கோயில் கட்டிய பிறகு கடந்த 500 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், கோயில் சோழர் கால சிற்பங்கள் மறைத்து நாயக்கர்கால சிற்பங்கள், கோயிலில் கட்டிட அமைப்பு அதற்குள் இருக்கும் நுட்பமான வேலைப்பாடுகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்திராத கேட்டிராத செய்திகளை விரிவாகப் பார்ப்போம்.
புதன், 22 அக்டோபர், 2025
ராஜராஜசோழன்
ஞாயிறு, 5 அக்டோபர், 2025
உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின் தோட்டத்திற்கு...
இன்றைய காட்டுவழிப்பயணம், 🥰✒️📗🏠📡🎙️🌈🛵
உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின் தோட்டத்திற்கு...
திணைக்குளம், பள்ளபாளையத்திற்கும், ஜல்லிபட்டிக்கும் மையமான பகுதியில் உள்ள அவரது தோட்டம் சென்றோம்.
போகும் வழியில் கரிசல் குளத்தில் பறவைகளை படம் பிடித்தோம். நமது பகுதியில் ஏழு குளப்பாசனத்தை உடுமலை வரலாற்று நூலில் மிகவும் விரிவாகப் பதிவு செய்திருப்போம். ஏனெனில் இந்தக் கரிசல் குளம் என்பது கரிசல் மண்ணில் இருக்கும் நீர் நிலை, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்கு தங்கியிருக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் மிக அதிகளவில் வெளிநாட்டுப்பறவைகள் இங்கு வந்து தங்கியிருக்கும்.
இது இந்த நீர் நிலையின் நீண்ட கால தொன்மையினையும், இந்தப் பகுதியின் நெடிய வரலாற்றையும் சொல்லாமல் சொல்லக்கூடிய செய்தி. மேலும், ஏழுகுளப்பாசனத்தின் மையமான பகுதி இந்த கரிசல் குளம், பரப்பளவில் மிகப்பெரிய அளவு கொண்டது. மடையர்கள், மிலேச்சர்கள் நாம் கேள்விபட்டிருப்போம்.
மடையர்கள் என்பது மடையை நீர் மடையை திறந்துவிடும் ஆபத்தான வேலையைச் செய்பவர்கள், நீர் மேலாண்மையில் அனுபவ அறிவோடு கொஞ்சம் அறிவியல் அறிவையும் கொண்டவர்கள் மிலேச்சர்கள். அவர்கள் இந்த நீர் மேலாண்மையோடு தொடர்பு கொண்டிருந்ததை ஏற்கனவே ஏழு குளப்பாசன வரலாற்றில் பதிவு செய்திருக்கிறேன்.
அவ்விடத்திலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டரில் நமது நண்பர் தோட்டம் இயற்கையான, குளுமையான, அழகான , அற்புதமான அமைதியான இடத்தில் இருக்கிறது. இங்குதான் இன்று சென்று அவர்களது தோட்டத்தில் இரண்டு மாம்பழச்செடிகளை நட்டு வந்தோம்.இன்று தோட்டத்தில் நண்பர் கனகராஜ் இரண்டு இளநீர் குடிப்பதற்காக வெட்டினார். ஆனால் உண்மையில் மூன்று பேர் சேர்ந்தும் குடிக்க முடியவில்லை. அவ்வளவு தண்ணீர் இருந்தது. அது மட்டுமல்லாமல் தோட்டத்திற்கு மிக நெருக்கமாக தெளிந்த நீரோடை, இயற்கையாக சலசலவென சத்தத்தோடு அமைதியாக ஓடுகின்றது.
பெரும் அமைதியான சூழல், பெரும்பாலான கவிஞர்கள், சிந்தனையாளர்கள் ஏன் இயற்கையைத் தேடிப் போகிறார்கள் என்றால், இவ்வாறான இடத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அதனை முழுமையாக அனுபவிக்க ஆசை இல்லாமலா இருக்கும்.
நமது நண்பர் கனகராஜ் இரண்டு இடங்களில் அவரே குழி தோண்டி மரங்களை நட்டி, அதற்குப் பாதுகாப்பாக தென்னைஓலைகளையும் வைத்து பராமரிக்கும் பண்பு மரங்களையும், இயற்கையையும் அவர் நேசிக்கும் ஆர்வத்தை நமக்குக்காட்டியது.
கோ கோ மரம், நெல்லிக்காய் மரம், சிறிய பாகற்காய் (மருந்துக்கான) மரம், நார்த்தங்காய் மரம், எலுமிச்சை மரம், மஞ்சள், பருத்தி என முழுமையாக இயற்கையை நேசிக்கும் நமது நண்பரை இதுநாள் வரைக்கும் தவறவிட்டமைக்கு மிகவும் வருத்தத்தோடு இந்தப் பதிவை இடவேண்டி உள்ளது.
பாதுகாப்பிற்கு இரண்டு நாய்களையும் வைத்துள்ளார். இவரும், இவரது தோட்டக்காவலர் சின்னதுரை தவிர மாலை 4 மணிக்கு மேல் யாரும் அந்தத் தோட்டத்தில் கால் வைக்க முடியாது. அந்தளவிற்கு மிகவும் பாதுகாப்பான விலங்குகள்.
மேலும் நாற்பதடி கிணறு அந்தக்கிணறு நிறையத் தண்ணீர், கரைவளியில் இருப்பதால் இதெல்லாம் ரொம்ப சகஜம். இருப்பினும் கடந்த 1999 முதல் 2002 வரை கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், சமவெளிப்பகுதி அல்லது குடிமங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை இங்குக் கொண்டு வந்து கட்டிவைத்து கஞ்சி காய்ச்சி ஊற்றியதையும், அந்த வறட்சியிலும் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டதை குறிப்பிட்டுச்சொன்னார் நண்பர் .அப்போது ஆயிரம் அடிக்கும் கீழே தண்ணீர் இருந்ததையும் அதற்குப்பிறகு தண்ணீர் வரத்து ஆண்டு முழுமைக்கும் பச்சைப்பசலென்று தண்ணீருடன் இருப்பதையும் குறிப்பிட்டுச்சொன்னார்.
நாம் ஒவ்வொருவரும் விவசாயத்தை மனதளவில் நேசித்தாலும், பசுமையை விரும்பினாலும் இது போன்ற நண்பர்களின் தோட்டத்திற்குச்சென்று பார்க்கும்போதுதான் இன்னமும் மனமும் மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருக்கும்.
இயற்கையோடு சேர்ந்து நட்பின் அருமையினையும் அறிவோம்.
என்றும் அன்புடன் சிவக்குமார்📗✒️🎙️📡🥰💦🌧️🌳🌳🌳🌹💐🕊️🦅🦜
வெள்ளி, 3 அக்டோபர், 2025
புது வீடு கட்டும்போது மின் இணைப்புகள் எப்படி இருக்கவேண்டும்....
புது வீடு கட்டும்போது மின் இணைப்புகள் எப்படி இருக்கவேண்டும்....
மின்சாதன பணிகளில் ஈடுபட்டு இருக்கும் உடுமலை மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார் சண்முகம் மாப்பிள்ளைகளுடன் கலந்து உரையாடி போது கிடைத்த தகவல்கள் .
வீடு மின் ஒயர் பலன்கள் ..நான் இதுவரையில் எழுதிய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து புரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தை வைத்து எழுதியவைகள் என்பதை தெரிவித்து அந்த வரிசையில் இந்த தொடர் பதிவையும் எழுதுகிறேன். இது ஒரு எலெக்ட்ரிகள் ஒயரிங் தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- மின்சாரத்தை கடத்துதல்:மின் ஒயர்கள் மின்சாரத்தை மின் நிலையத்திலிருந்து வீடு வரை, மற்றும் வீட்டில் உள்ள வெவ்வேறு சாதனங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றன.
- சாதனங்களை இயக்குதல்:ஃபேன், விளக்குகள், குளிர்சாதன பெட்டி போன்ற வீட்டின் மின் சாதனங்கள் அனைத்தும் ஒயர்கள் மூலம் மின்சாரம் பெற்று செயல்படுகின்றன.
- பாதுகாப்பு:சரியான தடிமனும் தரமும் கொண்ட ஒயர்களைப் பயன்படுத்துவது, அதிக மின் அழுத்தத்தால் ஒயர்கள் சூடாகி தீவிபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
- தரமான மின் இணைப்பு:தரமான மின் ஒயர்களைப் பயன்படுத்துவது, மின்சாரம் சீராக பாய்வதை உறுதிசெய்து, சாதனங்களின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- பராமரிப்பு மற்றும் கண்டறிதல்:வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், ஒரு மின்சுற்றின் எந்தப் பகுதிக்கு செல்கிறது என்பதைக் குறிக்கின்றன. இது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளை எளிதாக்குகிறது.
- சரியான பயன்பாடு:குறிப்பிட்ட மின்சாதனங்கள் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு ஒயர்களைத் தேர்வு செய்வது அவசியம்.
- சரியான தடிமன்:அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு தடிமனான ஒயர்களையும், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு மெல்லிய ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும்.
- நம்பகமான பிராண்டுகள்:தரமான மற்றும் நம்பகமான பிராண்டுகளின் மின் ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும்.
- வண்ண குறியீடு:மின்சார குறியீடுகளின்படி, வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், மின்சாரத்தை கடத்தும் மற்றும் தரை இணைப்புக்கானவை என்பதை புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.
நமது வகுப்புத் தோழமையின் அன்பு மகள் சுற்றுலாத்துறை அதிகாரிக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஒரு நிகழ்வு
பேரன்புப்பெருந்தகைகளுக்கு அன்பு வணக்கம்.
இன்று 03.10.2025 வெள்ளிக்கிழமை நமது பேரன்புப் பாசத்திற்கும், நிரம்ப நேசத்திற்கும், அள்ளமுடியாத அன்பிற்குப் பாத்திரமான நமது அன்புப்பெருந்தகை, அன்புத்தலைவர், பாசத்தலைவர் மகாலிங்கம் - மஞ்சுளா அவர்களின் பாசமகள் மதுஅபிநயா உதவி ஆட்சியர் தகுதியில் சுற்றுலாத்துறை அதிகாரியாக சென்னையில் பொறுப்பேற்றுக்கொண்டமைக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்வு பொள்ளாச்சி கரப்பாடி கிராமம் அருகே உள்ள அவரது தோட்டத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இப்பெரும் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி எங்களையும் எங்கள் குழந்தையையும் சிறப்பு செய்த கருணாநிதி மற்றும் வந்திருந்து வாழ்த்திய வகுப்புத் தலைவர் கனகராஜ் ராஜேந்திரன் ஹரிஹரன்
அசோக்
ஜெய்சங்கர்
பத்ம ஜோதி
சசி
அவர் இணையர் ஆறுமுகம்
தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி அவர்களின் இணையர் பிரதீப்
மற்றும் கருணாநிதியின் சகோதரிகள் மூவர் அவர்தான் மகள் ஆகியோருக்கும் இணையம் மூலம் வாழ்த்திய அருணோதயராஜ்
பத்மா
ராணி
சிவக்குமார் சார் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் ஆகியோருக்கு மற்றும் என் மகளின் வளர்ச்சியை தங்களின் மகளின் வளர்ச்சியாக எண்ணும் என் அருமை பிளஸ் டூ தோழர், தோழிகளுக்கு எங்களின் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதில்
பேர் உவகை கொள்கிறேன்
நன்றி , நன்றி..
மகாலிங்கம்
வியாழன், 2 அக்டோபர், 2025
கலைமாமணி தமிழக அரசு விருது பெற்ற மதிப்புக்குரிய அண்ணன் ரஞ்சிதவேல் பொம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
கலைமாமணி தமிழக அரசு விருது பெற்ற மதிப்புக்குரிய அண்ணன் ரஞ்சிதவேல் பொம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஜமீன் கோடாங்கிபட்டி கிராமம் ...
வில்லுப்பாட்டு உடுக்கை கலைஞர் தேவராட்ட கலைஞர் ...நாட்டுப்புறகலை கலைஞர் .
இவரது ஆசான் மறைந்த கலைமாமணி விருது பெற்ற குமார ராமன் ஆவர் ..
தற்பொழுது இவரது வழிகாட்டல் அண்ணனும் கண்ணன் குமார் (தேவராட்ட கலைஞர் )..
இன்றைய இளைய தலைமுறைக்கு மறைந்த வரும் நாட்டுப்புற கலைகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கு வாழ்த்துக்கள் ..
- வடிவம்:இது இசையுடன் கதை சொல்லும் ஒரு கலையாகும்.
- பயன்பாடு:தென்தமிழ்நாட்டில் கிராமிய மற்றும் கோவில் திருவிழாக்களில் முக்கியமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி.
- கதைக்கூறு:கதை சொல்லும் முறையில் நாடகத்தன்மை இருக்கும். கதை தொடங்கும் போது நாட்டுவளத்தைப் பாடி, பிறகு கதை முழுமையையும் சிறப்பாகப் பாடுவார்கள்.
- இசைக்கருவிகள்:பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் மிகவும் வித்தியாசமானவை.
- சிறப்புகள்:கதை சொல்லும் முறையிலும், இசைக்கருவிகளின் பயன்பாட்டிலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
புதன், 24 செப்டம்பர், 2025
ஆள் பாதி ஆடை பாதி
ஆள் பாதி ஆடை பாதி
- தோற்றத்தின் முக்கியத்துவம்:ஒருவரை முதன்முதலில் பார்க்கும் போது, அவருடைய உடல் அல்லது முகத்தை விட, அவர் அணியும் ஆடையே அவரைப் பற்றிய முதல் எண்ணத்தைத் தருகிறது.
- தன்மை வெளிப்பாடு:அணிந்திருக்கும் ஆடை ஒருவரின் குணாதிசயங்கள், நாகரிகம், சமூக நிலை, மற்றும் அவர் சார்ந்திருக்கும் குழு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
- அடையாளம்:ஆடை என்பது ஒரு நபரை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர் எந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் காட்டுகிறது.
- "ஆள் பாதி ஆடை பாதி" என்பது ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தின் மீதுள்ள முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒருவரின் கம்பீரமான அல்லது தன்னம்பிக்கையான தோற்றத்தை உருவாக்க உதவுகிறது.
- இந்த பழமொழி, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள உதவுகிறது
புதன், 17 செப்டம்பர், 2025
"என் அன்பு மகன் ஷியாம் சுதிர் சிவகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று (19.09.2008) உனக்கு 18 வயதாகும் இந்த வேளையில், நான் மனா நிறைவையும் பெருமையாலும் நிறைந்திருக்கிறேன். பிறப்பு, முதல் 10 வயது வரை, ஒரு தந்தையின் வழிகாட்டுதல் மிக முக்கியமானது, ஆனால் இப்போது நீ உன் முயற்சியால் வளர்ந்து, நண்பர்களால் சூழப்பட்டு, வாழ்க்கைப் பயணத்தை அனுபவிக்கிறாய்.
குழந்தைப் பருவ நினைவுகள் எப்போதும் என் இதயத்தில் பூக்கும், நாம் பகிர்ந்து கொள்ளும் அன்புக்கும் பாசத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒரு தந்தையாக, பாசத்துடன் கண்டிப்பை சமநிலைப்படுத்துவது கடினம், ஆனால் நீங்கள் வளர்வதைப் பார்ப்பது ஒவ்வொரு முயற்சிக்கும் மதிப்புள்ளது.
இன்றைய போட்டி நிறைந்த உலகில், அன்பு, உறவுகள் மற்றும் நட்பைப் பிடித்துக் கொள்வது அவசியம். உங்கள் முன்னோக்கிய பயணம் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நேசத்துக்குரிய தருணங்களால் நிறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
18வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்,🥰🍫 ஷியாம்! இந்தப் புதிய அத்தியாயம் ஞானத்தையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் தரட்டும். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட நான் உன்னை நேசிக்கிறேன்."..
என்றும் அன்புடன் சிவக்குமார்









.png)