சனி, 19 ஜனவரி, 2019

இனிமையான பொங்கல் ....2019..

தைமாதம் முதல் நாள் என்றாலே விவசாயம் என்ற ஒரு மந்திரச்சொல் எல்லோர் மனதில் ஓடும் ...தைமகளை வரவேற்கும் நாளாக அமைவது இயல்பு ..வரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுதி யே எந்த ஒரு தொழிலும் சார்ந்த தாக வருங்காலத்தில் அமையப்போவது உறுதி ..நம் தலைமுறை விவசாய தொழில்களை மறந்துவரும் சூழலில் ..நம் குழந்தைகள் தற்பொழுது இருக்கும் நிலங்களில் ..தங்களின் பெற்றோர்களுடன் பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும்  ,வேளைக்கு போகும் இளைய தலைமுறையினர் விடுமுறை நாட்கள் ,பொங்கல் பண்டிகை காலங்களில் தானாக முன்வந்து விவசாய நிலங்களில் கால் பதித்து ..பயிர்களுக்கு நீர் இறைத்து ...தலையெடுத்தும் ,கால்நடைகளை எப்படி பராமரிப்பது .என்று களப்பணி செய்தும் ..இந்த பொங்கலை கொண்டாடியது பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியாது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது .. ...தங்களால் இயன்ற அளவு விவசாயப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது ..என்னதான் நகரத்து வாழ்க்கை வாழந்தாலும் ...எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு வந்துள்ளதை அறியும்பொழுது ...மறுபடியும் விவசாய பணிகள் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து ..புதிய விவசாய நடைமுறைகளை கண்டறிந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது ..நம் நாட்டுக்கு விவசாயதில் வளரும் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது ...ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ..படித்திவிட்டு பிடித்த துறையில் பட்டம் வாங்கிவிட்டு ..பிடித்த வேளைக்கு சென்றாலும் ..இந்த விவசாய பணி எனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லும்பொழுது எதிர்கால வாழ்க்கைக்கிற்கு நம்பிக்கை பிறக்கிறது ...பெரியோர்கள் சும்மா வா சொன்னார்கள் ..தை பிறந்தால் வழிபிறக்கும் என்று .....அதுவும் இந்த பாடலுடன் கேட்கும்பொழுது வாழக்கை இனிமையாகிறது ..நீங்களும் கேட்டு பாருங்களேன் ...
என்றும் அன்புடன் ஷியாம் சுதிருடன் ...உடுமலை சிவக்குமார்
9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக