திங்கள், 31 ஜூலை, 2017

 மகிழ்ச்சி ...


இன்று மாதக்கடைசி கடுமையான பணிசூழலிலும் ...நம் பண்பாட்டு கழக சொந்தங்களோடு சென்று மடத்துக்குளம் திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களை ...தளி எதுலப்ப மன்னரின் மணிமண்டபம் கட்டுவதற்காக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .அதற்கு அவர் தக்க ஆவணங்கள் ,வரலாற்று ஆவணங்கள் கொண்டு வந்து தாருங்கள் ..இதை சட்டசபையில் பேசி கோரிக்கைவைத்து அதற்கான முயற்ச்சியை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ...

பண்பாட்டு கழக மாநில அமைப்பு செயலர் -திரு .அம்போதி அவர்களுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை செல்வத்தை ..நிர்மலா பாலகுமார் மருத்துவமனையில் பார்த்தது பெருமகிழ்ச்சி ....

நம் பண்பாட்டு கழக இளைஞர் அணி தலைவர் .திரு .கருணாநிதி அவர்களை ...சிறு விபத்தால் சிறு காயங்களுடன் மயிரிழையில் தப்பித்தவரை பார்த்து ஆறுதல் அளித்து வந்தோம் ..

நம் கம்பள விருட்சம் உறுப்பினர் ..நம் சொந்தம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி ஈடுபட்டிருக்கும் ..காவல்துறையில் பணியில் சேரவிருக்கும் திரு .நந்தகோபால் அவர்களை நம் மடத்துக்குளம் mla திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடவைத்தது பெரு மகிழ்ச்சி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக