தலைவரின் தகுதிகள் ....
உலகில் உயிர் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதால் மட்டும் நிலைபெறுமா என்ன ? எவரேனும் ஓர் அரிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அது சுவாசித்து உயிர் வாழ்வதைவிட மேலானதாகும். ஒருவர் அரிய, அழகிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அவரின் முன்மாதிரி பிறரால் பின்பற்றத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வழிகாட்டி எனப்படுபவரின் நடிப்பு வாழ்க்கையால் நல்ல விளைவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. தலைவர் என்பவர் தன் குறைபாடுகளின் மீது தானே காரி உமிழ்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்வதில்தான் உயர்வின் உச்ச நிலைக்குச் செல்கின்றார். இதற்குத் தடையாக நிற்பது மனித மனம்தான். அதைத் தடுப்புகளால் கட்டுப்படுத்தியவர்தான் உண்மையான தலைவராக முடியும்.
.
உண்மையான தலைவர் என்பவர், உள்ளங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட எல்லைகளைக் கடந்த நிலைகளை அடைவதற்காகவும் பாடுபடுவார். எப்போதும் மிகச் சரியானது எது என்பதைக் தேடிக் கொண்டே இருப்பார். பரம்பரை பரம்பரையாக உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார். அந்த தலைவர் என்ன விலை கொடுத்தாவது, உண்மைக்கு உடந்தையாகவே இருப்பார்.
.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒன்றும் இயலாதவர்களுக்கும், உரிமையை இழந்தவர்களுக்கும், ஆதரவாக அவர் இருக்க வேண்டும்; அவர்களை நசுக்க நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இவை அனைத்தும், தகைமை மிக்க தலைவரின் மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகும்.
.
தனிப்பட்ட முறையில், தலைவர் என்பவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும். மக்களும், அவரைப் பின்பற்றினால் நமக்கு நன்மை உண்டு என்று கருத வேண்டும். தலைமைத்துவம் என்பதன் இலக்கணமே, அனைத்திலும் முன்னிலை வகிப்பதுதான். எனவே, தலைமை ஏற்பது என்பது, இறைவனையன்றி எதற்கும் அஞ்சாதிருப்பதாகும். பொது மக்களின் எழுச்சி என்பது சிறிய எதிர்பார்ப்புகளுக்காக அல்லாமல், பெரிய எதிர்பார்ப்பே அவர்களைப் பொங்கியெழச் செய்யும். மேல் நோக்கிப் பார்க்கப்படுபவரே தலைமைக்குத் தகுதியானவர்; கீழாகப் பார்க்கப்படுவர் அல்லர்.
.
அதே வேளை, தலைவர் என்பவர் தொலை நோக்குப் பார்வையும், அதில் தெளிவும் உடையவராக இருக்க வேண்டும். பெரும்பெரும் குறிக்கோள்களை அடைவதற்கான வழி தெரியாவிட்டால், அவை பற்றிக் கனவு காண்பது வீண் வேலை. தான் கண்ட கனவின் பக்கம் தன் ஆளுகையின் கீழ் இருப்பவர்களை முறையாக வழி நடத்திச் செல்லும் திறமை படைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும். பலமைல்கற்களைக் கடந்து, தான் கண்ட கனவை நனவாக்குவதில் அந்தத் தலைவர் முனைப்பாய் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, தனது இலட்சியத்தை அடையும் பலமுனைச் செயல்பாடுகளை இயற்றுவதற்குத் தகுதி படைத்த செயலாளர்கள் பலரை உருவாக்குவதும் அவருடைய பணியே ஆகும். ஏனெனில், எல்லாப் பணிகளையும் தான் ஒருவரே செய்யத் தலைவரால் இயலாது. மிகத் தகுதி வாய்ந்த, தான் கண்ட கனவை நனவாக்க திறமையுள்ள செயல் வீரர்களை உருவாக்குவது தலைவருக்கான பொறுப்புகளுள் தலையாயதாகும். தன்னிகரற்ற தலைவரானவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட செயல் வீரர்கள் தான் வழங்கிய பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுகின்றார்களா என்பதை அவர்களுக்கு அருகில் இருந்தே கண்காணித்து வரவேண்டும்.
.
இறுதியாக, தான் மென்னெடுத்துச் சென்ற நற்பனிகள் தான் மறைந்த பின்னரும் வழிவழியாகத் தன் சமுதாயத்தால் அவர்களின் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றப்படுவதை ஆதரவு வைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும்; அதற்கான உபதேசங்களைச் செய்து வரவும் வேண்டும். ஏனெனில், தலைவர் ஒருவருக்குப் பின்னால் அவருடைய போதனைகள் செயலுருப் பெறாமல் செத்து மடிந்து விடுமானால், அது அவருக்கும் அவர் உருவாக்கிய சமூகத்துக்கும் இழுக்கே ஆகும். எந்தச் சித்தாந்தமும் வெற்றிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டுமாயின், அது மக்களால் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சித்தாந்தமும் அல்லது வாழ்க்கை நெறியும் வெற்றியடைய வேண்டுமாயின், அதன் தலைவரின் நடைமுறை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது போதனையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய முன்மாதிரி மட்டும் அமையாவிட்டால், அவரின் சித்தாந்தம் அந்தத் தலைவரின் தலைமுறையைத் தாண்டிப் பயணப்படும் வாய்ப்பை இழந்து, மறைந்தும் போய்விடும்....
இதைத்தான் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் ...நம் மாப்பிள்ளைகள் ,தங்கைகள் தம்பிகள் ,
அண்ணன்கள் மற்றும் நம் உறவு சொந்தங்களுடன் தலைவர் என்றமுறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் ..ஒரு சிறுகுறிப்பு நான் தலைவர் என்று ஓரிடத்தில் கூட சொன்னதும் இல்லை .சொல்லவும் விருப்பம் இல்லை .என்றும் களப்பணியாளராக செயல்பட்டுக்கொண்டு உள்ளேன் இனிமேலும் அப்படிதான் செயல்படுவேன் ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..தொடரும் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....
உலகில் உயிர் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதால் மட்டும் நிலைபெறுமா என்ன ? எவரேனும் ஓர் அரிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அது சுவாசித்து உயிர் வாழ்வதைவிட மேலானதாகும். ஒருவர் அரிய, அழகிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அவரின் முன்மாதிரி பிறரால் பின்பற்றத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வழிகாட்டி எனப்படுபவரின் நடிப்பு வாழ்க்கையால் நல்ல விளைவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. தலைவர் என்பவர் தன் குறைபாடுகளின் மீது தானே காரி உமிழ்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்வதில்தான் உயர்வின் உச்ச நிலைக்குச் செல்கின்றார். இதற்குத் தடையாக நிற்பது மனித மனம்தான். அதைத் தடுப்புகளால் கட்டுப்படுத்தியவர்தான் உண்மையான தலைவராக முடியும்.
.
உண்மையான தலைவர் என்பவர், உள்ளங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட எல்லைகளைக் கடந்த நிலைகளை அடைவதற்காகவும் பாடுபடுவார். எப்போதும் மிகச் சரியானது எது என்பதைக் தேடிக் கொண்டே இருப்பார். பரம்பரை பரம்பரையாக உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார். அந்த தலைவர் என்ன விலை கொடுத்தாவது, உண்மைக்கு உடந்தையாகவே இருப்பார்.
.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒன்றும் இயலாதவர்களுக்கும், உரிமையை இழந்தவர்களுக்கும், ஆதரவாக அவர் இருக்க வேண்டும்; அவர்களை நசுக்க நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இவை அனைத்தும், தகைமை மிக்க தலைவரின் மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகும்.
.
தனிப்பட்ட முறையில், தலைவர் என்பவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும். மக்களும், அவரைப் பின்பற்றினால் நமக்கு நன்மை உண்டு என்று கருத வேண்டும். தலைமைத்துவம் என்பதன் இலக்கணமே, அனைத்திலும் முன்னிலை வகிப்பதுதான். எனவே, தலைமை ஏற்பது என்பது, இறைவனையன்றி எதற்கும் அஞ்சாதிருப்பதாகும். பொது மக்களின் எழுச்சி என்பது சிறிய எதிர்பார்ப்புகளுக்காக அல்லாமல், பெரிய எதிர்பார்ப்பே அவர்களைப் பொங்கியெழச் செய்யும். மேல் நோக்கிப் பார்க்கப்படுபவரே தலைமைக்குத் தகுதியானவர்; கீழாகப் பார்க்கப்படுவர் அல்லர்.
.
அதே வேளை, தலைவர் என்பவர் தொலை நோக்குப் பார்வையும், அதில் தெளிவும் உடையவராக இருக்க வேண்டும். பெரும்பெரும் குறிக்கோள்களை அடைவதற்கான வழி தெரியாவிட்டால், அவை பற்றிக் கனவு காண்பது வீண் வேலை. தான் கண்ட கனவின் பக்கம் தன் ஆளுகையின் கீழ் இருப்பவர்களை முறையாக வழி நடத்திச் செல்லும் திறமை படைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும். பலமைல்கற்களைக் கடந்து, தான் கண்ட கனவை நனவாக்குவதில் அந்தத் தலைவர் முனைப்பாய் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, தனது இலட்சியத்தை அடையும் பலமுனைச் செயல்பாடுகளை இயற்றுவதற்குத் தகுதி படைத்த செயலாளர்கள் பலரை உருவாக்குவதும் அவருடைய பணியே ஆகும். ஏனெனில், எல்லாப் பணிகளையும் தான் ஒருவரே செய்யத் தலைவரால் இயலாது. மிகத் தகுதி வாய்ந்த, தான் கண்ட கனவை நனவாக்க திறமையுள்ள செயல் வீரர்களை உருவாக்குவது தலைவருக்கான பொறுப்புகளுள் தலையாயதாகும். தன்னிகரற்ற தலைவரானவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட செயல் வீரர்கள் தான் வழங்கிய பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுகின்றார்களா என்பதை அவர்களுக்கு அருகில் இருந்தே கண்காணித்து வரவேண்டும்.
.
இறுதியாக, தான் மென்னெடுத்துச் சென்ற நற்பனிகள் தான் மறைந்த பின்னரும் வழிவழியாகத் தன் சமுதாயத்தால் அவர்களின் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றப்படுவதை ஆதரவு வைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும்; அதற்கான உபதேசங்களைச் செய்து வரவும் வேண்டும். ஏனெனில், தலைவர் ஒருவருக்குப் பின்னால் அவருடைய போதனைகள் செயலுருப் பெறாமல் செத்து மடிந்து விடுமானால், அது அவருக்கும் அவர் உருவாக்கிய சமூகத்துக்கும் இழுக்கே ஆகும். எந்தச் சித்தாந்தமும் வெற்றிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டுமாயின், அது மக்களால் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சித்தாந்தமும் அல்லது வாழ்க்கை நெறியும் வெற்றியடைய வேண்டுமாயின், அதன் தலைவரின் நடைமுறை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது போதனையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய முன்மாதிரி மட்டும் அமையாவிட்டால், அவரின் சித்தாந்தம் அந்தத் தலைவரின் தலைமுறையைத் தாண்டிப் பயணப்படும் வாய்ப்பை இழந்து, மறைந்தும் போய்விடும்....
இதைத்தான் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் ...நம் மாப்பிள்ளைகள் ,தங்கைகள் தம்பிகள் ,
அண்ணன்கள் மற்றும் நம் உறவு சொந்தங்களுடன் தலைவர் என்றமுறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் ..ஒரு சிறுகுறிப்பு நான் தலைவர் என்று ஓரிடத்தில் கூட சொன்னதும் இல்லை .சொல்லவும் விருப்பம் இல்லை .என்றும் களப்பணியாளராக செயல்பட்டுக்கொண்டு உள்ளேன் இனிமேலும் அப்படிதான் செயல்படுவேன் ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..தொடரும் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....





