வெள்ளி, 5 மார்ச், 2021

 கேள்வி : செயலற்ற வருமானம் (Passive income) என்றால் என்ன? எப்படி நாம் அதனை அடையலாம்?


என் பதில் :


வயது முதிர்ந்து, வருமானம் இன்றி தடுமாறும்போது, பல நாடுகளில் அரசின் சார்பில் 'சமூக பாதுகாப்பு' (social security) ஆதரவு உண்டு. இந்தியாவில் இல்லை.


வருமானத்தில் இரண்டு வகைகள்.


வணிகம் அல்லது வேலை மூலம் வரும் செயல் வருமானம் (Active Income). வேலையை நிறுத்தி விட்டால் செயல் வருமானம் நின்று விடும்.

வேலை செய்கிறாமோ, இல்லையோ, ஓய்வில் இருந்தாலும் தானாக வரும் வருமானம் செயலற்ற வருமானம் (Passive income).

சரியான முதலீட்டை ஒரு தடவை செய்தாலே போதும்; கவுன்சிலர் வரும்படி போல, மாதம்தோறும் வந்து கொண்டே இருக்கும்.


சில உதாரணங்கள்:


நல்ல ஷேர் முதலீட்டில் தவறாமல் கிடைக்கும் டிவிடெண்ட்.

கடனுக்கு கிடைக்கும் வட்டி

வங்கி டெபாசிட் வட்டி

பணி ஓய்வு பென்ஷன்

LIC போன்ற நல்ல நிறுவனங்களில் மேற்கொள்ளும் annuity பென்ஷன் திட்டங்கள்.

வீடு, வணிக வளாகங்கள் கட்டி விட்டு அதில் கிடைக்கும் வாடகை.


செயலற்ற வருமானத்துக்கு சில விதிகள் உண்டு. முதல் விதி..


## மாதந்தோறும் வர வேண்டும்.


நாம் செய்யும் ஒரு முதலீடு பிற்காலத்தில் பன்மடங்காகலாம். (உம்: ரியல் எஸ்டேட்)

ஆனால் அது செயலற்ற வருமானத்துக்கு உதாரணம் அல்ல !

மாதம்தோறும் நமக்கு வருமானம் வேண்டும்!

## விலை வீக்கத்துக்கு (Inflation) ஏற்ப மாற வேண்டும்.


உங்களுக்கு வயது 60. குடும்பத்தில் இரண்டு பேர். 2020ல், உங்கள் குடும்பத்துக்கு 20,000 ரூபாய் போதுமானதாக இருக்கலாம்.

இதுவே இருபது வருடங்கள் கழித்து, உங்களது 80வது வயதில் அதே இரண்டு பேருக்கு 20,000 ரூபாய் போதுமா?.

## ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்.


பொதுவாக ஆக்டிவ் வருமானம் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும். (உம் : உங்கள் சம்பளம்.)

செயலற்ற வருமானமும் அதுபோல கூடவேண்டும்.

இருப்பதில் வாடகை வருமானம்தான் செயலற்ற வருமானத்தில் முதல் தரம். விலைவாசி கூடினால் வாடகையும் கூடும்.

மாறாக வங்கி டெபொசிட்டுக்கு வரும் வட்டி அப்படியே இருக்கும். சமயத்தில் குறைந்தும் விடும்.

மிக முக்கியமாக மக்களுக்கு செயல் வருமானம் குறையும் வருடங்களில், செயலற்ற வருமானமான டெபாசிட் வட்டியும் குறையும். இந்த வருடத்தையே ஒப்பிட்டுப் பாருங்களேன்.


பண வீக்கம் குறைந்தால், விலைவாசி குறையும்,

## இப்பொது செயலற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும் !


சம்பளதாரர்களுக்கு ஆக்டிவ் வருமானம் 60 வயதில் நின்றுவிடலாம். IT வேலைகளில் அதற்கும் முன்னாலேயே.

இப்பொழுது 65 வயதில் இருக்கும் இந்தியர்களில் மிக பெரும்பான்மையோர் 85 வயதை பார்த்துவிடுவார்கள் என்பது ஒரு மருத்துவ கணிப்பு.

பணி ஓய்விற்குப்பிறகு இப்படி இருபது, முப்பது வருடங்கள் வரை வாழ வேண்டி வரும்.

தேவையில்லாமல் கடனில் வாகனம். வீடு என்று வாங்காதீர்கள்.

வரிச்சலுகை, கம்பெனி தரும் பெட்ரோல் சலுகை போன்றவை இல்லையென்றால் வாடகை வாகனங்களை பயன்படுத்துங்கள்.


## செலவை கட்டுப்படுத்துங்கள்


அளவுக்கு அதிகமாக காப்பீடு எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சம்பாதிக்கும் ஒருவர் மரணம் அடைந்தால், அவர் குடும்பம் திணறக்கூடாது என்பதற்கே காப்பீடு.

சம்பாதிப்பவர் உயிருக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும்.

## இன்சூரன்ஸ் ஒரு சேமிப்பு அல்ல.


40000 ரூபாய் சம்பாதித்தால் மாதம் 10000 ரூபாய் நிப்டி பண்டில் போடுங்கள். ஓய்வில் இரண்டு கோடிக்கும் மேல் கிடைக்கும்.

25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வருடம் 100% உங்களுக்கு செயல் வருமானம்தான். அதில் சிறிது சேமிக்க வேண்டும்.

## வருமானத்தில் 30% சேமியுங்கள்


இப்படி சில வருடங்கள் சேர்த்தால் அந்த சேமிப்பிலிருந்து மாதம் தோறும் செயலற்ற வருமானம் வரும். அதையும் சேமிக்க வேண்டும்.

50 வயதில் நின்று பாருங்கள்.

இப்போது உங்கள் செயல் வருமானத்தில் 25 சதவீதமாவது, உங்களது செயலற்ற வருமானம் வர வேண்டும்.

அப்பொழுதுதான், 60 வயதில் அது 50 சதவீதம் என உயரும்.

கவனம் : இறுதி மாத சம்பளம் ஒரு லட்சம் என்றால் அடுத்த மாத பென்ஷன் 40,000 தான்!

சிலர் சரியாக திட்டமிட்டு, இந்த செயலற்ற வருமானம் (பென்ஷன் உட்பட) இறுதி மாத சம்பளத்துக்கு ஈடாக ஒரு லட்சம் உறுதி செய்கிறார்கள்!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

கேள்வி :  இளம் வயதில் பழகும் எந்தெந்த பழக்கங்கள் என்னை பெரிய பணக்காரர் ஆக்கும்?


என் பதில் :..எனக்கு தெரிந்த அண்ணன் ஜெபசிங், வயது 55...அளித்த பதில் 

எனக்கு தங்க தட்டுல சாப்டனும்னு எல்லாம் துளியும் ஆசை இல்லை.


நம்மள நம்பி கடன் கேட்குறவங்களுக்கு இல்லனு சொல்லாத அளவுக்கு,குடுத்த பணத்தை அவங்க திரும்ப தரணும்னு எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அளவு பணம் இருந்தால் போதும் அதை சம்பாதிக்க வழி சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கான பதிவு இது.


இந்த பதில்  எலான் மஸ்க் பற்றியது இல்லை. எனக்கு தெரிந்த சீரியல் செட், ஒலியும் ஒளியும் மற்றும் பந்தல், சேர் வாடகை தொழில் செய்யும் ஒரு அண்ணாவைப் பற்றியது.


வயது 55 தான். கல்வி அறிவி 5ம் வகுப்பு. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த குடும்பம். இப்பொழுது மாத வருமானம் பல லட்சங்கள், பொருட்கள் கையிருப்பு சில பல லட்சங்கள் (குறைந்த பட்சம் 50 லட்சம் தேறும்). 10 நபர்களுக்கு தினம் 1200 ரூபாய் சம்பளம் வழங்கும் முதலாளி.


ண்ணே எப்படிண்ணே இவ்வளவு பெரிய ஆளாகுனீங்க?


இந்த தொழில் உங்கள் குடும்ப தொழிலும் இல்லை. உங்களுக்கு சப்போர்ட்டும் இல்லை உங்க அப்பா பண உதவியும் செய்யல. அப்புறம் எப்படிண்ணே பணக்காரனாகுனீங்க என்று கேட்கையில் அந்த அண்ணா இந்த பதிலை தான் சொன்னார்.


பள்ளிக்கூடத்துக்கு போகவே எனக்கு பிடிக்காதுமா. அம்மா முகத்தை கூட பார்த்தது இல்லை அக்கா தான் வளர்த்தாள். பள்ளிக்கூடத்துக்கு போகலனா அடி அடினு அடிப்பா. நான் குளத்துக்குள்ள போய் உட்கார்ந்துடுவேன். 15 வயசு இருக்கும்மா பொள்ளாச்சிக்கு ஒரு மளிகை கடைக்கு வேலைக்குப் போனேன். கூட்டுட்டு போன அண்ணா உன் சாதிய சொல்லாதல வேலை குடுக்க மாட்டானுவ, வேற சாதினு சொல்லிக்கனு சொல்லியே கூட்டுட்டி போனாரு. ஏழு எட்டு வருசம் வீடு கடைனு வாழ்ந்துட்டேன்.


ஊருக்கு வந்ததும் பந்தல் போடுறவங்க கூட கம்பு நட தான்மா போனேன். ஆனால் எனக்கும் நாலு பேருக்கு சம்பளம் குடுக்கனும்னு ஆசையா இருந்துச்சு. எல்லாரும் எட்டு மணி நேரம் வேலை செய்தால் நான் நாள் பூரா ஓனர் கூடவே சுத்துவேன் தொழில் கத்துக்கிட்டேன் சின்னதா நாலு பெஞ்ச் 30 டியூப் லைட் மட்டும் வாங்கி தொழிலைதொழிலை துடங்கினேன்.


எல்லாரும் ஏழாயிரம் ரூபாய்க்கு ரெண்டு நாள் ராத்திரி மட்டும் லைட் எரிய விட்டானுங்கனா நான் அதே ஏழாயிரம் ரூபாய்க்கு 5 நாள் லைட் எறிய விடுவேன். இப்படி தான் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.


சூப்பர்ண்ணே. ஜாதியை காண்பித்து உங்கள யாரும் துரத்தலையா?


அட நீ வேறம்மா. கோயில்களில் ஆர்டர் தாரேனு கூப்டுவாங்க, அப்புறம் ஜாதியை தெரிஞ்சிகிட்டு போயிட்டு வாங்க தம்பினு அனுப்பி விட்ருவாங்க. தூத்துக்குடியை பொறுத்தவரைக்கும் ஆலயத்தில் சீரீயல் எறியனும்னாலே ஜாதி வேணும்மா.


அப்புறம் எப்படிண்ணே இப்படி வந்தீங்க?


அசன ஆர்டர் எல்லாம் பெரிய பெரிய ஆர்டர் அதை எனக்கு தர மாட்டாங்க. இந்த லெந்து நாட்களில் வீட்டு ஜெபம் நடத்துவாங்க ஒரு 200 சேர் போட சொல்லுவாங்க. அந்த சின்ன சின்ன ஆர்டரை நல்லா செஞ்சி குடுப்பேன்மா. அப்படியே இப்ப கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டு விசேசங்களுக்கும் ஆர்டர் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.


ம்ம்ம்ம்ம் மனிதர்கள் இப்படித்தான்ல?


எப்படிண்ணே பைசா எல்லாம் கலெக்‌ஷன் ஆகிடுமா?


இழுத்தடிப்பாங்க இந்தா தாரேன் அந்தா தாரேனு.


டென்சன் ஆகாதாண்ணே?


தொழில்னு வந்தால் வளைந்து நெளிந்து தான்ம்மா போகனும். இந்தா போன வாரம் மேலத் தெருவுல அந்த சார் வீட்ல ஜெபக் கூட்டம்னு 300 சேர், 22 லைட் கட்டுனேன் இன்னும் துட்டு தரல இனியும் தர மாட்டாரு. அதுக்காக அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது. இன்னைக்கு இதை விட்டு பிடிச்சா தான் நாளைக்கு சர்ச்ல கன்வென்ஷன் வந்தால் நமக்கு ஆர்டர் தருவாரு. இந்த 300 சேர் வாடகைக்கும் சேர்த்து கன்வென்ஷன்ல கலெக்சன் பண்ணிக்க வேண்டியது தான் என்றார்.


இன்று பணக்காரராக உலா வரும் இந்த அண்ணனிடம் கற்றுக் கொண்டது இது தான்.


தொழிலாளியாக இருக்கும் வரைக்கும் நம்மால் பணக்காரனாக முடியாது. பணக்காரனாக விரும்பினால் தொழில் தான் சிறந்தது. தொழில் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.

ரெண்டாவது உழைப்பு. இராப்பகல் பார்க்காமல், கடிகாரத்தை பார்க்காமல் உழைக்க வேண்டும்.

மூன்றாவது எவரையும் பகைத்துக் கொள்ளாமல் வளைந்து நெளிந்து செல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிட்டு முரண்டு பிடித்தால் தொழிலை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.

இளம் வயதில் ஏழ்மையில் இருந்து பணக்காரனாகிய அந்த ஒரு அண்ணனை தான் எனக்குத் தெரியும். அண்ணாவிடம் கேட்டதை எல்லாம் எழுதிவிட்டேன்.


முயற்சி செய்து பாருங்கள். நம்மிடம் கடன் என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாழ்ந்துட்டோம்னாலே அந்த வாழ்க்கை சந்தோசமா தானே இருக்கும்?



 

சனி, 27 பிப்ரவரி, 2021

 கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 


Udhayakumar Raijakampalam is celebrating your special day.


கடந்த 21.2.2021 அன்று திண்டிவனம் L K Towers ல் நடைபெற்ற

மௌவல் கவிமன்றம் மற்றும்

அறக்கட்டளையின்  துவக்கவிழா

மற்றும் புத்தக வெளியீட்டுவிழா  

மற்றும் விருது வழங்கும்விழா  என

முப்பெரும் விழாவிற்க்கு 

தலைமையேற்று வழிநடத்தி  சென்ற

மதிப்பிற்குரிய கவிஞர் வெற்றிப்பேரொளி அய்யா அவர்களுக்கும்,  சிறப்பு விருந்தினராக 

கலந்துகொண்ட  அண்ணாமலை

பல்கலைக்கழக பேராசிரியர்

தங்கையன் அவர்களுக்கும்,  

மருத்துவ கவிஞர் கவிநிலா மோகன் 

அவர்களுக்கும், சிரம் தாழ்ந்த  

வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் ...

அது சமயம் அவர்களது திருகரங்களால் 

கவிஞர் கண்ணதாசன் விருது 

மற்றும் தூவலின் சாரல் என்ற 

புத்தகத்தில் என் கவிவரிகள் 

இடம் பெற்றதற்க்கான சான்றிதழை

பெற்றுக் கொண்டதில் 

மட்டற்ற  மகிழ்ச்சி அடைகிறேன்...

விழாவை  சிறப்பிக்க வந்த 

கவிஞர் தனுஷ்கோடி அய்யா,

சுரேஷ், நடு நாட்டு தமிழன்,

தேவசேனா, மோகனகவி,

சிங்கை கார்முகிலன் மற்றும் அனைத்து 

கவி உறவுகளையும்  சந்தித்ததில்

மிக்க மகிழ்ச்சி...

இப்பொழுது உள்ள காலகட்டத்தில்

ஒருவிழாவினை நடத்துவது  என்பது

அவ்வளவு எளிதான விடயம்  இல்லை 

என்று அறிந்த போதிலும் சற்றும் 

தயக்கம்  காட்டாமல் இரவு பகல் பாராது தன் சுயவேலைகளை எல்லாம் 

ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக தன்னை அற்பணித்துகொண்டு சீரும் சிறப்புமாக 

இவ்விழாவினை நடத்திய 

மௌவல் அறக்கட்டளையின் நிறுவனர்

திருமதி. சிவசங்கரி ஏந்திழை அவர்களுக்கும், அதற்க்கு  உறுதுணையாக இருந்து வழிநடத்தி  வரும் மௌவல் அறக்கட்டளையின்

தலைவர் அன்புக்கினிய  சோலை ராஜகுமாரன் சகோ அவர்களுக்கும் 

நன்றி என்ற ஒற்றை சொல்லில் சொன்னால் அது 

மிகையாகாது....

அதுமட்டுமல்லாமல் அருசுவை விருந்து 

வைத்து அன்பில் இணைந்த ஒரு 

கவிக்குடும்பமாக திகழ்ந்த  அந்த 

தருணத்தில் அகம் மலர கண்டேன்

பிரிய  மனமின்றி நகர்ந்தேன் 

பிரியாதொரு விழாவில் மீண்டும்

சந்திப்போம் என்று ...

என்றும் அன்புடன் உதயகுமாரன்...


கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...க்கு ,

உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 

புதன், 24 பிப்ரவரி, 2021


🌈ஒட்டன்சத்திரம் ..🌈 புது காளாஞ்சி பட்டி  ..🌈.என் அருமை மகள் .⛱️


🥰ஜெ .ராகவி B .E .MBA -எஸ் .பொன்ராம் -B .Sc .,D .Horti..,DGT .🥰,,

(உதவிதோட்டக்கலை அலுவலர் , சிவகங்கை)

நாள் :25-02-2021  இடம் :புலங்கட்டுநாயக்கனூர்🤝👍  



🌈கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக திருமண வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 👍👍🥰🥰🌱🌳





ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

 டேபிள் மேனர்ஸ்...

இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.

ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.

நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............

கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் லீமெர்டியன்  ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 .. மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...


செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..
கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குக ளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்கு கிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது.
ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2021

 கேள்வி : விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும் ?


என் பதில் ...


விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படுவார்கள். அத்தகைய பெண்கள் மீது அனுதாபமும் கொள்வார்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை.


விவாகரத்தில் ஒரு பெண் பாதிக்கப்படுவது போன்று ஒரு ஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோகத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்தனை, நிம்மதி இழப்பு போன்றவை ஆண்களுக்கும் உண்டு.


குடும்பம் என்றதும் அன்பு, கடமை, பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொருத்தமானவர்கள் என்று கருது கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்- பெண் இருபாலருக்கும் பொருத்தமானவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனுசரணை போன்றவை கிடைக்கும்.


விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவித இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டிக் கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.


ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.


பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணரவைப்பதற்காக பிரிந்துசெல்ல விரும்பு கிறார்கள்.


பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏன்றால், சுய சம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத்திலும் பெண்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடி வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மென்றுவைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பார்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கிவருவார்கள்.


ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும் கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவாகரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.


என்ன தான் பெண்களுக்கு கல்வியறிவும், சுய சம்பாத்தியமும் இருந்தாலும் பெண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்றபடி மனநிலையைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை, நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்களின் சந்தேகப் பார்வை போன்றவைகளை எல்லாம் விவாகரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறையாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கிவிடுவார்கள்.


விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலையவைத்துவிடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை தரவேண்டி இருக்கும். இதற்காக அசையா சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பண அழுத்தமும் சேர்ந்துகொண்டு அவர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடிவை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்துவிடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகிவிடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.


இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள வெகுநாட்களாகும். அதன் தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையையும் பாதிக்கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டியிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.


விவாகரத்து, ஜீவனாம்சம் ஆகிய வழக்குகளில் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல. அப்பாவி ஆண்களும்தான் என்பதை மறுக்க முடியாது.


நன்றி ...

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

 இன்றைய ஞாயிறு ...31-01-2021-உடுமலைப்பேட்டை 

என் அருமை தம்பி சிவராஜ் -எரிசனம்பட்டி குடும்பத்தாரின் இல்ல விழா ..

தம்பியின் மகள் S .R .வர்ஷா .பூப்பு நன்னீர்ட்டு விழா .கரட்டுமடம் .S .S மகால் மண்டப விழாவிற்கு செல்லும் பொழுது ,சிறுவர் காலம் மலரும் நினைவுகளாக தற்பொழுதும் எரிசனம்பட்டி வீட்டை கடக்கும்போது பசுமையாக உள்ளது ..இன்று நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு பார்த்து ..கேட்டு..நலம் விசாரித்து  பேசியது மகிழ்ச்சி .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...

செவ்வாய், 26 ஜனவரி, 2021

 இன்று அருமையான திருமண விழா ....

பொள்ளாச்சி கொல்லப்பட்டி -ராமநாதபுரம்மாவட்டம் -வள்ளக்குளம் 


அருமை தம்பி அருள் பிரகாஷ் -முத்துப்பிரியா ..பொள்ளாச்சி புளியம்பட்டி பொம்மீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழா ..நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம திருப்தியுடன் பொறுமையாக ..(அவசர உலகம் ) சில சொந்தங்களுடன் உரையாடிவிட்டு ..இரவு உணவு வயிற்றுக்கு ருசியுடன் பசித்து ,ரசித்து  மனதிற்கு நிறைவாக சொந்தங்கள் பரிமாறிய உணவு சாப்பிட்டது அருமை...புதுமணமக்களுக்கு வாழ்த்திவிட்டு வந்தது இன்றைய நாள் சிறப்பு ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.. 

புதன், 20 ஜனவரி, 2021

 கேள்வி : வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


என் பதில் :....

இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:

உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.

எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.

எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.

எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.

இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.

காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.

ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது

"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம்?

நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.

இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.

இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.

வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.

மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.

வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.

என்றும் அன்புடன் 

உடுமலை 

சிவக்குமார் V.K

வீட்டு கடன் பிரிவு 

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681..👍⛱.WHATSAPP.. :9944066681🏘

Email:siva19732001@gmail.com🌱

திங்கள், 18 ஜனவரி, 2021

கேள்வி : வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன ?...


என் பதில் :.....நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 5 ஜனவரி, 2021

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..(தளி எத்தலப்பர் )

வீரத்தின் விளை நிலம் ...உடுமலையை ஆண்ட மன்னரின் ...புத்தகம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கரங்களில் ... உடுமலை


யின் வரலாறு ....மகிழ்ச்சி ....

முழுமையான பாடலும்;

 முழுமையான பாடலும்; 

மெட்ராத்தி,  குடிமங்கலம், கொங்கல்நகரம், கோட்டமங்கலம்,  கல்திட்டை,  திருமூர்த்தி மலை, கொண்டக்கடலை காடு, கொத்துமல்லிகாடு,  பொன்னாலம்மன் சோலை, முள்ளுப்பாடி  அருகே,  தென்னை மரக்காடு,  திருமூர்த்தி அணை,  சஞ்சீவராயன் மலை,   மானுப்பட்டி,   ஜம்புமலை, கல்லாபரம், வயல்வெளி, சூட்டிங் ஸ்பாட்,  தொட்டி அன்னவாய்க்கால்,  பொன்னி வளக்கரை, மதகடிபுதூர் ஓவியங்கள்,  பனைமரங்கள்,  இராமகுளம்,  குமரலிங்கம் பெயர்ப்பலகை,  காசி விஸ்வநாதர் கோயில், நடராஜர் கோயில்,  ரோட்டு மேலிருக்கும் கோயில்,  கொடுமம்  ஆத்துப்பாலத்திலிருந்து  ஒரு சூட்,  கல்லாபுரம் ஆத்துப்பாலத்திலிருந்து ஒரு சூட்,   கண்ணாடிப்புத்தூர் கல்திட்டை,  சோழமாதேவி கோயில்,  கணியூர் சிவன் கட்டாயம்,  காரத்தொழுவு சிவன் கோயில்,  மெட்ராத்தி கல்வட்டம்,  வீரகம்பம், சோமவாரப்பட்டி கோயில் ,உடுமலைப்பேட்டை ரயில் நிலையம், சந்தை,  மக்கள் கூடும் இடங்கள், பிரசண்ட விநாயகர் கோயில், பூர்வீகப் பள்ளிவாசல்,  குட்டை பள்ளிவாசல்,  பழைய பேருந்து நிலையம் பள்ளிவாசல்,  சர்ச், தென்னிந்திய திருச்சபை,  ஆர்.சி.  பழனி ஆண்டவர் மில், திருமூர்த்தி மில்,  போகும் வழியில்  இருக்கும் பஞ்சாலைகள், சிறுவர்கள்  கூட்டம், மாடுகள், ஆடுகள் மந்தை, நீரிறைச்சல், நீரருவி,