கேள்வி : "பஞ்சாயத்து அப்ரூவல் மட்டும் பெற்ற மனைப் பிரிவில் மனைகளை வாங்கலாமா ? அது சட்டப் படியானதா ?"
என் பதில் :
.
"வாங்கக்கூடாது .அது சட்டப்படியானது இல்லை!" .
.
THE TAMIL NADU PANCHAYAT BUILDING RULES, 1997
(G.O.Ms.No.255, Rural Development (C2) 18th August 1997).
.
Rule 3. Application for approval of layout of sites:-
.
(1) No owner or other persons shall layout a street, lane, passage or pathway or sub-divide or utilize the land or any portion or portions of the same on the site or sites for building purposes until a layout plan has been approved by the Executive authority who shall get prior concurrence of the Director of Town and Country Planning or his authorized Joint Director or Deputy Director of Town and Country Planning for such approval.
.
அதாவது நகர் ஊரமைப்புத் துறை (DTCP or Directorate of Town and Country Planning ) யின் approval பெற்றபிறகு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஒப்புதல் வழங்கவேண்டும் ..
.
இருப்பினும் மனை வாங்கு முன்பு விற்பவரிடமோ அல்லது சம்பத்தப்பட்ட DTCP அலுவலகத்திலோ ஒரிஜினல் வரைபடத்தின் நகலினை வாங்கி மனை எண் மற்றும் அளவுகளை உறுதி செய்து கொள்ளவேண்டும்.மேலும் நேரில் சென்று பார்த்து குறிப்பிட தூரங்களில் ரயில் /பேருந்து நிலையம் ,கல்லூரிகள் போன்ற கட்டுமானங்கள் உள்ளதா என உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும் .
.
நீங்கள் மேற்படி மனைப்பிரிவின் approval எண்ணைக் குறிப்பிட்டு, நகல் வேண்டி விண்ணப்பித்தால் வரைபடத்தின் நீள அகலத்திற்கேற்ப கட்டணம் செலுத்த தெரிவித்து(Generally between Rs.300 and 1000) அரசு கடிதம் வரும் .அதில் கண்டுள்ள முறையில் கட்டணம் செலுத்தி அசல் ரசீதுகளை அனுப்பிவைத்தால் உங்கள் வீடு தேடி ஒரிஜினல் வரைபடத்தின் நகல் வரும் .
நகர் ஊரமைப்பு துறையில் ஒப்புதல் பெறப்பட்ட மனைப்பிரிவுகளில் நீங்கள் வீட்டடி மனை வாங்கினால்- தார் சாலை, கழிவுநீர் வாய்கால், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் உங்களுக்கு கிடைப்பதுடன், எளிதான வங்கிக்கடன் வசதியும் கிடைக்கும்.
மேலும் நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் இருந்து உரிய பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்கும். அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் நீங்கள் மனை வாங்கினால் சாலை கழிவு நீர் வாய்கால் மின் இணைப்பு கட்டிட வரைபட அனுமதி வங்கிக்கடன் வசதி எளிதாக கிடைக்காது.
மேலும் உங்கள் மனை தொடர்பான சட்டரீதியான பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்காது. பல ஆண்டுகளாக வீட்டடி மனை வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்ற உங்களின் கனவு, எப்போது வேண்டுமானாலும் நிர்மூலம் ஆகலாம்.
எனவே, கவனம் தேவை.
.
ஓடி உழைத்து வாழ்நாளில் ஒரு வீடு கட்டப்போகிறோம் ! அதற்காக ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கி அரசு ஆவணங்களை பெற்று உறுதி செய்துகொள்ளுதல் நலம்தானே ....
Sivakumar.V.K
Home Loan Consulatant
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு ஆலோசகர்
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக