திங்கள், 23 நவம்பர், 2020

 அந்த மூணு குழுவில் ...என்ன வியாபாரம் செய்கிறார்கள் ..அந்த குழுவில் தொகை வாங்கி எதற்கு பயன்படுத்தினார்கள் ...கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளவும் ..

தொழிற்பயிற்சி ..சிறு தொழில்முனைவோர் ..

சுற்று சூழல் இயக்கம் ..கயிறு வாரியம் மூலம் பயிற்சி ...இரண்டு மாத பயிற்சி ..6000 ரூபாயுடன் ...சிறிய உபகரணங்கள் வாங்கி தொழில் முனைவோர் ஆகலாம் ...அவர்களின் சக்திக்கு தகுந்த ..நேற்று என் அருமை தம்பி தமிழின் வழிகாட்டுதலின்படி சென்று பயிற்சி குழு இருக்கும் பொட்டையம்பாளையம் கிராமத்திற்கு சென்று தெரிந்துகொண்டேன் ..இதை தம்பி மூன்று வருடமாக சொல்லிக்கொண்டிருந்தார் ..என் அருமை மாப்பிள்ளையும் செந்தில்ராம் மறவாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ..நேற்று பார்வையிட்டு ..அதன் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டேன் ..இதற்கான பயிற்சி யை எனது நண்பர்கள் நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியர் மணி அவர்களும் .சுற்றுசூழல் செயலாளர் நாகராஜன் என்பது தெரிந்து எனக்கும் மகிழ்ச்சி ..இதைவிட அங்கு பயிற்சி எடுப்பவர்கள் அதிகம் நம் கம்பள சொந்தங்கள் என்றவுடன் மகிழ்ச்சி இன்னும் கூடுதல் ஆனது ..இந்த பயிற்சியை அடுத்த நம் கம்பள சொந்தங்கள் இருக்கும் ஊர்களுக்கு பரவலாக்க கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் அதற்கான ஏற்பாடுகளை குழுமூலம் செய்திகொண்டுள்ளோம் ...அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..

இதற்கான தகவல் வேண்டுவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .நன்றி 

சிவக்குமார் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை தொழில்சார் குழுமம் 

உடுமலைப்பேட்டை 

9944066681...


செவ்வாய், 17 நவம்பர், 2020

 கேள்வி : ஒரு செயலை செய்வதற்கு முன் கூறலாமா ..விவாதிக்கலாமா ..?


என் பதில் :...இதில் எனக்கு வாழ்க்கை கல்வி எனக்கு அதிகம் கற்று கொடுத்து இருக்கிறது ...


Online-ல் கூவாதே. நிஜத்தில் மாற்றத்தைக் கொண்டு வா....

முடிந்தவரை நீங்கள் செய்யப்போகும் செயல்களை பிறரிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் பட்சத்தில் அதனுடைய வீரியம் குறைய வாய்ப்புள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நம்முடைய வாழ்வில் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரும். அதற்கும் பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் முன்னரே, பல கணக்குகளை போட்டுக் கொண்டு, பிறரிடம் வெளிப்படுத்தும்போது, ஒரு பொய்யான மனநிறைவு நம்முள் ஏற்பட்டுவிடும். அந்த மன நிறைவின் காரணமாக, நாம் செய்யப்போகும் செயலில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அது தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் அதிகமாக ஏற்படுத்தும்.

வெற்றி பெறுவேன் என்பதற்கும், வெற்றி பெற்றேன் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம். 

எனவே, நீங்கள் வெற்றி பெறும் முன்பே நான் இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன், அதை சாதிப்பேன், இதைச் சாதிப்பேன் என்று அறைகூவல் விடுக்க வேண்டாம்.

வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒன்றை எப்பொழுதும் பரிசாக வைத்திருக்கும்.

சிறுக சிறுக செய்தாலும் சிறப்பாக செய்வதே, நம்மை ஒரு பிராண்டாக மற்றும் என்பதை நான் சமீபத்தில் உணர்ந்தேன்.😊.

உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுங்கள். பிறருடைய அடையாளங்களோடு உங்களை அடைமொழியாக இணைக்க வேண்டாம்.

முயற்சி தான் நம்மை முன்னேற்றும்💪.

நன்றி ....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

 கேள்வி : கோவையில் குடியேற சிறந்த பகுதிகள் எவை ?


என் பதில் ..:  நான் அறிந்தவரை 1996 முதல் இன்று 16-11-2020...நம்ம 

கோயம்புத்தூரில் 5 முதல் 30 கிமீ சுற்றளவில் இதற்கு நிறைய options உண்டு 


பணியிடம் / தொழிலகம் மற்றும் பள்ளி / கல்லூரி இருக்கும் இடத்தை பொறுத்து 


காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், ராம்நகர், சிவானந்தா காலனி, TVS நகர், தடாகம், கணுவாய், மருதமலை, இடையர்பாளையம், வடவள்ளி,தொண்டாமுத்தூர் , வேடப்பட்டி, R.S. புரம், ரெட் ஃபீல்ட்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வெள்ளளூர், மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், போத்தனூர், கடைவீதி, அசோக் நகர், காந்திபார்க், பொன்னையராஜபுரம், செல்வபுரம், சுண்டைக்காமுத்தூர், பேரூர், காளப்பாளையம், கோவைபுதூர், குனியமுத்தூர், பாப்பம்பட்டி, சின்ன குயிலி, பெரியகுயிலி, கணபதி, சரவணம்பட்டி, வினாயகபுரம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோவில்பாளையம், துடியலூர், NGGO காலனி, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, அன்னூர் சாலை, பிளிச்சி …


போன்ற பல வீட்டுமனை பிரிவுகள் சில பல வசதிகளுடன் தேர்வு செய்வார்கள்.


குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மனை / வீடு / அடுக்ககம் விலை அல்லது வாடகையின் பட்ஜெட்டை அனுசரித்து இங்குள்ளோர் குடியேறுவதுண்டு.


கோவை மாநகருக்கு கானல் நீராக இருக்கும், flex banner - ல் மட்டுமே அவ்வப்போது பார்த்து வரும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் எங்கள் கோவைக்கு அமைந்துவிட்டால் ?! ..இன்னும் சிறப்பு ...காத்திருப்பு என்றும் வீண்போவதில்லை ..நம்பிக்கையுடன் ..வளர்ச்சி ..நிலையான வளர்ச்சி ..நம்ம ஊரு கோயமுத்தூரு தானுங்க .....


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 14 நவம்பர், 2020

 Peelamedu Day ....

😊
கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு - வயது 308
கல்விக்கும், செல்வத்துக்கும் புகலிடமாகி, பல புகழ் பெற்ற மனிதர்களைப் பிரசவித்து, கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு என்ற ஊர்தான், அந்த மகிமைக்குரிய மண். அதென்ன புதுப்பெயர் பூளைமேடு...அது புதுப் பெயர் இல்லை; அதுதான் பழைய பெயர்.
பூளைமேடு,
கோவையின் முக்கிய அங்கம்; சொல்லப்போனால், இந்த நகரின் மூளை. பூளைச் செடிகள் பூத்த மேடான பகுதியாக இருந்ததால், 'பூளைமேடு' என்று அழைக்கப்பட்ட ஊர்தான், பேச்சு வழக்கில் மருவி, பீளமேடு என்றானது. அன்றைய பீளமேடு என்பது பீளமேடுபுதூர், பாப்பநாயக்கன் பாளையம், ஆவாரம்பாளையம், உடையம்பாளையம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாகும்.
சங்கனூர் பள்ளத்துக்கு தெற்கே பீளமேடு புதூர், வடக்கே பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பகுதி, கிழக்கே நவ இந்தியா முதல் விமான நிலையம் வரை உள்ள பகுதிகள் இதன் இன்றைய எல்லைகள். இங்குள்ள வரதராஜபெருமாள் கோவில், ரேணுகாதேவி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் ஆகியவை பீளமேடு உருவான காலத்திலேயே தோன்றியவை.
ஒரு கொசுவர்த்தியைச் சுழற்றிக் கொண்டு 'பிளாஷ்பேக்'கிற்குள் போவோம்....
கி.பி., 1378க்கு பின், இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தென்னிந்தியாவின் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசால் மீட்கப்பட்டது. பிறகு, கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி.,1529 ல் மதுரையில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் விஸ்வநாத நாயக்கர்; அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தன.
நாயக்கர்களுக்கும், மைசூர் உடையார்களுக்கும் போர் ஏற்பட்டதால் கோவையின் பெரும்பகுதி மைசூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டதாக மாறியது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் கோவை பகுதியில் கன்னடர்கள் அதிகம் குடியமர்த்தப்பட்டனர். கி.பி., 1711 ல் கோவைக்கு மைசூர் மகராஜாவின் பிரதிநிதியாக மாதேராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். கி.பி.1710 ல் குருடிமலையில் பெய்த பெரும் மழையால் சங்கனூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அதையொட்டியுள்ள கிருஷ்ணாபுரம், கணபதி, ஆவாரம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வீடுகளை அடித்துச் சென்றது; பலர் உயிரிழந்தனர்.
பலர், மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தாழ்வாக இருந்த கிருஷ்ணாபுரத்தில் வெள்ளச்சேதம் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் மேடான பூளைமேடு பகுதியில் குடியேற விரும்பினர். கங்கா நாயுடு, கொத்தார் முத்து நாயுடு, பேகார் எல்லையப்ப நாயுடு, ராமன், சுப்பன், வெள்ளிங்கிரி, ஆசாரி, ராமபோயன் ஆகியோர் தலைமையில் மாதேராஜாவை சந்தித்து தங்கள் குடியிருப்பை பூளைமேடுக்கு மாற்றித் தரும்படி கேட்டனர்.
ஆரம்பத்தில் மறுத்த மாதேராஜா, பின்பு தெலுங்கர்களுடன் கன்னடர்களையும் சேர்த்து குடியேற அனுமதித்தார். 11.11.1711 அன்று பூளைமேட்டில் குடியேற பூமி பூஜை போடப்பட்டது. வீடுகள் கட்ட, குருடிமலை மற்றும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து மரங்கள் கொண்டு வரப்பட்டு 200 வீடுகள் கட்டப்பட்டன. அன்றைய பூளைமேடு கிராமத்தின் மக்கள் தொகை, ஆயிரம்.
ஊருக்குள்ளே பெருமாளுக்கும், மாரியம்மனுக்கும் தனித்தனி கோவில்களும் தனித்தனி கிணறுகளும் வெட்டப்பட்டன. இக்கிணறுகளை 1813ல் நம்புரார் சாமா நாயுடு மகன் ரகுபதி நாயுடு கோவிலுக்கு தானமாக அளித்தார். பூளைமேட்டில் ஒன்பது குளங்கள் இருந்தன; அதையொட்டி, காடுகளும் தோட்டங்களும் உருவாகின.
ஊரின் கிழக்கில் ஒரு தண்ணீர்ப்பந்தலும், அவிநாசி சாலையிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் (பயனீர் மில் சாலை) மயானமும் இருந்தன. இன்றைய பீளமேடு புதூரின் அன்றைய பெயர், கொள்ளுக்காடு. ஆரம்பத்தில் இப்பகுதியில் பத்து வீடுகளும் தோட்டங்களும் மட்டுமே இருந்தன. நாளடைவில், அதுவும் பெரிய ஊராக விரிவடைந்தது. கல்வி, மருத்துவம், தொழில், தொழில்கல்வி, மருத்துவக் கல்வி என பல துறைகளிலும் வளர்ந்து, கோவைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத்தரும் மூளையாக இருப்பது, இந்த பூளைமேடுதான். பெயருக்கேற்ப, பலரையும் வாழ்வில் உயர்த்தி விட்ட இந்த மண்ணுக்கு வயது 307;
வாருங்கள்...வாழ்த்துங்கள்.
வளரட்டும் பூளைமேடு...வாழ்த்துவோம் மகிழ்வோடு!.

வெள்ளி, 13 நவம்பர், 2020

 திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலைபேட்டை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

இன்று திருமதி .செல்வி விஜயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 14-11-2020

ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ்...வக்கீல் நாகராஜன் வீதி ,(BSNL அலுவலகம் எதிரில்)உடுமலைப்பேட்டை,தொடர்பு எண் : .94891 87696. 👍🌱🌱🎂🎂


திங்கள், 9 நவம்பர், 2020

 

கேள்வி : மென்திறன்கள்  என்றால் என்ன ?..ஒரு சிறு விளக்கம் அளிக்க முடியுமா ..?


என் பதில் :..


மென்திறன்கள் என்பது ஒருவர் மற்றொருவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பழகும் திறன், தொடர்புத் திறன், ஆளுமை பண்புகள், அணுகுமுறைகள், தொழில் சார்ந்த பண்புக்கூறுகள், உணர்வுகள் சார்ந்த திரன் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மேற்கண்ட பண்புகளைப் பயன்படுத்தி ஒருவர் தாங்கள் செய்யும் தொழிலில் யுத்திகளை கையாள்வது, குழுக்களில் பணிபுரியும் பொழுது அதற்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தங்களுடைய இலக்கை அடைவது அவசியமாகிறது.


காலின்ஸ் ஆங்கில அகராதியில், மென்திறன்கள் பற்றி நான் படித்து தெரிந்த கொண்ட விளக்கம் ..


"மென்திறன்கள் என்பது சில பணிகளுக்கு தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களை கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறை ஆகும்"


தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.


2020 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணலில் பின்வரும் மென் திறன்களை உடையவர்களையே பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.


தொடர்புத் திறன்

சுயமுயற்சி

தலைமைப்பண்பு

குழுப்பணியாற்றுதல்

பொறுப்பேற்று செயலாற்றுவது

பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் திறன்

முடிவெடுக்கும் ஆற்றல்

கடினமான பணியையும் ஏற்று செய்யும் திறன்

நேரத்தை நிர்வகிக்கும் திறன்

பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை

பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிவெடுக்கும் திறன்

இவற்றுள் உங்களுக்கு இருக்கும் மென்திறனை கண்டறிந்து அதை உங்கள் தற்குறிப்பில் இணையுங்கள்.


நேர்காணலில் உங்களுடைய மென்திறனைப் பற்றிய கேள்விகள் எழும்பொழுது உங்களுடைய மென்திறனை விளக்கும் படியான உங்கள் வாழ்க்கையில் நடந்த எடுத்துக்காட்டுகளைப் பகிருங்கள்.


உங்கள் திறமை உலகறிய மென்திறன் தேவை!


மென்திறன்கள் பயில்வோம்! சாதனை படைப்போம்!


நன்றி ...வாழ்த்துக்கள் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 7 நவம்பர், 2020

 மாலகோவில் ...🐂🐐🥰🌱🌳


தைமாதம் ..சித்திரை மாதமும் ..கால்நடைகளை இங்கு இருக்கும் குட்டையில் குளிப்பாட்டி ...இந்த மாலகோவிலில் வருடம் தவறாமல் வழிபாடு செய்வது ஒரு சமூக மக்களின் பண்பாடு ..பாரம்பரியம் ...

கோழிக்குட்டை ..பண்ணைக்கிணறு அருகே ..புதுப்பாளையம் செல்லும் வழியில் 


உடுமலைப்பேட்டை .. 📚📚✍️✍️🌱🌳⚔️🏹🐐🐂🐂

 


திருமண வரவேற்பு நிகழ்வு ..


என் அருமை மாப்பிள்ளை A .தினேஷ் பாபு -D .ரேவதி 

புதுமண தம்பதிகளுக்கு ..வாழ்த்துக்கள் ..

நாள் :10-11-2020

கிழமை :செவ்வாய் கிழமை ...

இடம் :GK மஹால் .சோமவாரப்பட்டி -பெதவை -உடுமலைப்பேட்டை 

நேரம் : மாலை - 6  மணிமுதல் 10 மணிவரை 


மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .

இங்ஙனம் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

வெள்ளி, 6 நவம்பர், 2020

திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை


திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை 

பொறுப்புகள் 

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் மாநில மகளிர் அணி செயலாளர் 

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் 

நமது கம்பள பெண் சமுதாயத்தில் நமது சொந்தங்களுடன் சிறு சிறு சமுதாய பணிகள் செய்து இந்த அளவிற்கு முன்னேறியது ஒரு வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்ளலாம் ..தனக்கு திருமணம் முடித்ததும் ..தன் தாயின் இழப்புடன் ..தன் கணவர் ராமசாமி அவர்கள் ,டைல்ஸ்வியாபாரத்திற்கு ,தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.வியாபாரத்திற்கு முழுமூச்சுடன் ஒத்துழைத்து தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தன் கூட பிறந்த தம்பிகளின் கல்விக்கும் தன் கணவரின் ஒத்துழைப்போடும் ,பொறுப்புடன் வளர்த்து கல்வி தான் நம் சமுதாயத்திற்கு வளர்ச்சிக்கு உதவும் என்று ஆணித்தரமாக எண்ணி கல்லூரி படிப்பு முடிய வாழக்கையில் உயர்த்தி ..இரண்டு தம்பிகளின் திருமண பந்தத்தில் ஒன்றிணைத்து பொறுப்புடன் இன்று நம் கம்பளசமுதாயத்தில் தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும்  முன்னேற்றம்  அடைய வைத்து  நம் கம்பள சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக உள்ளது .திருமதி மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இரண்டு ஆண் செல்வங்களை பள்ளிப்படிப்பிற்கு உறுதுணையாக ,குடும்ப சக்கரத்தை பொறுப்புடன் நகர்த்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..

இந்த வளர்ச்சியை கண்கூட பார்த்த நம் சமுதாய தலைவர்கள் ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் ..திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு ..மாநில மகளிர் அணி செயலாளர் பதிவு கொடுத்து .நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் நிகழ்வுகள் நடக்கும்பொழுது இவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்வது மகிழ்ச்சி ..மேலும் இவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு சிறு கல்விக்கான நிதிகளையும் நம் சொந்தங்களுக்கு அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..


இன்று திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...உடுமலைப்பேட்டை ..





 

வியாழன், 5 நவம்பர், 2020

 Sivakumar Kumar........கார் இன்சூரன்ஸ் -9944066681

கேள்வி : வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம்

என் பதில் :.

வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம் என்பதை நாம்  

தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

அவ்வாறு இழப்பீடு பெறுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்: 

1) மூன்றாவது தரப்பினருக்கு ஏற்படும் உடல் சேதம் அல்லது பொருள் சேதம். அல்லது,

2) காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இந்த சுய சேத 

இழப்பீட்டைப் பெற அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம். 

மூன்றாம் தரப்புக்கான இழப்பீடு உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம். அல்லது வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம். 

சுய சேதத்திற்கான இழப்பீடு வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும். விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று. உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும். இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

திருட்டுக்கான காப்பீடு உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs,CAR INSURENCE) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

என் பதில் : 

 எங்கே வீடு கட்ட போகிறீர்கள்.
சென்னை போன்ற நகரமா ?
அல்லது மதுரை, கோவை போன்ற இரண்டாவது நகரமா?
பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை ..யா .அல்லது       கிராமத்தில் கட்ட போறீங்களா?

உங்கள் வரைபடம் எங்கே?
நிலம் எவ்வளவு?

நிலம் 1000 sft - அல்லது கட்டிடம் 1000 sft ?
ஒரு மாடியா ? இரண்டு மாடியா?

உங்கள் நிலத்துக்கு அருகில் உள்ள சாலையின் அகலம் என்ன ?

உங்கள் நிலத்தில் எது போன்ற மண்..(ஜி..நிலமே இன்னும் வாங்க வில்லை)
நல்ல செம்மண் போல இருக்குமா? களிமண் போல இருக்குமா?
அல்லது குப்பைகள் போல மூடி உள்ள இடமா ? சதுப்பு நிலம் போன்ற இடமா ?

கம்பௌண்ட் சுவர் கட்ட வேண்டுமா? இல்லை பக்கத்தில் உள்ள நிலத்தில் ஏற்கனவே சுவர் உள்ளதா?

செப்டிக் டேங்க் கட்ட வேண்டுமா? அல்லது நகராட்சியின் கழிவுநீர் திட்டம் (line) ஏற்கனவே உள்ளதா ?

கீழ் நிலை தொட்டி (underground tank) கட்ட வேண்டுமா?

இது எதுவுமே இல்லாமல் ஒரு estimate கேட்டு உள்ளீர்கள்.

எதுவும் இல்லை..சும்மா கேள்வி கேட்ட வேண்டும் என்று கேட்டு உள்ளீர்களா?

பதில் எடுத்து கொள்ளுங்கள்.

கோவை  போன்ற 2வது நகரம் என்று வைத்து கொள்ளுங்கள்.

இன்னும் தெளிவாக வேண்டும் என்றால் ஒரு கட்டிட Architect அவர்களிடம் சென்றால் அவர் உங்களுக்கு தெளிவான வரைபடம் வரைந்து குடுப்பார்.

_______

Option 1 - விருப்பத்தேர்வு 1
Option - 2 - விருப்பத்தேர்வு 2
Option - 3 (Land 900 to 1000 sft) - விருப்பத்தேர்வு 3
வரைபடம் இணைத்துள்ளேன் ..பார்க்கவும் .
சரியான திட்டமிடல் (Planning) உடன் பண்ணினால் 15 லட்சத்தில் கட்ட முடியும்.

நீங்களே சொந்தமாக, உங்கள் மேற்பார்வையில் கட்ட வேண்டும். 6 மாதம் வீட்டுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும்.
வீட்டுக்கு குறைந்த செலவினால் ஆன tile மட்டும் தான் கட்டப்பட வேண்டும். (35 to 80 sft விலையில்)
ஜன்னல் மற்றும் கதவுகளை எண்ணிக்கை சற்று குறைவாக வைக்க வேண்டும் (அடுப்படியில் கதவு தவிர்க்க வேண்டும்…அது போல சில விசயங்கள்).
வீட்டின் உயரம், சாலையில் இருந்து 2 அடி உயரம் தான் இருக்கும். (I.e . வீட்டின் உட்புறம் ..தரையின் அளவு சாலையை விட 2 அடி தான் உயரம்..நீங்கள் இந்த உயரத்தை ஏற்றினால் செலவு அதிகரிக்கும்
ஜன்னலின் மரத்தை வேப்ப மரம் உபயோகப்படுத்தலாம். தேக்கு மரம் விலை உயர்வு.
வீட்டின் cupboard எல்லாம் பின்னாடி செய்து கொள்ள வேண்டும். (15 லட்சத்தில் இது சேராது.)
நிலம் வாங்கும் போது, செவ்வக வடிவ நிலத்தை விட சதுரவடிவ நிலம் வாங்கினால் வரைபடம் வடிவமைப்பு (Design) செய்யும்போது மிக சிறந்த Design / Elevation அமையும்.

நன்றி ...உங்கள் கனவு வீடு அமைய வாழ்த்துக்கள் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 3 நவம்பர், 2020

 திருமண வாழ்த்துக்கள் ..04-11-2020

என் அருமை மாப்பிள்ளை S .பாலகுமார் -என் அருமை மகள் N .வசந்தா 

உடுமலைப்பேட்டை ,கே .வல்லகொண்டபுரம், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் திருக்கோவிலில் . நேரம் :காலை  6.00 மணிக்குமேல் 7.25 ..குள் ..நடைபெறும் திருமணத்திற்கு ..புதுமண தம்பதிகளுக்கு . திருமண வாழ்த்துக்கள் 


கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 




ஞாயிறு, 1 நவம்பர், 2020

ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-11-2020)

 இன்றைய ஞாயிறு ...01-11-2020


ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-110-2020)


இன்றைய பயணம் வளம் கொழிக்கும் மருத நிலம் ...கரை வழி நாடு ...மேய்த்தல் நிலங்கள் உள்ள பகுதி ..தன் மக்களுக்கு வாரிக்கொடுத்த குமணன் வள்ளல் வாழந்த பகுதி ..வணிக வழி கால்நடை ,அழகன் குளம் முதல் கல்லாபுரம் பெருவழி சந்தை ..R .வாடிப்பட்டி அருகே பார்த்த வணிக குறியீடு கொண்ட நடுகல் ...ஏழூர் அம்மன் தரிசனம் ..குமணன் தவம் செய்த வழியில் ஆண்டிபட்டி மலை அடிவாரம் பெருமாள் கோவில் ...பழனி வையாபுரியில் இருக்கும் அம்மன் வழிபாடு ...பயணம் முடித்ததும் ..பெருமழை  30 நிமிடம் நனைந்து  உடுமலை வந்தது மிக்க மகிழ்ச்சி ...