திருமதி சங்கமேஸ்வரி ராஜசேகர் .......பதிவு ..
அது அவங்க இஷ்டம் , அவங்க வளர்ப்பு , அவங்க குடும்ப அமைப்பு சகோ.
👇 இது ஒரு தாயாக என் பிள்ளைகள் குறித்த சிந்தனை.. யார் மனதையும் புண்படுத்த இல்லை..
இதை எல்லாம் மறந்து , மறக்க செய்யும் அளவிற்கு ஒரு புதிய ஓட்டம் ஓட இந்த நாட்களில் தயாராகி கொண்டு இருக்கிறேன்.. அதனால் என் ஞாபகத்திற்காக எழுதி உள்ளேன்.. 😊🙏🙏🙏
இதோ என் மகனை 7 வருடமாக என் அருகிலேயே தான் வைத்து கொண்டு இருக்கிறேன்..
+2 ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்த பையன் லயோலா , மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் இரண்டிலுமே மெரிட் ல யே கிடைத்து இருக்கும்..
அந்த வருடம்+1,+2 தான் 600 மார்க் மாத்திய முதல் பேட்ச்.. அதனால் நிறைய பிள்ளைகள் மார்க் கொஞ்சம் குறைவாக தான் எடுத்தாங்க.. அதான் நாங்க எதுவும் எதிர்பார்க்காமலே ஸ்கூல் பர்ஸ்ட் வந்து விட்டான்..
ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததும் என் சொந்தங்கள் அறிந்த தெரிந்த அனைத்து நண்பர்களும்..
பெரிய அளவிலான பல பிளான்களை சொன்னார்கள்.. 40,50 லட்சம் ரூபாய் செலவில்.. லயோலா ல படித்து , தனி கோர்ஸ் படித்து பாரின் க்கு போவது..
எனக்கு பாரின் போவது பிடிக்காது .. என் பிள்ளைகள் நான் நினைத்த வுடன் வந்து பார்க்கும் தூரத்தில் இருக்க வேண்டும்..
இதே போல் ரூட்டுல சி.ஏ படித்து முடித்து.. நியூயார்க் ல ஏதோ பெரிய பேங்க் ல வேலை செய்யற பையன்.. ஒரே பையன் ஏற்கனவே வசதி.. அப்பா நகை கடை வைச்சி இருக்கார்..
எங்க அப்பாவோட அண்ணன் மகனின் மகன்.. என் மகள் 4 வது படிக்கும் போது இருந்து பொண்ணு கேட்டு கொண்டு இருக்காங்க.. அந்த அண்ணிக்கு நான் னா பிடிக்கும்.. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்..
அவங்க கல்யாணம் பண்ணி வந்த அன்னிக்கு.. அவங்களோடயே சுத்திக்கிட்டு இருந்தேன்.
இதில் எல்லாம் முழுசா முடிவுகளை நான் எடுக்க முடியாது.. என் மகளை கேட்டேன்.. அவ சாய்ஸ்.. தான்..
முடியாது… எனக்கு சென்னை செகரட்ரியேட் ல ASO வேலை தான் வேணும்.. ஒரு லோயர் மிடில் கிளாஸ் அல்லது மிடில் கிளாஸ் பையன் தான் வேணும்.. அதுவும் என் பிரண்ட் ல ஒருத்தனா தான் இருப்பான்.. சென்னையில் வேலை , வாழ விரும்பும் பையன் மட்டும் தான் னு சொல்லி விட்டா.. அவ்ளோ தான்..
இதே தான் என் மகனிடமும் கேட்டேன்.. லயோலா போறியா பாரின் ல லட்ச கணக்கில் சம்பளம் வாங்க எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்க போறியா னு கேட்டேன்..
எனக்கு 5 லட்சம் மட்டும் கொடு.. இந்த ரூம் லயே மியூசிக் ஸ்டுடியோ வைத்து கொள்கிறேன் னு சொன்னான்..
நீ குருப் 4 வேலையை பிடி.. அப்போ பண்றேன் னு சொன்னேன்.. எனக்கும் மியூசிக் ஸ்டுடியோ வைத்து நான் பாட்டு பாட ஆசை தான்.. போனி ஆகணுமே 😅😅😂😂
உள்ளூர் லயே ஒரு சாதாரண காலேஜ் ல பி.காம் சேர்ந்து கொள்கிறேன்.. குரூப் 4 எக்ஸாம் க்கு படிக்கிறேன் னு அவனே எடுத்த முடிவு.. அப்போ ஆரம்பித்தது..
எங்க சொந்தங்களின் வெறும் வாய்க்கு அவல் கிடைத்து விட்டது.. என்னை போட்டு மென்னு மென்னு துப்பிட்டாங்க..
எல்லாருக்கும் சொல்லி கொள்ள பெருமையாக இருக்க வேண்டும்..
பிள்ளைகள் மனசுக்கு எது நிம்மதி னும் யோசிக்க வேண்டும்..
ஒரு பக்கம் அவங்க மனசுக்கு பிடித்ததும் செய்ய வேண்டும்.. இன்னொரு பக்கம் வாழ்க்கைக்கு எது மிக முக்கியமோ அதையும் செய்ய வேண்டும்..
நான் எப்போதும் நீங்களே யோசித்து முடிவு பண்ணுங்க னு சொல்லி விடுவேன்..
அவன் வேலை கிடைத்து வெளியூர் போக வேண்டியது வந்தாலும் கூட .. கல்யாணம் ஆகும் வரை .. ஒண்ணு நான் போய் கூட இருப்பேன்.. அல்லது என் மாமியாரிடம் சொல்லி கூட போய் இருக்க சொல்வேன்..
தனியா விட கூடாது.. பெண் பிள்ளைகளை மட்டும் இல்லை.. ஆண் பிள்ளைகளை கூட பாதுகாப்பு வளையத்தில் வைத்து வளர்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்..
அதன் பிறகு நமக்கு தெரியாது..
அவங்க வாழ்க்கை அவங்க வாழட்டும்.. அவங்க முடிவுகளை அவங்க எடுக்கட்டும்..
தனியா வாழ கூடிய அளவு .. ஓரளவு பயிற்சி என் மகன், மகள் இருவருக்கும் உண்டு..
எனக்கு சிறு வயதில் ஜோசியத்தில் சொன்னபடி.. 36 வயசு வரை தான் .. ஆயுசு குறைவு னு இருந்தா .. என்ன பண்றது னு ..
வெளி உலகம் குறித்தும் , பொருளாதார விஷயங்கள் குறித்தும் , வீட்டை , இடத்தை , சம்பள பணத்தை பத்திரமாக வைத்து கொள்ளவும் முழு பயிற்சி கொடுத்து உள்ளேன்..
என்னை விட விவரம்.. இருவரும்..
யார் வீட்டுக்கு வந்தாலும் , ஏன் பா சும்மா இருக்கே ??? ஏதாவது வேலைக்கு போகலாம் ல .. சும்மா ஏதாவது கை செலவுக்கு , அப்பா அம்மா க்கு உபயோகமாக இருக்கும் ல னு நல்லது சொல்றோம் னு தான் நினைத்து தான் சொல்றாங்க..
ஆனால் .. நான் தான் சொல்கிறேன்.. இப்படி மட்டும் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று.. என் பேச்சை தான் அவன் கேட்கிறான் ..
அதனால் என் சொந்தங்கள் ஜாலியா என்னை கழுவி ஊற்றி கொண்டு இருக்காங்க..
எனக்கே ஒரு சில நேரங்களில் தோணும்.. நாம நம் நகைகளை வித்து வித்து கடன் வாங்கி .. இடம் வாங்கி வைத்ததை விட என்ஜினியரிங் படிக்க வைத்து இருக்கலாமோ ?? சி.ஏ படிக்க வைத்து இருக்கலாமோ ??
ஆனால் அவனே தான்.. 9 வது - பத்தாவதிலேயே சொல்லிட்டான்.. நான் 450 மேல் மார்க் எடுப்பேன்.. கம்யூட்டர் வாங்கி தரணும்.. ஆனால் ஏ குரூப் சேர மாட்டேன்.. அக்கெளண்ட்ஸ் காமர்ஸ் தான் எடுப்பேன்.. எனக்கு என்ஜினியரிங், எம்.பி.பி. எஸ் லாம் தேவை இல்லை..
அவன் தங்கையும் இப்போ வரை..அவன் என்ன பண்றானோ அதை தான் நானும் பண்ணுவேன்.. அவன் பண்ணலை னா நானும் பண்ண மாட்டேன்..
தமிழ்நாட்டில் போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் அனுபவிக்கும் சமூக அழுத்தம் கொஞ்சம் நஞ்சம் அல்ல..
ஏன் 7 வருடம் , 10 வருடம் எல்லாம் தனியார் வேலை பார்த்து விட்டு, அதை விட்டு விட்டு இந்த தேர்வுகளுக்கு படிக்க வருகிறார்கள்..
அந்த வேலையில் உறுதி தன்மை இல்லை.. அதிக மன அழுத்தம்.. லீவு கிடைப்பது இல்லை..
96,97 ல இருந்து 2013,14 வரையிலும் கூட ஐ.டி ஃபீல்டு , கம்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு நிறைய பேர் போனாங்க.. வெளிநாடுகளுக்கு போனாங்க..
அதிலும் பல சிக்கல்கள் வரும் போது .. சமீபத்திய வருடங்களில் போட்டி தேர்வுகளில் .. கடினமான போட்டி தான்..
நானும் தொடர்ந்து கவனித்து கொண்டே தான் வருகிறேன்.. ஒரு சிலருக்கு டக் டக்குனு கிடைக்கலாம்.. பலர் போராடி போராடி போராட்டமே வாழ்க்கை ஆக மாறி தான் எட்டி பிடிக்கிறார்கள்..
நேற்றும் , இன்றும் வேகன்சி முடிந்து . வேலை கிடைக்காத பிள்ளைகள் படும் வேதனைக்கு அளவே இல்லை..
அவங்க சரியா படிக்காதவங்க இல்லை, அவங்க வாங்கியது குறைந்த மதிப்பெண் கிடையாது.. அதிகமாக வரும் ஒன்று , இரண்டு மதிப்பெண்களே இங்கு வேலையை நிர்ணயிக்கிறது..
இங்கு ஒருத்தர் ஜெயித்தால் அப்பாடா தப்பிச்சேன்.. பிழைச்சேன் சாமி என்ற மனநிலை தான்..
என் பிள்ளைகளுக்கு படிப்பே வர வில்லை என்றாலும் கூட . அவனுக்கு அந்த பக்கம் படப்பையில் ஒரு ஜவுளி கடை வைத்து உட்கார வைக்கணும்.. அதோடு கூட , 2 வாடகை போர்ஷனுடன் மாடியில் அவனுக்கான வீடு..
இவளுக்கு இங்கே அரக்கோணத்தில் சூப்பர் மார்கெட்.. வைத்து உட்கார வைக்கணும்.. பின்னாடி ஏற்கெனவே உள்ள எங்க வீடு .. அவளின் பாகம் தான்.. மாடியில் வாடகை போர்ஷன்..
இது எல்லாம் மகன் 8, மகள் 6 வது படிக்கும் போதே நான் பிளான் போட்டது..
இருவருமே ஓரளவு நல்லா படிக்கவும் என் பிளான் மாறி விட்டது.. அவங்க மனதிற்கு ஏற்ற படி .. விருப்பப்படி.. எனக்கும் விருப்பம் தான்..
பிள்ளைகள் நம்மை பின்னாடி கவனிக்குதோ இல்லையோ பெத்தவங்க காலத்துக்கும் பிள்ளைகளை தூக்கி சிந்தனையில் வைத்து இருப்பாங்க..
நானும் அப்படித்தான்.. ஆனால் ரொம்ப வருஷம் லாம் இல்ல. அவங்க செட்டில் ஆகணும்.. இல்ல கூட நின்று செட்டில் பண்ணிவிடுவேன் . முடிந்த வரை ..
அதன் பிறகு என் வாழ்க்கை எனக்கு முக்கியம்.. இப்படி ஒண்ணு இருக்கு னே பல பெற்றோர் யோசிக்க மாட்றாங்க..
எங்க ஊரு ல ( வேலூர் ல) 5 பொண்ணு, 10 பொண்ணு இருக்க வீடுகள் கூட உண்டு . ஆண் குழந்தை ஆசையில் வந்த வினை..
3,4 ஆண் குழந்தை இருக்க வீடு எல்லாம் ஆளுக்கொரு திசையில் சிதறி இருக்காங்க..
ஆனா இந்த 5 பொண்ணு, பத்து பொண்ணு எல்லாம் அடுத்த அடுத்த தெருக்களில் வீடு கட்டி கொண்டு சூப்பரா வாழறாங்க..
காரணம் என்ன தெரியுமா??
25 பைசா இட்லி வித்த போது .. காலையில் 3 மணி நேரம், 4 மணி நேரம் பூப்பறிக்க போவாங்க.. 30,40 ரூபாய் கிடைக்கும்..
பீடி கூடை ஆளுக்கொரு பீடி கூடை .. அது ல வர்ற காசை சேமித்து , காது மூக்கு கொலுசு செயின் நகை வாங்கி முடித்ததும் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒண்ணும் இல்லாத வீட்டு பையனை கல்யாணம் பண்ணுவாங்க.. அவன் தான் வருவான்…
அவன் சம்பாத்தியம் வாங்கி .. சேர்த்து .. 5000,10000 ரூபாய் வித்த இடங்களை வாங்கினாங்க.. அது 10,15 லட்சம் போகும் போது வித்து வீடுகளை கட்டி கொண்டாங்க..
அந்த பெண் பிள்ளைகளுக்கு வசதி , படிப்பு இல்லை .. உழைப்பு, அதில் சேமிப்பு.. அது கொடுக்கும் ஊக்கம் முக்கியமாக முடிவுகளை எடுக்க கூடிய சுதந்திரம் இருந்தது..
எங்க ஏரியா ல 20000 இருந்தது .. எங்க அம்மா க்கு வருஷம் 2 முறை 18,20000 தாத்தா கொடுக்கும் பணம் வரும்.. கிரவுண்ட் வாங்க சொல்லி சொல்வாங்க.. எங்க அப்பா கோவிச்சி கிளம்பி விடுவார். ஊர் என்ன சொல்லுமோ னு பயந்து திரும்பி வரும் போது அமைதியா இருப்பாங்க..
நம்ப கையில் பணம் எவ்வளவு புரளுது முக்கியம் இல்லை.. அதில் எவ்வளவு சேமிக்கிறோம் எப்படி சேமிக்கிறோம் அது தான் முக்கியம்..
அதே போல் ஒரு நிலையான வேலை , அல்லது தொழில் ல முறையான வருமானம் மிக முக்கியம்..
இல்லை என்றால் எப்படியாவது அதை உருவாக்க வேண்டும்..
மூன்று தலைமுறைகள்.. அதாவது அப்பாவின் சிறிய அளவில் சேமிப்பு, மகனின் அதை வளர செய்யும் திறமை , அந்த பேரனுக்கு அதை கட்டி காப்பாத்தும் திறமை இருக்க வேண்டும்.. இங்கு அடுத்த தலைமுறைக்கு இது மூன்றுமே இருக்க வேண்டும்.. அதாவது கொள்ளு பேரனுக்கு..
இல்லை என்றால் அடுத்த தலைமுறையில் வீழ்ச்சி . அவங்களின் சிறுசேமிப்பு அடுத்து .. இப்படியே போகும்.
எல்லா காலங்களும் மாறுது..
குழாய் (பேண்ட் அ தான் அப்படி சொல்றாரு ) போட்டவனுக்கு பொண்ணு தர மாட்டேன் னு என் தாத்தா சொல்லி இருக்காரு ..
( கப்பல் ல வேலை செய்த இன்ஜினியர் .. பேண்ட் போட்டு சென்னை குடும்பம்.. தானா வந்து பொண்ணு கேட்ட போது.. ) விவசாயி வேண்டுமாம்.. ஏக்கர், பம்ப் செட் இல்லாதவனிடம் பொண்ணு கொடுக்க மாட்டேன்.
இன்றைய பிள்ளைகளின் அறிவு கூர்மை , நம் அனுபவம் சேர்த்து எதையோ பண்ணி பிள்ளைகளை தூக்கி விடுவோம்..
👆இப்படித்தான் நிறைய பெற்றோர்..
வெற்றி கிடைத்தால் கொண்டாட்டம்.. இல்லை யா திண்டாட்டம் .
தொடர்ந்து ஓடுவோம் 🎯
- படிப்பு இருக்கா அதை கொண்டு பணம் சம்பாதிக்கலாம் .. இது இருப்பதில் எளிது..
- திறமை இருக்கா அதை கொண்டு சம்பாதிக்கலாம்.. திறமைகளை வளர்க்க முயற்சி தேவை
- உழைப்பு மட்டுமே இருக்கா .. இது கொஞ்சம் கடினம்.. பலனும் குறைவு ..
- கால சூழ்நிலை, நமக்கான அமைப்பு , எதிர் பாராத வாய்ப்புகள்.. இதில் எல்லாம் நிதானமும் , எச்சரிக்கையும் இருந்தால் பலன் கிடைக்கும்..
- என்ன இருக்கோ அதை காப்பாத்தி கொள்வது .. உள்ளதும் போக கூடாது
- சிக்கனம், சேமிப்பு , நிலையான முதலீடு (இடம் , நகை ) , வங்கி ஃ போஸ்ட் ஆபிஸ் எப்.டி
- எந்த நிலையிலும் திருப்தி. . நிம்மதி சந்தோஷம்.. நமக்குள் ஊறும் மகிழ்ச்சி ஊற்று..
- குறுக்கு வழிகள் எப்போ வேணா கவுத்து விட்டுவிடும்.. நேர் வழியே எப்போதும் நல்லது..
- அதிக ஆசை, பேராசை அதல பாதாளத்தில் தள்ளி விடும்..
- எவ்வளவு பணம் இருந்தாலும் .. ஒரு வாய் சோறும், அன்பான உறவுகளும், உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் அத்தனையும் கசக்கும்.. 👩🍼 பிள்ளைகள் எவ்வளவு பெரிதானாலும் தாயின் மன நிலை.. அது என் குழந்தை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக