வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அருமையான தலைப்பு ....

...ஏட்டு கல்வியை விட அனுபவக்கல்வியே வாழ்க்கைக்கு சிறந்தது.புத்தகங்களில் வுள்ள எழுத்துக்களை வாழ்வில் பயன்படுத்துவது குறைவே.அதே சமயம் பெரியவர்கள் தன் வாழ்வில் பல சமயங்களில் நடந்த அனுபவ நிகழ்வை நம்மிடம் சொல்லியே நம்மக்கு அனுபவ அறிவை புகட்டுகிறார்கள்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு வுதவாது என்பதை நம் பெரியவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்று பல பள்ளிகளில் கூட புத்தகத்தை பின் பற்றுவதைவிட ப்ராக்டிகலாக பிள்ளைகளுக்கு புரியவைபதையே விரும்புகிறார்கள்.வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் நம்மக்கு ஒரு பாடமே. அதை நம் சந்ததிகளுக்கு புரிய வைப்பதே அனுபவமாகும்.இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு 3 வயதானதுமே நர்சரியில் சேர்த்துவிடுகின்றனர்.இப்பொழுதெல்லாம் இந்த நர்சரியிளெல்லாம் அனுபவ படிப்பையே அங்கும் சொல்லி கொடுக்கின்றனர்.அந்த குழந்தைகளை மார்க்கெட், ஆஸ்பிடல்,போன்ற இடங்களுக்கு கூட்டி சென்று அங்குள்ளவர்களை பற்றியும் காய்கறிகளை பற்றியும் அதன் நிறங்கள் பற்றியும் சொல்லிகொடுக்கின்ற்றனர்.இதனால் குழந்தைகளுக்கு பழம்,காய்கறிகள், அதன் நிறம் அனைத்தையும் எளிதாக புரிந்து கொள்கின்றனர்.புத்தகத்தை பார்த்து கற்று கொண்டால்கூட இந்த அளவுக்கு புரியவைக்க முடியாது.இது பல பிள்ளைகளிடம் நான் பார்த்த அனுபவ பாடமே.

வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அனுபவமே நமக்கு துணை புரிகிறது.சமையலிலிருந்து,கம்ப்யூட்டர் வரை நாம் படிப்பதை விட அனுபவமாக கற்று கொள்வதே அடுத்தமுறை நாம் தவறு செய்யாமல் இருக்க வுதவுகிறது.

இன்று நம் குழந்தைகளின் கணித புத்தகத்தை பிரித்துப்பார்த்தால் நமக்கே தலை சுற்றுகிறது.a2 +b2 என்று படித்துகொண்டிருக்கிரார்கள் இதை நம் வாழ்வில் வுபயோகிக்க முடியுமா சொல்லுங்கள் .அதே பிரச்டிகாலாக சொல்லி கொடுக்கப்படும் கணிதம் தான் வாழ்வில் நம்மக்கு வுபயோகமாக இருக்கும்.ஆங்கிலம் பேச வேண்டுமென்றாலும் புத்தகத்தை படித்தால் படித்தால் வந்துவிடாது.யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் பேச பேச தான் வரும் என்று.ஒரு மாதத்தில் மொழி கற்று கொள்ளலாம் என பல புத்தகம் வந்தாலும் அதை பயன் படுத்தி யாரவது மொழி கற்று கொண்டார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இது போல வாழ்வில் ஒவ்வொன்றும் அனுபவத்தின் மூலமாக கற்று கொள்வதே நம்மக்கு வாழ்வில் பல சமயங்களில் கை கொடுக்கும்....எனது செல்ல ஷ்யாமுக்கு ..பள்ளியில் படித்த பாடங்களை சிறுவயதில் வீட்டுக்கு வந்து  ..youtube -ல் பாடல்களுடன் கற்றுக்கொடுத்தேன் ...ஆர்வமாக பிடித்துக்கொண்டான் ...பள்ளியில் கேட்கும் பாடல்களை தங்கு தடையின்றி வகுப்பில் ஆசிரியரிடம் பயமின்றி பதில் அளித்து தன் அறிவான மாணவனாக திகழ்ந்தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக