ஆன்மீக பயணம் ...
மதுரை அழகர்கோவில் கள்ளழகர்
தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த
கோவில், பொ.ஊ. 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப்
பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
இது
திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சங்க
இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர
திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.
கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட
இக்கோயில் ஒரு
பெரிய
கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன்
ஒரு
பகுதி
பாழடைந்துள்ளது.
துர்வாச முனிவரிடமிருந்து
சுதபவ
முனிவர் பெற்ற
சாபத்தைப் போக்க
பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறது. தமிழ்நாடு
அரசின் இந்து
சமய அறநிலையத் துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு
நிர்வகிக்கப்படுகிறது.
அழகர் கோயில் (ஆங்கிலம்: Alagar Koil) என்ற
'திருமாலிருஞ்சோலை' என்று
ஆழ்வார்களால் பாடப்
பெற்ற
அருள்மிகு சுந்தர
ராசப்
பெருமாள் என்கின்ற கள்ளழகர் திருக்கோவில், மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள
அழகர்
மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இது
உலகளவில் பிரசித்தி பெற்ற
ஓர்
திருமால் கோவிலாகும்.
108 வைணவ
திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே
ஆகும்.
தமிழ் சங்க
இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர
திவ்யப் பிரபந்தம், போற்றும் இத்திருத்தலம்
சோலை
மலை,
திருமாலிருஞ்சோலை, பழமுதிர் சோலை,
மாலிருங்குன்றம், அழகர்மலை என்று
பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள்
குன்றம் என்று
அழைக்கப்படும் வட்ட
வடிவ
கருவறையில் (கேரள
கோவில்கள் போன்ற
அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற
பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ
மூர்த்தி அழகர்
பெருமாள், அல்லது
சுந்தரராச பெருமாள் எனப்படுகிறார்.
பாண்டிய
மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை
நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல
திருப்பணிகள் செய்துள்ளனர்.
மலைக்குன்றுகளில் வாழும் சமணர்கள் (ஜைனர்கள்) மதுரையைச் சுற்றிலும் இருந்த யானைமலை, கீழவளவு, அரிட்டாபட்டி,
பெருமாள் மலை
(நாகமலை
புதுக்கோட்டை அருகில் முத்துப்பட்டி) எனப்
பல
இடங்களில் வாழ்ந்தது போன்று
அழகர்
மலையில் இருந்து 3 மைல்
தொலைவிலும் சிறிய
அளவில்
வாழ்ந்துள்ளனர்.
அழகர்
கோயில்
நுழைவாயில்
தல புராணம்
கோயிலின் பிராதான வாயில்
கோபுரங்கள்
இந்து புராணத்தின்படி,
ஒரு
சமயம்
சுதபஸ்
முனிவர் என்பவர் அழகர்
மலையில் உள்ள
நூபுர
கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த
வழியாகச் சென்ற
துர்வாச முனிவரைக் அவர்
கவனிக்கவில்லை. இதனால்
ஆத்திரமடைந்த துர்வாசர், சுதபஸ்
முனிவரை தவளையாக மாறுமாறு சபித்தார். கள்ளழகர் என்று
அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து இச்சாபத்தில் இருந்து சுதபஸ்
முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறி
மறைந்தார். தவளை
வடிவம்
காரணமாக ‘மண்டூக
மகரிஷி’
என்று
பெயர்
பெற்ற
சுதபஸ்
முனிவர், தேனூரில் வேகவதி என்று அழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார். மண்டூக
மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணி
பெருமாள் அழகர்
மலையில் உள்ள
தனது
உறைவிடத்திலிருந்து இறங்கி
வந்தார். அதுமுதல் மலைப்பட்டி, அலங்காநல்லூர், வயலூர் வழியாக கள்ளழகர் தேனூருக்கு வருவதாக நம்பப்படுகிறது. தேனூர்
மண்டபத்தில் இறைவன்
முனிவருக்கு சாப
விமோசனம் தந்து
அவரை
மீட்டபின்னர் தனது
இருப்பிடத்திற்குச் திரும்பிச் செல்வதாக ஐதீகம். திருமலை
நாயக்கர் ஆட்சியின் போது (பொ.ஊ.
1623–1659), மண்டூக
மகரிஷியின் சாப
விமோசன
நிகழ்ச்சிகள் வண்டியூர் கிராமத்திற்கு
மாற்றப்பட்டது. 1653-ம் ஆண்டு
முதல்
அங்கு
திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட தேனூர்
மண்டபத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.]
கள்ளழகர் மரணத்தின் கடவுளான யமனால் வணங்கப்பட்டார்
என்கிறது மற்றொரு இந்து
புராணம். அவர்
அந்த
இடத்தில் பெருமாளை நிரந்தரமாகத் தங்கும்படி வேண்டிக் கொண்டார் என்றும் தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவின் உதவியுடன் அங்கு ஒரு கோயிலைக் கட்டினார் என்றும் நம்பப்படுகிறது.
சமய நடைமுறைகளும் திருவிழாவும்
வைணவ மரபின் தென்கலை பிரிவின் மரபுகளைப் பின்பற்றி வைகானசம்
ஆகமத்தைப் பின்பற்றும் முறை இக்கோயிலில் உள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற
விஷ்ணு
கோயில்களைப் போலவே,
அர்ச்சகர்கள் பிராமண வகுப்பில் பாதுகாக்கப்பட்ட
தனிப்பிரிவான ஆதிவைஷ்ணவர்
எனும் வைகாநஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோயிலில் தினசரி ஆறுகாலப்
பூஜை நாளின் பல்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன மற்றும் பல
விழாக்களும் கோவிலில் நடத்தப்படுகின்றன, இதில் தெப்பத்
திருவிழா தமிழ் மாதமான மாசியிலும் (பிப்ரவரி–மார்ச்), செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நவராத்திரியும் மற்றும் மார்கழியின் (டிசம்பர்–ஜனவரி) போது வைகுண்ட
ஏகாதசியும் நடைபெறுகிறது. கோவிலில் வாராந்திர, மாதாந்திர மற்றும் இரண்டு வார சடங்குகள் செய்யப்படுகின்றன மலையின் உச்சியில் உள்ள
நூபுர
கங்கை
என்ற
ஏரியிலிருந்து வரும்
நீரைக்
கொண்டு
மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறதுஒவ்வொரு ஆண்டும் தமிழ்
மாதமான சித்திரையில்(ஏப்ரல்–மே) சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரைத்
திருவிழா என்பது அழகரின் சகோதரி
என
நம்பப்படும் மீனாட்சியின் திருமணத்தின் ஆண்டு நிகழ்வாகும்.[8] கள்ளழகர் வைகை
ஆற்றைக் கடப்பது முக்கிய நிகழ்ச்சியாகும். எதிர்
சேவை
என்பது
அழகர்
கோயிலில் உள்ள
கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் ஒரு
பகுதியாகும், இது
நான்காம் நாளில்
தொடங்குகிறது. இந்த
நாளில்,
அழகர்
அல்லது
விஷ்ணு
தனது
தோற்றத்தை கள்ளராக மாற்றிக் கொண்டு கள்ளர் நாடு வழியாக பயணித்து மதுரையில் நுழைகிறார், நகரவாசிகள் அவரை
வரவேற்கிறார்கள்.[9] இந்த
நிகழ்வைக் காண
லட்சக்கணக்கான மக்கள்
மதுரையில் குவிந்துள்ளனர். கள்ளழகர் ஆற்றில் நுழையும் போது,
அவர்
தனது
சகோதரியின் திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டதை அறிந்து, கருப்பராயர் மண்டபத்திற்குத் திரும்புகிறார், பின்னர் அவர்
பத்து
அவதாரங்கள் எடுத்து இறுதியாக அழகர்
கோவிலுக்குத் திரும்புகிறார். இந்தக்
கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு
புதிய
தேர்
கிடைத்தது, 15 கைவினைஞர்களைக் கொண்ட
குழுவைக் கொண்டு
வேங்கை
மர
மரத்தையும், சிற்பங்களுக்கு பர்மா
தேக்கு
மரத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சோதனை
ஓட்டம்
6 ஜூலை
2015 அன்று
நடைபெற்றது. இக்கோயில் இப்பகுதியில் உள்ள
முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.
காவல் தெய்வம்
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி
இக்கோயில் காவல்
தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆவார்.
கோயில் கலைச் சிறப்புகள்
முழுமை
அடையாத
இராஜ
கோபுரம்அழகர் கோயில்
தெப்பக்குளம்பதினெட்டாம்படி கருப்பசாமி
சன்னதி, அழகர் கோயில்
மூலவரின் கருவறை
மீது
எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட
வடிவமானது. ஆர்யன்
மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத்
தூண்கள் உள்ளன.
இசைத்
தூணின்
உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில்,
சுழலும் நிலையில் ஆனால்
வெளியே
எடுக்க
முடியாதபடி உள்ளது.
கல்யாண
சுந்தரவல்லி தாயாரின் சன்னதி
கலைநயத்துடன் உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட
கற்றூண்களில் உள்ள
சிற்பங்கள் நாயக்கர் கால
சிறந்த
படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச்
சித்திரிக்கும் அழகிய
ஓவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல்
தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப
வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை
மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு
முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப
வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத
உளி
வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி
உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
அமைவிடம்
மதுரை மாநகரிலிருந்து
21 கி.மீ. தொலைவில் அழகர்
மலை
அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அருகில் அமைந்த கோயில்கள்
அழகர் மலை அடிவாரத்திலிருந்து
சுமார்
2 கி.மீ. உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை
முருகன் கோயில் மற்றும் ராக்காயி
அம்மன் கோயில் மற்றும் நூபுர
கங்கை தீர்த்தம் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு
கி.மீ. தொலைவில் அமைந்த
நூபுர
கங்கை
தீர்த்தத்திற்கு ராக்காயி
அம்மன் காவல் தெய்வம் ஆவார்.நூபுர
கங்கை
தீர்த்தம் மலையின் ஒரு
வற்றாத
ஊற்று
பெருகெடுத்து ஓடும்
இடத்தில் உற்பத்தி ஆகின்றது. அங்கு
பக்தர்கள் கூடி
வரிசையில் நின்று
நீராடி,
குடுவையில் பிடித்துக்கொண்டும் செல்வர்.
மதுரை சித்திரைத் திருவிழா
முதன்மைக்
கட்டுரை: சித்திரைத்
திருவிழா
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர்.
சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.] கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில்
வலைதடி
(வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி)
என
விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை
நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர்
கள்ளழகர் என
மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர்
இருக்கிறார்.வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று, அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர்
காலத்திற்கு முன்
கள்ளழகர் வைகை
ஆற்றில் இறங்கும் விழா
சித்திரை மாதத்தில் முழு
நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர்
திருமலை நாயக்கர், கள்ளழகரை மதுரை
வைகையாற்றில் எழுந்தருளச் செய்து,
மதுரை
சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
சித்திரைத்
திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும்
நிகழ்வு எதிர்
சேவைஎன்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கள்ளழகருக்கு செங்குந்தர்
கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை
செய்து
வருகின்றனர்.
இன்றய ஞாயிறு இனிதாக கள்ளழகர் கோவில் பயணம் வாழ்வின் மறக்க இயலா ஆன்மீக பயணம் ... ..என்றும் அன்புடன் சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக