வெள்ளி, 27 டிசம்பர், 2019

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
உயரமான பெண்களுக்கான புடவை: பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும். மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினே ஷன்(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம். அகலமான கரை வைத்த புடவைகள், முப் போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டவை. ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆ டைகளே வேண்டாம்.
புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
உயரமான பெண்களுக்கான புடவை: பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும். மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினே ஷன்(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம். அகலமான கரை வைத்த புடவைகள், முப் போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டவை. ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆ டைகளே வேண்டாம்.
ஒரு பையனும் பெண்ணும் பேசக்கூடிய மிகவும் சுவாரசியமான உரையாடல் என்ன?

அவன் : எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

அவள் : : உன் இஷ்டம்

அவன் : அன்னபூர்ணா ...ஆர்யாஸ் ..அஞ்சப்பர் ..?

அவள் : : போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?

அவன் : அப்போ செட்டிநாடு...?

அவள் : : எனக்கு புடிக்கல..காரமா இருக்கும்

அவன் : ம்ம் கேஎஃப்சி....?

அவள் : : நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

அவன் : அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : படத்துக்கு போலாமா....?

அவள் : : இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...

அவன் : அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

அவள் : : வேணாம்...

அவன் : காஃபி ஷாப்....?

அவள் : : நான் டயட்ல இருக்கேன்...

அவன் : அப்போ வேற என்னதான் செய்யறது....?

அவள் : : நீயே சொல்லு...

அவன் : சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....

அவள் : : என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

அவன் : ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்

அவள் : : நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

அவன் : அப்போ ஆட்டோ..?

அவள் : : வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

அவன் : அப்போ நடந்து போகலாம்..

அவள் : : என்னால முடியாது, எனக்கு பசிக்குது....

அவன் : அப்போ சாப்பிட்டே போவோம்?

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : ......(மனதிற்குள் நினைப்பது👇👇)

சரியான லூசு கிட்ட மாட்டிக்கிட்டோமே.

🌳மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே, 🌳

அன்பு வணக்கம்.🙏🙏🙏🌳🌳


ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில்  போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.


1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.


2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த  செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும்  கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.


3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.


4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி


5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை  ஊராட்சி அலுவலர்கள் மீது  மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.


6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல்.



உங்களதுதேவையே, 👍எங்களது சேவை ....🙏





மாற்றம் என்பது சொல்,🌱 இது மக்களுக்கான செயல்.🌳


8. நமது கணக்கம்பாளையம் ஊராடசி மிகப்பெரிய ஊராட்சி அந்த அளவிற்கு மிகுந்த வருமானமும் உள்ளஊராட்சி. ஆனால் இந்த ஊராட்சியின் வருமானத்த்திற்குத்தகுந்தாற்போல் வளர்ச்சி இல்லை.


9. ஊராட்சியில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம், சுகாதாராக்குறைபாடு , வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை இது போன்ற ஏராளமான பொதுமக்களுக்கான பிரச்சினைகள் இருக்கின்றது. இதை அறிந்து  பொதுமக்களின் தேவைகளைத் தெரிந்துஉங்களுக்காக உங்களில் ஒருவனாக ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். 


10. ஊராட்சித் தேர்தல் வரும் போகும், ஆனால் ஊராட்சிப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை யார் உணர்ந்து தெரிந்து பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆகவேதான். நூன் இந்த அடிப்படை சிக்கல்களை முழுமையாக உறுதி செய்து முடிப்பேன். இது போன்ற ஏராளமான சிக்கல்கள் நமது ஊராட்சியில்  உள்ளது.



கண்டிப்பாக என்று சொல்லாவிட்டாலும் என்னால் முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு உங்களை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறேன்.



வெற்றி பெற்றால் தலைவராகப் பணியாற்றுவேன். இல்லையென்றால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.



ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பெ.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் மக்கள் பணியாளன் உடுமலை பெ .துரைசாமி .....




Whatsapp  எண் ..94876 60523...👍🌳🌳....உடுமலைப்பேட்டை 

வியாழன், 26 டிசம்பர், 2019

அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளைவிட இந்தியாவின் சம்பளம் சற்று குறைவாக இருக்கக் காரணம் என்ன?

அமெரிக்காவில் பண மதிப்பு ரொம்ப அதிகம். நீங்கள் ஒரு கடைக்கு நூறு டாலர் கொண்டு சென்றால், நிறைய பொருட்கள் வாங்கி விடலாம். ஆனால் நாம் நாட்டில் அப்படி இல்ல பணத்தின் மதிப்பு மிகக் குறைவு.

அதனால் நமக்கு நூறு ரூபாய் என்பது குறைந்த மதிப்பாகத் தெரிகிறது. அதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் பத்தாயிரம் டாலர் வாங்குவது பெரிய தொகையாகவும், நம் நாட்டில் பத்தாயிரம் வாங்குவது குறைவாகவும் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பிறகு நாம் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருப்பதும் தான்.

Sivakumar.V.K----9944066681
(Home Loans,Home Loans To NRIs) 
(வீட்டுக் கடன்கள், என்.ஆர்.ஐ.க்களுக்கான வீட்டுக் கடன்கள்)
வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் ..

எனது மகனின் பிறந்து நாளுக்கு (19-09-2019) எங்கிருந்தோ வாழ்த்து தெரிவித்த எண்ணற்ற நெஞ்சங்களை விட என்னருகில் என் மனதோடு நெருங்கி வந்து உரசிச் சொன்ன வார்த்தைகள் ஓராயிரம் அந்த வார்த்தைகளின் வாடை இன்னும் காயவில்லை வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் வாழ்த்தும் முன் குழந்தையின் பெயரையும் குழந்தையின் தன்மையையும் கேட்டறிந்து பேசும் பேச்சாளன் அணிந்துரையா, வாழ்த்துரையா, தோரண வாயிலா, இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் கவிதை புரிய வேண்டும் புரியாத கவிதை தெரியாது. . கவிதை அதனால்தான் உரைநடையில் கவிதை எழுதினாயோ . . . வார்த்தைகளைக் கூட புரியுமளவுக்கு கவிதை எழுதிய கவிஞனே எங்களின் வரலாற்றுப் பயணத்தில் மட்டும் பாதியில் விட்டுச் செல்ல எப்படி மனம் வந்தது. கண்ணீரால் நனைகின்றேன்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

செவ்வாய், 24 டிசம்பர், 2019

உங்களதுதேவையே, எங்களது சேவை ....
மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே
மாற்றம் என்பது சொல், இது மக்களுக்கான செயல்.
நமது கணக்கம்பாளையம் ஊராடசி மிகப்பெரிய ஊராட்சி அந்த அளவிற்கு மிகுந்த வருமானமும் உள்ளஊராட்சி. ஆனால் இந்த ஊராட்சியின் வருமானத்த்திற்குத்தகுந்தாற்போல் வளர்ச்சி இல்லை.
ஊராட்சியில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம், சுகாதாராக்குறைபாடு , வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை இது போன்ற ஏராளமான பொதுமக்களுக்கான பிரச்சினைகள் இருக்கின்றது. இதை அறிந்து பொதுமக்களின் தேவைகளைத் தெரிந்துஉங்களுக்காக உங்களில் ஒருவனாக ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
ஊராட்சித் தேர்தல் வரும் போகும், ஆனால் ஊராட்சிப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை யார் உணர்ந்து தெரிந்து பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆகவேதான். நூன் இந்த அடிப்படை சிக்கல்களை முழுமையாக உறுதி செய்து முடிப்பேன். இது போன்ற ஏராளமான சிக்கல்கள் நமது ஊராட்சியில் உள்ளது.

கண்டிப்பாக என்று சொல்லாவிட்டாலும் என்னால் முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு உங்களை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறேன்.

வெற்றி பெற்றால் தலைவராகப் பணியாற்றுவேன். இல்லையென்றால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பெ.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை பெ .துரைசாமி .....
தொடர்பு எண் ..94876 60523..
குழந்தைகள் அம்மா அப்பாவை அன்பினால் பெயர் சொல்லி அழைக்கலாமா?

என் அம்மாவை நான் ஒருபோதும் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.

அம்மா என்று அழைப்பது பெரும்பாலும் இல்லை.

நானும் அவ்வாறு முயற்சித்து பார்த்துள்ளேன், என்னால் அப்படி அழைக்க இயலவில்லை.

அதை பார்த்து, என்னுடைய மகனும் என்னை பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டேன். ஆனாலும் என்னை சிவா என்றே அழைப்பான் ..மாமனார் ,மாமியார், அப்படியெல்லாம் சொல்லி தராதே, பெரியவர்களை மரியாதையாய் தான் பேச வேண்டும் என்றார்கள். ஆனால்  என்னை சிவா என்று  என அழைப்பதைக் கேட்டு பெயர் சொல்லி கூப்பிட பழகி விட்டான். ஏன் என்றால்  என் மனைவி ,என்னை சிறு வயதில் இருந்தே சிவா என்று அழைத்து பழகியாதலால் ..



நான் ஷியாம்  செல்லம் என்றால், சிவா  செல்லம் என்று என்னை  கொஞ்சுவான்.

ஷியாம் ..என் மனைவியை  அம்மா, மம்மி, மம்மா(ஜெர்மன்),மாம் என்று அழைப்பான். அப்போதெல்லாம் விட பெயர் சொல்லி அழைக்கும் போது மழலை மொழியின் கொஞ்சல் சற்றும் அதிகமாக ரசிக்கும் படியாக இருக்கும்.

எனவே அம்மா, அப்பா, உறவுகளை பெயரிட்டு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்தவரை அப்படி அழைக்காமல் நாம் தான் பழக்க வேண்டும். ஒருவேளை வேற்றாருக்குபெயரிட்டு அழைப்பது அவருக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019

மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே,
அன்பு வணக்கம்.
ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில் போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.
2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும் கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.
3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.
4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி
5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை ஊராட்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல். ஏதிர்வரும் டிசம்பர் 30 ஆம்நாள் நடைபெறும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பn.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை துரைசாமி ...
Whatsapp எண் ..94876 60523...

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அப்பாவின் மலரும் நினைவுகள் ...சினிமா பாட்டு புஸ்தகம் .......

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள்.  முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்க” என்று முடித்து இருப்பார்கள். இது  மறக்க முடியாத வாசகம்.

பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள்.✍🏼🌹

வியாழன், 19 டிசம்பர், 2019

சந்தேகமில்லாமல் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான நபராக இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்ல முடியுமா?

சந்தேகமில்லாமல் நிச்சயமாக நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் காரணங்கள் பல

நான் என்னுடைய வருமானத்தை மீறி செலவு செய்தது இல்லை

கலைஞர் அவர்கள் கூறியது போல் என்னுடைய உயரம் எனக்கு தெரியும்

நண்பர்கள் ஆகட்டும் உறவினர்கள் ஆகட்டும் ஒரு எல்லை தாண்டி யாருடனும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது இல்லை

நான் நானாகத்தான் இருக்கிறேன்

வருடத்திற்கு இரண்டு லிருந்து ஐந்து முறை நண்பர்களுடன்  பல்வேறு  நகரங்களுக்கு சென்று வருகிறேன்.

என்னுடைய வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததில்லை.


நான் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. பொய் கூறியதில்லை. பத்து வருடம் கழித்து நடக்கப்போகும் நிகழ்ச்சிக்காக இன்றே நான் தயாராக விரும்பவில்லை. இதன் பொருள் எதிர்காலத்திற்காக நான் நிகழ்காலத்தை இழக்க விரும்பவில்லை.

அதற்காக நான் சேமிக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். என்னுடைய வருமானத்தில் 10% சேமிப்பிற்காக சென்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நான் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே,சொந்தங்களே . வாழ்க்கை மிகவும் சுலபம் எளிது. எனக்கு என்னவோ நாம்தான் அதனை கஷ்டப்படுத்தி கொள்கிறோமோ என்று தோன்றுகிறது

புதன், 18 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

ஒரு மாறுதலுக்கு நல்ல விஷயங்களை சொல்கிறேன்.

(1) வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவரை கண்டுகொள்ளாமல் நம் வேலையை நாம் சிறப்பாக செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

(2) செய்த வேலையையே பல நாட்கள் செய்து கொண்டு இருக்காமல் புதிதாக கற்றுக்கொண்டால் பிரகாசமான எதிர் காலம் உண்டு

(3) உங்கள் அரிசியில் உங்கள் பெயர் உள்ளது என்பது போல உங்கள் ரேட்டிங்கில் உங்கள் பெயர் உள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது

(4) நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் கஸ்டமர் எவ்வாறு பயன் அடைகிறார், இதை நம் வாழ்க்கைக்கு எவ்வாறு நாம் அப்ளை செய்து பார்க்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் 'வேற லெவலில்' இருக்கலாம்.

(5) ஆண் - பெண், முதியவர் - இளையவர், புதியவர் - பழையவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரையும் மரியாதையுடன் பெயர் சொல்லி அழைக்கலாம்.

(6) அருமையான வாடிக்கையாளர்களை சந்திக்க  நிறைய அதிர்ஷ்டமும் ஒரு அளவுக்கு பேசும் திறமையும் இருந்தால் போதும்.

(7) தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள செல்ஃப் எவலுவேஷன் என்ற அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இதை வெறும் பேருக்கு செய்யாமல் சீரியஸ் ஆக செய்து பார்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும்

(8) எப்போதுமே ஒரு தாகத்தோடு எதையாவது படித்துக்கொண்டே இருக்க இந்த புதிய டெக்னாலஜி டிமாண்ட் உதவுகிறது. இல்லையேல் காலம் முழுக்க ஒரே மாதிரி வேலை செய்து அலுத்து விடும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு கூறும் மிக சிறந்த அறிவுரைகள் என்ன?

மூவெட்டில் மணம் காணத் தயாராவது நல்லது, என நாலெட்டில் திருமணமானவன் சொல்கிறேன்.

இருமனம் இணைய நிறைய விட்டு கொடுக்க வேண்டும் …

உனக்கு மட்டும் தான் நிறையத் தெரியுமென அகம்பவமாய் இருக்கக் கூடாது.

உன் பலமும் துணையின் பலவீனமும் சேர்ந்துதான் உங்கள் குடும்ப பலம். அதே போலத்தான் உன் பலவீனத்தை உன் துணையின் பலம் கொண்டு நிரப்ப முடியும் என ஆணித்தரமாய் நம்புக..

சண்டையிடத் தெரியுமுன் சமாதனமாய் போகப் பழக தெரியனும்…

மற்றவர் முன் துணையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கேலி செய்வது கூடாது…

அவரவர் பலத்தையும், பலவீனத்தையும் சுட்டிக் காட்டாமல், அப்பிடியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

குறிப்பாக ego வை மியூட் பண்ண பழகுங்கள்; அதிலிருந்து சுத்தமா வெளியே வந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

அவரவர் space ஐ மதிக்க பழகுங்கள்; துணைவர்களின் உறவினர், நட்பு வட்டாரங்களில் இணைந்திருக்க. பழகுங்கள்.

துணைவர்களின் carrierல் முன்னேற்றம், இலட்சியங்களை அடைய ஊக்கப் படுத்த வேண்டும்; உறுதுணையாக இருக்க வேண்டும்.

தோல்விகளால் துவளாது இருக்க உடனிருந்து ஆறுதல் படுத்த வேண்டும்.

நிறைய செவி மடுக்க வேண்டும்.

நல்ல விஷயங்களைப் பாரட்டத் தெரிய வேண்டும்.

அடிக்கடி குடும்பத்துடன் கூடி மகிழ வேண்டும்…

இதெற்கெல்லாம் தயாராயிருந்தால் போதும்…வாழ்ந்து பாருங்கள்…வாழ்த்துக்கள் ..