ஞாயிறு, 5 மார்ச், 2017


Sivakumar Kumar added 9 new photos — feeling happy with Afzal Noor in Udumalaippettai.
Just now ·

என் கல்லூரி நாட்கள்..Vidyasagar College of Arts and Science-Udumalpet
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு-05-03-2017
கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.
அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
கல்லூரியின் முதல் வகுப்பு ...பேராசிரியர் .பங்கஜம் அவர்களின் மேலாண்மை வகுப்பு ..முதல் நாள் வகுப்பு முடிந்தவுடன் ..ஏதோ ஒரு கம்பனிக்கு நிர்வாகி ஆனதுபோல் போன்ற உணர்வு.. வணிகவியலக்கு பேராசிரியர் சுடலைமுத்து ,மரகதம்,நாராயணன் அவர்கள் ,கணக்கு பாடப்பிரிவுக்கு பேராசிரியர் சத்தியநாதன் ,தனுசு கோடி அவர்களிடம் கற்றகல்வி ,இன்று உயர்வான தொழில்முனைவோர்களையும்,தொழில் அதிபர்களையும்,அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு நம் கல்லூரியில் படித்த கல்வியறிவு என் வாழ்க்கையும் உயர்த்திருக்கிறது ..
தமிழுக்கு அமுது என்று பெயர் போல் ..பேராசிரியர் இந்திரஜித் அய்யா அவர்களின் தமிழ் வகுப்பு ..அனைத்து தகவலையும் உள்ளடக்கிய வகுப்பாக அமைந்தது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் ..
இன்று கல்லூரியில் படித்த நண்பர்களை கண்ணன் ,ஸ்ரீனிவாசன் ,செல்வராஜ் ,பாலகுமார் ,சுதாகர் ,விஜயசேகர் ,பாலகிருஷ்ணன், 20 வருடங்கள் கழித்து பார்க்கும்போது கல்லூரியின் மலரும் நினைவுகள்.வாழ்வின் பொன்நாள்.
நமது நண்பர் வெளிநாட்டில் வசிக்கும் அப்சல் நூரின் கவிதையை வசித்து முடித்தவுடன் மாணவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது .வாழ்த்துக்கள்.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள் நம்பிக்கை உள்ளது
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த நமது கல்லூரியின் தாளாளர் .திரு .சத்தியநாதன் ,மற்றும் கல்லூரியின் தலைவர் .சு .சுப்பிரமணியன் ,மற்றும் கல்லூரியின் முதல்வர் .மருதுபாண்டியன் அவர்களுக்கும் .என் மனமார்ந்த நன்றிகள் .,...









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக