செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

 காலங்கள் மாறினாலும் ...🥰

பண்பாடும் ...🥰

கலாச்சாரம் ..🥰

மாறாத கம்பள சமுதாய மக்கள் ....-🥰







கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

பாரம்பரியம் பண்பாடு காக்கும்  

கெண்டேரியம்மன் (கெண்டுகாட்டம்மா) திருவிழா :

 ஓர் சமுதாய சூழலில் பாரம்பரியம் மங்கி  வரும் இக்கால கட்டத்தில் 

இன்றளவும் பழமை குன்றாமல் பெருவிழா பூண்டு பயபக்தியுடன் நடந்து கொண்டு வருகிறது இத்திருவிழா... 

 விழா சிறக்கும் இடமானது 

  ராஜ கம்பள மக்கள் வாழும்  ஒன்பது குலத்தவர்களையும்  தன்னுள்

அடக்கியாளும்  ஊரான  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள    தொண்டாமுத்தூர்  ஜமீன்க்கு உட்பட்ட  

ஊரான 

 கம்பாலப்பட்டி  

இங்கு தான்  இத்திருவிழா  கோலாகாலாமாக கொண்டாட படுகிறது... 

இந்த திருவிழாவானது மூன்று நாட்கள் நடை பெறுகிறது இங்கு கெண்டேரியம்மன் என்று அழைக்க கூடியா   கெண்டுகாட்டம்மாள் தாயாரும் 

மல்ல தாத்தையன்  ஆகிய இரு    தெய்வங்கள் ஆட்சி செய்கிறார்கள் 

 கெண்டேரியம்மன் கடவளானது...  வேகிளிவாரில் ஒரு உட் பிரிவான  இர்ரின்னா   குலத்தவருக்கு ஆதி தல குல தெய்வமாக  விளங்குகிறது... 

இந்த மக்கள் ஆண்டு பல காலம் முன்னரே  ஆந்திரா கர்நாடக மைய பகுதியான  பல்லேரி , தேவகிரி பகுதிகளிலும்  வாழ்ந்து வந்த மக்களாவர்கள் அங்கு  முகலாய படை எடுப்பின் போது நகர்ந்த     மக்கள் எப்படியான சோதனைகளை சந்தித்தினர் என்றும் அவர்களை எப்படி இக்கடவுள் கட்டி காத்து பாதை காட்டியாக செயல் பட்டு  ஆற்றங்கரைகளை கடந்து வர உறுதுணையாக  இருந்தன போன்ற அறிய வகை செய்திகளும் ஆச்சார்ய மூட்டுகிற  வகையில்  திருவிழாவும் கூடி ஒரு வித்தியாசமானதாக நடந்து கொண்டு உள்ளது எனில் பிரமிக்க வைக்கவே செய்கிறது நம்மை...

 இக்குல மக்கள் வடக்கு பகுதிகளை விட்டு நகரும் போது அப்போதைய  முகலாய படை (டெல்லி சுல்தான்கள்)அவர்கள் டெல்லியில் இருந்து தென் பகுதிகளில் படை எடுக்க முக்கிய காரணம் இங்கு விளைந்தும் சேர்த்தும் வைத்து இருந்த அரசர்களின்  பொன், பொருள் , வைரம், வைடூரியம் , ஐம்பொன் சிலைகள் போன்றவைகளை முக்கிய இடம் பிடித்தன  இவற்றை கொள்ளை அடிக்கவே தென் மார்க்கமாக படை எடுத்த வந்துள்ளார்கள் அப்பொழுது இம்மக்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து வர இககுல தெய்வங்கள் துணையாகவும் பக்க பலமகாவும் நின்று அவர்களிடம் இருந்து காத்து இவர்களின் வழிதுணையாகவும்  ஆற்றங்கக்கரையை கடக்க புங்க மரங்களை ஆற்றின் மேல் சாய்த்து இவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது எனவும் இவர்கள் ஆற்றங்கரையை கடந்து வந்த பின் அம்மரங்கள் எழுந்து நின்று கொள்கின்றன போன்ற காட்சிகளை இந்த திருவிழாவுல் கண்கூடாக காண முடிகிறது... 

அப்பொழுது இங்கு எந்த ஒரு சத்தமும் நிகழ்வது இல்லை உறுமி போன்ற எந்த ஒரு இசைகருவியும் இசைக்க படுவது இல்லை 

 இந்த கோவிலில் திருவிழா முறை படி சாட்ட படுகிறது

அப்பொழுது இருந்து இம்மக்கள்  சுத்தமாக கடும்  விரதத்துடன்  உள்ளார்கள் யாருக்கும்  தண்ணிர் கூட குடுப்பது இல்லை இவர்களும்  வெளியில் தண்ணீரோ உணவு அருந்துவோ மாட்டோம் என்கிறார்கள்

திருவிழா நடத்த முறை படி அக்கோவிலின் முன் ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து கொள்கிறார்கள் கம்பளி போர்வை போட படுகிறது முறை படி அனைவரும் சிறு குழந்தை முதல் பெரிய ஆடவர் வரை மேல் சட்டையை அகற்றியும் தலையில் மேல் துண்டை சுற்றி உருமாவாக உருவாக்கி கொள்கிறார்கள்  பெண்களும் மேலாடை அணியாமல்  கூடைகள் (தேவரு கெப்பலு) வைத்து வரிசையாக அமர்ந்து அக்கடவுளிடம்  உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது கறுப்பு கம்பளி மீது  அமர்ந்து புல்லாங்குழல் மூலம் கடவுளிடம் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது உத்தரவு வாங்குவதற்க்குள் அவர்களை அழுகையில்  நனைத்து விடுகிறது.. புல்லாங்குழல் ஊதும் போது கட்டிகொள்கிறது சத்தம் வராமல் அப்படியெனில் உத்திரவு பிறப்பிக்க பட்டதாக கருதுகின்றனர் ஊர் மக்கள் 

உத்திரவு கொடுக்கும் வரை அவ்வளவு ஒரு அமைதி நிலவுகிறது ஊர் முழுக்க புல்லாங்குழல் சத்தம் மட்டுமே ஒளித்து  மனதை மதி மயங்க வைக்கிறது... 

உத்தரவு கிடைத்த பின் அமைதியாக   கோவிலில் அலங்கரித்து வைத்துள்ள  தெய்வங்களை எடுத்து கொண்டு  நகர்கிறார்கள் அப்பொழுது முகலாய குதிரை  படை போன்ற வேடமிட்டு ஊரை வளம் வருகிறார்கள்  இத்தெய்வங்கள்  முன்னே செல்ல பின்னே அவர்கள்  வருகையும் ஊரை மிளிர வைக்கிறது... 

 பின்னர்  இம்மக்கள் ஆற்றங்கரையை கடந்து தெற்கு திசை வந்து  விட முகலாய படை வடக்கு திசை நோக்கியே   சென்று விடுகிறார்கள்   

தெற்கு  திசை நோக்கி வந்து    ஊர் மந்தையில் நீண்ட வரிசையில்  ஒன்பது குலத்தவரும் பொங்கல் வைத்து கரும்பு பந்தல் இட்டு கொண்டு வந்த  சாமியை அதனுள் வைக்கிறார்கள்   பிறகு  தான் (சக்தி கும்பம்) தீர்த்தம் எடுத்து உறுமி முழங்க அருளுடன் வருகிறார்கள் பிறகு   திணை வகைகள் பூண்டு  மாவு செய்து  மாவிளக்கு எடுக்குறார்கள் 

 இறுதி நாளில்  சாமியை கோவிலிற்கு எடுத்த செல்லவும் உத்தரவு கேட்கிறார்கள்  அப்பொழுது வரம் வேண்டி ஊர் மக்கள் அக்கடவுளை மனமுருக வேண்டி வரம் கேக்கிறார்கள் புல்லாங்குழல் மூலம் உத்தரவு கிடைத்த  பின்னர் அம்மக்கள் மகிழ்ச்சி பொங்க மனம் குளிர வேண்டி கொள்கிறார்கள்  உத்திரவு கிடைக்க கால தாமதமானால் அழுது புலம்புகிறார்கள் 

 பார்க்கும் போதே உடல் அசைவுகள் அனைத்தும்   மெய் சிலிர்க்க வைக்கிறது... 

அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர்

  பய பக்தியுடன்   திருவிழா நடந்து முடிவு பெறுகிறது பாரம்பரியம் பண்பாடு மறையாமல் இன்றளவும் சீரும் சிறப்போடு வெகு விமர்சையாக  இத்திருவிழாவை நடத்தி கொண்டு  உள்ளார்கள்  கம்பால பட்டி ஊர் மக்கள் ... 

பகிர்வு : 

வரலாற்று தகவல்கள் சேகரிப்பு பிரிவு 

கம்பள விருட்சம் அறக்கட்டளை

(தொழில் சார் கல்வி மேம்பாட்டு குழுமம் )

நன்றிகள் ....பொறியாளர் கார்த்தி SR ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..ஊடகவியலாளர் செந்தில்ராம் .கணினித்துறை ஜனா ஹரிகரன் ,பிரபாகரன் .ஜிலேபிநாயகன்பாளையம்  கோபாலகிருஷ்ணன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681📗🖋️🥰🤝👍🙏🌴⚔️🏹🌾📡🎙️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக