழகாக ..கட்சியாக அரசியல் பயணத்தை அதுவும் எளிமைக்கு பெயர் பெற்ற முதல்வராக இருந்த காமராஜர் பிறந்த ஊரில் பயணத்தை ஆரம்பித்தது ..நல்ல தளமாக ..விடுதலை களமாக ..கம்பளதார்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி ...கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இருந்து விருதை மாநாட்டு பணிகளை தனி மனிதனாக ..அமைப்பு பொறுப்பாளர்களின் உதவியோடு ஒரு அமைப்பின் களப்பணியாளனாக இறங்கி வேலைசெய்து மாநாட்டின் வெற்றியை பதிவு செய்துள்ளார் ..விருதை கம்பளத்து மக்களின் அயராது ஒத்துழைப்புடன் இந்த அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்திக்காட்டி தமிழக அரசியலின் ஒரு கம்பளத்தர்களின் விடிவெள்ளியாக பிரகாசமான சூரியக்கதிர்கள் பட்டு ..முளைக்கும் செடியாக வளர்ந்து வெளிவர ஆரம்பித்துள்ளது ..நம் கம்பள சமுதாய மக்களின் குரலாக ஒலிக்க தொடங்கியுள்ளது ..அரசியல் மாநாட்டில் பேசிய தலைவர்கள் அவரின் எளிமை ,உழைப்பு ,தன் மக்களுக்கு உரிமை குரலாக வெகுவாக பாராட்டி பேசியது அருமை ..மாநாட்டில் வந்துருந்த அனைத்து கம்பள மக்களும் நீண்ட நேரம் உன்னிப்பாக தலைவர்களின் பேச்சை கேட்டும் ..அதற்கு பதில் அளித்து கொண்டும் ஒரு நேர்காணல் மாதிரி மாநாடு நடைபெற்றது புதுமையாக இருந்தது ...இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்ததில் நமது கம்பளத்தர்களின் பாளையக்காரர்கள் ,நம்முடன் வாழ்ந்த கம்பளத்தர்களின் அரசியல் தலைவர்கள் ,பெரியவர்களின் திருஉருவ படங்களை மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு திறந்து வைத்து பெருமை சேர்த்தது  மாநாட்டின் ஒரு பொன் நாள் ..இதைவிட மாநாட்டின் பாதுகாப்பு அருமை ..மருத்துவ வேன் ,தீயணைப்பு வாகனம் ..முன்னேற்பாடுகளை செய்து காவல்துறைக்கும் எந்த ஒரு சிறு சங்கடம் வராமல் பார்த்து விழாவை வெற்றியுடன் நடத்தியது அருமை ..மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் ஆதங்கம் சென்னையில் வியாபாரம் நடத்தும் சொந்தங்கள் கூடையில் நம் குரல் ஒலிக்காதா ...டெல்லில் இருந்துவந்த சொந்தம் என் ஹோட்டலுக்கு வரும் பாராளமன்ற உறுப்பினர் நம் கம்பளத்தாராக இருக்க கூடாதா என்ற ஆதங்கம் வந்துருந்த சொந்தங்களிடம் பேசிக்கொண்டு இருந்ததை என் செவி வழி(லி )யில் கொஞ்சம் மனதில் பாரமாகத்தான் இருந்தது ...இந்த மாநாடு நடைபெறுவதற்கு மற்ற சமுதாய அமைப்புகள் ..நண்பர்கள் ..தலைவர்கள் .என்று பலபேர் உதவியது மகிழ்ச்சியாகவும் இருந்தது ...ஆனால் இந்த மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கும் ,தடுப்பதற்கும்  தடங்கலாக இருந்தது ......அதற்கான சூழ்நிலை வரும்போது உங்களிடம் பகிர்கிறேன் ...

என்றும் சமுதாய உணர்வுடன்
உடுமலை சிவக்குமார் ...






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக