ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

இன்றைய ஞாயிறு .....பொள்ளாச்சி ..

இன்று 19.08.2018 பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் 64 ஆவது இலக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இதில் நூறாண்டு கடந்த ஹைக்கூ என்று தலைப்பில் கவிஞர் மு.முருகேசன் (தி.இந்து பத்திரிகையின் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்)
பொள்ளாச்சி அம்சப்பிரியாவின் வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகள் கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்து வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.
இதில் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்

என்னும் நூலை ஆசிரியர் மா.மதியழகன் மற்றும் ஆய்வு நடுவத்தைச் சார்ந்த உடுமலை சிவக்குமார் , பேராசிரியர் கண்டிமுத்து, மற்றும் பதிப்பாசிரியர் அருட்செல்வன் ஆகியோர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு நூலைப் பரிசாக அளித்துத் திறனாய்வுக்குக் கருத்துரைத்தனர்.
முனைவர் மதியழகன் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் அதன் தேவையும் குறித்தும் பேசினார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக