ஞாயிறு, 14 டிசம்பர், 2025

இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...

 இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...

இன்று காலை கல்லூரி நண்பர்கள் சந்திப்பு திருமூர்த்தி அணை  கால்வாய் கரையில் கல்லூரி நண்பர் குருவாயூரப்பன் பண்ணை தோட்டத்தில் அருமையான சந்திப்பு ....அருமையான தோட்டக்கலை நிபுணர் ..பண்ணை தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து . தற்பொழுது உள்ள விவசாய நடைமுறைகளை கொண்டு தொலைநோக்கு திட்டங்களுடன் விவசாய துறையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் கால்பதித்து வளர்ந்து வருபவர் ..அவருடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...

கல்லூரி நண்பர்கள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது ..பேராசிரியர்  வசந்தகுமார் பேசியது மிக்க மகிழ்ச்சி ..இன்றைய இளைய தலைமுறையினர் கல்வியில் முன்னோக்கு திட்டங்களுடன் படித்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அவர்களே தேடிக்கொள்கின்றனர் ..அவர்களுக்கு நண்பர்கள் போல சில ஆலோசனைகளை மட்டும் நம் கூறினாலே அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர் கூறியது மிக்க மகிழ்ச்சி ..அதே போல் பேராசிரியர் மனோகரன் அவர்களும் அதே போல் முன்மொழிந்தார் ...நன்றிகள் பல ...

மணிகண்டன் ....திருப்பூர் என்றாலே இவரின் ஹோம் தியேட்டர் வீடு தான் ஞாபகம் வரும் ..இவரின் பணி இன்று வீடு கட்டும்பொழுதே சமையல் அறை புத்தக அறை போன்று ஹோம் தியேட்டர் க்கு அறை இந்த காலகட்டத்தில் வீட்டில் தேவையான பொழுதுபோக்கு அறையாக வாழ்வில் இடம்பெற்று விட்டது ..இவரின் பணியின் மூலம் பல வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றி வருகிறார் .இன்றய தொழில்நுட்பம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொண்டார் ..நன்றிகள் .

தொடரும் கல்லூரி நண்பர்களின் சந்திப்பு  பதிவு .....நாளை ..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக