வியாழன், 24 மே, 2018

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் ...

கடந்த 5 மாதங்களாக நூல் விழாவிற்கான ஏற்பாடுகள்(நிதி துறையில் மட்டும் நான் பொறுப்பேற்கவில்லை ) நம்ம மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,நம் சமுதாய தலைவர்கள் ,நம் சொந்தங்கள் ,நண்பர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என்று இடைவிடாமல் பயணம் ...சென்றமாதம் மறைந்த எனது தந்தை யின் இழப்பு(கிருஷ்ணசாமி -உடுமலைப்பேட்டை ) ,என் பெரியம்மா திருமலையம்மாள் (தளி ஜல்லிபட்டி )...இரண்டுபேரும் இருந்திருந்தால் எத்தலப்பர் நூல் வெளியிட்டு விழாவை பார்த்து மகிழ்ச்சியும் ,பெருமையும் அடைந்த இருப்பார்கள் ...நூல்வெளியிட்டு விழா எந்த ஒரு தடையும் இல்லாமல் ,மனதில் நெருக்கடியை காட்டிக்கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன் ..வெற்றி விழாவாக  நடத்திகாட்டிய  அனைத்து நம் சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்  ......

ஒரு சமுதாய வளர்ச்சிக்கு என்னதான் உழைத்தாலும் ...பணி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தேடுவது அப்பாவைதான் ...ஏன் சொல்கிறேன் என்றால் ..எதுலப்பர் வரலாற்று நூலை கொண்டுவருவதற்கு என் அப்பாவின் பெரும் பங்கு உள்ளது ...கடந்த 5 வருடங்களாக களப்பணிக்கு போய்விட்டு வந்தது ...நான் எடுத்த புகைப்படங்கள் ,நம் சொந்தங்களின் ஊர்கள் ,நம் சொந்தங்களை பார்த்து பேசியது ஒன்றுவிடாமல் அவர்களிடம் கலந்துரையாடுவேன் ...அவர்களை பற்றி சிறு குறிப்பு தந்து உதவுவார் ...அதுவும் இந்த இரண்டு வரலாற்று நூல்களுக்கு பெரும் உதவியாக இருந்தது ...இந்த விழாவை அவர் மறையாமல் பார்த்து இருந்தால் ...கொஞ்சம் மனதில் சந்தோசம் இருந்திருக்கும் ....வரலாற்று நூலும் வெளிவந்துவிட்டது ,..

ஆனால் இப்பொழுது வீட்டுக்கு வந்தவுடன் தனியாக தனிமையை இப்போது உணர்கிறேன்
Being alone is very difficult.
 — feeling alone...மூன்று தெய்வங்களுக்கு நன்றி ..எனது தந்தை கிருஷ்ணசாமி ,எனது தமிழ் பேராசிரியர் இந்திரஜித் ,பாவலர் பழனிச்சாமி,தளிஜல்லிபட்டி  அவர்களின் ஆசிர்வாதத்துடன் ..என்றும் என்னுடன் இருப்பார்கள் .....இருந்தாலும் எனது அம்மாவுடன் நம்பிக்கையுடன் ,தன்னம்பிக்கையுடன் ,அடுத்தகட்ட பயணத்திற்கு பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் ....மனதில் புத்துணர்ச்சியுடன் ,உற்சாகத்துடன் ....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக