வெள்ளி, 7 மார்ச், 2025

மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰 நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

 மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰


நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

மகளிர் தினம்
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

திருமதி சிவரஞ்சனி -வழக்கறிஞர் -கோவை 

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே.. 

திருமதி .சுமதி மோகன் -கடவூர் இளவரசி 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை 
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய  தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..
 
திருமதி .சத்யா பரமசிவம்  ...-தனியார் துறை -கோவை 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி 

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் -உடுமலை 

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர்  உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் .. 

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு நகலகம் .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர் 

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள்  ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..


திருமதி .ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...


திருமதி கோமதி மணி -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .


திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..

திருமதி .சுசிலா -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி  உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....  

திருமதி .பிரேமலதா -எஸ் .அம்மாபட்டி -உடுமலைப்பேட்டை 

கல்வியில் இளநிலை  பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..

திருமதி  .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி 
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார் 

திருமதி .வீரலட்சுமி ராஜவேல் ..(ஆண்டிபட்டி )

சாப்டூரில் பிறந்து  நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உள்ள  பள்ளியில் சிறப்பான கல்வி கற்கும் பாக்கியம் பெற்றும் பெண்பிள்ளைகள் அதிக படிப்பு தேவை இல்லை என்ற குடும்ப  சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக  படிப்பை தொடரமுடியாமல் இருந்து . 

திருமணத்திற்கு பிறகு என் கணவரின் உதவியோடு மேல் படிப்பு படித்து முதுநிலை பட்டதாரி ஆகி  16 மாணவர்களுடன் தொடங்கிய ஒரு சிறிய தனியார் பள்ளியில் முதல்வராக சேர்ந்து 10 ஆண்டுகளில் 1000 க்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளியாகவும்  சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் self confidence, நேர்மறை சிந்தனை  மேம்படுத்தும் இடமாகவும் உருவாக்கியது.

மேலும் 20 ஆண்டுகளாக  பணி செய்த 2 பள்ளியிலும் நல்ல திறன் மிகுந்த முதல்வர் என்று மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேர் பெற்றுள்ளேன்.
 
பிறந்த வீடான சாப்டூர் பாளையம் பற்றிய வரலாற்று செய்திகளை திரட்டுவதில் ஆர்வம் உண்டு.


திருமதி.செல்வராணி..எஸ் .அம்மாபட்டி .உடுமலைப்பேட்டை .
குமரேசன்.
விவசாயபண்ணை
நிர்வாகஇயக்குனர்.
எஸ்அம்மாபட்டி
படிப்பு: பள்ளிபடிப்பு 
1998ல்.தமிழ்மொழிப்
பாடதேர்வில்முதல்பரிசுவென்றவர்.
அழிந்து வரும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு
நிகழ்வு களைபாதுகாக்க
முழுமுயற்சியில்தன்னை
ஈடுபடுத்திக்
கொண்டிருப்பவர்.
கீர்த்தி வீரர் எத்தலப்பர்குழுமற்றும்கம்பளத்துப்பெண்கள்
குழுவில்இணைந்து
வரலாறு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அனைவரும்அறிந்து 
கொள்ள மிகுந்த முயற்சி மேற்கொள்பவர்.குறுகியகாலகட்டத்தில் தமது

நட்பு வட்டாரத்தை
பெருக்கிக்கொண்டவர்.
தன்னம்பிக்கை தைரியம்
எழுத்தாற்றல் மிக்கவர்📗✒️✒️🤝🥰செல்வராணி
சிம்மராசி
இவர் ஆணாகப்பிறக்க
வேண்டியவர்
கற்பனை வளம்
சிந்தனைஆற்றல்
எழுத்தார்வம் மிக்கவர்,தன்னால் தனது சமூகம் உயரவேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர்,தமிழகத்தின் இரும்பு பெண்மணி  ஜெயலலிதாவுக்கும் சிம்மராசி தான் மகம் நட்சத்திரம்,கம்பளம் சமுதாயத்தில் உள்ள அனைத்து உறவுகள் பற்றி அறிய
முயற்சி மேற்கொண்டுள்ளவர்,ஆண் பெண் பேதம் அற்றவர்,சிம்ம ராசி உள்ளவர்கள் அதிகம் தன் சொந்தங்களை நேசிப்பவர்,வீரமிக்கவர்கள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் ஆண் பெண் எத்தனை கூட்டமாக இருந்தாலும் தன்  பேச்சால் அனைவரையும் தனது கருத்துகளால் ஆளுபவர் ✒️📗📗🤝🥰📡🎙️🎙️


திருமதி அனிதா ஜெயராமன் ( பொன்னாலம்மன் சோலை -உடுமலைப்பேட்டை )
வளர்ந்து வரும் விவசாய தொழில்முனைவோர் 
தன் சகோதரருடன் இணைந்து  தொழில்முனைவோராக திகழ்வதுடன் பொதுதளத்தில் சமுதாய முன்னேற்றங்களிலும் எதிர் காலச் சூழ்நிலைகளுக்கு தகந்த கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்...


திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை 
இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கிநீர்மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,மேலும் இவர் தன் கணவரின் டைல்ஸ் காண்டிராக்ட் தொழிலுக்கு பக்க பலமாக இருந்து கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாக செயல்படுபவர் ..
 
எஸ் .தெய்வநாயகி (கே .வல்லகொண்டபுரம் -உடுமலைப்பேட்டை )முதுகலை பட்டதாரி .
பொள்ளாச்சி கலை கல்லூரியில்  பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கணிதத்தில் முனைவர் படிப்பு படித்து வருகிறார்...நம் பெண் குழந்தை சொந்தங்களுக்கு கல்வி விழுப்புணர்வு மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார் .

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் 

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸப் எண் ...👍🌷🌷🌷🌷🌷





புதன், 5 மார்ச், 2025

Home loan for NRIs:

 Home loan for NRIs:

A few important steps to follow Home loan for NRIs:
The norms on home loans are not too different for a non resident Indian (NRIs), when compared to resident Indians. Of course, you would have to show documents that pertain to your non resident status, which is an important criteria while taking a NRI home loan.
Where to take loans?
Most of the Indians banks have branches abroad, with a very good extensive network in countries like the Middle East. For example, in certain countries there might not be branches, but, there would surely be an associate which acts on behalf of a bank or institution. For example,
These days online applications are also possible, but, you may have to scan and send the documents and would also have to go through the hassle of couriering the same.
Documents required:
As indicated before, one of the most important documents would be to prove your non-resident status, which is why things like a valid visa, labour card etc., are required.
Here are a list of some essential documents that are required.
1) Application form with photograph
2) Photocopy of the Employment Contract or Labour Contract. In case the contract is not in English the Housing Finance Company or Bank will ask for an English translation. 3) Latest salary certificate
4) Photocopy of the Identity card or work permit (Labour) as the case maybe.
5) Photocopy of latest work permit
6) Photocopy of valid resident visa stamped on the passport
7) Property related documents
😎
A few other points to remember It's important to note that the payment for the EMI has to be made from an NRO/NRE account or remittance from abroad.
It's therefore preferable that you have a steady job It's also important to appoint a power of attorney for the loan. The interest rate on a NRI home loan is the same as that for a resident Indian.
Sivakumar.V.K

--
Sivakumar.V.K

Home Loan Consultant

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

 கல்லாக நிற்கும் நீராணிக்கர்களும், மடையர்களும், கரையார்களும்


ஏழுகுளப்பாசனமும் நிர் மேலாண்மையும் என்ற தலைப்பில் கரையார், நீராணிக்கர்கள், மடையர், குறித்தான பல்வேறு செய்திகளை உடுமலை வரலாற்றில் நூல் பதிவிட்டிருந்தோம்.

இதுநாள் வரை பெரியகுளத்திற்கு அருகில் இருந்த கற்சிலை தற்போது நீராணிக்கர் எனவும், மடையர் எனவும் கரையார் எனவும் கண்ணுக்குத் தெரிந்து பதிவு
செய்துள்ள செய்தியாளர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இது போன்ற ஒட்டுக்குளம், செங்குளம். அம்மாபட்டிகுளம், கரிசல் குளம், பூசாரி நாயக்கன் குளம் , வலையபட்டி வதூத் குளம் என ஒவ்வொரு நீர்;த்தேக்கத்தை ஒட்டியும் இது போன்ற சிலைகள் இருப்பதை இனிமேலும் கண்காணித்து பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினமலர்
( விரிவான செய்திகள் உடுமலை வரலாறு ஏழுகுளப்பாசனத்தில் உள்ளது )

உடுமலை வரலாறு 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..

 வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..

வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை


பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .
தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன் குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும் வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...
இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல் அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .
மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .
பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .
தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .
ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந் தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும் கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,

வியாழன், 13 பிப்ரவரி, 2025

உப்பு பற்றி நீங்கள் அறியாத சுவரசியமான தகவல்கள் சில…


 உப்பு பற்றி நீங்கள் அறியாத சுவரசியமான தகவல்கள் சில…

"Salary Credited" எனும் மெசேஜ் கண்ணில் படும்போது வரும் ஆனந்தத்திற்கு ஈடுண்டா? ஆனால், இந்த Salary அல்லது சம்பளம் எனும் வார்த்தை நம் காதில் விழும்போது நாமெல்லாம் உப்பைத்தான் நினைவுகொள்ளவேண்டும். ஏன் தெரியுமா? இந்த இரண்டு வார்த்தைகளும் உப்பிலிருந்துதான் பிறந்துள்ளனவாம். பண்டையகாலத்தில் உப்பு மிகவும் அரிதானவோர் பொருளாக கருதப்பட்டதால் வெண் தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பண்டைய ரோமர்கள் தமது படைவீரர்களுக்கு உப்பினையே கூலியாக வழங்கியுள்ளனர். அதனை “Salarium” எனும் லத்தீன் வார்த்தையால் குறிப்பிட்டுள்ளனர். Salarium எனும் லத்தீன் வார்த்தையே பின்னாளில் “Salary” என மாற்றமடைந்துள்ளது.

அதேபோன்றே உப்பு உற்பத்தித்தொழிலை அடிப்படையாக வைத்துதான் சம்பளம் எனும் சொல்லே உருவானதாகவும் சொல்லப்படுகின்றது . உப்பினை உற்பத்தி செய்யும் களத்திற்கு பெயர் “அளம்” . பண்டையகாலத்தில் இந்த அளத்தில் வேலை பார்ப்போருக்கு கூலியாக “சம்பா” அரிசியே கொடுக்கப்பட்டதால். அப்படி " அளத்தில் கிடைத்த சம்பா " சம்பா - அளம்” என்பது காலப்போக்கில் சம்பளம் என மருகியது எனக்கூறப்படுகின்றது .

இப்படிப்பட்ட உப்பின் வணிகத்திற்காக உலக நாடுகளுக்கிடையே ஏகப்பட்ட போர்கள் நடந்துள்ளன. உப்பின் மீது போடப்பட்ட வரிகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் புரட்சிகள் வெடித்துள்ளன. அதுமட்டுமா? இன்று உப்பின் வணிகம் காப்பிரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றபின் அதில் ஏராளமான உணவரசியல்களும் நுழைந்துவிட்டன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் அயோடின் குறைபாடுடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக மக்களுடைய அன்றாட உணவில் எப்படியாவது அயோடினை சேர்த்தாகவேண்டும் என யோசித்த அமெரிக்க அரசு அதற்காக தேர்ந்தெடுத்த பொருள் "உப்பு" அப்போதுதான் உப்பில் “அயோடின் கலந்த உப்பு“ எனும் புதிய முறை உருவானது .

கடைசியில் அயோடின் கலந்த உப்புதான் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தேவை என்பதுபோல் இந்த அயோடின் உப்பு வணிகம் பரப்பப்பட்டது. "உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?" போன்ற விளம்பரங்களின் பின்னால் இருக்கும் வணிக நோக்கம் தெரியாமல் நாமும் அதை வாங்கி வயிற்றில் கொட்டிக்கொள்கின்றோம்.

மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது அவனது உடல் இயக்கத்திற்கு தேவையான உப்பானது அவன் வேட்டையாடும் விலங்கின் இறைச்சியிலிருந்தே கிடைத்தது. ஆனால், அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்தபின் உப்பு என்பது தனியாக தேவைப்பட்டது. அப்போதுதான் அவன் உப்பை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்கலானான். நெருப்பு, விவசாயம் என்பவற்றுக்கு அடுத்து மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் உப்பைக் கண்டுபிடித்ததுதானாம் .

உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் நம் வியர்வையினூடாக உப்பு வெளியேற்றப்பட்டமையினால் நமது உடல் இயக்கத்தின் சமச்சீருக்கு உப்பு என்பது அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் இன்றோ உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துபோனதால் உப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கின்றது.

புதன், 5 பிப்ரவரி, 2025

Kambalapatti - Pollachi Kenderyiamman (Kendukattamman)

 Even as times change... the culture... and traditions... of the Kambala community remain unchanged. The Kambalapatti - Pollachi Kenderyiamman (Kendukattamman) Temple Festival is a testament to this. This three-day festival is a unique event that showcases the community's rich heritage and traditions.

The Kambala community, has been observing this festival for centuries. The community's ancestors migrated from the northern regions of India, specifically from the Pallari and Devakiri areas, to escape the Mughal invasions.








The festival is dedicated to the worship of Kenderyiamman, a deity revered by the community. The festivities begin with the ritual of seeking the deity's permission, which is obtained through a traditional ritual involving the playing of the 'Pulalanguzhal' (a type of flute).
The highlight of the festival is the re-enactment of the community's migration from the north. The devotees, dressed in traditional attire, carry the deity's idol on their shoulders and proceed to the riverbank, where they symbolically cross the river using a makeshift bridge made of punga trees.
The festival is a celebration of the community's rich cultural heritage and its traditions. It is a testament to the community's resilience and its ability to preserve its customs and traditions despite the passage of time.
The festival is organized by the Kambala community, with the support of the local administration and other stakeholders. It is a significant event in the cultural calendar of the region and attracts devotees and tourists from all over.
🌈🌈✒️✒️📗📗📡📡🎙️🥰🥰🌈

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

 காலங்கள் மாறினாலும் ...🥰

பண்பாடும் ...🥰

கலாச்சாரம் ..🥰

மாறாத கம்பள சமுதாய மக்கள் ....-🥰







கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

பாரம்பரியம் பண்பாடு காக்கும்  

கெண்டேரியம்மன் (கெண்டுகாட்டம்மா) திருவிழா :

 ஓர் சமுதாய சூழலில் பாரம்பரியம் மங்கி  வரும் இக்கால கட்டத்தில் 

இன்றளவும் பழமை குன்றாமல் பெருவிழா பூண்டு பயபக்தியுடன் நடந்து கொண்டு வருகிறது இத்திருவிழா... 

 விழா சிறக்கும் இடமானது 

  ராஜ கம்பள மக்கள் வாழும்  ஒன்பது குலத்தவர்களையும்  தன்னுள்

அடக்கியாளும்  ஊரான  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள    தொண்டாமுத்தூர்  ஜமீன்க்கு உட்பட்ட  

ஊரான 

 கம்பாலப்பட்டி  

இங்கு தான்  இத்திருவிழா  கோலாகாலாமாக கொண்டாட படுகிறது... 

இந்த திருவிழாவானது மூன்று நாட்கள் நடை பெறுகிறது இங்கு கெண்டேரியம்மன் என்று அழைக்க கூடியா   கெண்டுகாட்டம்மாள் தாயாரும் 

மல்ல தாத்தையன்  ஆகிய இரு    தெய்வங்கள் ஆட்சி செய்கிறார்கள் 

 கெண்டேரியம்மன் கடவளானது...  வேகிளிவாரில் ஒரு உட் பிரிவான  இர்ரின்னா   குலத்தவருக்கு ஆதி தல குல தெய்வமாக  விளங்குகிறது... 

இந்த மக்கள் ஆண்டு பல காலம் முன்னரே  ஆந்திரா கர்நாடக மைய பகுதியான  பல்லேரி , தேவகிரி பகுதிகளிலும்  வாழ்ந்து வந்த மக்களாவர்கள் அங்கு  முகலாய படை எடுப்பின் போது நகர்ந்த     மக்கள் எப்படியான சோதனைகளை சந்தித்தினர் என்றும் அவர்களை எப்படி இக்கடவுள் கட்டி காத்து பாதை காட்டியாக செயல் பட்டு  ஆற்றங்கரைகளை கடந்து வர உறுதுணையாக  இருந்தன போன்ற அறிய வகை செய்திகளும் ஆச்சார்ய மூட்டுகிற  வகையில்  திருவிழாவும் கூடி ஒரு வித்தியாசமானதாக நடந்து கொண்டு உள்ளது எனில் பிரமிக்க வைக்கவே செய்கிறது நம்மை...

 இக்குல மக்கள் வடக்கு பகுதிகளை விட்டு நகரும் போது அப்போதைய  முகலாய படை (டெல்லி சுல்தான்கள்)அவர்கள் டெல்லியில் இருந்து தென் பகுதிகளில் படை எடுக்க முக்கிய காரணம் இங்கு விளைந்தும் சேர்த்தும் வைத்து இருந்த அரசர்களின்  பொன், பொருள் , வைரம், வைடூரியம் , ஐம்பொன் சிலைகள் போன்றவைகளை முக்கிய இடம் பிடித்தன  இவற்றை கொள்ளை அடிக்கவே தென் மார்க்கமாக படை எடுத்த வந்துள்ளார்கள் அப்பொழுது இம்மக்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து வர இககுல தெய்வங்கள் துணையாகவும் பக்க பலமகாவும் நின்று அவர்களிடம் இருந்து காத்து இவர்களின் வழிதுணையாகவும்  ஆற்றங்கக்கரையை கடக்க புங்க மரங்களை ஆற்றின் மேல் சாய்த்து இவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது எனவும் இவர்கள் ஆற்றங்கரையை கடந்து வந்த பின் அம்மரங்கள் எழுந்து நின்று கொள்கின்றன போன்ற காட்சிகளை இந்த திருவிழாவுல் கண்கூடாக காண முடிகிறது... 

அப்பொழுது இங்கு எந்த ஒரு சத்தமும் நிகழ்வது இல்லை உறுமி போன்ற எந்த ஒரு இசைகருவியும் இசைக்க படுவது இல்லை 

 இந்த கோவிலில் திருவிழா முறை படி சாட்ட படுகிறது

அப்பொழுது இருந்து இம்மக்கள்  சுத்தமாக கடும்  விரதத்துடன்  உள்ளார்கள் யாருக்கும்  தண்ணிர் கூட குடுப்பது இல்லை இவர்களும்  வெளியில் தண்ணீரோ உணவு அருந்துவோ மாட்டோம் என்கிறார்கள்

திருவிழா நடத்த முறை படி அக்கோவிலின் முன் ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து கொள்கிறார்கள் கம்பளி போர்வை போட படுகிறது முறை படி அனைவரும் சிறு குழந்தை முதல் பெரிய ஆடவர் வரை மேல் சட்டையை அகற்றியும் தலையில் மேல் துண்டை சுற்றி உருமாவாக உருவாக்கி கொள்கிறார்கள்  பெண்களும் மேலாடை அணியாமல்  கூடைகள் (தேவரு கெப்பலு) வைத்து வரிசையாக அமர்ந்து அக்கடவுளிடம்  உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது கறுப்பு கம்பளி மீது  அமர்ந்து புல்லாங்குழல் மூலம் கடவுளிடம் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது உத்தரவு வாங்குவதற்க்குள் அவர்களை அழுகையில்  நனைத்து விடுகிறது.. புல்லாங்குழல் ஊதும் போது கட்டிகொள்கிறது சத்தம் வராமல் அப்படியெனில் உத்திரவு பிறப்பிக்க பட்டதாக கருதுகின்றனர் ஊர் மக்கள் 

உத்திரவு கொடுக்கும் வரை அவ்வளவு ஒரு அமைதி நிலவுகிறது ஊர் முழுக்க புல்லாங்குழல் சத்தம் மட்டுமே ஒளித்து  மனதை மதி மயங்க வைக்கிறது... 

உத்தரவு கிடைத்த பின் அமைதியாக   கோவிலில் அலங்கரித்து வைத்துள்ள  தெய்வங்களை எடுத்து கொண்டு  நகர்கிறார்கள் அப்பொழுது முகலாய குதிரை  படை போன்ற வேடமிட்டு ஊரை வளம் வருகிறார்கள்  இத்தெய்வங்கள்  முன்னே செல்ல பின்னே அவர்கள்  வருகையும் ஊரை மிளிர வைக்கிறது... 

 பின்னர்  இம்மக்கள் ஆற்றங்கரையை கடந்து தெற்கு திசை வந்து  விட முகலாய படை வடக்கு திசை நோக்கியே   சென்று விடுகிறார்கள்   

தெற்கு  திசை நோக்கி வந்து    ஊர் மந்தையில் நீண்ட வரிசையில்  ஒன்பது குலத்தவரும் பொங்கல் வைத்து கரும்பு பந்தல் இட்டு கொண்டு வந்த  சாமியை அதனுள் வைக்கிறார்கள்   பிறகு  தான் (சக்தி கும்பம்) தீர்த்தம் எடுத்து உறுமி முழங்க அருளுடன் வருகிறார்கள் பிறகு   திணை வகைகள் பூண்டு  மாவு செய்து  மாவிளக்கு எடுக்குறார்கள் 

 இறுதி நாளில்  சாமியை கோவிலிற்கு எடுத்த செல்லவும் உத்தரவு கேட்கிறார்கள்  அப்பொழுது வரம் வேண்டி ஊர் மக்கள் அக்கடவுளை மனமுருக வேண்டி வரம் கேக்கிறார்கள் புல்லாங்குழல் மூலம் உத்தரவு கிடைத்த  பின்னர் அம்மக்கள் மகிழ்ச்சி பொங்க மனம் குளிர வேண்டி கொள்கிறார்கள்  உத்திரவு கிடைக்க கால தாமதமானால் அழுது புலம்புகிறார்கள் 

 பார்க்கும் போதே உடல் அசைவுகள் அனைத்தும்   மெய் சிலிர்க்க வைக்கிறது... 

அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர்

  பய பக்தியுடன்   திருவிழா நடந்து முடிவு பெறுகிறது பாரம்பரியம் பண்பாடு மறையாமல் இன்றளவும் சீரும் சிறப்போடு வெகு விமர்சையாக  இத்திருவிழாவை நடத்தி கொண்டு  உள்ளார்கள்  கம்பால பட்டி ஊர் மக்கள் ... 

பகிர்வு : 

வரலாற்று தகவல்கள் சேகரிப்பு பிரிவு 

கம்பள விருட்சம் அறக்கட்டளை

(தொழில் சார் கல்வி மேம்பாட்டு குழுமம் )

நன்றிகள் ....பொறியாளர் கார்த்தி SR ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..ஊடகவியலாளர் செந்தில்ராம் .கணினித்துறை ஜனா ஹரிகரன் ,பிரபாகரன் .ஜிலேபிநாயகன்பாளையம்  கோபாலகிருஷ்ணன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681📗🖋️🥰🤝👍🙏🌴⚔️🏹🌾📡🎙️

சனி, 1 பிப்ரவரி, 2025

 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான முக்கிய சிறப்பம்சங்கள் என் பார்வையில் 


- *வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் சம்பாதிக்கும் நபர்களுக்கு ₹80,000 ¹ வரிச் சலுகை கிடைக்கும்.

- *கடன் உத்தரவாதக் காப்பீடு*: நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ₹10 கோடியாகவும், தொடக்க நிறுவனங்களுக்கு ₹20 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

- *கடன் பெறுவதற்கான எளிதான அணுகல்*: MSME களுக்கு மலிவு விலையில் கடன்களை எளிதாக்குவதற்கு மேலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், அத்துடன் வட்டி விகிதங்களைக் குறைக்கப்படும்.

- *கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை*: MSME களுக்கு பிணையமில்லாத கடன்களை வழங்குவதற்காக நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் (CGTMSE) விரிவாக்கம் ².

- *தேசிய உள்கட்டமைப்பு குழாய்வழி*: நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மின்சார இயக்கம் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற புதிய துறைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது ¹.

- *டிஜிட்டல் பொருளாதாரம்*: செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் புதுமைகளுக்கான ஊக்கத்தொகைகள், அத்துடன் வலுப்படுத்தப்பட்ட சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு ².


இந்த அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வரிவிதிப்பு எளிமைப்படுத்துதல் மற்றும் MSME கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை 

 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் என் பார்வையில் மதிப்பாய்வு 

முக்கிய சிறப்பம்சங்கள்

வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ₹80,000 வரிச் சலுகை கிடைக்கும்.

புதிய வரி முறை*: 5% முதல் 30% வரை விகிதங்களுடன் திருத்தப்பட்ட வரி விகித அமைப்பு.

உள்கட்டமைப்பு மேம்பாடு*: சாலைகள், ரயில்வே மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ₹11,11,111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

- *வேலைவாய்ப்பு மற்றும் திறன்*: ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரதமரின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஐந்து திட்டங்களின் தொகுப்பு ¹.

- *உள்ளடக்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி*: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கும், பழங்குடி சமூகங்களுக்கான முயற்சிகளுக்கும் ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.


துறை வாரியான ஒதுக்கீடு

விவசாயம்*: விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.

கல்வி*: கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 13% அதிகரித்துள்ளது ¹.

சுகாதாரம்*: சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹37,000 கோடி ஒதுக்கீடு ¹.

பாதுகாப்பு*: பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 10% அதிகரித்துள்ளது ¹.


பிற முயற்சிகள்

- *நகர்ப்புற மேம்பாடு*: பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான முத்திரை வரி குறைப்பு, மற்றும் 100 வாராந்திர 'ஹாட்கள்' அல்லது தெரு உணவு மையங்களை உருவாக்குதல் ¹.

ஆற்றல் பாதுகாப்பு*: அணுசக்தி, பம்ப் செய்யப்பட்ட சேமிப்புக் கொள்கை மற்றும் எரிசக்தி தணிக்கைக்கான முயற்சிகள் .

சுற்றுலா*: ஒடிசாவில் சுற்றுலா வழித்தடங்களின் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு 

சிவக்குமார்  VK 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை