சிறு குறு நிறுவனங்கள்..........
ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் அல்லது ஏற்றுமதி நிறுவனத்துக்கென அடிப்படைக் கட்டமைப்பு உண்டு. கடைபிடித்தே ஆக வேண்டிய கொள்கையும் இருக்கும். இதற்கு மேலாக அரசாங்கத்தின் கொள்கைகளை அடிபிறழாமல் பின்பற்றியே ஆக வேண்டும். மீற முடியாது. மீறினாலும் மாட்டினால் பல மடங்கு நட்டம் என்பதோடு மீண்டு வந்து மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயமிருக்கும்.
தொழில் நடக்காமல் போனாலும் உருவாக்கிய கட்டமைப்புக்கென தினந்தோறும் செலவளித்தே ஆக வேண்டிய அவசியமும் உண்டு.
சிறு குறு நிறுவனங்களுக்கு மேலே சொன்ன பல விதங்களில் விதிவிலக்கு உண்டு.
விதிகள் அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியும். இந்த நிலைமையில் தான் இங்கு உருவாக்கப்படும் அரசின் புதிய கொள்கைகள் சிறு குறு நிறுவனங்களை அதிகம் பாதிக்கின்றது? என்ற புலம்பல் அதிகமாகக் கேட்கின்றது.
ஆனால் உண்மை என்ன? சில நடைமுறை உதாரணங்கள்.
வீட்டுக்கருகே மூன்று மளிகைக்கடைகள் உள்ளது. மூவருமே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். மூவர் கடைக்கும் 300 மீட்டர் இடைவெளி தான். ஆனால் வீட்டில் ஒருவரிடம் தான் எப்போதும் செல்வார். காரணம் கேட்ட போது "நீங்க ஒரு நாள் போய்ப் பாருங்கள்? உங்களுக்கே புரியும்" என்றார். மற்ற இருவர் கடையில் ஒருவர் கடைக்கு படிப்படியாக ஆட்கள் வருவது குறைந்து தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பது பெரிய காரியமாகத் தெரிந்தது. மற்றொருவர் கடைக்கு நாள் முழுக்க ஆட்கள் வரத்தான் செய்கின்றார்கள். ஆனால் டிமாண்ட் இல்லை.
இப்போது வீட்டில் சொன்ன கடைக்கு வருவோம்.
காலை மிகச் சரியாக ஆறு மணிக்குக் கடையைத் திறக்கின்றார். திறக்கும் போதே மனைவி இரண்டு மகன்கள் என குழுவினராகக் காய்கறிகளைக் கடையை ஒட்டிச் செல்லும் சாலையில் பரப்பி வைக்கின்றார்கள். நாம் பத்து நிமிடம் தாமதமாகச்சென்றால் கூட ஒரு காயும் இருப்பதில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் பொறுமான காய்கறி வியாபாரம் முடிந்து விடுகின்றது. கூடவே தினந்தோறும் (ஒரு நாளைக்கு மட்டும் தேவைப்படும் அளவு) மளிகைச் சாமான்கள், மற்ற சாமான்கள் வாங்குபவர்கள் கூட்டத்தில் நீந்திக் கொண்டே வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
முதலில் நான் சென்ற போது எரிச்சலாக சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் எளிமையானது. அவர் விற்கும் கத்திரிக்காய் கிராமங்களில் கூட வாங்க முடியாது. முருங்கைக்காயும் அப்படியே தான். எங்கிருந்து வாங்குகின்றார்? என்ன விலையில் வாங்குகின்றார் என்றே தெரியவில்லை.
ஆனால் விலையும் பெரிய அளவில் இல்லை. வீட்டுக்கே கொண்டு (டிவிஎஸ் 50 வண்டியில்) வந்து கொடுப்பவர்கள், நடந்து வந்து விற்கும் பாட்டிமார்கள் என்று அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைக்காரர் சரியான விலையைத் தரமான பொருட்களுக்குக் கொடுப்பதால் அலைமோதுகின்றது. இரண்டு நாட்கள் ஒருவர் செல்லாவிட்டால் என்ன உடம்பு சரியில்லையா? என்று கேட்பது தொடங்கி மார்க்கெட்டிங் ல் உள்ள மொத்த சாதக அம்சங்களையும் கலந்து கட்டி பொளந்து கட்டிக் கொண்டு இருக்கின்றார்.
என் கணக்குப்படி காலை மூன்று மணி வியாபாரத்தில் 5000 ரூபாயாவது பார்த்து விடுவார் என்றே நினைக்கின்றேன். ஆனால் குடும்பமே கடுமையாக உழைக்கின்றது என்பது மட்டும் உண்மை. இத்துடன் தரமும் நிதானமும் வளர வைத்துக்கொண்டிருக்கின்றது.
நண்பர் பரிந்துரைத்தார் என்று அந்தக் கடையைத் தேடிச் சென்றோம். பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான ஆடைகளும் அங்கே கிடைக்கும் என்றார். தரமான நியாயமான விலை என்றார். மனைவி, மகளை அனுப்பி விட்டு உள்ளே பார்த்த போது அதுவொரு குடோன். காற்று வசதிகள் எதுவுமில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. நுழையும் இடத்தில் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி போர்டு வைத்திருந்தார்கள்.
முறையான பில் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆடையாக பார்த்துக் கொண்டே வந்தேன். பெரும்பாலும் கழிவுத் துணிகளிலிருந்து கொஞ்சம் ஜிகுஜிகு வேலைகள் செய்து ஆடையாக மாற்றியிருந்தார்கள்.
விலையைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.
நைட்டி போன்றவற்றுக்கு 60 சதவிகித லாபம் வைத்திருந்தார்கள். உள்ளாடை மற்றும் பேண்டிஸ் சமாச்சாரங்கள் அனைத்தும் மோசமான சாயத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்குள் உதிர்ந்து விடும் என்பதோடு அது பல பக்கவிளைவுகளையும் உருவாக்கி விடும். ஆனால் நாகரிக உடைகள் என்ற வைத்திருந்த உடைகளைப் பார்த்துத் தான் அதுவரையிலும் பொறுமையாக இருந்தவன் அவர்கள் போட்டு இருந்த விலையைப் பார்த்து (ஏறக்குறைய 300 சதவிகிதம்) அங்கிருந்த பெண்ணிடம் சப்தம் போடத் தொடங்கினேன்.
டாப்ஸ் பேண்ட் என்ற வகையிலிருந்த ஆடைகள் ( பொதுவாக இது போன்ற ஆடைகள் நல்ல பருத்தி இல்லாதபட்சத்தில் ஒரு தடவை துவைத்து எடுக்கும்போது பல்லிளித்து விடும்) விலைகளைப் பார்த்த போது கோபம் தலைக்கேறியது.
அந்த பெண்ணுக்கு (சம்பளம் மாதம் ரூபாய் 5000) துணிகளைப் பற்றி தெரியவில்லை.
ஏற்றுமதி நிறுவனங்கள் போல இவர்களுக்குத் தரம் குறித்த நிர்ப்பந்தங்கள் இல்லை. இவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களில் கிடைக்கும் எவ்வித வசதிகளும், சம்பளமும் கிடைப்பதும் இல்லை என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற நிறுவனங்கள் குறிப்பாக உள்நாட்டு உற்பத்தித்துறையில் இருப்பவர்கள் ஒரு வருடத்தில் சம்பாரிக்கும் லாபம் என்பது நான்கு வருடங்கள் உழைத்தாலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்க முடியாத லாபமாகும். அடி முதல் நுனி வரை துண்டுச் சீட்டு மட்டுமே.
காரணம் லாபம் என்பதற்கும் கொள்ளை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இவர்கள் பயன்படுத்துவது கழிவுத்துணிகள் மட்டுமல்ல. மக்களையே கழிவாகத்தான் பார்க்கின்றார்கள்.
நாள்தோறும் முழுபக்க விளம்பரங்கள் கொடுத்து, மற்ற ஊடகங்களில் நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரக்கட்டணம் கொடுத்து, குளிர்சாதன வசதிகள், ஈஎஸ்ஐ, பிஎப் வசதிகளுடன் பணிபுரிபவர்களை பாதுகாத்து, வருடந்தோறும் போனஸ் கொடுத்து தங்களை சந்தையில் தக்க வைத்துக கொண்டே ஆக வேண்டும் என்பவர்கள் இரண்டு சூடிதார்கள் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பதற்கும், இதுபோன்ற எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வாழ்பவர்கள் கழிவுத்துணிகளில் தயாரித்து ஒரு சுடிதார் ரூபாய் 1200 விற்கும் போது அதை வாங்கும் நீங்கள் வலதுசாரியா? இடது சாரியா?
தரமில்லாதவர்கள் அழிவு என்பது காலத்தின் நியதி. அதற்கு அரசாங்கம் மட்டும் காரணமல்ல.
******
ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் அல்லது ஏற்றுமதி நிறுவனத்துக்கென அடிப்படைக் கட்டமைப்பு உண்டு. கடைபிடித்தே ஆக வேண்டிய கொள்கையும் இருக்கும். இதற்கு மேலாக அரசாங்கத்தின் கொள்கைகளை அடிபிறழாமல் பின்பற்றியே ஆக வேண்டும். மீற முடியாது. மீறினாலும் மாட்டினால் பல மடங்கு நட்டம் என்பதோடு மீண்டு வந்து மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயமிருக்கும்.
தொழில் நடக்காமல் போனாலும் உருவாக்கிய கட்டமைப்புக்கென தினந்தோறும் செலவளித்தே ஆக வேண்டிய அவசியமும் உண்டு.
சிறு குறு நிறுவனங்களுக்கு மேலே சொன்ன பல விதங்களில் விதிவிலக்கு உண்டு.
விதிகள் அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியும். இந்த நிலைமையில் தான் இங்கு உருவாக்கப்படும் அரசின் புதிய கொள்கைகள் சிறு குறு நிறுவனங்களை அதிகம் பாதிக்கின்றது? என்ற புலம்பல் அதிகமாகக் கேட்கின்றது.
ஆனால் உண்மை என்ன? சில நடைமுறை உதாரணங்கள்.
வீட்டுக்கருகே மூன்று மளிகைக்கடைகள் உள்ளது. மூவருமே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். மூவர் கடைக்கும் 300 மீட்டர் இடைவெளி தான். ஆனால் வீட்டில் ஒருவரிடம் தான் எப்போதும் செல்வார். காரணம் கேட்ட போது "நீங்க ஒரு நாள் போய்ப் பாருங்கள்? உங்களுக்கே புரியும்" என்றார். மற்ற இருவர் கடையில் ஒருவர் கடைக்கு படிப்படியாக ஆட்கள் வருவது குறைந்து தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பது பெரிய காரியமாகத் தெரிந்தது. மற்றொருவர் கடைக்கு நாள் முழுக்க ஆட்கள் வரத்தான் செய்கின்றார்கள். ஆனால் டிமாண்ட் இல்லை.
இப்போது வீட்டில் சொன்ன கடைக்கு வருவோம்.
காலை மிகச் சரியாக ஆறு மணிக்குக் கடையைத் திறக்கின்றார். திறக்கும் போதே மனைவி இரண்டு மகன்கள் என குழுவினராகக் காய்கறிகளைக் கடையை ஒட்டிச் செல்லும் சாலையில் பரப்பி வைக்கின்றார்கள். நாம் பத்து நிமிடம் தாமதமாகச்சென்றால் கூட ஒரு காயும் இருப்பதில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் பொறுமான காய்கறி வியாபாரம் முடிந்து விடுகின்றது. கூடவே தினந்தோறும் (ஒரு நாளைக்கு மட்டும் தேவைப்படும் அளவு) மளிகைச் சாமான்கள், மற்ற சாமான்கள் வாங்குபவர்கள் கூட்டத்தில் நீந்திக் கொண்டே வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
முதலில் நான் சென்ற போது எரிச்சலாக சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் எளிமையானது. அவர் விற்கும் கத்திரிக்காய் கிராமங்களில் கூட வாங்க முடியாது. முருங்கைக்காயும் அப்படியே தான். எங்கிருந்து வாங்குகின்றார்? என்ன விலையில் வாங்குகின்றார் என்றே தெரியவில்லை.
ஆனால் விலையும் பெரிய அளவில் இல்லை. வீட்டுக்கே கொண்டு (டிவிஎஸ் 50 வண்டியில்) வந்து கொடுப்பவர்கள், நடந்து வந்து விற்கும் பாட்டிமார்கள் என்று அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைக்காரர் சரியான விலையைத் தரமான பொருட்களுக்குக் கொடுப்பதால் அலைமோதுகின்றது. இரண்டு நாட்கள் ஒருவர் செல்லாவிட்டால் என்ன உடம்பு சரியில்லையா? என்று கேட்பது தொடங்கி மார்க்கெட்டிங் ல் உள்ள மொத்த சாதக அம்சங்களையும் கலந்து கட்டி பொளந்து கட்டிக் கொண்டு இருக்கின்றார்.
என் கணக்குப்படி காலை மூன்று மணி வியாபாரத்தில் 5000 ரூபாயாவது பார்த்து விடுவார் என்றே நினைக்கின்றேன். ஆனால் குடும்பமே கடுமையாக உழைக்கின்றது என்பது மட்டும் உண்மை. இத்துடன் தரமும் நிதானமும் வளர வைத்துக்கொண்டிருக்கின்றது.
நண்பர் பரிந்துரைத்தார் என்று அந்தக் கடையைத் தேடிச் சென்றோம். பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான ஆடைகளும் அங்கே கிடைக்கும் என்றார். தரமான நியாயமான விலை என்றார். மனைவி, மகளை அனுப்பி விட்டு உள்ளே பார்த்த போது அதுவொரு குடோன். காற்று வசதிகள் எதுவுமில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. நுழையும் இடத்தில் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி போர்டு வைத்திருந்தார்கள்.
முறையான பில் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆடையாக பார்த்துக் கொண்டே வந்தேன். பெரும்பாலும் கழிவுத் துணிகளிலிருந்து கொஞ்சம் ஜிகுஜிகு வேலைகள் செய்து ஆடையாக மாற்றியிருந்தார்கள்.
விலையைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.
நைட்டி போன்றவற்றுக்கு 60 சதவிகித லாபம் வைத்திருந்தார்கள். உள்ளாடை மற்றும் பேண்டிஸ் சமாச்சாரங்கள் அனைத்தும் மோசமான சாயத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்குள் உதிர்ந்து விடும் என்பதோடு அது பல பக்கவிளைவுகளையும் உருவாக்கி விடும். ஆனால் நாகரிக உடைகள் என்ற வைத்திருந்த உடைகளைப் பார்த்துத் தான் அதுவரையிலும் பொறுமையாக இருந்தவன் அவர்கள் போட்டு இருந்த விலையைப் பார்த்து (ஏறக்குறைய 300 சதவிகிதம்) அங்கிருந்த பெண்ணிடம் சப்தம் போடத் தொடங்கினேன்.
டாப்ஸ் பேண்ட் என்ற வகையிலிருந்த ஆடைகள் ( பொதுவாக இது போன்ற ஆடைகள் நல்ல பருத்தி இல்லாதபட்சத்தில் ஒரு தடவை துவைத்து எடுக்கும்போது பல்லிளித்து விடும்) விலைகளைப் பார்த்த போது கோபம் தலைக்கேறியது.
அந்த பெண்ணுக்கு (சம்பளம் மாதம் ரூபாய் 5000) துணிகளைப் பற்றி தெரியவில்லை.
ஏற்றுமதி நிறுவனங்கள் போல இவர்களுக்குத் தரம் குறித்த நிர்ப்பந்தங்கள் இல்லை. இவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களில் கிடைக்கும் எவ்வித வசதிகளும், சம்பளமும் கிடைப்பதும் இல்லை என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற நிறுவனங்கள் குறிப்பாக உள்நாட்டு உற்பத்தித்துறையில் இருப்பவர்கள் ஒரு வருடத்தில் சம்பாரிக்கும் லாபம் என்பது நான்கு வருடங்கள் உழைத்தாலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்க முடியாத லாபமாகும். அடி முதல் நுனி வரை துண்டுச் சீட்டு மட்டுமே.
காரணம் லாபம் என்பதற்கும் கொள்ளை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இவர்கள் பயன்படுத்துவது கழிவுத்துணிகள் மட்டுமல்ல. மக்களையே கழிவாகத்தான் பார்க்கின்றார்கள்.
நாள்தோறும் முழுபக்க விளம்பரங்கள் கொடுத்து, மற்ற ஊடகங்களில் நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரக்கட்டணம் கொடுத்து, குளிர்சாதன வசதிகள், ஈஎஸ்ஐ, பிஎப் வசதிகளுடன் பணிபுரிபவர்களை பாதுகாத்து, வருடந்தோறும் போனஸ் கொடுத்து தங்களை சந்தையில் தக்க வைத்துக கொண்டே ஆக வேண்டும் என்பவர்கள் இரண்டு சூடிதார்கள் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பதற்கும், இதுபோன்ற எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வாழ்பவர்கள் கழிவுத்துணிகளில் தயாரித்து ஒரு சுடிதார் ரூபாய் 1200 விற்கும் போது அதை வாங்கும் நீங்கள் வலதுசாரியா? இடது சாரியா?
தரமில்லாதவர்கள் அழிவு என்பது காலத்தின் நியதி. அதற்கு அரசாங்கம் மட்டும் காரணமல்ல.
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக