திங்கள், 29 மே, 2017

வீட்டு கடனை திருப்பி செலுத்தும்போது இதையெல்லாம் செய்யக்கூடாது..!!

ஒரு வீட்டின் உரிமையாளராக இருப்பது எதனுடனும் ஒப்பிட முடியாத சந்தோஷம். அந்த அபரிமிதமான சந்தோஷத்தில் நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வீட்டு கடனை பெறுவதற்கான செயல்முறையை முடித்து வீடு கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வமிகுதியில் வீட்டுக்கடன் விண்ணப்பத்தில் நுண்ணிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாகப் படிக்காமலே கையெழுத்திட்டு விடுகிறோம்.

இருப்பினும் வீட்டின் உரிமையாளராகும் மகிழ்ச்சியுடன் ஒரு கடனாளியாக பொறுப்புகளையும் உடன் கொண்டு வருகிறது. ஒரு பொறுப்பான கடனாளியாக நீங்கள் உங்கள் வீட்டிற்கான கடனை செலுத்திக் கொண்டிருக்கும் செயல்முறையில் உள்ள காலம் வரை, நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

கடன் கட்டுவதிலிருந்து ஒருபோதும் தவறாதீர்கள்:

கடனைத் திருப்பி செலுத்துவதில் ஏதேனும் தவறுதல் நிகழ்ந்தால் நீங்கள் நீண்ட காலத்திற்கு சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இஎம்ஐ யை (சமன்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை) கழித்துக் கொள்ள போதுமான தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டால், பிறகு அபராதத்தை செலுத்துவதால் விஷயங்கள் சரியாகி விடாது. இது போல பலமுறை நிகழ்ந்தால் உங்கள் நற்மதிப்பு மதிப்பெண்கள் பாதிக்கப்படும்.

தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள்:

ஒரு கடனாளியாக நீங்கள் பல்வேறு பயன்களை அடைவீர்கள். மாதாந்திர வாடகையைப் பற்றி கவலையில்லை; அத்துடன் வரித் தள்ளுபடியும் கிடைக்கும். உண்மையில், தேவைப்பட்டால் நீங்கள் மற்றொரு கடனைக் கூட பெற முடியும்; நீங்கள் அதற்கு தகுதியானவர். இருந்தாலும், பல்வேறு கடன்களை வாங்கி பொருளாதார ரீதியாக உங்கள் மீது சுமையேற்றிக் கொள்வது விவேகமான யோசனை அல்ல என்ற உண்மையை நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

நீங்கள் ஒரு வீட்டுக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். உதாரணமாக சொல்லப் போனால், வீட்டுக்ககடன் நிலுவையில் இருக்கும் போதே ஆட்டோ மொபைல் கடன் போன்றவற்றை வாங்க வேண்டாம். நீங்கள் பல்வேறு ஆதாரங்களிலிருந்து கடன் வாங்குவீர்களானால், ஒருவேளை ஏதேனும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் ஏதேனும் நேர்ந்தால், நீங்கள் ஒன்றுக்கு இரண்டு கடன்களைக் கட்ட தவறியவராவீர்கள்.

மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.:

நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற்றம் அடையும் போது உங்கள் சம்பளம் அதிகரிக்கிறது. சில காலங்களுக்கு முன்பு மிகப் பெரிய சுமையாகத் தோன்றிய மாதாந்திர தவணைத் தொகை இனிமேல் ஆலுப்பூட்டுவதாக இருக்காது.

இதனாலேயே வீட்டுக்கடன் சுமை பற்றி நீங்கள் மிகவும் வசதியாக உணர்வீர்கள். ஆனால் உங்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்ந்திருந்தால் நீங்கள் அதிகமாக சேமிக்கலாம் மற்றும் உங்கள் கடனை முன்கூட்டி செலுத்தி விட முடியும்.

உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்:

உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள் நம் அனைவரின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் வீடு வாங்குபவர்களும் அடங்குவர். உதாரணமாக வங்கிகள் அவர்களின் வட்டி விகிதங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

நீங்கள் உங்கள் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது என்பதற்காக அந்த மற்றொரு வங்கிக்கு மாற்றினால், அது உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை கணிசமாகக் குறைக்கலாம்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
மறைக்கப்பட்ட வீரம் மண்ணில் தெரிகிறது .....

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை (தளி )மண்ணில் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட எதுலப்ப மன்னரின் வீரம் திருமூர்த்தி அணையில் புதைந்து கிடப்பதும் அதை வெளிக்கொணர வேண்டும் என்பது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கை .

அதன்படி திருமூர்த்தி நகர் சுற்றுலா மாளிகை முன்பு பாதுகாக்கப்பட்ட பாளையக்காரரின் சிலைகள் போல் திருமூர்த்தி அணையில் இருப்பது உறுதியாகி தற்போது அது வெளியில் தெரிய வந்துள்ளது .தற்போது அணை தூர்வாரும் நிலையில் வெளியில் தெரிய வரும் அனைத்து கற்சிலைகளையும் உடுமலை கோட்டாட்சியரும்,பொதுப்பணித்துறையினரும் இதை சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அனைத்து சிலைகளுடனும் இதையும் சேர்க்க உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கோரிக்கை வைக்கிறது .




ஞாயிறு, 28 மே, 2017

மகிழ்ச்சி .....
இன்று நடைபெற்ற சதீஸ்குமார் -பிரியா  திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெதப்பம்பட்டி G K மகாலில் ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக நம் உறுப்பினர்களுடன் மற்றும் நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்

சனி, 27 மே, 2017

DS Selvadhanam Rider King 👍👍👍👍👍👍💐💐💐
**கம்பளத்தார் திருமணம்**
மனிதன் தன் இனத்தை அடையாளப்படுத்த சடங்குகள் சாஸ்திரங்கள் சம்பிர்தாயங்கள்
போன்றவைகளை படைத்தான்,,
இவ்வாறு அதிக சம்பிர்தாயங்களைக்கொண்ட கம்பளத்தார் இன திருமணத்தைப்பபற்றி சிலவற்றை காண்போம்
பொதுவாக கம்பளத்தார்கள் எவ்வகை நிகழ்ச்சிகளை நடத்த
தனிப்பட்ட முறையில் செய்யமாட்டார்கள் ஊர் பெரியதனத்துக்காரர்களை கொண்டு முடிவு செய்வார்கள்
அவ்வகையில் இவர்களது திருமணத்தை நிகழ்த்த ஊர் முக்கியஸ்தார்களிடம் ஏழு நாளோ
இல்லை மூன்று நாளோ கெடு வைப்பார்கள்,
பின்னரோ கெடு வைக்க முன்னரோ நிச்சயதார்த்தம் வைப்பார்கள்,, பிறகு பெண் அழைப்பு நடைபெற்று திருமணம்
நடைபெறும் அதில் மாப்பிளை மேல் சட்டை அணியமாட்டர் பதிலாக மஞ்சள் நிறத்தில் ஆனா
உடை அணிவார், மாப்பிளை தோழர் சட்டை அணிய மாட்டர்
மாற்று இனத்தவர்கள் கோவில் திருமண மண்டபங்களில் நடத்துவார்கள் கம்பளத்தார்கள் வசதி இருந்தாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மந்தைகளில் தான் திருமணத்தை நடத்துவார்கள்
இதில் பெண் வீட்டாரிடம் வரதட்சணைகள் எதிர்பார்க்கமாட்டர்கள்
பொதுவாக திருமணம் செலவை
மாப்பிள்ளை வீட்டர்களே ஏற்ப்பார்கள் முந்தய நாள் இரவு மந்தைக்கு வந்தால் அடுத்த நாள் இரவு தான் வீடு திரும்புவார் மாப்பிள்ளை (பெண்ணுக்கு விதி விலக்கு இல்லை) இரவு முதல் தாலிகட்டிய நாள் இரவு வரை
சாஸ்திரங்கள் ஊர் பெரியவர்களால் அரகேறிக்கொண்டுதான் இருக்கும்
இடையில் தேவராட்டம் வேட்டை செல்லுதல் அத்தை ஆட்டம் (அத்தகோரு ஆட்லு) போன்றவை நடைபெறும் திருமணத்தில் மூன்று விருந்துகள் நடைபெறும் இதில்
அன்று இரவு பாஜ்ஜம் (நெற்றிப்பட்டம்) கட்டுதல் முக்கிய நிகழ்வாக அமையும்...💐💐💐💐👍👍👍👍

வியாழன், 25 மே, 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

Madurai.......21-05-2017.....மாநில செயல்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் ....

1. திருச்சி வடக்கு ,தெற்கு மாவட்டங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகளை சந்தித்து தங்களையும் பண்பாட்டு கழகத்தில் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர் .

2. நமது "வீரபாண்டிய கட்டபொம்மன்"மாத இதழுக்கு புரவலர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது .இதில் 10  புரவலர்களுக்கு குறையாமல் தேர்வு செய்து நிரந்தரமாக இதழின் முதல் பக்கத்தில் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது .புரவலர்களை தேர்வு செயவது அவர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து தேர்வு செய்வது எனவும் அதற்கான தொகை எதுவும் நிர்ணியக்கப்படவில்லை .

3. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கருத்து கேட்டகப்பட்டது .அனைவரும் ஒருமுகமாக இந்த கருத்துரு ஏற்றுக்கொண்டு தங்கள் மாவட்டத்தின் விருப்பத்தினை தெரிவித்தனர் .

 4, காலவாதியாகிவிட்ட சந்தா தொகைகளை ,அது 100 அல்லது 250 ஆக இருந்தாலும் அதை காலாவதியாகிவிட்டதாக கருதி,புதிதாக ரூபாய் 500 வசூலக்க முடிவு செய்யப்பட்டது .

5.மாநில ,மாவட்ட நிர்வாகிகளை அவர்களுக்குரிய பணிகளை வரன்முறை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது .

6.விருதுநகர் தொட்டியபட்டி பிரச்னையில் சங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வழக்கில் உட்படுத்தப்பட்டவர்களை பிணையில் எடுத்து ,தொட்டியபட்டி க்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் .இது குறித்து மேல் நடவடிக்கை எவ்வாறு எடுப்பது என்பதை விவாதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது .
இது குறித்து நம் சமுதாயத்துக்கு நிரந்தரமாக சாதி இன மோதல்களை ஒரு தீர்க்கமான தீர்வுகாணவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .கூட்டத்திற்கு வந்திருந்த தொட்டியபட்டி மக்களுடன் ஒரு விரிவாக பேசி எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது .

7.நமது பண்பாட்டு கழக இதழுக்கு அதிகப்படியான சந்தாக்களை தானாக முன்வந்து செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டனர்

8.நமது பண்பாட்டு கழக கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது ..

V.K .சிவக்குமார்
டிஜிட்டல் ராஜேந்திரன்
மாநில செய்தி தொடர்பாளர்கள்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்
உடுமலைப்பேட்டை..

சனி, 20 மே, 2017

திரு .கே.முருகவேல்
தலைவர்
கோவை,திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கம்
தொலைபேசி :9751617920...

1971 -ம் ஆண்டு செப்டம்பர் 2 ம் தேதி 1979 முதல் ..53,தளி ரோடு ,உடுமலைப்பேட்டை என்ற விலாசத்தில் குமரன் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது .

1980 முதல் 1,. வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை  என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று  வரை தொடர்ந்து தட்டச்சு பயிலகம் இயங்கி கொண்டுஇருக்கிறது .1990 ல் பொள்ளாச்சி கல்வி மாவட்ட வணிகவியல்  பள்ளிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 27 ஆண்டு கோவை மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் துணை தலைவராக இன்று வரை பதிவு வகித்துவருகிறார் .தற்போது 14.05.2017 முதல் கோவை -திருப்பூர் மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டு இயங்கி வருகிறார் . 

புதிதாக பொறுப்பு வகிக்கும் தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

குறிப்பு : நமது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல் தலைவராகவும் ,பண்பாட்டு கழக இதழ் இணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..கோவை -திருப்பூர் மாவட்டத்தில் அதிக இளைஞர்களை பதவியில் அமர்த்தி வழிநடத்தி கழகத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டுகொண்டுஇருக்கிறார் ..

செவ்வாய், 9 மே, 2017


நம் கம்பள சமுதாயத்தில் இப்படி ஒரு கர்நாடக  சங்கீத இசைமேதை வாழ்ந்திருக்கிறார்.....

‘இசை மகாசமுத்திரம்’ விளாத்திகுளம் சுவாமிகள் நூல் மற்றும் ஆவணப்படம் வெளியீட்டு விழா


‘இசை மகாசமுத்திரம்’ என்று அனைத்து இசைக் கலைஞர்களாலும் போற்றிப் புகழப்பட்ட கர்நாடக சங்கீத ஜாம்பவான் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் ஆவார். நாதஸ்வர சக்கரவர்த்திகளான திருவாடுதுறை T.N.ராஜரத்தினம், அவரது சீடர் காருக்குறிச்சி அருணாச்சலம், திரு. M.K. தியாகராஜ பாகவதர், திரு. சீர்காழி S.கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் போன்ற பல இசைமேதைகள், விளாத்திகுளம் சுவாமிகளின் இசைப் போராற்றலை கண்டும் கேட்டும் பரவசமடைந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பல குருமார்கள் இருந்தபோதிலும் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளையே தங்களது மானசீக குருவாக எண்ணி வாழ்ந்து சாதித்தார்கள்.
சென்ற தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் உள்ள இசைமேதைகள் அனைவரும் மனதார ஒப்புக்கொண்ட ஒரே விஷயம், ‘விளாத்திகுளம் சுவாமிகளைப் போல் ‘இராக ஆலாபனை’ செய்யவும் பாடவும் இதுவரை யாரும் பிறக்கவில்லை, அவரது குரலுக்கும் ஈடு இணையில்லை’ என்பதாகும். ‘எப்படியாவது கடுமையான பயிற்சி செய்தால் விளாத்திகுளம் சுவாமிகள் பாடிய அளவில் ஒரு பத்து சதவிகிதம் எட்டிப் பிடிக்கலாம். அவ்வளவுதான்!’ என்று தலைவணங்கி அவரைப் போற்றுகின்றனர்.
சங்கீத உலகமே வணங்கும் ஒப்பற்ற கலைஞன் இசை மகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் முறைப்படி எந்த குருவிடமும் சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் கச்சேரிகள் நடந்தாலும் முதல் ஆளாக அமர்ந்து முழு ஈடுபாட்டுடன் ரசித்து, அதனை கிரகித்துக்கொண்டு தனது அற்புத நினைவாற்றலால் இடைவிடாமல் ‘அசுர சாதகம்’ செய்து தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டார். இராக ஆலாபனைகளை ஐந்து நாட்கள் வரை இடைவிடாமல் செய்து சாதனை புரிந்துள்ளார். இதனால் ‘ஆலாபனை அரசன்’ என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.
சங்கீத சக்கரவர்த்தியான விளாத்திகுளம் சுவாமிகள் பிறப்பிலும் ராஜபரம்பரைதான். காடல்குடி மன்னர் ‘வீரகஞ்செய பாண்டியன்’ வம்சாவழியில் வந்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் தாய்வழி சொந்தமாவார்.
பிறப்பிலும் வளர்ப்பிலும் வாழ்ந்த விதத்திலும் சிறப்புப்பெற்ற சுவாமிகள் 76 ஆண்டுகள் இசைக்காகவே வாழ்ந்தவர் என்றே கூறலாம். அத்தகைய மகானது வாழ்க்கைக் குறிப்புகள் ‘இசைமகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்’ என்ற பெயரில் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
நல்லப்ப சுவாமிகளின் அபரிமிதமான இசையைக்கேட்டு பிரமித்த N.A.S. சிவகுமார் என்பவர், அந்த மகானின் அருமை பெருமைகளை அனைவரும் அறியவேண்டும் என்ற சீர்மிகுந்த எண்ணத்துடன் இந்த நூலை தொகுத்துள்ளார். இந்த அரிய தொகுப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா), ரசிகமணி T.K.C, வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி, கோவில்பட்டி சிவானந்தம், ஜி.வெங்கடாச்சலம், கவி.சத்திய சாமுவேல். தூத்துக்குடி பி.இசக்கி, ஸ்ரீ V.G. தெய்வேந்திரன், கு. அழகிரிசாமி, S. நல்லசிவம் பிள்ளை, பா. வேலப்பன், காருகுறிச்சி அருணாசலம் ஆகியோர் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள், சாதனைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர பல அரிய புகைப்படங்கள், சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழா விளாத்திகுளம் சுவாமிகளின் 128-வது பிறந்த நாளான 24-09-2016 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு T.N. ராஜரத்தினம் கலையரங்கத்தில் நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்ததுபோல் நாச்சியார்கோவில் N.R.P. ரவிச்சந்திரன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி அமைந்திருந்ததும் ஒரு சிறப்பாகும்.
மேலும் இந்த அரிய புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விளாத்திகுளம் சுவாமிகளின் பாடல்களும் ஆலாபனைகளும் அடங்கிய ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இது இசைப்பிரியர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாகும். இந்த ஆவணப்படத்தை சி.மகேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் பல விருதுகளை பெற்ற திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனர் திரு. அம்ஷன் குமாரிடம் 16 வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவராவார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாண்புமிகு நீதியரசரும் இசையரசி K.B. சுந்தராம்பாளின் மருமகளுமான K.B.K வாசுகி அவர்கள் புத்தகத்தை வெளியிட கலைப்புரவலர் திரு. நல்லிகுப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். ஆவணப்படத்தை பிரபல பாடகர் திருச்சி லோகநாதனின் தவப்புதலவர் திரு T.L. மகராசன் வெளியிட, அந்த குறுந்தகடை பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி G. சிவசிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை வாரிசான V.V.J.S வீமராஜா அவர்களும், காடல்குடி மன்னரின் ஏழாம் தலைமுறை வாரிசான P. பால்ராஜா சுவாமிகளின் மகள் வழிப்பேரன் திரு. சாமித்துரை மற்றும் இயக்குனர் அம்ஷன்குமார், படத்தொகுப்பாளர் B.லெனின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புத்தகம் மற்றும் ஆவணப்படம்
தொடர்புக்கு:-
N.A.S. சிவக்குமார்,
2/286, 14, முத்துச்சாமி நகர்,
பொங்கலூர் போஸ்ட்,
பல்லடம் தாலுக்கா,
திருப்பூர் மாவட்டம்.
PIN – 641 667
கைப்பேசி – 91596 59788

வியாழன், 6 ஏப்ரல், 2017




கம்பள விருட்சம் அறக்கட்டளை ....உடுமலைப்பேட்டை
பதிவு நாள் -10-04-2017

வரும் திங்கள் கிழமை நமது அறக்கட்டளை பதிவு வரும் ஏப்ரல் 10 ஆம் நாள்  திங்கட்கிழமை அன்று நடை பெற இருப்பதால் .பதிவிற்கு காலை சுமார் 10 மணி  அளவில் .நம் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் ..

இடம் :பத்திர பதிவு அலுவுலகம் ...கச்சேரி வீதி ,உடுமலைப்பேட்டை

அதற்கு முன்னதாக நம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் கழக அலுவுலகத்தில் (வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை )சரியாக காலை 10 மணி அளவில் அனைவரும் ஒன்று கூடி
கலந்தாய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு பதிவு அலுவுலகம் செல்வோம்

பதிவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஸ்ரீ பாலாஜி (வக்கீல் நாகராஜன் வீதி )உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது....

இங்ஙனம்
கம்பள விருட்சம் அறக்கட்டளை ....
நிர்வாகக்குழு .

மேலும் தகவலுக்கு :திருப்பதி தேவராஜன் -99409 15913 கார்த்தி SR -9698082028




ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ....உடுமலைப்பேட்டை

இன்று 02.04.2017  ம்  தேதி ஞாயிறு மதியம் 1.00 அளவில் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை யின் பொதுக்குழு கூட்டம் இனிதாக அறக்கட்டளையின் நோக்கங்களுடனும் ,செயல்படும் முறைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு மகிழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது .

வெள்ளிக்கிழமை பொதுக்குழு கூட்டம் என்று சொன்னவுடன் ஒரு நாள் தான் இடைவெளி உறுப்பினர்கள் வரமுடியுமா கேள்விக்குறியுடன் என் மனதில் ஓடியது...ஒரு நாள் என்றாலும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடத்தி ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ...

முதல் பொதுக்குழு கூட்டம் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் அலுவுலகத்தில் இடம் அளித்து ,பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ,தேநீர் அளித்து உபசரித்ததுக்கு மனமார்ந்த நன்றிகள் .

கௌரவ தலைவர் வழக்கறிஞர் .முருகராஜ் அவர்கள் ,நம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து சந்தேகங்களை நிவர்த்திசெய்தமைக்கு நன்றிகள் .

இன்றைய மதியம் முதல் மாலைவரை நம் சமுதாயம் உயர்வதற்கு திட்டங்களும் ,செயல்பாடுகளும் கலந்துரையாடிய நம் உறுப்பினர்களின் மதிப்புமிக்க நேரத்தையும் ஒதுக்கியதற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...



செவ்வாய், 21 மார்ச், 2017

நமக்கு எப்படியும் பொண்ணு அமஞ்சுரும்னு
கொஞ்சநஞ்ச நம்பிக்க இருந்துச்சு...
 நீயாநானா ப்ரோக்ராம் பாத்தேன்...
இப்பவே ஆன்மீக பயணத்துல அடியெடுத்து
வெக்கறது நல்லதுனு தோனுது...

சிரிக்க ...சிந்திக்க மட்டும் ....

திங்கள், 20 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம்,தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில்  )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!



பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!

வெள்ளி, 17 மார்ச், 2017

கோவை ,திருப்பூர் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

தமிழ்நாட்டில் ஏன் சிறந்த மாவட்டமாக விளங்க காரணம்...
மாநில செயல்தலைவர் திரு .முருகவேல் ,
மாநில கௌரவ ஆலோசாகர் திரு .ராமகிருஷ்ணன்
கழக தலைவர்கள் எல்லாரும் இளைஞர்களை நியமித்ததுதான் நன்றாக செயல்பட காரணம்...

திரு .ராமு
திரு .சந்திரசேகர்
திரு .கோபாலசாமி
திரு .கருணாநிதி
திரு .டிஜிட்டல் ராஜேந்திரன்
திரு .ஜெகதீஷ்
திரு.தீபம் தண்டபாணி
திரு .மாசிதுரை
திரு .முருகராஜ்
திரு .ஜெய்கணேஷ்
திரு .முத்துசாமி
திரு .முத்துராஜ்
திரு  .செல்வம்


விரைவான செயல்பாட்டுக்கு முன்னோடியாக திகழ்கிறார்கள்

எனக்கு தெரிந்து 55 கிளை கழகங்கள் கொண்ட மாவட்டமாக திகழ காரணம்
கழகத்தில் இருக்கும் ஒற்றுமை ,குழுவாக செயல்பட காரணமாகும் .

இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ,வியாபார வளர்ச்சி சம்மந்தமாக கலந்துரையாடி வழிவகை செய்யப்படும் .
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

 உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

 மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
 மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681