தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி எனும் ஊரில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்.பெரியகுளம் மஞ்சள் ஆறும் ,,,
மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டுவந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர் . இந்த ஜமீனில் இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக தினமும் அனுப்பி வைக்கப்படும் அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து ஜமீன்தாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஜமீந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஜமீன்தார் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அசரீரியில் தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறள் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,
அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும் இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இது வரை யாரும் சென்றதில்லை எனவும் கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசிதிபெற்று விளங்குகிறது.
காமாட்சியம்மன் கோவிலைப் பற்றிச் சொல்லும்போது மஞ்சளாற்றைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். கோடை மலையில் உற்பத்தியாகும் தலையாற்றிலிருந்து பிரிந்து கீழே வருகின்ற ஆறுதான் மஞ்சளாறு.
கொடைக்கானல் செல்லும்போது போகிற வழியில் டம்டம் பாறைக்கருகில் இறங்கி இயற்கை அழகை ரசித்து மலைப்புறத்தில் பார்த்தீர்கள் என்றால் உருக்கிய வெள்ளியைக் கொட்டுவது போல் தூரத்தில் ஒரு பிரமாண்டமான நீர்வீழ்ச்சி தெரியும். அதன் பெயர்தான் தலையாற்று அருவி. அதனைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்த டம்டம் பாறையென்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.
மதுரையின் கலெக்டர் மற்றும் வெள்ளைக்கார உயர் அதிகாரிகள் தங்கள் கோடைக்காலத்தை தாங்க முடியாமல் கண்டுபிடித்த கோடை வாசஸ்தலம்தான் கொடைக்கானல். கோடைக்கானல் தான் கொடைக்கானல் என்றும் ஆங்கிலத்தில் கொடைக்கனால் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல முடியாது .ஏற்கனவே மலைவாழ் மக்களும் நம் மலையைச் சார்ந்து வாழும் தமிழ் மக்களும் சிறிய அளவாக இருந்தார்கள். வெள்ளைக்காரன் இந்த இடத்தைப் பார்த்து அசந்துபோய் இங்கே விடுதிகள் பங்களாக்களை உருவாக்கி கோடைக்காலத்தில் இங்கு. வந்து தங்க ஆரம்பித்தார்கள் .அதன்பின் இதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்ட ஜெயராஜ் நாடார் அவர்கள் இங்கு பல இடங்களை வாங்கிப்போட்டு பல பெரும் தங்குமிடங்களை கட்டினார். இன்னும் கொடைக்கானலில் ஜெயராஜ் நாடாரும் அவருடைய குடும்பத்தாரும் அமைத்த பல விடுதிகளைப் பார்க்கலாம். இதன்மூலம் நல்ல பொருளீட்டினார்கள்.
இந்தக் குடும்பம்தான் SGJ என்ற பஸ் நிறுவனங்கள் மூலம் கொடைக்கானலுக்கு பல பேருந்துகளை ஆரம்ப காலத்தில் இயக்க ஆரம்பித்து இன்றுவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் பணிமனைகள் இருக்கின்றன. இவை பெரியகுளம், மதுரை, தேனீ, திண்டுக்கல் என்று பல பகுதிகளை இணைக்கின்றன. பெரியகுளத்தில் இருந்த ஜெயா தியேட்டர், மதுரையில் இருந்த ஜெயராஜ் தியேட்டர், பெரியகுளத்தில் இயங்கும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி போன்ற பல நிறுவனங்கள் இவர்களுக்குச் சொந்தமானது.எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்றுவிட்டேன்.
ஆம் அப்படி அங்கு தங்கியிருந்த வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும். இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள். முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
அணையின் அருகில் கும்பலாகத் தெரியும் வீடுகள் தான் தேவதானப்பட்டி.
இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும் கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும். வாய்க்காலின் குறுக்கே உள்ள சாலையைக்கடக்க வாய்க்கால் பாதாள ஸ்லூஸ் மூலமாக அடுத்த பகுதிக்கு செல்லும். இதில் நீர் சுழன்று செல்லும். தண்ணீர் இங்கே அதி வேகத்துடன் சுழன்று செல்வதால் அதில் மாட்டுபவர்களை இழுத்துச்சென்று உள்ளே போய்ச் செருகிவிடும்.
டாம்டாம் பாறை வழியே செல்லும் டிரைவர்கள் அங்கு நிறுத்தி பழம், பூ வைத்து கும்பிட்டுச் செல்வார்கள் ஏனென்றால் அதற்கு ஒரு திகில் கதை இருக்கின்றது.
தீபாவளி நாளில் ஆன்மீக பயணமாக சென்று வந்தது சிறப்பு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக