ஞாயிறு, 20 மே, 2018

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலையில், வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்றுத்திருவிழா நேற்று நடந்தது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜூ 'தென்கொங்குநாட்டின் முதல் விடுதலைப்போர்' என்ற நுாலை வெளியிட்டு பேசியதாவது:சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்ட தியாகிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் சிறப்பை அடுத்த தலை
முறைக்கு எடுத்துச்செல்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.
உடுமலை அடுத்த தளியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் எத்தலப்பர். கட்டபொம்மன், வாஞ்சிநாதன் வரிசையில் எத்தலப்பருக்கும் முக்கிய இடமுண்டு. சுதந்திர போராட்டத்துக்காக, அவர் செய்த பணிகள் குறித்து வெளியிடப்பட்ட இந்த நுால், அனைத்து பொதுத்துறை நுாலகங்களிலும் கிடைக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் ராஜூ பேசினார்.

நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேவராட்டம் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி :தினமலர் ....20-05-2018


திருப்பூர்
தளி எத்தலப்பருக்கு மணிமண்டபம் கட்டப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் மன்னர் தளி எத்தலப்பருக்கு உடுமலையில் மணி மண்டபம் கட்டப்படும் என்று செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், உடுமலை அருகே தளியில் 1801ஆம் ஆண்டு ஆண்ட்ரோ கேதிசு என்ற ஆங்கிலேயரை தூக்கிலிட்ட தமிழ் மன்னர் எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரியும், தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூல் வெளியீட்டு விழாவும் உடுமலையில் முப்பெரும் விழாவாக சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். விழாவில் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
உடுமலை அருகே தளி பாளையப்பட்டு பகுதியை குறு நில மன்னரான எத்தலப்ப நாயக்கர் 1,800களில் ஆண்டு வந்தார். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த எத்தலப்ப நாயக்கர் விடுதலைப் போராட்டத்தில் வாஞ்சிநாதனைப் போன்று மிக முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவராவார்.
எனவே, எத்தலப்ப நாயக்கருக்கு தமிழக அரசு சார்பில் உடுமலையில் மணிமண்டபம் கட்ட உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். இந்த விழாவில் வெளியிடப்பட்டதென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூல் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தளி எத்தலப்ப நாயக்கரின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசினார்.
தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூலை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட அதை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய நடனமான தேவராட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனம் ஆடினர்.
முன்னதாக, உடுமலை குட்டைத் திடலில் உள்ள உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நன்றி .தினமணி ...
தென்கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர் ...களப்பணி ...2015...என் தமிழ் பேராசிரியர் .க.இந்திரசித்து...மற்றும் பாவலர் பழனிசாமி ...
உடுமலை வரலாறு 
August 10, 2015 · 
உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் மூன்றாம் கட்ட களப்பணி ----- சல்லிபட்டி 
-------------------------------------------------------------
09.08.2015 ஞாயிறன்று உடுமலை வரலாற்றுக்குழுவின் களப்பணி சல்லிபட்டி நுாலக வளாகத்தில் நடைபெற்றது. புகழ் வீரன் எத்தலப்பன் பற்றிய தரவுகளுக்காக வரலாற்றுக்குழுவின் சிவகுமார் மூலம் முன்பே அந்தப் பகுதி மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு பழனிசாமி என்னும் 78 அகவையுள்ள பெரும்பாவலர் நேர்காணல் காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரையிலும் மீண்டும் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மிகச்சிறப்பானதொரு முனைவர் க.இந்திரசித்து வழி பதிவு செய்யப்பட்டது. 
எத்தலப்பன் பற்றிய செய்திகளை தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள பதிவுகளில் சல்லிபட்டி பாளையம் என்னும் பகுதியில் அச்சாக வெளிவந்ததையும் பத்திரிகை செய்தி நகல்களையும் நமக்கு ஆவணமாகக் கொடுத்து எத்தலப்பன் பற்றிய செய்திகளை கதைப்பாடல்களாக பாடிக்காட்டினார் பாவலர் பழனிசாமி. 
பிற்பகல் திருப்பூரிலிருந்து வருகை புரிந்த ராமகிருஷ்ணன் மேலும் எத்தலப்பன் பற்றிய தரவுகளை உறுதிப்படுத்தினார்.
மேலும் அந்த நூலகத்தில் கல்வித்தந்தை காமராசர் வருகை புரிந்த நிகழ்வையும் அங்குக் குழந்தைகளுக்கு பல ஆளுமைப் பயிற்சிகளையும் திறன்களையும் கற்றுக்கொடுக்கும் அய்யா இலட்சுமணசாமி அவர்களும் நிறைய தரவுகளைக் கொடுத்து உதவினார்.
-----------------------------------------------
இவர்களைப் போன்று நல்ல உள்ளம் படைத்த 
நண்பர்களால் எங்களது உடுமலை வரலாற்று ஆவணப்பணி மிகவும் விரைவாகவும் மன நெகிழ்வுடனும் செல்கிறது. இந்த நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்த நண்பர் சிவகுமார் அவர்களுக்கு நன்றி. 
பேராசிரியர் கண்டிமுத்து ஆசிரியர் மனோகரன் அவர்களுக்கும் நன்றிகள். .........
சிறப்பான உணவு கொடுத்த பாவலர் பழனிசாமி குடும்பத்தினருக்கும் நன்றி. இலட்சுமணசாமி அவர்களுக்கும் நன்றி. ..
மிக விரைவில் புகழ் வீரன் எத்தலப்பன் குறித்த குறுநூல் ஒன்று உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சார்பில் வெளியிடப்படும். அது பள்ளி .கல்லுர்ரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எத்தலப்பன் பற்றிய செய்திகள் சென்று சேரும் வகையில் அமையும். 
காலை முதல் மாலை வரை எடுத்த அனைதது ப் பதிவுகளும் காணொளியாகப் பதிவு செய்யய்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக