குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...
திங்கள், 4 நவம்பர், 2024
குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...
குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...
மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி, தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....
மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி,
திருப்பூர் மாவட்டம் இராஜகம்பள சமூகத்தை சார்ந்த வேடப்பட்டி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அரண்மனையப்பன், மாலையம்மன் கோவிலில் நடுகல் வடிவில் வீற்றிருக்கும் ஜமீன் வமிசத்து முன்னோர்களுக்கு குல வழக்கப்படி பூஜைகள் நடைப்பெற்றது.
புறநானூறு :
ஞாயிறு, 3 நவம்பர், 2024
நேற்று உடுமலை தமிழ் பேராசிரியர் வீரையன் அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தபோது அவரது புதல்வர் ஆதவன் வீரையன் படிக்கும் ஆஸ்ட்ரோ நெட் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் அவரின் கனவை நிறைவேற்ற இந்த பல்கலைக்ககத்தில் சேர்த்து உள்ளார் ..
நேற்று உடுமலை தமிழ் பேராசிரியர் வீரையன் அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தபோது அவரது புதல்வர் ஆதவன் வீரையன் படிக்கும் ஆஸ்ட்ரோ நெட் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் அவரின் கனவை நிறைவேற்ற இந்த பல்கலைக்ககத்தில் சேர்த்து உள்ளார் ..
The Indian Institute of Science Education and Research Thiruvananthapuram (IISER TVM) is an autonomous institution under the Ministry of Education, Government of India. It is dedicated to scientific research and science education of international standards.
பணி:
- இளங்கலை மட்டத்தில் ஆராய்ச்சியுடன் கற்பித்தலை ஒருங்கிணைத்தல்
- அனைத்து துறைகளிலும் விசாரிக்கும் உணர்வை வளர்ப்பது
நிகழ்ச்சிகள்:
- 5 ஆண்டு BS-MS திட்டம்
- ஒருங்கிணைந்த PhD (iPhD)
- PhD திட்டங்கள்:
- உயிரியல்
- வேதியியல்
- கணிதம்
- இயற்பியல்
- பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
- தரவு அறிவியல்
- இடைநிலைப் பகுதிகள்
வளாகம்:
- திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள விதுராவில் அமைந்துள்ளது
- பசுமை மற்றும் மலை பின்னணியுடன் சுற்றுச்சூழல் நட்பு வளாகம்
- அனைத்து மாணவர்களுக்கும் விடுதி விடுதி
- மாணவர் குழுவின் மேற்பார்வையில் பல சமையல் குழப்பம்
ஆராய்ச்சி மற்றும் வசதிகள்:
- எல்லைப்புற ஆராய்ச்சி பகுதிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
- மெய்நிகர் வகுப்பறைகள்
- புத்தகங்கள் மற்றும் மின் வளங்களின் விரிவான சேகரிப்பு கொண்ட நூலகம்
- நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்கள்
- லினக்ஸ் கிளஸ்டருடன் கூடிய கணினி மையம்
- 2 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு
மாணவர் வாழ்க்கை:
- கலாச்சார விழா "இஷ்யா"
- மாணவர் நடத்தும் இதழ் "சோபானம்"
- கலாச்சார மற்றும் அறிவியல் கிளப்புகள்
- திரைப்பட காட்சிகள்
- விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டிகள்
- அவுட்ரீச் திட்டங்கள்
இலக்குகள்:
- இளம் விஞ்ஞானிகளின் முழுமையான வளர்ச்சி
- அறிவியல் விசாரணை மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்
IISER TVM கல்வி , ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சாராத செயல்பாடுகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது, இது அறிவியல் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக அமைகிறது.📗✒️🎙️📡🤝🥰
சனி, 2 நவம்பர், 2024
தீபாவளியும்...நானும்.....
தீபாவளியும்...நானும்.....
சின்ன வயசுல அப்பா புதுவருட காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது?
எத்தினி நாள் லீவு வருதுனுதான்...???
அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்,,,,
தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்,,என்னா வெடிவாங்கணும்னுதிட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு 5,6 வயசு சின்ன புள்ளயா மாறிடும்,💞,,,,
அதுலையும் நாட்டு வெடி,வெங்காய வெடி,ராக்கெட் ,மாப்பிளை வெடி & அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு பாப்போம்😛..
வித விதமா துணி எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...
என்னதான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி கோயமுத்தூர் புரூக் பீல்டு யும் பன் மார்ட்லையும், உடுமலைப்பேட்டை,பிங்கி ,குறிஞ்சி , ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும்,,,
அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கிரி கிளாத் ஸ்டார் ,விஜயதீப் , போய் எடுத்து குடுத்த 50,100 ரூபாய் துணியெடுத்த மதிப்பு எல்லாம் சொல்லவே முடியலே,,,,அதையும் வாங்கிக்கொண்டு வந்து தளி ரோட்டில இருக்கும் மாடர்ன் டைலர்ஸ் கடையில் கொடுத்துட்டு ..தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடி பள்ளி செல்லும் போது ..அண்ணா எங்க டிரஸ் தைச்சுட்டீங்களா னு கேட்ட ஞாபகம் இன்னும் மனதில் ஓடுகிறது ...
அதே மாதிரி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...
வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு,,,
குட்டித் தூக்கம் போட்டுட்டு விடியற் காலையிலேயே எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...
நமக்கு கிடைத்த பங்கு பட்டாசை பத்திரமாக எடுத்து வந்து ஒவ்வான்றாக,பெரிய வீரனைப் போல் நீளமான ஊதுபத்தியால் பற்ற வைத்து வெடிக்கும் போது அப்பப்பா,,,
அப்படியே ..புது துணிய போட்டுட்டு ..சர்ச்சு பக்கத்துல இருக்கிற மாலையம்மன் கோவிலுக்கு போயி ..பிள்ளையாரையும் அரச மரத்தியும் சுற்றி வணங்கி ..வீட்டுக்கு பசியோடு வந்து இட்லியும் ..தோசையும் .. காலையில சுடச் சுட,,சாப்பிட்ட சொந்தம் அப்பப்பா ..தற்காலத்துக்கு வருமா அந்த மகிழ்ச்சி .
பட்டாசு களோபரம் முடிந்த பிறகு 8 மணிக்கு மதியம் சாப்பாடு...அம்மா,அப்பா கிட்டயும் எல்லோரையும் அதட்டி உருட்ட.,,,
பிறகு உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு ஊர்வலம்.. புது சட்டையை காண்பிக்க, அப்படியே அவர்கள் வீட்டு தீபாவளி பலகாரங்களை ருசி பார்க்க....
அதெல்லாம் உலக நாயகன் சொல்லுறபடி ஆராயக்கூடாது அனுபவிக்கணும்,,,
இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...
இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க...
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (உடுமலை ),பொள்ளாச்சி மாரியம்மா ஸ்வீட்ஸ் ,உடுமலை ஏவிஎம் ஸ்வீட்ஸ் அரைகிலோ வாங்கிட்டு.. அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு,,, கடமைக்கு தீபாவளி கொண்டாடிகிட்டு,,,,
சிலர் தீபாவளி அன்னிக்கு வீட்டை பூட்டிக்கிட்டு வெளியூர் கிளம்பி ஊர் சுற்ற கிளம்பறாங்க ...
ஒண்ணு மட்டும் நிச்சயம் பணம், சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு, ஒரு மாயவலையை உருவாக்கிவாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்...
எல்லாமே மெஷின் மாதிரி ஒரு இயந்திர வாழ்க்கை,,,🥰🙏📡🎙️
வியாழன், 31 அக்டோபர், 2024
800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!
800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி எனும் ஊரில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்.பெரியகுளம் மஞ்சள் ஆறும் ,,,
மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டுவந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர் . இந்த ஜமீனில் இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக தினமும் அனுப்பி வைக்கப்படும் அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து ஜமீன்தாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஜமீந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஜமீன்தார் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அசரீரியில் தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறள் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,
அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும் இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இது வரை யாரும் சென்றதில்லை எனவும் கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசிதிபெற்று விளங்குகிறது.
மஞ்சளாறு ஆறும் அணை வரலாறு .
தீபாவளி நாளில் ஆன்மீக பயணமாக சென்று வந்தது சிறப்பு ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
இளங்கலை பொறியியல் பட்டதாரி க்கு வாழ்த்துக்கள் ...
உடுமலைப்பேட்டை உடுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், சாந்தாமணி தம்பதியின் மகன் சண்முகப்பிரபு. சமீபத்தில், கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார் (BE CSE 🎓 ). இது தனிப்பட்ட மைல்கல் மட்டுமின்றி, மாப்பிள்ளையின் பொறியாளர் பட்டம் ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவும் நிறைவேறியது. சண்முகப்பிரபு மாப்பிளை கம்பள சமுதாயத்தில் அவரின் பரம்பரையில் முதல் பட்டதாரி 🎓நமது கம்பள சமுதாயத்தில் அதுவும் ஆண்கள் கல்வியில் பட்டம் பெறுவது ஒரு மைல் கல் ..ஏன் என்றால் கல்வியில் பெண்கள் தான் இளநிலை ,முது நிலை பட்டதாரிகள் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறார்கள் ..இன்று இந்த மாப்பிள்ளைகள் போன்று கல்வியிலும் .வேலைவாய்ப்பிலும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது .மாப்பிளையுடன் கலந்துரையாடியபோது மாப்பிள்ளையின் முக்கிய நோக்கம் நம் கம்பள சமுதாயத்தை அடுத்த முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது என்று கூறியுள்ளார் .இது போன்று நமது சமுதாயத்தில் ஆண் குழந்தை செல்வங்கள் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் அதிக அளவில் வரவேண்டும் என்னுடைய ஆசை ...
என் அன்பு வாழ்த்துக்களும் நன்றி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் .
உடுமலைப்பேட்டை
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பெருமையுடன் வழங்கும்
தளி எத்தலப்ப மன்னர்
ஆவணப்படம்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்
தலைவர் திரு. தி.குமாரராஜா, துணைத்தலைவர் வி.கே.செல்வராஜ், சி.ராஜசுந்தரம்
செயலாளர் வி.கே.சிவகுமார், இணைச்செயலாளர் ராபின், அருள்கணேசன், மதிப்புறு தலைவர்கள்
முனைவர் கு.மூர்த்தீஸ்வரி, முனைவர் மா.மதியழகன், திருமதி.வை.விஜயலட்சுமி, முனைவர் ஹேனா ஷெர்லி,
எழுத்து, எண்ணம் மற்றும் கருத்துருவாக்கம் அருட்செல்வன்.
நன்றி .
பாவலர் பழனிசாமி, திருமலையம்மாள் ஜல்லிபட்டி
திரு.சுபாஸ் கிருஷ்ணசாமி, சித்திரச்சோலை, உரல்பட்டி.





.jpg)









