திங்கள், 30 நவம்பர், 2020

 Kannabiran Udt...


கொரோனா காலத்திலும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் உடுமலையின் அறிவியல் மாணவ ,மாணவிகள் .....


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வை இணைய வழியில் நடத்தி வருகின்றன.இந்த பேரிடர் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இந்த வருடமும் தேர்வானது தேசிய அளவில் இன்றும் ( நவம்பர் 29 மற்றும் 30) நாளையும் நடைபெறுகிறது. 


இத்தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதி வருகின்றனர். இத்தேர்வு இணையவழியில் கணினி ,மடிக்கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக இணைய வழியில் தேர்வினை மாணவர்கள் எழுதி வருகின்றனர். தேர்வானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் இத்தேர்வினை எழுதி வருகின்றனர்.


இந்த முதல்நிலை தேர்வானது மாணவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து தேர்வினை எழுதி வருகின்றனர். அறிவியல் துறையில் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் ஆராய்ச்சித் துறையில் அவர்களை ஈடுபடுவதற்காக இந்த தேசிய திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் இந்த வருடம் இணையவழியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகின்றார்கள். அதுமட்டுமின்றி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளையும் பெறுவார்கள். 


இந்த தேர்வானது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 மாணவர்கள் எழுதினர். வீடுகளிலிருந்து முதல்முறையாக ஒரு தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு எழுதியது புதுமையானதாகவும் வீட்டிலிருந்தே ஒரு தேசிய அளவிலான தேர்வினை எழுதியது மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று மாணாக்கர்கள் கருத்து தெரிவித்தனர். 


உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து இத்தேர்வினை எழுதினர். பேரிடர் காலகட்டத்தில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் தேசிய அளவிலான ஒரு தேர்வு இணைய வழியில் குழந்தைகள் வீட்டில் இருந்தே எழுதியது நல்லதொரு முயற்சியாக இருந்தது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். உடுமலை பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.


வெள்ளி, 27 நவம்பர், 2020

கண்ணை கவரும் தென்னை நாரில் மிளிரும் படைப்புகள்...

நன்றி :..தினமலர் ..பொட்டையம்பாளையம் கிராமம் .உடுமலைப்பேட்டை 


தென்னை நாரும், கண்களுக்கு விருந்தளிக்கும், கலை வண்ண படைப்புகளாக, மகளிரின் கைவண்ணத்தில், உருவாக, கயிறு வாரியம் வழிகாட்டுகிறது. இப்படைப்புகளுக்கு, அனைவரும் கைகொடுத்தால், சூழலும், மகளிரின் பொருளாதாரமும் மேம்படும்.கல்லும், மண்ணும், கைவண்ணத்தில், கலை படைப்புகளாக, நம் வாழ்வில், இரண்டற கலந்து விட்டது; அதிலும், மகளிரின் அழகு மிளிரும் படைப்புகளுக்கு, தனியிடம் உண்டு. அவ்வாறு, தென்னை நாரை மூலப்பொருளாக கொண்டு, பெண்கள் உற்பத்தி செய்யும், கலை படைப்புகள் பார்ப்பவர்களை ஈர்ப்பதை தவிர்க்க முடியாது.அவ்வாறு, கயிறுவாரியம், தென்னை நாரில் இருந்து கால் மிதியடி மட்டுமல்லாது, வீட்டை அலங்கரிக்கும், குதிரை, மான், முதலை, ஒட்டகச்சிவிங்கி, ஸ்டாண்ட் ஆகியவை தயாரிக்கவும், ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. தற்போது, பொட்டையம்பாளையம் கிராம பெண்களுக்கு, கயிறு வாரியம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், இரண்டு மாத பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட, கயிறுகளை கொண்டு, கால் மிதியடி தயாரிக்க, முதற்கட்டமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர், பல வகை கயிறுகளை கொண்டு, வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி துவங்குகிறது.வீட்டில் இருந்தபடியே, சுயதொழில் மூலம், வருவாய் ஈட்ட ஆர்வம் காட்டும் பெண்களுக்கு, இத்தகைய பயிற்சிகள் வரப்பிரசாதமாக அமைகிறது. பயிற்சிக்குப்பிறகு, சான்றிதழும், தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, வங்கிக்கடனும் பெற்றுத்தர வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.தங்களையும், வீட்டையும், அலங்கரிப்பதில், தனித்திறமை கொண்ட பெண்களிடம், தென்னை நாரும், உயிரோட்டமுள்ள கலைப்பொருளாக மாறுவதை நேரடியாக நாம் பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய கலைப்பொருட்களை வாங்கி, பயன்படுத்தினால், தொழிலில், ஈடுபடும் பெண்களுக்கு, நிரந்தர வருவாயும் கிடைக்கும்...

நன்றி ...தினமலர் ...உடுமலைப்பேட்டை ..


தொழிற்பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு அணுகவும் 

நாகராஜ் -99651 42973..உடுமலை சுற்று சூழல் சங்கம் 

சிவக்குமார் -9944066681...கம்பளவிருட்சம் அறக்கட்டளை -உடுமலை 

கேள்வி : வீட்டுத்தரைக்கு மார்பிள்ஸ், மார்போனைட், க்ரானைட் மற்றும் டைல்ஸ் - இதில் எது சிறந்தது?

என் பதில் :..

வீட்டுத் தரைகளுக்கு டைல்ஸ், மார்பிள்ஸ், மார்போனைட், கிரானைட் ஆகியவை அழகுக்காகவும் தரையை எளிமையாக சுத்தம் செய்வதற்காகவும் ஒட்டப்படுகின்றன.
இதில் மார்பிள்ஸ் மற்றும் கிரானைட் இயற்கையாகக் கிடைப்பவை. பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மதுரை,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.
மார்போனைட் என்பது கிரானைட் அல்லது மார்பிள் போன்ற தோற்றமளிக்கும் டைல்ஸ் வகையாகும்.
டைல்ஸ் என்பது செயற்கையான முறையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகும்.
இயற்கையான முறையில் கிடைப்பதால் கிரானைட் மற்றும் மார்பிள்கள் சாதாரணமான வெளிப்புற வெப்பநிலைகளையே வீட்டின் உட்புறமும் பிரதிபலிக்கும்.
ஆனால் மார்போனைட் மற்றும் டைல்ஸ் ஆகியவை வெளிப்புற வெப்பநிலையை சற்று அதிகமாக வீட்டின் உட்புறம் பிரதிபலிக்கும்.
அதாவது டைல்ஸ் மற்றும் மார்போனைட் குளிர்காலங்களில் அதிக குளிரையும் வெயில் காலங்களில் அதிக வெப்பத்தையும் வீட்டினுள் பிரதிபலிக்கும்.
விலையின் அடிப்படையில் பார்த்தால் டைல்ஸ் வகைகள் ஒரு சதுர அடி₹30 முதல் கிடைக்கின்றன.
மார்போனைட் ஒரு சதுர அடி₹50 முதல் கிடைக்கின்றன.
கிரானைட் ஒரு சதுர அடி₹80 முதல் கிடைக்கின்றன.
மார்பிள் நிறத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடும். குறைந்த பட்சம்₹200 முதல் கிடைக்கும்.
குறைவான செலவினை விரும்பினால் டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யலாம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என விரும்பினால் கிரானைட் மற்றும் மார்பிள்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டும் முன்பு இதை ஒரு முறை மனதில் வைத்துக் கொள்ளவும்.👍👍✒✒✒📚📚🏘🏘🏘
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?

 கேள்வி : ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் எப்படி இருக்கும்..?


என் பதில் :..

இது வழக்கமான பதிவு அல்ல . எனவே tag ...களில் சில மாற்றம் ..

. விருப்பம் உளளவர்கள் மட்டும் கருத்துக்களை பதிவு செய்யவும் . நன்றி .!

தமிழ் வளர்க்கும் சமூக வலை தளங்களில் பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம் ... முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம் .   இரண்டு  நாட்களுக்கு முன் ஒரு அனுபவ பதிவு இட்டிருந்தேன். ஒரு நல்ல பதிவர் ,வீட்டுக்கடன் விற்பனை  ,சமூக ஆர்வலர் , (நாமே சொல்லிக்க வேண்டியதுதான்) அழகு இரண்டு பக்கங்களையும் முன் வைப்பது தான். அந்த வகையில் நான் கவனித்த எனக்கு ஏற்பில்லாத சில விஷயங்கள் இங்கே. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டதல்ல.. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் சொந்தக் கருத்தே.

 முன்னெச்சரிக்கையா சொல்லிக்க வேண்டி இருக்கு ஏன்னா பேசப் போற விஷயம் அப்படி.

பேஸ் புக்,வாட்ஸாப்ப் ,இன்ஸ்ட்ராகிராம்  இல் சில காலமாகப் புழங்கி வருவதில் எல்லா இடங்களையும் போல இங்கேயும் சத்தத்திற்கும் கூட்டத்திற்கும் தான் முக்கியம் இருப்பதாகக் கருதப் படுகிறது. எல்லா விஷயத்தையும் பாராட்டவும் திட்டவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நல்ல நண்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கிடைக்கும் அதே இடத்தில் அரை வேக்காட்டுத் தனமாக உளறுபவர்கள் சிலர் . எப்படி செய்தி/சினிமா விற்பவர்கள் வன்முறையையும் கவர்ச்சியையும் முன் வைத்து வியாபாரம் செய்கிறார்களோ அது போல் தன்னை விற்க முனைபவர்களையும் காண முடிகிறது. நாகரீகம் அற்ற  வார்த்தைகளில் திட்டுவது  சாதாரணமாக நடக்கிறது.

ஒரு விஷயத்தை யாராவது சொன்னால் முதல் கேள்வி.. “உனக்கு என்ன தகுதி இருக்கிறது அதை சொல்ல..?” என்பதாக இருக்கிறது. நமது அனுபவம்  பற்றி சொல்ல என்ன தனியா ஜர்னலிசம்  படிச்சுட்டு வரணுமா  ???

தன்னை மேதாவியாக நகைச்சுவையாளராகக் காட்டிக்கொள்ள இன்னொரு சக மனிதனைத் திட்டியும் சபித்தும் ஆக வேண்டுமா? இங்கே வெளிப் படுவது நகைச்சுவை பூசிய வெறுப்பு மட்டுமே. முகம் தெரியாத ஒருவர் மேல் காரணமே இல்லாமல் கொட்டப்படும் வெறுப்பின் அளவு நிஜமாகவே மலைக்க வைக்கிறது.
இதற்கு பொதுவான ஒரு காரணம் தன்னுடைய கருத்தை எல்லாரும் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆங்கிலத்தில் “Agree to Disagree” என்று சொல்வார்கள். எதிராளியின் மறுப்பை ஏற்கும் பக்குவம் இங்கே கொஞ்சமும் இல்லை. இது இங்கு மட்டும் என்று இல்லை. வீடுகளில், அலுவலகங்களில், அரசியலில் என்று எல்லா இடங்களிலும் பொதுவாக இருக்கிறது. என் கருத்தை ஏற்காதவன் எதிரி என்ற நினைப்பில் நாம் நிறைய நிழல் எதிரிகளை உருவாக்கி அவர்களோடு அட்டைக்கத்தி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சிகள் இல்லாமல் சட்ட சபைகள் நடப்பதும் பாராளுமன்றங்கள் முடங்குவதும் போல . !
மொழி, அனுபவம், கருத்துக்கள் எல்லாவற்றிலும் இந்தப் பக்குவம் தேவை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான சூழலில் வளர்கிறான். சிந்தனைகளும் நம்பிக்கைகளும் ஒருவருக்கொருவர் மாறுபடுவதுதான் இயற்கை. அதை மதிப்பதன் மூலம் நிறைய ஈட்டிகளில் நாம் வெள்ளைக்கொடி கட்ட முடியும்.
“நீ சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் அதைச் சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் (Evelyn Beatrice Hall)” என்ற வரிகளை ஒவ்வொரு வரி எழுதும்போதும் பேசும்போதும் நினைத்துக் கொண்டால் ஆரோக்கியமான சண்டைகளும் அறிவுபூர்வமான வாதங்களும் பிறக்கும். இன்னுமொரு செக்ஷன் 66 A ...தேவையில்லை . நன்றி . வணக்கம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வாழ்க்கை வளர்வதற்கு ...வாழ்வதற்கு ...
9944066681..







வியாழன், 26 நவம்பர், 2020

 

உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவி ......


மலேசியா நாட்டில் நடைபெறவிருக்கும்  கராத்தே போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவி -க்கு உதவி தொகையாக உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் 1985ஆம் ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர், சாதனையாளர் K.P.கேதாரினாத் அவர்களின் நினைவாக அதே வருடம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் P.R.மோகன் ராஜ், K.P.விஸ்வனாத், R.கிருஷ்ண குமார் ஆகியோரின் சார்பாக ₹15,000 காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் மலேசியாவில் ஏற்படும் செலவுகளை அதே ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற திரு R. தினேஷ் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.


மாணவி பெயர் - J . பூமிகா..விற்கு .ஏற்பாடு செய்த ஆசிரியை  திருமதி..வித்யா முதுகலை வணிகவியல் ஆசிரியை...ஆசிரியை பொறியாளர் ராமசந்திரன்... அவர்களின் சகோதரி.


கொரோனா காலம் என்பதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் ,கலந்துகொள்ள உதவி தொகை இல்லாத சூழ்நிலையிலும் ,இந்த உதவி செய்ய நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி அவர்கள் இவர்களிடம் சொல்லி இருந்தார்கள் ..தற்பொழுது இந்த இந்த போட்டியில் கலந்துகொள்ள உதவி இருக்கிறார் 

மேலும் விவரங்களுக்கு 

ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் ...  

 நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி- 94421 10286

செவ்வாய், 24 நவம்பர், 2020

Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

கோவையின் பொக்கிஷம் ......


 We also had a chance to meet one of the 100 most influential people as per Times Magazine –

 Mr. A. Muruganantham, Founder Director, Jayshree Industries, Coimbatore

குறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்

மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.

கோவை மாவட்டம் கிராமப் பகுதிகளில் ஏழைப் பெண்களின் மாதாந்திர பிரச்சனையை, சமூக நோக்கில், மிகக்குறைந்த விலையில் சமாளிக்க கற்றுக் கொடுத்த அருணாச்சலம் முருகானந்தம் உலக மக்களின் பாராட்டுக்களை பெற்ற வண்ணம் இருக்கிறார். எளிதில் கிடைக்காத கௌரவம், நாம் அறிந்திராத மாமனிதர்களுக்குக் கிடைக்கும் சமயங்களில், அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், அதைக் கொண்டாடத் தவறி விடுகிறோம். அந்த வகையில் அருணாச்சலம் முருகானந்தம் சாதனையும் முக்கியத்துவமும் சமூகத்தின் கண்களில் இன்னமும் முழுமையாகப் படவில்லையோ என்று தோன்றுகிறது.

60% பெண்களுக்கு நாப்கின் வசதி இல்லை இந்தியாவில் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்கும் வசதியின்றி வாழும் அவலம் நிலவுகிறது. இந்நிலையைப் போக்க முயன்ற முருகானந்தம், தன் பல ஆண்டுக்கால விடாத முயற்சியால், பிரத்யகே இயந்திரம் தயாரித்து, அதன்மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

இரண்டு ரூபாய்க்கு நாப்கின் பன்னாட்டு நிறுவனங்களால் அதிக விலையில் விற்கப்படும் பெண்களுக்கான நாப்கின்களை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கற்பனைக் கெட்டாத விலையில், சுகாதாரமாகத் தயார் செய்து, சேவை உள்ளத்துடன் அவற்றை விற்பனை செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.

உலக மகளிருக்கும் அர்ப்பணம் உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் சக்தி வாய்ந்த நபர் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை, கடந்த 2014ம் ஆண்டு தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பிறகே அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை, இனங்கண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துக் கௌரவப்படுத்தியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.



பெண்கள் வாழ்த்தும் ஆண் ஏழைப் பெண்களின் மனதை, தாயுள்ளத்தோடு அறிந்து அவர்களின் மாதாந்திர பிரச்சனையை போக்கும் வகையில் செயல்பட்டு வரும் அருணாச்சலம் முருகானந்தம், பெண்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

இவரை கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் உலக கருத்தரங்கில் சந்தித்து பேச எனது மேலாண்மை பேராசிரியர் திருமதி பங்கஜம் அம்பிகைவேலு ,என் கல்லூரி நண்பர் ,குடும்ப நண்பர் அப்சல் நூரின்  மூலம் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது ,மிக்க மகிழ்ச்சி ...

இனிய நண்பர் கோவை -பாப்பநாயக்கன்புதூர். ..அருணாச்சலம் முருகானந்தம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Sivakumar Kumar is in Coimbatore,Pollachi,Udumalaipettai... Tamil Nadu.

கேள்வி : சிறுதொழில்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வாறு புதிய வாடிக்கையாளர்களை பெறுகின்றன?

என் பதில் :

22 வருடம் மார்க்கெட்டிங் தொழிலில் இருந்ததினால்

கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன்.எந்த பயிற்சி வகுப்புகளிலும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கின்ற முதல் அறிவுரை முதல் சந்திப்பில் எதிரில் இருப்பவர்களுக்கு கை குலுக்கி அவர்களிடம் விசிட்டிங் கார்டை கை மாறுவது தான் .

First impression is the best impression என்று ஆங்கிலத்தில் ஒரு

வார்த்தை நடை முறையில் புழக்கத்தில் உள்ளது .இதை

உங்கள் நடை முறை வாழ்க்கையில் பழக்கமாகவே வைத்து கொள்வது நல்லது .

உங்கள் தொழிலை பற்றிய ஐந்து நிமிட விளக்க உரையை உங்கள் விசிட்டிங் கார்ட் ஒரு நிமிடத்தில்

பிரதி பலிக்கும் .உங்கள் தொழிலை பற்றி உள்ள முழு வர்ணனையை உங்கள் இணையத்தளம் பிரதி பலிக்கும் .

முன் பின் பழக்கம் இல்லாத ஒருவரை நீங்கள் திடிரென்று சந்திக்க நேருகிறது ..இல்லது திருமண விழாக்களிலோ வேறு எங்கு வைத்தோ உங்கள் சொந்த பந்தங்களை பார்க்க நேருகிறது .

கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கள் என்ன தொழில் செய்கின்றிர்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் இந்த விசிட்டிங் கார்டை அவர்களுக்கு நீங்கள் கை மாறும் பொழுது உங்களின் தொழிலை பற்றிய

ஒரு விவரம் அவர்களுக்கு போய் சேருகிறது .

உங்களின் வாழ்வியலில் இந்த பழக்கத்தை நீங்கள் கடை பிடிக்கும் பொழுது ..பல business sours களில் இதுவும் ஓரிரு துளிகளாக உங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும்

அது மட்டுமல்ல பல வருடங்களாக வியாபாரம் செய்தும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை போன்று விசிட்டிங் கார்டுகள் குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது ஒரு வருக்கு ஒரு விசிட்டிங் கார்ட் கூட இல்லாமல்

தொழில் செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அது தங்களின் தொழிலின் நேர்த்தியையும் தரத்தையும் வெட்ட வெளிச்சமாக படம் பிடித்து காட்டுகிறது🥰

👍📚📚📚சிவக்குமார்....V..K.... 

👍🏡🏘️🏚️வீட்டு கடன் பிரிவு 

👍🏡🏘️🏚️உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

👍🏡🏘️🏚️அழைப்பு எண் :9944066681...

👍🏡🏘️🏚️.. :9944066681Email:siva19732001@gmail.com

👍🏡🏘️🏚️(Home Loans,Home Loans To NRIs) 

👍🏡🏘️🏚️Coimbatore,Pollachi, Udamalpet

👍🏡🏘️🏚️Mobile --09944066681 Call or sms

👍🏡🏘️🏚️Siva1973200@gmail.com

திங்கள், 23 நவம்பர், 2020

 அந்த மூணு குழுவில் ...என்ன வியாபாரம் செய்கிறார்கள் ..அந்த குழுவில் தொகை வாங்கி எதற்கு பயன்படுத்தினார்கள் ...கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளவும் ..

தொழிற்பயிற்சி ..சிறு தொழில்முனைவோர் ..

சுற்று சூழல் இயக்கம் ..கயிறு வாரியம் மூலம் பயிற்சி ...இரண்டு மாத பயிற்சி ..6000 ரூபாயுடன் ...சிறிய உபகரணங்கள் வாங்கி தொழில் முனைவோர் ஆகலாம் ...அவர்களின் சக்திக்கு தகுந்த ..நேற்று என் அருமை தம்பி தமிழின் வழிகாட்டுதலின்படி சென்று பயிற்சி குழு இருக்கும் பொட்டையம்பாளையம் கிராமத்திற்கு சென்று தெரிந்துகொண்டேன் ..இதை தம்பி மூன்று வருடமாக சொல்லிக்கொண்டிருந்தார் ..என் அருமை மாப்பிள்ளையும் செந்தில்ராம் மறவாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ..நேற்று பார்வையிட்டு ..அதன் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டேன் ..இதற்கான பயிற்சி யை எனது நண்பர்கள் நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியர் மணி அவர்களும் .சுற்றுசூழல் செயலாளர் நாகராஜன் என்பது தெரிந்து எனக்கும் மகிழ்ச்சி ..இதைவிட அங்கு பயிற்சி எடுப்பவர்கள் அதிகம் நம் கம்பள சொந்தங்கள் என்றவுடன் மகிழ்ச்சி இன்னும் கூடுதல் ஆனது ..இந்த பயிற்சியை அடுத்த நம் கம்பள சொந்தங்கள் இருக்கும் ஊர்களுக்கு பரவலாக்க கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் அதற்கான ஏற்பாடுகளை குழுமூலம் செய்திகொண்டுள்ளோம் ...அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..

இதற்கான தகவல் வேண்டுவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .நன்றி 

சிவக்குமார் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை தொழில்சார் குழுமம் 

உடுமலைப்பேட்டை 

9944066681...


செவ்வாய், 17 நவம்பர், 2020

 கேள்வி : ஒரு செயலை செய்வதற்கு முன் கூறலாமா ..விவாதிக்கலாமா ..?


என் பதில் :...இதில் எனக்கு வாழ்க்கை கல்வி எனக்கு அதிகம் கற்று கொடுத்து இருக்கிறது ...


Online-ல் கூவாதே. நிஜத்தில் மாற்றத்தைக் கொண்டு வா....

முடிந்தவரை நீங்கள் செய்யப்போகும் செயல்களை பிறரிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் பட்சத்தில் அதனுடைய வீரியம் குறைய வாய்ப்புள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நம்முடைய வாழ்வில் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரும். அதற்கும் பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் முன்னரே, பல கணக்குகளை போட்டுக் கொண்டு, பிறரிடம் வெளிப்படுத்தும்போது, ஒரு பொய்யான மனநிறைவு நம்முள் ஏற்பட்டுவிடும். அந்த மன நிறைவின் காரணமாக, நாம் செய்யப்போகும் செயலில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அது தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் அதிகமாக ஏற்படுத்தும்.

வெற்றி பெறுவேன் என்பதற்கும், வெற்றி பெற்றேன் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம். 

எனவே, நீங்கள் வெற்றி பெறும் முன்பே நான் இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி இருக்கிறேன், அப்படி இருக்கிறேன், அதை சாதிப்பேன், இதைச் சாதிப்பேன் என்று அறைகூவல் விடுக்க வேண்டாம்.

வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒன்றை எப்பொழுதும் பரிசாக வைத்திருக்கும்.

சிறுக சிறுக செய்தாலும் சிறப்பாக செய்வதே, நம்மை ஒரு பிராண்டாக மற்றும் என்பதை நான் சமீபத்தில் உணர்ந்தேன்.😊.

உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுங்கள். பிறருடைய அடையாளங்களோடு உங்களை அடைமொழியாக இணைக்க வேண்டாம்.

முயற்சி தான் நம்மை முன்னேற்றும்💪.

நன்றி ....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

 கேள்வி : கோவையில் குடியேற சிறந்த பகுதிகள் எவை ?


என் பதில் ..:  நான் அறிந்தவரை 1996 முதல் இன்று 16-11-2020...நம்ம 

கோயம்புத்தூரில் 5 முதல் 30 கிமீ சுற்றளவில் இதற்கு நிறைய options உண்டு 


பணியிடம் / தொழிலகம் மற்றும் பள்ளி / கல்லூரி இருக்கும் இடத்தை பொறுத்து 


காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், ராம்நகர், சிவானந்தா காலனி, TVS நகர், தடாகம், கணுவாய், மருதமலை, இடையர்பாளையம், வடவள்ளி,தொண்டாமுத்தூர் , வேடப்பட்டி, R.S. புரம், ரெட் ஃபீல்ட்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வெள்ளளூர், மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், போத்தனூர், கடைவீதி, அசோக் நகர், காந்திபார்க், பொன்னையராஜபுரம், செல்வபுரம், சுண்டைக்காமுத்தூர், பேரூர், காளப்பாளையம், கோவைபுதூர், குனியமுத்தூர், பாப்பம்பட்டி, சின்ன குயிலி, பெரியகுயிலி, கணபதி, சரவணம்பட்டி, வினாயகபுரம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோவில்பாளையம், துடியலூர், NGGO காலனி, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, அன்னூர் சாலை, பிளிச்சி …


போன்ற பல வீட்டுமனை பிரிவுகள் சில பல வசதிகளுடன் தேர்வு செய்வார்கள்.


குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மனை / வீடு / அடுக்ககம் விலை அல்லது வாடகையின் பட்ஜெட்டை அனுசரித்து இங்குள்ளோர் குடியேறுவதுண்டு.


கோவை மாநகருக்கு கானல் நீராக இருக்கும், flex banner - ல் மட்டுமே அவ்வப்போது பார்த்து வரும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் எங்கள் கோவைக்கு அமைந்துவிட்டால் ?! ..இன்னும் சிறப்பு ...காத்திருப்பு என்றும் வீண்போவதில்லை ..நம்பிக்கையுடன் ..வளர்ச்சி ..நிலையான வளர்ச்சி ..நம்ம ஊரு கோயமுத்தூரு தானுங்க .....


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 14 நவம்பர், 2020

 Peelamedu Day ....

😊
கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு - வயது 308
கல்விக்கும், செல்வத்துக்கும் புகலிடமாகி, பல புகழ் பெற்ற மனிதர்களைப் பிரசவித்து, கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு என்ற ஊர்தான், அந்த மகிமைக்குரிய மண். அதென்ன புதுப்பெயர் பூளைமேடு...அது புதுப் பெயர் இல்லை; அதுதான் பழைய பெயர்.
பூளைமேடு,
கோவையின் முக்கிய அங்கம்; சொல்லப்போனால், இந்த நகரின் மூளை. பூளைச் செடிகள் பூத்த மேடான பகுதியாக இருந்ததால், 'பூளைமேடு' என்று அழைக்கப்பட்ட ஊர்தான், பேச்சு வழக்கில் மருவி, பீளமேடு என்றானது. அன்றைய பீளமேடு என்பது பீளமேடுபுதூர், பாப்பநாயக்கன் பாளையம், ஆவாரம்பாளையம், உடையம்பாளையம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாகும்.
சங்கனூர் பள்ளத்துக்கு தெற்கே பீளமேடு புதூர், வடக்கே பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பகுதி, கிழக்கே நவ இந்தியா முதல் விமான நிலையம் வரை உள்ள பகுதிகள் இதன் இன்றைய எல்லைகள். இங்குள்ள வரதராஜபெருமாள் கோவில், ரேணுகாதேவி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் ஆகியவை பீளமேடு உருவான காலத்திலேயே தோன்றியவை.
ஒரு கொசுவர்த்தியைச் சுழற்றிக் கொண்டு 'பிளாஷ்பேக்'கிற்குள் போவோம்....
கி.பி., 1378க்கு பின், இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தென்னிந்தியாவின் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசால் மீட்கப்பட்டது. பிறகு, கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி.,1529 ல் மதுரையில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் விஸ்வநாத நாயக்கர்; அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தன.
நாயக்கர்களுக்கும், மைசூர் உடையார்களுக்கும் போர் ஏற்பட்டதால் கோவையின் பெரும்பகுதி மைசூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டதாக மாறியது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் கோவை பகுதியில் கன்னடர்கள் அதிகம் குடியமர்த்தப்பட்டனர். கி.பி., 1711 ல் கோவைக்கு மைசூர் மகராஜாவின் பிரதிநிதியாக மாதேராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். கி.பி.1710 ல் குருடிமலையில் பெய்த பெரும் மழையால் சங்கனூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அதையொட்டியுள்ள கிருஷ்ணாபுரம், கணபதி, ஆவாரம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வீடுகளை அடித்துச் சென்றது; பலர் உயிரிழந்தனர்.
பலர், மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தாழ்வாக இருந்த கிருஷ்ணாபுரத்தில் வெள்ளச்சேதம் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் மேடான பூளைமேடு பகுதியில் குடியேற விரும்பினர். கங்கா நாயுடு, கொத்தார் முத்து நாயுடு, பேகார் எல்லையப்ப நாயுடு, ராமன், சுப்பன், வெள்ளிங்கிரி, ஆசாரி, ராமபோயன் ஆகியோர் தலைமையில் மாதேராஜாவை சந்தித்து தங்கள் குடியிருப்பை பூளைமேடுக்கு மாற்றித் தரும்படி கேட்டனர்.
ஆரம்பத்தில் மறுத்த மாதேராஜா, பின்பு தெலுங்கர்களுடன் கன்னடர்களையும் சேர்த்து குடியேற அனுமதித்தார். 11.11.1711 அன்று பூளைமேட்டில் குடியேற பூமி பூஜை போடப்பட்டது. வீடுகள் கட்ட, குருடிமலை மற்றும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து மரங்கள் கொண்டு வரப்பட்டு 200 வீடுகள் கட்டப்பட்டன. அன்றைய பூளைமேடு கிராமத்தின் மக்கள் தொகை, ஆயிரம்.
ஊருக்குள்ளே பெருமாளுக்கும், மாரியம்மனுக்கும் தனித்தனி கோவில்களும் தனித்தனி கிணறுகளும் வெட்டப்பட்டன. இக்கிணறுகளை 1813ல் நம்புரார் சாமா நாயுடு மகன் ரகுபதி நாயுடு கோவிலுக்கு தானமாக அளித்தார். பூளைமேட்டில் ஒன்பது குளங்கள் இருந்தன; அதையொட்டி, காடுகளும் தோட்டங்களும் உருவாகின.
ஊரின் கிழக்கில் ஒரு தண்ணீர்ப்பந்தலும், அவிநாசி சாலையிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் (பயனீர் மில் சாலை) மயானமும் இருந்தன. இன்றைய பீளமேடு புதூரின் அன்றைய பெயர், கொள்ளுக்காடு. ஆரம்பத்தில் இப்பகுதியில் பத்து வீடுகளும் தோட்டங்களும் மட்டுமே இருந்தன. நாளடைவில், அதுவும் பெரிய ஊராக விரிவடைந்தது. கல்வி, மருத்துவம், தொழில், தொழில்கல்வி, மருத்துவக் கல்வி என பல துறைகளிலும் வளர்ந்து, கோவைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத்தரும் மூளையாக இருப்பது, இந்த பூளைமேடுதான். பெயருக்கேற்ப, பலரையும் வாழ்வில் உயர்த்தி விட்ட இந்த மண்ணுக்கு வயது 307;
வாருங்கள்...வாழ்த்துங்கள்.
வளரட்டும் பூளைமேடு...வாழ்த்துவோம் மகிழ்வோடு!.

வெள்ளி, 13 நவம்பர், 2020

 திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலைபேட்டை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

இன்று திருமதி .செல்வி விஜயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 14-11-2020

ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ்...வக்கீல் நாகராஜன் வீதி ,(BSNL அலுவலகம் எதிரில்)உடுமலைப்பேட்டை,தொடர்பு எண் : .94891 87696. 👍🌱🌱🎂🎂


திங்கள், 9 நவம்பர், 2020

 

கேள்வி : மென்திறன்கள்  என்றால் என்ன ?..ஒரு சிறு விளக்கம் அளிக்க முடியுமா ..?


என் பதில் :..


மென்திறன்கள் என்பது ஒருவர் மற்றொருவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பழகும் திறன், தொடர்புத் திறன், ஆளுமை பண்புகள், அணுகுமுறைகள், தொழில் சார்ந்த பண்புக்கூறுகள், உணர்வுகள் சார்ந்த திரன் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மேற்கண்ட பண்புகளைப் பயன்படுத்தி ஒருவர் தாங்கள் செய்யும் தொழிலில் யுத்திகளை கையாள்வது, குழுக்களில் பணிபுரியும் பொழுது அதற்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தங்களுடைய இலக்கை அடைவது அவசியமாகிறது.


காலின்ஸ் ஆங்கில அகராதியில், மென்திறன்கள் பற்றி நான் படித்து தெரிந்த கொண்ட விளக்கம் ..


"மென்திறன்கள் என்பது சில பணிகளுக்கு தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களை கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறை ஆகும்"


தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.


2020 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணலில் பின்வரும் மென் திறன்களை உடையவர்களையே பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.


தொடர்புத் திறன்

சுயமுயற்சி

தலைமைப்பண்பு

குழுப்பணியாற்றுதல்

பொறுப்பேற்று செயலாற்றுவது

பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் திறன்

முடிவெடுக்கும் ஆற்றல்

கடினமான பணியையும் ஏற்று செய்யும் திறன்

நேரத்தை நிர்வகிக்கும் திறன்

பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை

பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிவெடுக்கும் திறன்

இவற்றுள் உங்களுக்கு இருக்கும் மென்திறனை கண்டறிந்து அதை உங்கள் தற்குறிப்பில் இணையுங்கள்.


நேர்காணலில் உங்களுடைய மென்திறனைப் பற்றிய கேள்விகள் எழும்பொழுது உங்களுடைய மென்திறனை விளக்கும் படியான உங்கள் வாழ்க்கையில் நடந்த எடுத்துக்காட்டுகளைப் பகிருங்கள்.


உங்கள் திறமை உலகறிய மென்திறன் தேவை!


மென்திறன்கள் பயில்வோம்! சாதனை படைப்போம்!


நன்றி ...வாழ்த்துக்கள் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 7 நவம்பர், 2020

 மாலகோவில் ...🐂🐐🥰🌱🌳


தைமாதம் ..சித்திரை மாதமும் ..கால்நடைகளை இங்கு இருக்கும் குட்டையில் குளிப்பாட்டி ...இந்த மாலகோவிலில் வருடம் தவறாமல் வழிபாடு செய்வது ஒரு சமூக மக்களின் பண்பாடு ..பாரம்பரியம் ...

கோழிக்குட்டை ..பண்ணைக்கிணறு அருகே ..புதுப்பாளையம் செல்லும் வழியில் 


உடுமலைப்பேட்டை .. 📚📚✍️✍️🌱🌳⚔️🏹🐐🐂🐂

 


திருமண வரவேற்பு நிகழ்வு ..


என் அருமை மாப்பிள்ளை A .தினேஷ் பாபு -D .ரேவதி 

புதுமண தம்பதிகளுக்கு ..வாழ்த்துக்கள் ..

நாள் :10-11-2020

கிழமை :செவ்வாய் கிழமை ...

இடம் :GK மஹால் .சோமவாரப்பட்டி -பெதவை -உடுமலைப்பேட்டை 

நேரம் : மாலை - 6  மணிமுதல் 10 மணிவரை 


மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .

இங்ஙனம் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

வெள்ளி, 6 நவம்பர், 2020

திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை


திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை 

பொறுப்புகள் 

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் மாநில மகளிர் அணி செயலாளர் 

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் 

நமது கம்பள பெண் சமுதாயத்தில் நமது சொந்தங்களுடன் சிறு சிறு சமுதாய பணிகள் செய்து இந்த அளவிற்கு முன்னேறியது ஒரு வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்ளலாம் ..தனக்கு திருமணம் முடித்ததும் ..தன் தாயின் இழப்புடன் ..தன் கணவர் ராமசாமி அவர்கள் ,டைல்ஸ்வியாபாரத்திற்கு ,தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.வியாபாரத்திற்கு முழுமூச்சுடன் ஒத்துழைத்து தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தன் கூட பிறந்த தம்பிகளின் கல்விக்கும் தன் கணவரின் ஒத்துழைப்போடும் ,பொறுப்புடன் வளர்த்து கல்வி தான் நம் சமுதாயத்திற்கு வளர்ச்சிக்கு உதவும் என்று ஆணித்தரமாக எண்ணி கல்லூரி படிப்பு முடிய வாழக்கையில் உயர்த்தி ..இரண்டு தம்பிகளின் திருமண பந்தத்தில் ஒன்றிணைத்து பொறுப்புடன் இன்று நம் கம்பளசமுதாயத்தில் தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும்  முன்னேற்றம்  அடைய வைத்து  நம் கம்பள சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக உள்ளது .திருமதி மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இரண்டு ஆண் செல்வங்களை பள்ளிப்படிப்பிற்கு உறுதுணையாக ,குடும்ப சக்கரத்தை பொறுப்புடன் நகர்த்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..

இந்த வளர்ச்சியை கண்கூட பார்த்த நம் சமுதாய தலைவர்கள் ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் ..திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு ..மாநில மகளிர் அணி செயலாளர் பதிவு கொடுத்து .நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் நிகழ்வுகள் நடக்கும்பொழுது இவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்வது மகிழ்ச்சி ..மேலும் இவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு சிறு கல்விக்கான நிதிகளையும் நம் சொந்தங்களுக்கு அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..


இன்று திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...உடுமலைப்பேட்டை ..





 

வியாழன், 5 நவம்பர், 2020

 Sivakumar Kumar........கார் இன்சூரன்ஸ் -9944066681

கேள்வி : வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம்

என் பதில் :.

வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம் என்பதை நாம்  

தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

அவ்வாறு இழப்பீடு பெறுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்: 

1) மூன்றாவது தரப்பினருக்கு ஏற்படும் உடல் சேதம் அல்லது பொருள் சேதம். அல்லது,

2) காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இந்த சுய சேத 

இழப்பீட்டைப் பெற அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம். 

மூன்றாம் தரப்புக்கான இழப்பீடு உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம். அல்லது வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம். 

சுய சேதத்திற்கான இழப்பீடு வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும். விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று. உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும். இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

திருட்டுக்கான காப்பீடு உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs,CAR INSURENCE) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

என் பதில் : 

 எங்கே வீடு கட்ட போகிறீர்கள்.
சென்னை போன்ற நகரமா ?
அல்லது மதுரை, கோவை போன்ற இரண்டாவது நகரமா?
பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை ..யா .அல்லது       கிராமத்தில் கட்ட போறீங்களா?

உங்கள் வரைபடம் எங்கே?
நிலம் எவ்வளவு?

நிலம் 1000 sft - அல்லது கட்டிடம் 1000 sft ?
ஒரு மாடியா ? இரண்டு மாடியா?

உங்கள் நிலத்துக்கு அருகில் உள்ள சாலையின் அகலம் என்ன ?

உங்கள் நிலத்தில் எது போன்ற மண்..(ஜி..நிலமே இன்னும் வாங்க வில்லை)
நல்ல செம்மண் போல இருக்குமா? களிமண் போல இருக்குமா?
அல்லது குப்பைகள் போல மூடி உள்ள இடமா ? சதுப்பு நிலம் போன்ற இடமா ?

கம்பௌண்ட் சுவர் கட்ட வேண்டுமா? இல்லை பக்கத்தில் உள்ள நிலத்தில் ஏற்கனவே சுவர் உள்ளதா?

செப்டிக் டேங்க் கட்ட வேண்டுமா? அல்லது நகராட்சியின் கழிவுநீர் திட்டம் (line) ஏற்கனவே உள்ளதா ?

கீழ் நிலை தொட்டி (underground tank) கட்ட வேண்டுமா?

இது எதுவுமே இல்லாமல் ஒரு estimate கேட்டு உள்ளீர்கள்.

எதுவும் இல்லை..சும்மா கேள்வி கேட்ட வேண்டும் என்று கேட்டு உள்ளீர்களா?

பதில் எடுத்து கொள்ளுங்கள்.

கோவை  போன்ற 2வது நகரம் என்று வைத்து கொள்ளுங்கள்.

இன்னும் தெளிவாக வேண்டும் என்றால் ஒரு கட்டிட Architect அவர்களிடம் சென்றால் அவர் உங்களுக்கு தெளிவான வரைபடம் வரைந்து குடுப்பார்.

_______

Option 1 - விருப்பத்தேர்வு 1
Option - 2 - விருப்பத்தேர்வு 2
Option - 3 (Land 900 to 1000 sft) - விருப்பத்தேர்வு 3
வரைபடம் இணைத்துள்ளேன் ..பார்க்கவும் .
சரியான திட்டமிடல் (Planning) உடன் பண்ணினால் 15 லட்சத்தில் கட்ட முடியும்.

நீங்களே சொந்தமாக, உங்கள் மேற்பார்வையில் கட்ட வேண்டும். 6 மாதம் வீட்டுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும்.
வீட்டுக்கு குறைந்த செலவினால் ஆன tile மட்டும் தான் கட்டப்பட வேண்டும். (35 to 80 sft விலையில்)
ஜன்னல் மற்றும் கதவுகளை எண்ணிக்கை சற்று குறைவாக வைக்க வேண்டும் (அடுப்படியில் கதவு தவிர்க்க வேண்டும்…அது போல சில விசயங்கள்).
வீட்டின் உயரம், சாலையில் இருந்து 2 அடி உயரம் தான் இருக்கும். (I.e . வீட்டின் உட்புறம் ..தரையின் அளவு சாலையை விட 2 அடி தான் உயரம்..நீங்கள் இந்த உயரத்தை ஏற்றினால் செலவு அதிகரிக்கும்
ஜன்னலின் மரத்தை வேப்ப மரம் உபயோகப்படுத்தலாம். தேக்கு மரம் விலை உயர்வு.
வீட்டின் cupboard எல்லாம் பின்னாடி செய்து கொள்ள வேண்டும். (15 லட்சத்தில் இது சேராது.)
நிலம் வாங்கும் போது, செவ்வக வடிவ நிலத்தை விட சதுரவடிவ நிலம் வாங்கினால் வரைபடம் வடிவமைப்பு (Design) செய்யும்போது மிக சிறந்த Design / Elevation அமையும்.

நன்றி ...உங்கள் கனவு வீடு அமைய வாழ்த்துக்கள் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 3 நவம்பர், 2020

 திருமண வாழ்த்துக்கள் ..04-11-2020

என் அருமை மாப்பிள்ளை S .பாலகுமார் -என் அருமை மகள் N .வசந்தா 

உடுமலைப்பேட்டை ,கே .வல்லகொண்டபுரம், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் திருக்கோவிலில் . நேரம் :காலை  6.00 மணிக்குமேல் 7.25 ..குள் ..நடைபெறும் திருமணத்திற்கு ..புதுமண தம்பதிகளுக்கு . திருமண வாழ்த்துக்கள் 


கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 




ஞாயிறு, 1 நவம்பர், 2020

ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-11-2020)

 இன்றைய ஞாயிறு ...01-11-2020


ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-110-2020)


இன்றைய பயணம் வளம் கொழிக்கும் மருத நிலம் ...கரை வழி நாடு ...மேய்த்தல் நிலங்கள் உள்ள பகுதி ..தன் மக்களுக்கு வாரிக்கொடுத்த குமணன் வள்ளல் வாழந்த பகுதி ..வணிக வழி கால்நடை ,அழகன் குளம் முதல் கல்லாபுரம் பெருவழி சந்தை ..R .வாடிப்பட்டி அருகே பார்த்த வணிக குறியீடு கொண்ட நடுகல் ...ஏழூர் அம்மன் தரிசனம் ..குமணன் தவம் செய்த வழியில் ஆண்டிபட்டி மலை அடிவாரம் பெருமாள் கோவில் ...பழனி வையாபுரியில் இருக்கும் அம்மன் வழிபாடு ...பயணம் முடித்ததும் ..பெருமழை  30 நிமிடம் நனைந்து  உடுமலை வந்தது மிக்க மகிழ்ச்சி ...