சனி, 31 அக்டோபர், 2020

கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?

 கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?


பதில்:..என் இனிய நண்பர் ..Dr.Andrew Peter Leon-Genetics and Plant Breeding இல் PhD, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (2020 ஆண்டு பட்டம் பெற்றார்)


கடந்த 2019 டிசம்பரில் ஹி ஹியான்குய் என்ற சீன ஆய்வாளர் ஆய்வு அறங்களை மீறியதற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் செய்த தவறு (மிகப்பெரிய), தான்தோன்றித்தனமாக ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை மனிதக் கருவில் சோதித்துப் பார்த்தது! அவரின் ஆய்வின் படி பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி வைரசுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றிருக்கும்!


அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் தான் நவீன உலகை முற்றிலும் மாற்றக்கூடிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு பெயர் 'Designer Baby technology' என்றழைக்கப்படும் கிறிஸ்பர்-கேஸ் (CRISPR-Cas). உயிரியல் ஆய்வுகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுபவராக இருந்தால் கவனித்திருப்பீர்கள்: 2014-க்கு பிறகு கிறஸ்பர்-கேஸ் தான் மிக அதிகமாகப் பேசப்பட்ட, படுகின்ற தொழில்நுட்பமாக இருக்கும்.


அப்படி என்ன தொழில்நுட்பம் அது?


பாக்டீரியாக்கள் எப்போதும் தங்களிடம் அதிசயிக்கத்தக்க உயிரியல் மற்றும் மரபியல் செயல்பாடுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன. இந்த செயல்பாடுகளால்தாம் இவற்றால் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அதீத சூழ்நிலைகளிலும் தப்பி வாழ முடிகிறது.


இயற்கையில் பாக்டீரியாக்களின் முக்கிய எதிரிகள் பாக்டீரியோபேஜ் எனும் வைரசுகள். சானிடைசர் வாங்க வழியில்லாததால் அவை வேறு பல நுட்பமான செயல்முறைகளால் பாக்டீரியோபேஜ்களைத் தோற்கடிக்கின்றன. அவற்றில் ஒன்று கிறிஸ்பர்-கேஸ்.


ஒரு பாக்டீரியோபேஜ் முதன்முறையாகத் தாக்கும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மரபுத் தொடர்களை படி எடுத்து தங்கள் மரபுக்கூறுகளுடன் சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதுக்குப் பேர்தான் சுருக்கமாக ‘கிறிஸ்பர்’ (CRISPR:clustered regularly interspaced short palindromic repeats). கேஸ் என்பதற்கு ‘கிறிஸ்பர் சார்ந்த’ என்ற பேர் (Cas-CRISPR associated). இது ஒரு கிறிஸ்பர் சார்ந்த, டி.என்.ஏக்களை துண்டுபோடும் புரதத் தொகுப்பு (restriction enzyme - Molecular scissors).


இப்போதான் ஆட்டம் ஆரம்பம். அதாவது, மறுமுறையாக ஒரு பாக்டீரியோபேஜ் தாக்கினால், முந்தையத் தலைமுறையில் சேமித்த மரபுத்தகவல் இருக்கிறதல்லவா? அந்தத் தகவலை வைத்துக் கொண்டு, இந்த கேஸ் என்சைம் பாக்டீரியோபேஜ்களின் டி.என்.ஏ-வை ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்திவிடும். அதாவது பரம்பரை பரம்பரையாகத் தங்கள் எதிரியை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் பெறுகின்றன.


இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா. இந்த கிறிஸ்பர்-கேஸ் 1980 களிலேயே கண்டறியப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தக் கேஸ் புரதத்தொகுப்பைக் கூர்ந்து பார்க்கையில் அது வைரசின் டி.என்.ஏ என்றில்லாமல் எந்த டி.என்.ஏ வையும் துண்டுபோடும் ரவுடி என்பது தெளிவானது. மற்றபடி இதை ஒழுங்குபடுத்தத்தான் பாக்டீரியாக்கள் வைரசின் டி.என்.ஏக்களை சேமித்து வைக்கின்றன. அதாவது, சேமித்து வைக்கப்பட்டுள்ள வைரசின் டி.என்.ஏ-விற்கு பதிலாக நாம் விரும்பும் டி.என்.ஏ பகுதியை இணைத்தால் அந்த இடத்தை அடையாளம் கண்டு கேஸ் 'சம்பவம்' செய்துவிடும்.


கேஸ் என்சைம் - எவனா இருந்தாலும் வெட்டுவேன்!


ரொம்ப எளிதாக விளக்கவேண்டுமானால், காவல்துறையிடம் இருக்கும் டி.என்.ஏ வை அழித்துவிட்டு வேறு ஒருவரின் டி.என்.ஏ வை வைத்து மாட்டி விடுவது போன்றது.


இதைத்தான் 2010 வாக்கில் (2012-ல் அறிவியல் இதழ்களில் பதிவாகின) Jennifer Doudna மற்றும் குழுவினரும், Feng Zhang மற்றும் குழுவினரும் தன்னிச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு காப்புரிமை பெற்றனர். (இந்தக் காப்புரிமை பெறுவதற்காக எழுந்த போட்டியே, இந்த தொழில்நுட்பம் எவ்வளது முக்கியமானது என்பதை உணர்த்தும்!).


இதில் என்ன சிறப்பு?


உயிரினங்களின் இயக்கங்கள் மரபுப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மரபுப்பொருட்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இயற்கையில் இப்படி நடக்கும் மாற்றத்தைத்தான் நாம் சடுதி மாற்றம் (mutations) என்கிறோம் - இதுவே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.


ஆனால், இந்த சடுதி மாற்றத்தை அதிதுல்லியமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (ஜீன்) நடத்தும்போது நோய் எதிர்ப்புத்திறன் போன்ற உயர் பண்புகளைப் பெற வழியிருக்கிறது. கிறிஸ்பர்-கேஸ் இந்தச் செயல்களை முன் எப்போதும் இல்லாத வகையில் எளிதாகவும் செலவற்றதாகவும் மாற்றிவிட்டது. முக்கியமாக, வேளாண்மைத் துறையில் மரபு-மாற்றியப் பயிர்கள் தீவிர எதிர்ப்பைச் சந்தித்து வரும் காலகட்டத்தில் இத்தொழில்நுட்பம் நம்பிக்கை தருவதாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது (நம்புங்கள்-கிறிஸ்பர் இல்லாமல் வருங்கால வேளாண் இரகங்கள் இல்லை!). ஏற்கனவே நாளானாலும் கருத்துப் போகாத காளான் வகைகள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.


எச்சரிக்கை மணி!


எப்போதும் போலவே, பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கிறிஸ்பர் போன்றத் தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானது. காப்புரிமை பெறும் காலகட்டத்திலேயே யு.சி. பெர்க்லி பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்காமல் தனியார் சார்ந்த பிராடு (Broad Institute) ஆராய்ச்சி நிலையத்துக்குக் காப்புரிமை வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


Feng Zhang, சீன ஆய்வாளரின் தன்னிச்சையான எச்.ஐ.வி ஆய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல நாடுகளும் சட்டங்கள் வகுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.


கிறிஸ்பர் குறித்து ஒரு கண்காட்சியில் விளக்கிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் 'டிசைனர் பேபி' என்று சொல்கிறீர்களே - எனக்கு ஒரு ஆண்குழந்தை 'Blue Eyes'-உடன் வேண்டும், முடியுமா? என்றார். வேடிக்கையாகத் தோன்றினாலும் வில்லங்கம் புரிகிறதா!


அறிவியலின் கண்டுபிடிப்பு ..நன்றி ..

செவ்வாய், 27 அக்டோபர், 2020

உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

 அன்புள்ள திரு சிவகுமார் மாமா அவர்களுக்கு, தங்களுடைய சொந்த விஷயம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தங்களது சொந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட தளத்திலோ அல்லது தனித்தனியாகவோ பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் இத்தளத்தில் சமுதாய சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் பதிவிடுவது சிறந்தது என கருதுகிறேன்.

நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளையும் பெரும்பாலும் முழுவதுமாக படிக்கவும் மாட்டார்கள்.பெரும்பாலோர்க்கு படிக்கவும் நேரமும் இருக்காது என கருதுகிறேன்.

தாங்கள் நமது சமுதாய பதிவுகள் இல்லாமல் மற்ற பதிவுகள் பதிவிட்டால் நிறையபேர் என்னிடம் யாருங்க அந்த சிவக்குமார்? சம்பந்தமே இல்லாத பதிவுகளப்போட்டுட்டு வெறுப்பேத்தறாரு.நாங்கள்ளெல்லாம் குரூப்ல இருக்கறதா?இல்ல லெஃப்ட் ஆகிடறதான்னு கேட்கிறாங்க.

தாங்களால் நிறையபேர் லெஃப்ட் ஆகிடற வருத்தமான சூழ்நிலைக்கு ஏன் கொண்டு வர்றீங்க? 

இதை என்கிட்ட கேட்கறவங்களுக்கு உங்களபத்தி நான் எப்படிங்க பதில் சொல்லமுடியும்?

   புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன் மாமா.


அன்பு நண்பருக்கு

 உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

இது நமது சமுதாயம் சார்ந்த குழு என்பது உண்மையே..ஆனால் சமுதாயம் சார்ந் பதிவுகளை இட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களைத்தான் பதிவு செய்யக்கூடாது என்பது கொள்கை. இதுநாள் வரையிலும் சிவா மாமா அவர்கள் இது மாதிரி சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதில்லை.

.

ஒரே ஒரு சின்ன விஷயம் மற்ற சமுதாயத்திலிருந்து நாம் இன்னமும் முன்னேறாதிருப்பதற்க்கு காரணம் என்னவென்றால்   எத்தனையோ நல்ல விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் எப்போதாவது வேறு ஏதாவது பகிரப்பட்டால் அதைப் பெரிதாக பேசிக்கொண்டிருப்பதுதான்.. எத்தனையோ நல்ல

நம் சமுதாயம் சார்ந்த விஷயங்களை  பகிரும் போது பாராட்டாத நாம் குறை சொல்வதற்க்கு நேரத்தை ஒதுக்குவது இன்னும் நம் சமுதாயத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது..

இங்கு அரசியல் பேசுகிறார்கள் 

உடல் ஆரோக்கிய குறிப்புகள் வருகிறது 

வேலை வாய்ப்பு தகவல்கள் இடம்பெறுகிறது

தம் உழைப்பால் முன்னேறிய நம் சமுதாய   நண்பர்களைப் பற்றிய பதிவுகள் வருகிறது..பல்வேறு துறைகளில் முன்னேறிய நம்

நம் சமுதாய மகளிர் ஆண்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன..

இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

பிற சமுதாயத்தவர்கள் (கவுண்டர் வண்ணியர் நாயுடு இன்னும் பல) இவர்களெல்லாம் நமக்கு பின் இருந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் முன்னேறியததன் காரணம் பிற சமுதாயதத்திலிருந்து கற்ற பாடங்கள்தான்..கொங்கு அமைப்பில் ஒரு முக்கிய மனிதர் சொன்னது என்னவென்றால் நான் தீரன்சின்னமலையை நேசித்து போற்றி விழா எடுப்பதற்க்கு ஊக்கமளித்தது கட்டபொம்மனுக்கு நீங்கள் எடுக்கும் பிரமாண்ட விழாதான் என்று சொல்லி இருக்கிறார் அவர்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்..

ஆனால் நாம் பிற பதிவுகளைப் போடுவதற்க்கு தடை வருகிறது இன்னமும் நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இருந்துகொண்டு வருகிரோமே தவிற நமக்கான முன்னேற்றத்தை இதன் மூலம் தேட தவறுகிறோம் ..

ஆனால் சிவக்குமார் மாமா அவர் போடும் பதிவுகளுக்குப் பின்னால் நம் சமுதாய நண்பர்களின் உயர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்..

அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் நண்பர்கள் பெரிய மனிதர்கள் பல்வேறு துறைகளைச்சார்ந்த நண்பர்கள் ஆகியோருடனா பயணம் நம் வாழ்க்கைக்கும் நம் உயர்வுக்கும் உதவும் என்பதற்க்குதான் தான் செய்யும் வேலைகள் போகும் இடங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவுகளாக இடுகிறாரரே தவிற சுய விளம்பரம் கிடையாது...

இந்த குரூப்பில் இருக்கும் சில பேர் சொல்லி இருக்கிறார்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு செய்தித்தாள் படிப்பதை போல இருக்கிறது குருப்பில் வரும் தகவல்கள் என்று ....எனவே தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படாத விஷயங்களை விட்டு விடுங்கள்.....


நன்றி....📚✍️✍️Jayaraman.🤭😲

அன்பு உறவுகளே... சக உறவினர் ஒருவர் சிவகுமார் சார் குறித்து

அன்பு உறவுகளே...

சக உறவினர் ஒருவர்

சிவகுமார் சார் குறித்து

எழுதிய பதிவு என்னை

அதிர்வுக்குள்ளாக்கியது

நாங்கள் வேறு ஒரு

அமைப்பை நடத்தி

வந்தாலும் மனப்பூர்வமான  இதய

சுத்தியோடு சொல்கிறேன் நம் சமுதாய உணர்வோடு

வலம் வரும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமையும் அக்கறையும் கொண்ட

மிகச் சில தலைவர்களில் திரு.

சிவகுமார் சார் அவர்களும் உண்டு.

KVE குழுமத்தில் நம்

சமுதாய மக்களின் நலனுக்காக தானே

ஒவ்வொரு விடயத்தையும் தேடித்

தேடி எழுதி வருகிறார்.

நூலகர் வட்டம் அகழாய்வு பாரம்பரிய

கோவில்கள் நம்மவர்களின் திருமண

விழாக்கள் குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் இனத்தின் பூர்விக

வரலாறு பூர்விக பாடல்கள் சடங்கு

சம்பிரதாயங்கள் இவையெல்லாம் சமுதாய விஷயங்கள்

தானே? இது போக

தன்னம்பிக்கை தரும்

செய்திகள் அன்றாடம்

வாழ்வில் எதிர்கொள்ளும் கடன்

முதலீடு காப்பீடு மற்றும்

வீட்டுக்கடன் போன்ற

பதிவுகள் நம் சமுதாய

மக்களுக்கு பயன்படாதா?

நண்பரே எது உங்களுக்கு வேண்டாம்

என்று எனக்கு புரியவில்லை.

எல்லாம் சரியாவே

இருக்கின்றது.

சமுதாய செய்திகளோடு

நாட்டு நடப்புகளையும்

விவாதித்து செய்திகள்

அளிப்பது தவறா?

வேண்டாம் தோழரே

கண்ணியம் மிக்க

ஒருவரை காயப்படுத்த

வேண்டாம்.

திரு சிவகுமார் அவர்களின் ஆத்மார்த்தமான பணியில் நம்மையும்

இணைத்துக் கொண்டு

ஒற்றுமையுடன் ‌நம்

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக

மட்டுமே பாடுபட

உறுதி ஏற்போம்



அன்புடன்

சௌந்தரபாண்டியன்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱



அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱

தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன் டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...
⛱⛱⛱

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍❤❤❤❤⛱⛱⛱✒✒🏡🏡

 என் அருமை தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பள விருட்சத்தின் துடிப்புமிக்க உறுப்பினர் ..தம்பி அறக்கட்டளையின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செல்லும் பாங்கு வெகு நேர் தியாக இருக்கும் ..பொறுமை ,..சகிப்புத்தன்மை ..அனைவரையும் அரவணைத்து  வழிகாட்டியாகவும் பணியாற்றுவார் ..இயற்கை விவசாயம் , பால்பண்ணை முகவரும் கூட ....

தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

9944966681...

🦜வணக்கம் 🙏..... குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு.....

🦜வணக்கம் 🙏..... 

குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு..... 

மதுரையை மீட்ட  சில்லவார்குல சகோதரர்கள் நால்வர்...  கருங்குளம் (வீரப்பூர்)கம்பையாநாயக்கர் ... மருங்காபுரி பூச்சய்யாநாயக்கர்.. நத்தம் லிங்கமநாயக்கர்  ... மணப்பாறை  லட்சுமிகாமயநாயக்கர் (லெக்கயநாயக்கர் )...ஆவார்கள்.... இதில் லெக்கயநாயக்கர்க்கு சிற்றரசு  பட்டம் சூட்டி  மதுரை மன்னர்  விஸ்வநாதநாயக்கரால்  பாளையகாரர் ஆக்கி நிலம் பிரித்து கொடுத்து ஆள சொன்னது....   ஆலம்பட்டி புதூருக்கு தெற்கு...  விராலிமலை கோயிலுக்கு மேற்கு....   கருப்பூருக்கு வடக்கு...  அய்யலூர்  ஸ்ரீ வண்டி கருப்புசாமி கோயில் கிழக்கு வரை பத்து மக்களை குடி அமர்த்தி..ஆடு மாடுகள் உற்பத்தி பண்ணி.. நிலம் நேர்த்தி செய்து தானியங்கள் விளைவித்து...   வரிவசூல் செய்து நல்லது செய்து ஆண்டு அனுபவித்து வர உத்தரவு கொடுத்தார்....அதன் பிரகாரம் மணப்பாறையில் முதல் கோட்டையும்... பிறகு வையம்பட்டி அருகில் குமாரவாடியில்  அரண்மனைகட்டி ஜீவித்து..  அங்கே நீண்ட நெடிய சுற்றுசுவர் கொண்டு மத்தியில் அழகான ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் கட்டி ஆண்டு வந்து உள்ளனர்... விராலிமலை முருகன் கோயில் கல் மண்டபம் கட்டி..  முருகனுக்கு  உண்டான பூஜைக்கு  அனைத்தும்  செய்து உள்ளனர். .  


இன்றும் லெக்கயநாயக்கர் பூச்சய்யநாயக்கர் சிலைகள் உள்ளன... மணப்பாறை மாமுண்டி நல்லாண்டவர் கோயில் பறந்த பரப்பளவு கொண்ட கோவில்...தைபூசம்  பழனி முருகன் பாதையாத்திரை பக்தர்கள்....  சமயபுரம் பக்தர்கள்... தங்கி உணவு அருந்தி  இளப்பாரி  வருகிறார்கள்..இந்த  கோவில் பரம்பரை அரங்காவலர் குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனையார் குடும்பம் பார்த்து வருகிறது....அரண்மனை தொடர்பு கொண்ட புதுக்கோட்டை அரண்மனை  தொண்டைமான் குடும்பமும் சினேகம் செய்து...அரண்மனையில் வேட்டை ஆட அனுமதி கொடுத்து உள்ளது.....இந்த மந்தை 14 மந்தையில் சிறந்த  காட்டு சீல் நாயக்கர் மந்தையாகும்... கரைபெந்தல் நாயக்கரும் உள்ளார்.... அரண்மனையில் நடைபெரும் நல்லது கெட்டதும் அணைத்துக்கும் முன்நின்று  செய்து வருகிறார்கள்... 


அரண்மனையார் பெயர்... தெய்வதிரு. குமாரலெக்கையநாயக்கர்.. இவருக்கு மகன்கள் மூவர்.. பட்டத்து அரண்மனையார்..1 உயர்திரு. துரைச்சாமி @KRK.குமாரலெக்கயநாயக்கர்.... 2.KRK. ராஜகோபால் லெக்கயநாயக்கர் நாயக்கர்.. 3.முத்துராமலிங்க லெக்கயநாயக்கர் ஆவார்கள்.... இவர்கள் குடும்பம் சம்பந்தம்..  சுக்காம்பட்டி அரண்மனையார் உயர்திரு. பாலமுகொண்ட முத்தையா  பாலகிருஷ்ண ஆண்டிவேல்சாமி நந்தகுமார் @பாலமுருக முத்து ராமசாமி நாயக்கர் அவர்கள் தொடர்பு கொண்டது ஆகும்...  (தொடரும் ).....


நன்றி ...தகவல் களஞ்சியம் ..அய்யலு கிருஷ்ணசாமி 

செவ்வாய், 20 அக்டோபர், 2020

இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

கேள்வி : இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

என் பதில் :.


எனக்கு பொம்மை போல இருக்கும் பெண்களைவிட இயல்பா, கொஞ்சம் கெத்தா, புத்திசாலியா இருக்கும் பெண்கள்தான் கவர்ச்சியா தெரிவாங்க. உங்க கருத்து என்னோட மேட்ச் ஆகலன்னா பரவாயில்ல, இப்படியும் ரசிக்குறவங்களுக்கு இந்த லிஸ்ட். இவங்க மூன்று பேரும் வித்தியாசமான ‘அழகி’கள், சாதாரண இந்தியப்பெண்களின் பிரதிபிம்பங்கள்,யோசிக்கும் திறன் படைத்தவர்கள்.


இவங்களுக்கு ஒரு பாணி உண்டு, பட நாயகர்களையும் தாண்டி நிற்கும் நடிப்புத்திறனும் உண்டு. ஒருவர் இயக்குவார், இன்னொருவரின் பேட்டிகள், படத்தேர்வுகள் அபாரம், காது, இமை என உடலில் ஒவ்வொரு பாகமும் நடிக்கும், மூன்றாமவர் எவ்வளவு மொக்கையான படம் என்றாலும் தூக்கி நிறுத்துவார், நளினமாக, பொய்யாக எல்லாம் இருக்க மாட்டார், குபீர் சிரிப்பு, கிண்டல் என் எப்போதும் அதிரடி, சரவெடி (live wire) தான், காஜோல் ஒரு ஏஞ்சல்.https://youtu.be/eJF4DSekiKU


நந்திதா தாஸ்...https://youtu.be/YD3320LD78c


திங்கள், 19 அக்டோபர், 2020

நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?

 கேள்வி : நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?


 பதில் :.


வீட்டில் சமையல் சிலிண்டர்களை டெலிவரி செய்வதற்கு நவம்பர் 1 முதல் ஓடிபி எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது எரிவாயு சிலிண்டர்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது, 85 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.


நாடு முழுமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை சிலிண்டர் வழங்கும் போது, டெலிவரிபாயிடம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் சிலிண்டர் கிடைக்கும். மாறாக, ஓடிபியை காண்பிக்கவில்லை எனில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காது.


வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், மொபைல் ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரி முறையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.


இந்தப் புதிய நடைமுறை முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் உள்ள நிலவரத்தையும் மக்களிடமிருந்து வரும் கருத்துகளையும் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கான முன்னோட்டம் ஏற்கெனவே ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறை மிகவும் சுலபமானதுதான். அதாவது சிலிண்டருக்கு இனி முன்பதிவு செய்யும் போது அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை சிலிண்டர் டெலிவரி பெறும் போது காட்டினால் போதும்.


ஒருவேளை உங்களது மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம். அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.


இந்த புதிய நடைமுறை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரிக்கு ஓடிபி எண் கட்டாயம் ..இனி இது கட்டாயம்!..




சனி, 17 அக்டோபர், 2020

 என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை முகநூலில் எட்டு  வருடங்களுக்கு மேல் என் நட்பு வட்டத்தில்  இருப்பவர் ..இவரின் பதிவுகள் ,கட்டுரைகள் ..விழிப்புணர்வு கருத்துக்கள் ..அருமையாக பகிர்பவர் ...கடந்த வியாழன் அன்று கொடுமணல் அகழ்வாராய்ச்சிஇடத்தில் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ...என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

எங்களின் அருமை தென்கொங்கு நாட்டு கம்பளத்து சொந்தம் பொய்கைப்பட்டி அரண்மனை இளவரசி திருமதி .பாக்கிய லட்சுமி குமாரராஜா அவர்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமத்தின் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கம்பளவிருட்சம் அறக்கட்டளை -க்கு..தன்னாலான தகந்த ஆலோசனைகள் வழங்கி சிறப்பான நிகழ்வுகள் நடத்த உதவிகள் செய்து தருபவர் ...நன்றி மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

9944066681..


பொய்க்கப்பட்டி பாக்கிய லட்சுமி

புதன், 14 அக்டோபர், 2020

 கேள்வி : உங்கள் எதிரியின் வெகுளித்தனத்தை எப்பொழுதாவது உணர்ந்தது உண்டா?


என் பதில் :. என் மதிப்புமிக்க அதிக வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலும் பணிபுரிவதால் ..இத்தகைய கேள்விகளை பேசும் பகிர்ந்த கொண்ட சில நிகழ்வுகள் ..என் மதிப்பு மிக்க onsite வாடிக்கையாளர் நித்ய கோபாலன் அவர்களின் அவர்குஏற்பட்ட நிகழ்வுகள் .. 


கார்ப்பரேட் அலுவலகத்தில் நாம் வேலை செய்யும் போது நட்பா? எதிரியா? மறைமுக துரோகியா? என்று கண்டுபிடிப்பது கடினம் ஆகி விடும் அதாவது சில நாட்கள், 1 மாதம் கூட ஆகும் புது ப்ரொஜெக்ட் என்றால்.


வெகுளி எனும் வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு. அதிக கோபம் ஒண்ணு மற்றும் அப்பாவித்தனம்


அதிக கோபம் உள்ள மேலதிகாரிகள் பார்த்திருக்கிறேன். அந்த கோபத்தோடு அழுக்காறு, தற்பெருமை இப்படி பல சேர்ந்து வரும். ஒரு பேக்கேஜ் மாதிரி


கோபம் கொள்ளும் போது கொஞ்ச நாளில் அவர்களே விழுவது மாட்டிக்கொள்வது உறுதி.


வெறுப்பினால் ஏதாவது தேவை இல்லாத நடவடிக்கை எடுப்பார்கள்.


நான் மிக கடினமான ப்ரொஜக்ட்டில் வேலை செய்த போ, எனக்கு கிளைன்ட் நன்றாக வேலை செய்தாய் போன்ற மின் அஞ்சல் அனுப்புவாங்க. இதனை பார்த்து ஆத்திரம் உற்ற மேலதிகாரி வேறு யாரோ இன்னோர் கிளைண்ட் கிட்ட தானே கேட்டு..விஷயம் எப்படியோ மிக உயர் அதிகாரிக்கு தெரிய வந்து அசிங்கமா போய் விட்டது அவங்களுக்கு.


மேலும் நான் அழகான ஸ்கிர்ட் (லாங் முழங்கால் தாண்டி தான் இருக்கும் ) அதனை அணிந்து சென்றேன். அதனை பார்த்து அவர்கள் அசூயை பொறாமை பட்டு திரும்பவும் கோபப்பட்டதை மொத்த குழுவும் கவனித்து விட்டார்கள்.


பசங்கள் இது போன்ற விஷயத்தில் ஷார்ப் என்பதால் "இவர்கள் ஏன் சம்மந்தம் இல்லாமல் மின் அஞ்சல் அனுப்புகிறார் ட்ரெஸ் code பற்றி. நீங்கள் சரியாக தானே அணிந்து உள்ளீர்கள் ..?இதனால் இவர்கள் பொறாமை தான் வெட்ட வெளிச்சம் ஆனது" என்றனர் . இது போன்ற கோபம் கொண்டால் அவர்களே தப்பு செய்து மாட்டி கொள்வார்கள்.



அடுத்தது எதிரி இடத்தில் அப்பாவித்தனம்...ஹ்ம்ம்ம் இது யோசிக்க வேண்டிய விஷயம்,


ஆம் ஞாபகம் வந்தது. அது மிக பெரிய ப்ரொஜெக்ட்..ஆனால் என் பாஸ் அவர்கள் திடீர்னு கொஞ்சம் பிடிக்காமல் நடந்து கொள்ள தொடங்கினார் என்னிடம்.


ஏனெனில் எங்க இருவருக்கு அடுத்த லெவல் VP அவருக்கு என்னை பிடிக்கும். நல்லா வேலை செய்வேன்...presales என்பதால். மற்றும் கிரெடிட் கார்டு வேலைகளில் ஒவ்வோர் ஜாப் எடுத்து கொள்ளும் நேரத்தை நான் குறைத்து கொடுத்துவிட்டேன்.


மற்றும் என் குழுவுக்கு அதற்கு முன் இருந்த பாஸ் micromanage செய்ததால் குழு மிகவும் நொடிந்த நிலைமையில் இருந்தார்கள் போலும். நான் வந்த 2 மாதத்தில் குழு சந்தோஷத்தோடு காணப்பட்டதையும் அவர் அறிவர். ஏனனில் நான் இல்லாத நேரத்தில் ஒவ்வொருத்தரிடம் புது பாஸ் எப்படி என்ற feedback வாங்கி வைத்து இருந்தார்.


இப்போது..இந்த எங்கள் நடு நிலைமையில் உள்ளவர்க்கு இதெல்லாம் பிரச்சனை. அவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவும் நானே...வேற வேலை பார்க்கும் முடிவில் resignation கொடுத்து விட்டேன்.


வேற வழி இல்லை. இவர் என் பாஸ் அவர்களும் சென்னை region ஹெட். ஆனால் இப்படி நடந்து கொள்கிறார்.


இஷ்டத்துக்கு மின் அஞ்சல் போடுகிறார் HR எல்லோருக்கும் "இவள் இப்போது வந்தாள் இப்போது கிளம்பினாள்" போல அதெல்லாம் பார்த்து VP அவர்களுக்கும் கிண்டல்! HR எல்லோருக்கும் தெரியும் யார் மீது பிரச்சனை என்பதும்....என்னை இருக்க சொன்னனாலும், நான் வேற முடிவு செய்து விட்டு பிறகு வேற நாட்டுக்கு போய் விட்டேன்....!


அந்த 3 மாசம் என் immediate boss செய்த அனைத்துமே அவருடைய அதிகாரிக்கு, எனக்கு மற்றும் எங்கள் region HR எல்லோருக்குமே கொஞ்சம் வெகுளியாக தான் இருந்தது....


"என்னடா இந்த மனுஷர் இப்படி நடந்து கொள்கிறாரே?" என்றும்....இடையில் என் தந்தையும் மறைந்து போக..நானும் பணியை முடித்து கொடுத்துவிட்டு கிளம்ப...அந்த மனுஷருக்கு மன சாட்சி உருத்தி இருக்கலாம்..!!.


ஆனால் கார்ப்பரேட் வாழ்க்கையில் எல்லா மாதிரி முதலாளிகள் நமக்கு வருவாங்க. நம்முடைய அப்போதைய அதிர்ஷ்டம் தான் எல்லாமே. 

நன்றி !!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


 கேள்வி :  10 வருட காலத்தில் மனை தங்கம் பங்கு எது சிறந்த முதலீடு?

என் பதில் :..

எந்த வித சந்தேகமும் இல்லாமல் மனை தான்.

வணிக ரீதியாக மனை வாங்கி தொழில் செய்வது

நிறைகள்

ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்து கிடைக்கும்

ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்

பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்

சமயோசிதமாக பேசும் ஆற்றல் வரும்...

சமீபத்தில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை உற்று கவனித்தீர்களா? நேற்று ஏறியது, இன்று இறங்கியுள்ளது. விலை ஏறினாலும் தங்கம் கிடைத்துவிடும்.

ஆனால் பூமியில் நிலப்பரப்பு என்பது குறைவு. இனி கடலை துத்து நிரப்பி நிலத்தை உருவாக்க முடியாது. (சீனா போன்ற நாடுகள் அதையும் செய்ய தயார்!). இன்னும் சில காலங்களில் வாங்குவதற்கு நிலம் கிடைப்பதே அரிது. மனையில் கட்டிய வீட்டுக்கு கொடுப்பினை எத்தனை பெயருக்கு உள்ளது. இப்போது கிடைப்பது எல்லாம் வெறும் சிமெண்ட் டப்பாக்களான அபார்ட்மெண்ட் தான்.

கொரோனா காலத்தில் பங்கு சந்தை படும் பாட்டை கண்டீர்களா! அதுல பணம் போட்டு எடுக்க நிறைய தில் வேண்டும்.

நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 13 அக்டோபர், 2020

இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.. அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

 இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்..

அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

உலகம் முழுக்க ஆம்பளைக எப்படி ஹார்ட் அட்டாக் அதிகமா சாகறானோ,

அதே மாதிரி தான் பொம்பளைக கேன்சர் ல சாகறாங்க..

இதுல உசுரப் பறிக்கற கேன்சர விட,

மார்பக புற்றுநோய்,

கர்ப்ப வாய் புற்றுநோய்ல பாதிக்கப்படுற பெண்கள் தான் ஜாஸ்தி..

அதுக்கு காரணமும் நாம தான்..

ஒரு ஆம்பள வெளி இடத்துக்கு போயிட்டு,

வீட்டுல நொழஞ்சதும் சட்டை, பேண்டு, ஜட்டி, பனியன்னு அத்தனையும் தூக்கி வீசிட்டு, பப்பரக்கான்னு சிங்கிள் லுங்கியோட செட்டிலாயிடுவான்..

வீட்டுல இருக்க, அல்லது வேலைக்குப் போற எந்தப் பொண்ணா இருந்தாலும் நாலு லேயர் தடிமனான கச்சையக் கட்டிட்டே தொங்க முடியாது..

நீ ஒரு பனியன், ஒரே சட்டை போடுற..

அவங்க ப்ரா, ஜாக்கெட், பாவாடை,

பொடவ அல்லது நைட்டி, அதுக்கு மேல சால் னு எத்தனய சுமக்கணும் தெரியுமா..?

இதுல சுடிதார்னா, பிரா மேல ஸ்லிப்பு, டாப்பு, ஷாலுன்னு பல சித்திரவதை இருக்கு..

தனக்கு உண்டான அளவு பேண்டீஸும், பிராவையும், நாப்கினையும் கடையில தைரியமாக் கேட்டு வாங்க முடியாத அளவு அவமானமாத் தான் நாம பொண்ணுங்கள வெச்சிருக்கோம்..

யாராவது பெண் போலீஸ், அல்லது பாரா மிலிட்டரியில இருக்கவங்க உங்க வட்டத்துல இருந்தா,

அவங்க போட வேண்டிய ட்ரெஸ் என்னென்னனு கேளுங்க..

ரத்தக் கண்ணீர் வரும்..

20 மணி நேரம் இறுக்கிப் பிடிக்கும் உடையில் டூட்டி பாத்துட்டு, ஒண்ணுக்குப் போகறதுக்குக் கூட முடியாத வேதனை புரியும்..

மார்பகப் புற்றுநோய் உங்க சொந்த பந்தந்ததில் யாருக்கும் இருந்தா விசாரீங்க..

அப்புறம் நக்கலா எப்பவும் பேச மாட்ட..

மார்பையே அறுத்தெடுத்துக் குடுத்த பொண்ணாட வலி எஎன்னன்னு புரியும்..

கர்ப்பப்பை புற்றுநோய் வரக் காரணம் என்ன தெரியுமா?

நீ உன்னோட ஆணவ உறுப்பை ஒழுங்கா சுத்தம் பண்ணாதது தான்.. 

அதுல உருவாகுற மாவுக் கிருமிகள் பொண்ணைத் தான் கொல்லும்..

சில சகோதரிகள் பதிவுல, #No_bra_day க்கு, சில தறுதலைகள் போட்டிருந்த எச்சைக் கமெண்டுகளுக்கு என் அட்டாக்..📚📚✍️✍️