கறவை மாடு ...மூன்று தலைமுறையாக மிளிரும் உடுமலை விளாமரத்துப்பட்டி எஸ் .ஈஸ்வரன் (9942970136)....
கன்றுகள் வளர்ப்பு ;
உடுமலை பகுதியில் அதிக மேச்சல் நிலங்கள் உள்ளதால் கால்நடை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பசுவிற்கும் அதிகபட்ச உற்பத்தியை அடைவதில் கவனம் செலுத்துகின்றன. இதில், சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் அவற்றின் உணவைத் தயாரிப்பதும், பசுக்களைத் திறந்த தொழுவம் அல்லது கட்டுத் தொழுவம் போன்ற ஒரு அடைப்பு முறையில் வைத்திருப்பதும் அடங்கும். இந்தப் பசுக்கள் அவற்றின் பால் சுரக்கும் காலம் முழுவதும் உள்ளரங்கில் தங்கவைக்கப்படுகின்றன, மேலும் மீண்டும் கன்று ஈனுவதற்கு முன்பு, அவற்றின் 60-நாள் வறண்ட காலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படலாம் . திறந்த தொழுவ பாணி கொட்டகைகளில், கால்நடைகள் தளர்வாக தங்கவைக்கப்படுகின்றன, அங்கு அவை தீவனம், தண்ணீர் மற்றும் தொழுவங்களை சுதந்திரமாக அணுக முடியும், ஆனால் ஒரு நாளைக்கு பல முறை பால் கறப்பதற்காக கொட்டகையின் மற்றொரு பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. கட்டுத் தொழுவ அமைப்பில், ஒவ்வொரு முறை பால் கறக்கும்போதும் தோட்டத்துக்கு உரிமையாளர்கள் வீட்டில் இருப்பவர்கள்
பால் கறக்கும் கருவிகள் பசுக்களிடம் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் கால்நடைகள் அவற்றின் தொழுவங்களுக்குள் கட்டப்பட்டு, வழங்கப்படும் தண்ணீர் மற்றும் தீவனத்தை சுதந்திரமாக அணுகும் வசதியுடன் இருக்கின்றன. பரந்த அமைப்புகளில், கால்நடைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை முக்கியமாக மேய்ச்சல் நிலத்தில் வெளியில் கழிக்கின்றன. இந்தக் கால்நடைகள் பொதுவாக குறைந்த பால் உற்பத்தியைக் கொண்டவை மற்றும் பால் கறப்பதற்காக ஒரு நாளைக்கு பல முறை மந்தையாகக் கொண்டு செல்லப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அமைப்புகள், பண்ணை அமைந்துள்ள காலநிலை மற்றும் கிடைக்கக்கூடிய தோட்டத்தையும் ,வீட்டையும் பெரிதும் சார்ந்துள்ளது.
கறவை மாட்டை வாங்கும்போது தலை ஈத்து முதல் 5 ஈத்து வரை வாங்கலாம் .
கறவை மாட்டை வாங்கும் போது பள்ளு பார்த்து வாங்கவேண்டும் இரண்டு பள்ளு இருப்பதை பார்த்து வாங்கவேண்டும் ...
உணவுமுறை :
கறவை மாட்டுக்கு பசும்புல் தீவனம் அன்றாடம் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு ..அது போக குச்சி தவிடு ,கருக்க தவிடு ,நிலக்கடலை பொடி 5 கிலோ ,கடலை புண்ணாக்கு ,கோதுமை தவிடு ,உளுந்துக்குறணை .பருத்தி கொட்டை புண்ணாக்கு ,தேங்காய் புண்ணாக்கு ,காலை மாலை இரண்டு வேலையும் ஒரு கிலோ வீதம் தரவேண்டும் .
கறவை மாடுகள் விற்பனை ஊர்கள் ..
கறவை மாடுகள் வத்த கறவை ,சினை மாடுகள் உடுமலை சுற்றி இருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் பொள்ளாச்சி ,ஓட்டஞ்சத்திரம் ,நரிக்கல்பட்டி எலிப்பாறை (பாலக்காடு ) ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வந்து வளர்க்கிறார்கள் .
கறவை மாட்டுக்கு நோய் :
கறவை மாட்டுக்கு கோமாரி நோய் வந்தால் இயற்கை முறையில் விளையும் குறுமிளகு ,சீரகம் ,நல்லஎண்ணெய் கால சூழ்நிலைக்கு தகந்தமாதிரி தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும் .
அஜீரண கோளாறு :
கரும்பு சர்க்கரை ,அரைகிலோ ,நல்லஎண்ணெய் கால்லிட்டர் ,வாழைப்பழம் கலந்து கொடுக்க வேண்டும் .
சுழி :
கறவை மாடுகள் வாங்கும்போது சுழி பார்த்து வாங்கவேண்டும் முதுகு பகுதியில் இருக்கும் சுழி ராஜ சுழி ,நெற்றி சுழி கொம்பு பின் இருக்கும் சுழி ,கழுத்து பகுதியில் இருக்கும் சுழி இரண்டு பக்கமும் இருக்கும் சுழி பார்த்து வாங்கவேண்டும் .
கால்நடை மருத்துவமனை :உடுமலை அருகே பெரிய அளவில் கோழிக்குட்டை பகுதியில் அருமையான சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன .
கறவை மாட்டின் விலை :
கறவை மாட்டின் விலை சுமார் 30,000 ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது .இறைச்சிக்காக விற்க படும் மாடுகள் 5 ஈத்து மேல் உள்ள மாடுகளை குறைந்தது Rs .25,000 மேல் விலை வைத்து விற்பனையும் செய்துவிடுகிறார்கள் ..









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக