திங்கள், 6 செப்டம்பர், 2021

 இத்தனை கால வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது,

மரியாதை, அங்கீகாரம் போன்ற விஷயங்கள் எல்லாம் தானாக நம்மைத் தேடி வருவதல்ல. நாமாக இறங்கி அடித்துப் பிடுங்க வேண்டிய விஷயங்களாக மாறி விட்டன. அதற்கு பல மோசமான தந்திர அரசியல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியொரு மோசமான கலாசாரத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்படியெல்லாம் கேவலமான தந்திரங்கள் செய்துதான் அந்த மரியாதை, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றால், அப்படிப்பட்ட பொறுப்புகள் ,பதவிகள் எனக்கு தேவைப்படாது ,எனக்குத் தேவையும் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பவன், பிழைக்கத் தெரியாதவனாக, இளிச்சவாயனாக பார்க்கப்படுகிறான்.என்பது தான் வேதனையான விஷயம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக