வியாழன், 25 மே, 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

Madurai.......21-05-2017.....மாநில செயல்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் ....

1. திருச்சி வடக்கு ,தெற்கு மாவட்டங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகளை சந்தித்து தங்களையும் பண்பாட்டு கழகத்தில் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர் .

2. நமது "வீரபாண்டிய கட்டபொம்மன்"மாத இதழுக்கு புரவலர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது .இதில் 10  புரவலர்களுக்கு குறையாமல் தேர்வு செய்து நிரந்தரமாக இதழின் முதல் பக்கத்தில் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது .புரவலர்களை தேர்வு செயவது அவர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து தேர்வு செய்வது எனவும் அதற்கான தொகை எதுவும் நிர்ணியக்கப்படவில்லை .

3. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கருத்து கேட்டகப்பட்டது .அனைவரும் ஒருமுகமாக இந்த கருத்துரு ஏற்றுக்கொண்டு தங்கள் மாவட்டத்தின் விருப்பத்தினை தெரிவித்தனர் .

 4, காலவாதியாகிவிட்ட சந்தா தொகைகளை ,அது 100 அல்லது 250 ஆக இருந்தாலும் அதை காலாவதியாகிவிட்டதாக கருதி,புதிதாக ரூபாய் 500 வசூலக்க முடிவு செய்யப்பட்டது .

5.மாநில ,மாவட்ட நிர்வாகிகளை அவர்களுக்குரிய பணிகளை வரன்முறை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது .

6.விருதுநகர் தொட்டியபட்டி பிரச்னையில் சங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வழக்கில் உட்படுத்தப்பட்டவர்களை பிணையில் எடுத்து ,தொட்டியபட்டி க்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் .இது குறித்து மேல் நடவடிக்கை எவ்வாறு எடுப்பது என்பதை விவாதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது .
இது குறித்து நம் சமுதாயத்துக்கு நிரந்தரமாக சாதி இன மோதல்களை ஒரு தீர்க்கமான தீர்வுகாணவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .கூட்டத்திற்கு வந்திருந்த தொட்டியபட்டி மக்களுடன் ஒரு விரிவாக பேசி எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது .

7.நமது பண்பாட்டு கழக இதழுக்கு அதிகப்படியான சந்தாக்களை தானாக முன்வந்து செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர்

8.நமது பண்பாட்டு கழக கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது ..

V.K .சிவக்குமார்
டிஜிட்டல் ராஜேந்திரன்
மாநில செய்தி தொடர்பாளர்கள்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
உடுமலைப்பேட்டை..

சனி, 20 மே, 2017

திரு .கே.முருகவேல்
தலைவர்
கோவை,திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம்
தொலைபேசி :9751617920...

1971 -ம் ஆண்டு செப்டம்பர் 2 ம் தேதி 1979 முதல் ..53,தளி ரோடு ,உடுமலைப்பேட்டை என்ற விலாசத்தில் குமரன் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது .

1980 முதல் 1,. வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை  என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று  வரை தொடர்ந்து தட்டச்சு பயிலகம் இயங்கி கொண்டுஇருக்கிறது .1990 ல் பொள்ளாச்சி கல்வி மாவட்ட வணிகவியல்  பள்ளிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 27 ஆண்டு கோவை மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் துணை தலைவராக இன்று வரை பதிவு வகித்துவருகிறார் .தற்போது 14.05.2017 முதல் கோவை -திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டு இயங்கி வருகிறார் . 

புதிதாக பொறுப்பு வகிக்கும் தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

குறிப்பு : நமது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல் தலைவராகவும் ,பண்பாட்டு கழக இதழ் இணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..கோவை -திருப்பூர் மாவட்டத்தில் அதிக இளைஞர்களை பதவியில் அமர்த்தி வழிநடத்தி கழகத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டுகொண்டுஇருக்கிறார் ..

செவ்வாய், 9 மே, 2017


நம் கம்பள சமுதாயத்தில் இப்படி ஒரு கர்நாடக  சங்கீத இசைமேதை வாழ்ந்திருக்கிறார்.....

‘இசை மகாசமுத்திரம்’ விளாத்திகுளம் சுவாமிகள் நூல் மற்றும் ஆவணப்படம் வெளியீட்டு விழா


‘இசை மகாசமுத்திரம்’ என்று அனைத்து இசைக் கலைஞர்களாலும் போற்றிப் புகழப்பட்ட கர்நாடக சங்கீத ஜாம்பவான் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் ஆவார். நாதஸ்வர சக்கரவர்த்திகளான திருவாடுதுறை T.N.ராஜரத்தினம், அவரது சீடர் காருக்குறிச்சி அருணாச்சலம், திரு. M.K. தியாகராஜ பாகவதர், திரு. சீர்காழி S.கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் போன்ற பல இசைமேதைகள், விளாத்திகுளம் சுவாமிகளின் இசைப் போராற்றலை கண்டும் கேட்டும் பரவசமடைந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பல குருமார்கள் இருந்தபோதிலும் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளையே தங்களது மானசீக குருவாக எண்ணி வாழ்ந்து சாதித்தார்கள்.
சென்ற தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் உள்ள இசைமேதைகள் அனைவரும் மனதார ஒப்புக்கொண்ட ஒரே விஷயம், ‘விளாத்திகுளம் சுவாமிகளைப் போல் ‘இராக ஆலாபனை’ செய்யவும் பாடவும் இதுவரை யாரும் பிறக்கவில்லை, அவரது குரலுக்கும் ஈடு இணையில்லை’ என்பதாகும். ‘எப்படியாவது கடுமையான பயிற்சி செய்தால் விளாத்திகுளம் சுவாமிகள் பாடிய அளவில் ஒரு பத்து சதவிகிதம் எட்டிப் பிடிக்கலாம். அவ்வளவுதான்!’ என்று தலைவணங்கி அவரைப் போற்றுகின்றனர்.
சங்கீத உலகமே வணங்கும் ஒப்பற்ற கலைஞன் இசை மகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் முறைப்படி எந்த குருவிடமும் சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் கச்சேரிகள் நடந்தாலும் முதல் ஆளாக அமர்ந்து முழு ஈடுபாட்டுடன் ரசித்து, அதனை கிரகித்துக்கொண்டு தனது அற்புத நினைவாற்றலால் இடைவிடாமல் ‘அசுர சாதகம்’ செய்து தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டார். இராக ஆலாபனைகளை ஐந்து நாட்கள் வரை இடைவிடாமல் செய்து சாதனை புரிந்துள்ளார். இதனால் ‘ஆலாபனை அரசன்’ என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.
சங்கீத சக்கரவர்த்தியான விளாத்திகுளம் சுவாமிகள் பிறப்பிலும் ராஜபரம்பரைதான். காடல்குடி மன்னர் ‘வீரகஞ்செய பாண்டியன்’ வம்சாவழியில் வந்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் தாய்வழி சொந்தமாவார்.
பிறப்பிலும் வளர்ப்பிலும் வாழ்ந்த விதத்திலும் சிறப்புப்பெற்ற சுவாமிகள் 76 ஆண்டுகள் இசைக்காகவே வாழ்ந்தவர் என்றே கூறலாம். அத்தகைய மகானது வாழ்க்கைக் குறிப்புகள் ‘இசைமகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்’ என்ற பெயரில் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
நல்லப்ப சுவாமிகளின் அபரிமிதமான இசையைக்கேட்டு பிரமித்த N.A.S. சிவகுமார் என்பவர், அந்த மகானின் அருமை பெருமைகளை அனைவரும் அறியவேண்டும் என்ற சீர்மிகுந்த எண்ணத்துடன் இந்த நூலை தொகுத்துள்ளார். இந்த அரிய தொகுப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா), ரசிகமணி T.K.C, வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி, கோவில்பட்டி சிவானந்தம், ஜி.வெங்கடாச்சலம், கவி.சத்திய சாமுவேல். தூத்துக்குடி பி.இசக்கி, ஸ்ரீ V.G. தெய்வேந்திரன், கு. அழகிரிசாமி, S. நல்லசிவம் பிள்ளை, பா. வேலப்பன், காருகுறிச்சி அருணாசலம் ஆகியோர் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள், சாதனைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர பல அரிய புகைப்படங்கள், சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழா விளாத்திகுளம் சுவாமிகளின் 128-வது பிறந்த நாளான 24-09-2016 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு T.N. ராஜரத்தினம் கலையரங்கத்தில் நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்ததுபோல் நாச்சியார்கோவில் N.R.P. ரவிச்சந்திரன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி அமைந்திருந்ததும் ஒரு சிறப்பாகும்.
மேலும் இந்த அரிய புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விளாத்திகுளம் சுவாமிகளின் பாடல்களும் ஆலாபனைகளும் அடங்கிய ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இது இசைப்பிரியர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாகும். இந்த ஆவணப்படத்தை சி.மகேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் பல விருதுகளை பெற்ற திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனர் திரு. அம்ஷன் குமாரிடம் 16 வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவராவார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாண்புமிகு நீதியரசரும் இசையரசி K.B. சுந்தராம்பாளின் மருமகளுமான K.B.K வாசுகி அவர்கள் புத்தகத்தை வெளியிட கலைப்புரவலர் திரு. நல்லிகுப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். ஆவணப்படத்தை பிரபல பாடகர் திருச்சி லோகநாதனின் தவப்புதலவர் திரு T.L. மகராசன் வெளியிட, அந்த குறுந்தகடை பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி G. சிவசிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை வாரிசான V.V.J.S வீமராஜா அவர்களும், காடல்குடி மன்னரின் ஏழாம் தலைமுறை வாரிசான P. பால்ராஜா சுவாமிகளின் மகள் வழிப்பேரன் திரு. சாமித்துரை மற்றும் இயக்குனர் அம்ஷன்குமார், படத்தொகுப்பாளர் B.லெனின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புத்தகம் மற்றும் ஆவணப்படம்
தொடர்புக்கு:-
N.A.S. சிவக்குமார்,
2/286, 14, முத்துச்சாமி நகர்,
பொங்கலூர் போஸ்ட்,
பல்லடம் தாலுக்கா,
திருப்பூர் மாவட்டம்.
PIN – 641 667
கைப்பேசி – 91596 59788

வியாழன், 6 ஏப்ரல், 2017




கம்பள விருட்சம் அறக்கட்டளை ....உடுமலைப்பேட்டை
பதிவு நாள் -10-04-2017

வரும் திங்கள் கிழமை நமது அறக்கட்டளை பதிவு வரும் ஏப்ரல் 10 ஆம் நாள்  திங்கட்கிழமை அன்று நடை பெற இருப்பதால் .பதிவிற்கு காலை சுமார் 10 மணி  அளவில் .நம் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் ..

இடம் :பத்திர பதிவு அலுவுலகம் ...கச்சேரி வீதி ,உடுமலைப்பேட்டை

அதற்கு முன்னதாக நம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் கழக அலுவுலகத்தில் (வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை )சரியாக காலை 10 மணி அளவில் அனைவரும் ஒன்று கூடி
கலந்தாய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு பதிவு அலுவுலகம் செல்வோம்

பதிவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஸ்ரீ பாலாஜி (வக்கீல் நாகராஜன் வீதி )உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது....

இங்ஙனம்
கம்பள விருட்சம் அறக்கட்டளை ....
நிர்வாகக்குழு .

மேலும் தகவலுக்கு :திருப்பதி தேவராஜன் -99409 15913 கார்த்தி SR -9698082028




ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ....உடுமலைப்பேட்டை

இன்று 02.04.2017  ம்  தேதி ஞாயிறு மதியம் 1.00 அளவில் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை யின் பொதுக்குழு கூட்டம் இனிதாக அறக்கட்டளையின் நோக்கங்களுடனும் ,செயல்படும் முறைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு மகிழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது .

வெள்ளிக்கிழமை பொதுக்குழு கூட்டம் என்று சொன்னவுடன் ஒரு நாள் தான் இடைவெளி உறுப்பினர்கள் வரமுடியுமா கேள்விக்குறியுடன் என் மனதில் ஓடியது...ஒரு நாள் என்றாலும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடத்தி ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ...

முதல் பொதுக்குழு கூட்டம் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் அலுவுலகத்தில் இடம் அளித்து ,பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ,தேநீர் அளித்து உபசரித்ததுக்கு மனமார்ந்த நன்றிகள் .

கௌரவ தலைவர் வழக்கறிஞர் .முருகராஜ் அவர்கள் ,நம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து சந்தேகங்களை நிவர்த்திசெய்தமைக்கு நன்றிகள் .

இன்றைய மதியம் முதல் மாலைவரை நம் சமுதாயம் உயர்வதற்கு திட்டங்களும் ,செயல்பாடுகளும் கலந்துரையாடிய நம் உறுப்பினர்களின் மதிப்புமிக்க நேரத்தையும் ஒதுக்கியதற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...



செவ்வாய், 21 மார்ச், 2017

நமக்கு எப்படியும் பொண்ணு அமஞ்சுரும்னு
கொஞ்சநஞ்ச நம்பிக்க இருந்துச்சு...
 நீயாநானா ப்ரோக்ராம் பாத்தேன்...
இப்பவே ஆன்மீக பயணத்துல அடியெடுத்து
வெக்கறது நல்லதுனு தோனுது...

சிரிக்க ...சிந்திக்க மட்டும் ....

திங்கள், 20 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம்,தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில்  )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!



பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!

வெள்ளி, 17 மார்ச், 2017

கோவை ,திருப்பூர் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

தமிழ்நாட்டில் ஏன் சிறந்த மாவட்டமாக விளங்க காரணம்...
மாநில செயல்தலைவர் திரு .முருகவேல் ,
மாநில கௌரவ ஆலோசாகர் திரு .ராமகிருஷ்ணன்
கழக தலைவர்கள் எல்லாரும் இளைஞர்களை நியமித்ததுதான் நன்றாக செயல்பட காரணம்...

திரு .ராமு
திரு .சந்திரசேகர்
திரு .கோபாலசாமி
திரு .கருணாநிதி
திரு .டிஜிட்டல் ராஜேந்திரன்
திரு .ஜெகதீஷ்
திரு.தீபம் தண்டபாணி
திரு .மாசிதுரை
திரு .முருகராஜ்
திரு .ஜெய்கணேஷ்
திரு .முத்துசாமி
திரு .முத்துராஜ்
திரு  .செல்வம்


விரைவான செயல்பாட்டுக்கு முன்னோடியாக திகழ்கிறார்கள்

எனக்கு தெரிந்து 55 கிளை கழகங்கள் கொண்ட மாவட்டமாக திகழ காரணம்
கழகத்தில் இருக்கும் ஒற்றுமை ,குழுவாக செயல்பட காரணமாகும் .

இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ,வியாபார வளர்ச்சி சம்மந்தமாக கலந்துரையாடி வழிவகை செய்யப்படும் .
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

 உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

 மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
 மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

வியாழன், 16 மார்ச், 2017

இன்று மூன்று  வருடங்களுக்கு பிறகு கோவையில் என் மூத்த வழக்கறிஞர் நண்பர்களை என் வியபார சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தேன்

திரு .சுந்தரவடிவேல் (சிபிஐ மூத்த வழக்கறிஞர் )பந்தையசாலை
திருமதி .ஷர்மிளா -கோபாலபுரம்
திரு .ஸ்ரீனிவாசன் -கோபாலபுரம்
திரு .குருசாமி -ஜவான்ஸ் building
திரு .நவீன்குமார் -வடவள்ளி
திரு .சரவணன் -கணபதி
திரு .சிவகுமார் -RSPURAM
திரு .தொல்காப்பியன் -கோபாலபுரம்
திரு .ராமகிருஷ்ணன் -AIRINDIA
இன்னும் என் வழக்கறிஞர் நண்பர்களை சந்திக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன் ..

இதில் மதிய நேர உணவை கோர்ட் வளாகத்தில் உள்ள விலை குறைந்த ருசிமிக்க உணவை ஸ்ரீனிவாசன் நண்பருடன் பகிர்ந்துண்டது மகிழ்ச்சியே .
வடவள்ளி செல்லும்பொழுது மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் சென்றேன் .. என் ஷ்யாமுடன் விளையாடிய ,பள்ளி சென்ற  நினைவுகளால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.வியாபார விஷயமாக செல்லும்பொழுது எந்த ஒரு மன நிலைக்கும் ஆட்படக்கூடாது கூடாது என்று மனதை கல்லாகி கொண்டேன் .

இன்று விலைமதிப்பு மிக்க நேரம் சென்றதே தெரியவில்லை ..கோபாலபுரம் பகுதி முதலில் எல்லாம் சினிமா விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளபகுதியாக இருந்தது .இப்போது சுற்றியும் வழக்கறிஞர் அலுவலகமாக காட்சி அளிக்கிறது .கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள அன்னபூர்ணாவில் சுவைமிக்க காபி சுவைத்துவிட்டு விலைபட்டியலை பார்க்கும்போது கொஞ்சம் ஜெர்க்குதான் ..




புதன், 15 மார்ச், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 5 மார்ச், 2017


Sivakumar Kumar added 9 new photos — feeling happy with Afzal Noor in Udumalaippettai.
Just now ·

என் கல்லூரி நாட்கள்..Vidyasagar College of Arts and Science-Udumalpet
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு-05-03-2017
கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.
அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
கல்லூரியின் முதல் வகுப்பு ...பேராசிரியர் .பங்கஜம் அவர்களின் மேலாண்மை வகுப்பு ..முதல் நாள் வகுப்பு முடிந்தவுடன் ..ஏதோ ஒரு கம்பனிக்கு நிர்வாகி ஆனதுபோல் போன்ற உணர்வு.. வணிகவியலக்கு பேராசிரியர் சுடலைமுத்து ,மரகதம்,நாராயணன் அவர்கள் ,கணக்கு பாடப்பிரிவுக்கு பேராசிரியர் சத்தியநாதன் ,தனுசு கோடி அவர்களிடம் கற்றகல்வி ,இன்று உயர்வான தொழில்முனைவோர்களையும்,தொழில் அதிபர்களையும்,அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு நம் கல்லூரியில் படித்த கல்வியறிவு என் வாழ்க்கையும் உயர்த்திருக்கிறது ..
தமிழுக்கு அமுது என்று பெயர் போல் ..பேராசிரியர் இந்திரஜித் அய்யா அவர்களின் தமிழ் வகுப்பு ..அனைத்து தகவலையும் உள்ளடக்கிய வகுப்பாக அமைந்தது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் ..
இன்று கல்லூரியில் படித்த நண்பர்களை கண்ணன் ,ஸ்ரீனிவாசன் ,செல்வராஜ் ,பாலகுமார் ,சுதாகர் ,விஜயசேகர் ,பாலகிருஷ்ணன், 20 வருடங்கள் கழித்து பார்க்கும்போது கல்லூரியின் மலரும் நினைவுகள்.வாழ்வின் பொன்நாள்.
நமது நண்பர் வெளிநாட்டில் வசிக்கும் அப்சல் நூரின் கவிதையை வசித்து முடித்தவுடன் மாணவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது .வாழ்த்துக்கள்.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள் நம்பிக்கை உள்ளது
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த நமது கல்லூரியின் தாளாளர் .திரு .சத்தியநாதன் ,மற்றும் கல்லூரியின் தலைவர் .சு .சுப்பிரமணியன் ,மற்றும் கல்லூரியின் முதல்வர் .மருதுபாண்டியன் அவர்களுக்கும் .என் மனமார்ந்த நன்றிகள் .,...









புதன், 1 மார்ச், 2017

இன்று செந்தில்குமார் -கௌசல்யா -கொடிங்கியம் ஆவல்பட்டி அரண்மனையாரின் திருமணவரவேற்பு நிகழ்வு நம் இளையசமுதாயம் சிரிப்பு சத்தம் ..கலாய்ப்பு களும்  இப்போது இருக்கிற இறுக்கமான சூழ்நிலையை மனதை வெகுஇலகுவாக்கிறது ..பில்லா நாய்க்கன் சாலையூர் சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் மல்லிகை சாதம் ,இயற்கை கம்மங்கூழ்  திருமணவரவேற்பு சாப்பாடு அருமை ..

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்....