ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

 கேள்வி :  மருத்துவ படிப்பு முடிந்து, அரசு மருத்துவர் வேலை எப்படி வாங்குவது? அதற்கு என்ன தேர்வு எழுத வேண்டும்? அதற்கு காலம் உண்டா ?சார்..


என் பதில் :


தமிழக அரசு மருத்துவமனையில் வேலைக்கு மருத்துவர்கள் சேர.வேண்டும் எனில் அவர்கள் எம்ஆர்பி என்ற மெடிக்கல் ரெக்ரூட்மன்ட் போர்ட் நடத்தும் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்..


MEDICAL SERVICES RECRUITMENT BOARD(MRB)

http://www.mrb.tn.gov.in/notifications.html


பின்னர் தரவரிசை பட்டியலை எம் ஆர்பி வலைதளத்தில் வெளியிடுவார்கள்.. அதன் அடிப்படையில் கவுன்சலிங் என்ற கலந்தாய்வு க்கு அழைக்கப்படும்.. இப்படியே தற்போது தமிழகஅரசு மருத்துவமனையில் மருத்துவர்களை பணியில் அமர்த்துகின்றனர்.


முது நிலை படிப்பு படித்த ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் என்றால்.. நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி .. பணியமர்வு ஆணை கொடுக்கப்படும்..பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் வேலை செய்வார்கள் .


அதே போல்.. அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பு முடிந்ததும்.. மூன்று வருடங்கள்.. ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும் என்ற பிணை உத்தரவு உள்ளது.. 


வேண்டுமெனில்.. மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வேலையை தொடர்ந்து செய்யலாம் அல்லது வேறு வேலைக்கோ..வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கோ சென்று விடுவார்கள்..

நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக