செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

 

ஒரு சொந்த கார் உங்களுக்கு இருக்க வேண்டும்  என்றால் கீழே இருகிற தகுதிகள் இருக்க வேண்டும் ,

  • ஒரு சின்ன குடும்பம் இருந்தால் உங்கள் மாசம் வருமானம் ₹ 45,000/+ இருக்க வென்றும்,
  • லோன் வாங்கிட்டு கார் வாங்கினால் சொந்தமாக ஒரு நிறுவனம் வைத்து இருக்கவேண்டும் இல்லையென்றால் சுயதொழில் செய்பவராக இருக்கவேண்டும் , சிறு மற்றும் பெரிய நிறுவனத்தில்  பணியாற்ற வேண்டும் , அரசாங்க வேலை இருந்தால் மிக சிறப்பு  
  • உங்க வங்கியில் குறைந்த பட்சம்  ₹ 50,000/+ பணம் எப்போதுமே இருக்க வேண்டும் ,
  • ஒரு புது கார் வீலை ₹ 6 லட்சத்தில்  ஆரம்பமாகும்,
  • ஒரு உபயோகித்த கார் விலை ₹ 2 லட்சத்தில்  ஆரம்பமாகும்,
  • ** வருங்கால சொந்த கார் உரிமையாளர்   கவனிக்க வேண்டியவை ,
  • *ஒரு புது கார் மயிலேஜ் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20, 25 km கொடுக்கும்,
  • **ஒரு உபயோகித்த கார் 1லிட்டர் பெட்ரோலுக்கு 12, 15 kms மயிலேஜ் கொடுக்கும்,
  • **ஒரு புது கார் 3 வருசத்துக்கு எந்த சர்வீஸ் செலவு பண்ண தேவை இல்லை, (20,000kms லிந்து 25,000kms வரை ),
  • **ஒரு உபயோகித்த கார் ஆடுத்த மாசம் சர்வீஸ் செலவு ஆகலாம்,கார் பாகங்களே புதுசா போட வேண்டியது இருக்கலாம்,
  • **சாலேயில் போகும்போது கார் விபத்து ஏற்பட்டால்   பணம் குடுக்க வேண்டியது இருக்கும்,இன்சூரன்ஸ் பணம் வருவதற்கு தாமதாமாகும்,
  • **சாலையில்  போகும்போது திடீரென்று ஆளு,நாய், மாடு கார் முன்னாடி வந்து நிற்கும், அதற்கு அடி பட்டால் ₹ 5000/, ₹ 10,000/+ செலவு ஆகலாம்,எப்போமே உங்கள் கிட்டே பணம் இருக்க வேண்டும் ,
  • கார் வாங்குபவர்கள் பயணம் செய்பவர்கள் குடும்பத்துடன் நினைத்து நேரம் ,எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் .இன்றய காலகட்டத்தில் மிகவும் வேண்டியது .பாதுகாப்பான பயணமும் கூட .வாழ்த்துக்கள்


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இன்றைய பூவலபருத்தி D .சுரேஷ் -S கார்த்திகா அவர்களின் குடும்ப விழா ....





 இன்றைய பூவலபருத்தி D .சுரேஷ் -S கார்த்திகா அவர்களின் குடும்ப விழா ....

இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகளை காலையில் முடித்தவுடன் .அருமை மாப்பிளை செந்தில்ராம் உடன் உடுமலையின் மேற்கே இருக்கும் ஆனைமலை பாதையில் பசுமை நிறைந்த தென் மேற்கு மழை சாரலுடன் சுரேஷ் கார்த்திகா அவர்களின் புதல்வி தீப்ஸிகா பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு பயணமானோம் ..சாலையின் பசுமை நிறைந்த தென்னைகளின் நடுவே தகவல்களை பரிமாறிக்கொண்டே பயணம் செய்தது .விடுமுறை தினம் என்பதால் பாதையில் வால்பாறை செல்லும் இன்றைய தலைமுறை பருவ வயது குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் பரந்த படி பயணம் செய்துகொண்டு இருந்தனர் ...

விழா நடக்கும் கமலம் மஹாலுக்கு சென்றவுடன் எங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ..நம்ம  வங்கி  மாப்பிள ஜெயராம் நான்கு சக்கர வாகனம் நம்மை முதலில் வரவேற்றது ....


முதலில் நம்ம வரவேற்ற சுரேஷ் கார்த்திகா குடும்பம் பெரியவர்களுடன் நம்மை வரவேற்றது மிக்க மகிழ்ச்சி ..ராஜாவூர் மாப்பிள ஈஸ்வரன் மாப்பிளை நீண்ட மாதங்களுக்கு பிறகு சந்தித்ததால் இன்றய வனத்துறை பற்றி சிறு சிறு தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .

வங்கி மாப்பிள ஜெயராம் உள்ளூரில் இருந்தாலும் வேலை பணி காரணமாக நேரில்  சந்திக்கும் வாய்ப்பு குறைவு .நேரில் சந்தித்து இன்றைய வங்கி களில் புது புது திட்டங்களை பற்றி தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .பயனுள்ளதாக இருந்தது .

மின் பொறியாளர் கார்த்திக்குமார் மாப்பிளை அடிக்கடி மூன்று மாவட்டங்களுக்கு அடிக்கடி வேலை பளு காரணமாக பயணம் செய்து கொண்டே இருப்பதால் நேரில் பார்த்து  பேசும் வாய்ப்பு கிடைத்தது .மின் அமைப்பு  பராமரிப்பு பணி மற்றும் புதிய நிறுவனங்கள் மற்றும் வீட்டு பணி களில் இன்று இருக்கும் புதிய மின் மாற்றிகள் பற்றி தகவல்களை கூறினார் ..இதை ஏன் அவரிடம் கேட்டேன் என்றால் அடிக்கடி என் வாடிக்கையாளர்களை பார்த்து பேசும்போது இது போன்ற தகவல் அவர்கள் வீடு கட்டுவதற்கு பயணம்படும் என்பதால் ...

விழா மேடைக்கு செல்வதற்கு செல்லும் வழியில் பொள்ளாச்சி கல்லூரி பேராசிரியர்  தெய்வா பாப்பா சந்தித்தது மிக்க மகிழ்ச்சி பாப்பாவின் வீட்டின் காதணி விழா  நிகழ்வுக்கான அழைப்பை சொல்லிவிட்டார் நேரில் .மகிழ்ச்சி .


விழா மேடைக்கு அருகே செல்லும்பொழுது நம்ம கரப்பாடி சசி வர்மா மாப்பிளையை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி .இன்றைய பொள்ளாச்சியில் நடத்திவரும் ஆப்செட் பிரின்டிங் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை பற்றி .இன்றைய விழாக்களுக்கு அச்சு அடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை ,டிசைன் பற்றி பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம் நன்றிகளும் பாராட்டுகளும் .இதற்கு இடையில் எரிசனம்பட்டி அரசு பேருந்து திருப்பூர் நடத்துனர்  தம்பியை பார்த்து பேசியது பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை அசைபோட்டது மகிழ்ச்சி .

எட்டயபுரம் ஜமீன் உசிலம்பட்டி திருப்பூர் கார்த்திக் ஸ்மார்ட் தம்பியை நீண்ட மாதங்களுக்கு பிறகு சந்தித்து பேசி விழா மேடையில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் ....

பில்லவா நாயக்கன் சாலையூர் தம்பி  சதீஷ்குமார் காட்பாடி அருகே இருக்கும் வேலூரில் இந்திய அளவில் வளர்ச்சி  பெற்ற வட மாநிலபன்னாட்டு  கோழிப்பண்ணை நிறுவனத்தில் பணியாற்றும்  தம்பியை சந்தித்து நிறுவனம் மேற்கொள்ளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கறிக்கோழிகள் பற்றி பல சுவாரிஸ்யமான தகவல்களை பரிமாறினார் ...நன்றிகள் .

இன்று புங்கமுத்தூர் ஊர் நாயக்கர் மல்லிகை மல்லசீலன் மாப்பிளையை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி .இன்றய விவசாயம் பற்றியும் இன்றைய நம் கோவில்களை பற்றியும் பேசிக்கொண்டோம் ..

மத்திய விருந்து அரங்கில் சென்று மதிய உணவு பீன்ஸ் பொரியல் .வெஜிடபிள் பிரியாணி ,பூசணி அல்வா ,புளிக்குழம்பு ,சாம்பார் சாதம் அனைத்து உணவுகளும் அருமையான விடுமுறை விருந்து அருமையான நாவுக்கு இனிமையாக இருந்தது .விருந்தில் கோவை தம்பி வைரம் தயாரிக்கும் எமரால்டு நிறுவனத்தில் பணியாற்றும் தம்பியுடன் நீண்ட நேரம் மதிய உணவு அருந்திக்கொண்டே தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .இன்றைய வைரம் தயாரிக்கும் புது புது டிசைன் ,புதிய தொழில் நுட்பங்கள் பற்றி விவாதிக்கொண்டோம் .தம்பியின் மனைவியும் கோவையில் மருந்து விற்பனை நிறுவனம் நடத்திக்கொண்டுள்ளார் ...மருந்து நிறுவனம்பற்றி .கோவையில் துடியலூர் .கவுண்டம்பாளையம் பகுதிகள் பற்றி பேசியது .நான் கோவையில் பணியாற்றி போது கொங்குநாடு கல்லூரி ,துடியலூர் ஏடு எழுதும் வீடு பற்றி செய்திகளை மலரும் நினைவுகளாக மனதில் நிழலாடியது தம்பியை இன்று சந்தித்தது பயன் உள்ளதாக இருந்தது .

இன்றைய விழாவில் தென்மேற்கு மழை மதியம் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வெளியே பெய்துகொண்டு இருந்தது ..விழா அரங்கில் கம்பளப்பட்டி மைக் செட் தாத்தாவுடன் இன்றைய காலம் மைக் செட் பணி எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று கேட்டவுடன் தாத்தா அவர்கள் கம்பளப்பட்டி பூவலபருத்தி .மஞ்சநாயக்கனுர் ,அர்தநாரிபாளையம் ,தொண்டாமுத்தூர் பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் ,சொந்தங்கள் இன்றளவும் அழைத்துக்கொண்டு உள்ளது என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..

விழா அரங்கில் இருந்த கிளம்பும்போது ஜெயராம் மாப்பிள்ளை  அழைத்தார் இங்க வாங்க உங்களை பார்க்க ஒரு சொந்தம் இருக்கிறார் என்றார் ..நேரில் பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் முகம் மறந்துவிட்டது ..குமணன் வாழ்ந்த பகுதி ரெட்டையம்பாடி புலவர்கள் வாழ்ந்த பகுதி வரலாற்று சிறப்பு பெற்ற பழனி ரெட்டையாம்படி வாடிப்பட்டி பாப்பா தங்கமான முதுகலை கணிதம்  பட்டம் பெற்ற தங்கரத்தினம் பாப்பா வை சந்தித்தது மிக்க மிகிழ்ச்சி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது பாப்பாவை சந்தித்தது ..உடுமலை பெண்கள் கல்லூரி ஜீ வீ ஜீ விசாலாட்சி கல்லூரியில் முதுகலை கணிதம் பட்டம் பெற்று தற்பொழுது நூல் நூற்பாலையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..நீண்ட நேரம் இன்றய நூற்பாலை நிறுவன பணிகள் பற்றி .புதிய ஏற்றுமதி கொள்கை ,புதிய மாற்றங்கள் பற்றி விவாதித்து மிக்க மகிழ்ச்சி ....

இன்றய சுதந்திர தின நாள் மற்றும் சுரேஷ் கார்த்திகா குடும்ப விழா வில் கலந்துகொண்டு சொந்தங்களை சந்தித்தது பயனுள்ள விழாவாக  அமைந்தது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் -9944066681




புதன், 23 ஜூலை, 2025

 நிதி சுதந்திரத்திற்கான உங்கள் பாதை 


நிதி உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டி......

சுதந்திரம் என்ற வார்த்தையின் சாராம்சம் அடிமைத்தனத்தில் இருந்தவர்களால் சிறப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். நமது சுதந்திரப் போராளிகளிடம் கேளுங்கள், நெல்சன் மண்டேலா மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக கட்டுப்படுத்தப்பட்ட அனைவரையும் கேளுங்கள்; சுதந்திரம் விடுதலை அளிப்பது என்று அவர்கள் உறுதியாக மீண்டும் கூறுவார்கள்.

சுதந்திரம் அல்லது சுதந்திரத்தின் உள்ளார்ந்த தரம் அது நச்சுத்தன்மையை நீக்குகிறது - அது மன அழுத்தத்தை நீக்குகிறது. அதேபோல், நிதி சுதந்திரம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் நாம் விரும்புவதைச் செய்ய சுதந்திரமாக இருக்கும் ஒரு நிலை என்று வரையறுக்கலாம்.

நிதி சுதந்திரத்திற்கு என்ன உத்தரவாதம்?

இந்த சுதந்திர நிலையை அடைவது, இறுதி நிதி பேரின்பத்திற்கு இட்டுச் செல்வது என்பது நாம் ஒவ்வொருவரும் போற்றுவது, ஆனால் நாம் அனைவரும் அடைவதில்லை. செலவு செய்வதற்கு முன் சம்பாதிக்கும் இந்த நிரந்தர சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் திறவுகோலைக் கண்டுபிடிப்பது ஒரு முயற்சியாகும். நிறைய பணம் சம்பாதிப்பது அல்லது பணக்காரராக இருப்பது அவசியம்

நிதி சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை இங்கே குறிப்பிடுவது மதிப்புக்குரியது.

எதிர்காலத்திற்கான சரியான தீர்ப்புகள் மற்றும் தேர்வுகளைச் செய்வதற்கு ஒழுக்கம், பொருத்தமான திறன்கள், அறிவு மற்றும் சரியான கருவிகள் அவசியம், மேலும் இது நிதி சுதந்திரத்திற்கான வழியைக் கண்டறிய நம்மை தயார்படுத்துகிறது. தொடக்கத்தில், நமது நிதிப் பழக்கவழக்கங்களில் விவேகத்தையும் ஒழுக்கத்தையும் கொண்டு வர முயற்சிப்பது நிதி சுதந்திரத்தை நோக்கிய முதல் படியாகும். நிதித் திட்டமிடலில் உள்ள நுணுக்கங்களைப் பற்றிய பொதுவான அறிவைப் பெறுவது நிச்சயமாக முக்கியம். பெரிய சிக்கல்களைக் கையாள, தொழில்முறை உதவியை வழங்க நிதி ஆலோசகர்கள் தயாராக உள்ளனர்.

நிதி சுதந்திரத்தை அடைய, சரியான தேர்வுகள் செய்யப்பட வேண்டும். திட்டமிடல் என்பது பண சுதந்திரத்தை அடைவதற்கான ஒட்டுமொத்த நோக்கத்தின் மையமாகும்.

உங்கள் பணத்தைக் கண்காணிக்கவும்

நமது பழக்கவழக்கங்களில் புகுத்தப்பட வேண்டிய மிக அடிப்படையான ஒழுக்கம் இது. சேமிப்பு என்பது நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றல்ல என்றால், ஷாப்பிங் செய்வதும் பணத்தை வீணாக்குவதும் உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்று என்றால், சம்பாதித்த மற்றும் செலவழித்த பணத்தைக் கண்காணிக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். வருவாய், செலவு மற்றும் கடன்களைக் கண்காணிக்க ஒரு பட்ஜெட்டை உருவாக்குவது ஒரு தொடக்கத்திற்கு ஒரு நல்ல யோசனையாகும். செலவுகளை எழுதி வைப்பது, அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற செலவுகளை வேறுபடுத்திப் பார்க்க உதவும்.


நீண்ட காலத் திட்டத்தை உருவாக்குங்கள்

சீக்கிரமாகத் திட்டமிடத் தொடங்குவது மிகவும் முக்கியம். தேவைகளும் முன்னுரிமைகளும் மாறுபடும், ஆனால் ஒரு சரியான நிதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, வாழ்க்கையில் பெரிய செலவுகளைச் சந்திப்பதில், வழிகளைத் தாண்டிச் செல்லாமல் நீண்ட தூரம் செல்லும். ஒரு கார், வீடு வாங்குவது, உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவுதல் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை போதுமான நிதி தேவைப்படும் பொதுவான பகுதிகளாகும். இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் தேதியை பட்டியலிடுவதும், அத்தகைய செலவுகள் காரணமாக ஏற்படும் செலவு அல்லது செலவை மதிப்பிடுவதும், பணவீக்கம் மற்றும் விலை உயர்வு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதும், சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு வரைபடத்தை உருவாக்க உதவும். இது முடிந்ததும், அத்தகைய திட்டங்களை அடைய சரியான நடவடிக்கையைத் தொடங்கலாம்.


கடன்களிலிருந்து விடுதலை பெறுதல்

கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிக்கவும். கடனற்றவராக இருப்பது ஆரோக்கியமான நிதி எதிர்காலத்திற்கான முதல் அளவுகோலாகும். வங்கிகளிடமிருந்தோ அல்லது வேறு இடங்களிலிருந்தோ நீங்கள் ஏதேனும் கடனைப் பெற வேண்டியிருந்தால், அவற்றை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும்; மேலும், அத்தகைய வகை கடன்களுக்கான மிகக் குறைந்த வட்டி விகிதங்களைக் கண்டறிய சந்தையை ஆராய்ந்து, பின்னர் அவற்றைப் பெறுங்கள்.


செலவுகளைக் குறைத்தல்

ஒவ்வொரு மாதமும் தவிர்க்க முடியாத சில செலவுகள் உள்ளன, சிலவற்றை ஒத்திவைக்க முடியும், சிலவற்றை அவசியமற்றவை மற்றும் கட்டுப்படுத்த முடியும். அனைத்து மாதாந்திர மற்றும் வருடாந்திர செலவுகளுக்கும் முன்னுரிமை அளித்து, பின்னர் குறைப்பு செய்யக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முயற்சிக்கவும்.


உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும்


இப்போது சொல்வது எளிது, செய்வது எளிது. வருமானத்தை அதிகரிப்பதன் மூலம், அதிக அளவு உபரியை உருவாக்க முடியும், இது அதிக சேமிப்பிற்கு வழிவகுக்கும் என்பது மிகவும் வெளிப்படையானது. தன்னைத்தானே மறுபரிசீலனை செய்தல் அல்லது பகுதிநேர வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதைத் தேர்ந்தெடுப்பது (முடிந்தால்) அதிக வருவாய்க்கு வழிவகுக்கும்.


உங்கள் காப்பீட்டை மதிப்பாய்வு செய்யவும்

உங்கள் காப்பீட்டுத் தொகை போதுமானதா? எதிர்பாராத ஒரு நிகழ்வு உங்கள் திட்டங்களைத் தொந்தரவு செய்தால், அதை நீங்கள் இன்னும் ஈடுசெய்ய முடியுமா? மரணம், இயலாமை, திருட்டு, இயற்கை பேரழிவுகள் ஆகியவை உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை சாத்தியமில்லாத சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளாகும், அத்தகைய சூழ்நிலைகளில் சரியான காப்பீட்டுத் தொகைகள் நல்ல நிலையில் இருக்கும்.

போதுமான காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய விதி என்னவென்றால், உங்கள் வருமானம் உங்கள் கடனை அடைக்கத் தேவையான தொகையை விட 10 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் வருடத்திற்கு ரூ.10,00,000 சம்பாதித்து, உங்கள் வீட்டுக் கடனில் ரூ.20,00,000 நிலுவையில் இருந்தால், உங்களுக்கு ரூ.1.20 கோடி கால ஆயுள் காப்பீடு தேவைப்படும். உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய உங்கள் காப்பீட்டு ஆலோசகரிடம் பேசுங்கள்.

உங்கள் வரிகளை நிர்வகிக்கவும்


உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்று வரிகள். அவை எல்லா சூழ்நிலைகளிலும் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ கொடுப்பனவுகள். இருப்பினும், சரியான வரி திட்டமிடல் மூலம், சில சந்தர்ப்பங்களில் வரிவிதிப்பு நிகழ்வுகளைக் குறைக்க முடியும். அவற்றிலிருந்து பயனடைய நடைமுறையில் உள்ள வரி விதிகள் மற்றும் சட்டங்களைப் பற்றி அறிந்திருப்பது அவசியம், ஆனால் இதுவும் சாத்தியமாகும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

நிதி ஆலோசகர்...... 

 Congrats Thambi...Thirumalai.....

In the spinning department, a production day involves various processes to convert fibers into yarn. 

Key Processes in Spinning

- Blow Room: Opening, cleaning, and mixing fibers to prepare them for carding.

- Carding: Producing a rope-like strand called a sliver by aligning fibers.

- Draw Frame: Drafting slivers to produce an acceptable sliver for spinning.

- Combing: Removing short fibers and impurities to improve yarn quality.

- Ring Frame: Drafting roving, inserting twist, and winding yarn onto bobbins.


Production Calculations

To calculate production rates, formulas are used, such as ¹ ²:

- Ring Frame Production: (Spindle Speed x No of Spindle x Efficiency x 60 x 8) / (TPI x Yarn Count x 36 x 840)

- Production per Spindle per 8 hours: (Spindle Speed x Efficiency x 0.59 x 60 x 24) / (TPM x Count (Ne) x 1000)


Daily Production Report

A daily production report in spinning typically includes ³:

- Production Quantity: Quantity of yarn produced.

- Efficiency: Machine efficiency and production rate.

- Wastage: Fiber waste percentage.

- Manpower: Number of workers involved.


Example Production Calculation

For a ring frame producing 40 Ne cotton yarn:

- Production per Shift: (16000 x 504 x 0.96 x 60 x 8) / (26.56

.....

செவ்வாய், 24 ஜூன், 2025

பிரியாவிடை......

 அலுவுலக மாறுதல் மனமார்ந்த பிரியாவிடை பெற்ற வங்கி அதிகாரி பிரவீன்குமார் சார் ...

  3 வருட வங்கி பதவிக்காலத்தில் சக அதிகாரிகளிடம்  ஆதரவு, அன்பு மற்றும் பாசத்திற்காக பிரவீன் சார்  தனது நன்றி தெரிவித்து சென்றது மிக்க மகிழ்ச்சி 

குழு மனப்பான்மை யோடு உணர்ச்சி ரீதியான தொடர்பு சக அதிகாரிகளுக்கும் இடையே ஒரு வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பை வெளிப்படுத்தியது , இது பல ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய அவர்கள் உருவாக்கிய பிணைப்பை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

3. *தனிப்பட்ட வளர்ச்சி*: கிளையில் இருந்த காலத்தில் அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டும் தன்னோடு பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ,வங்கியின் முன்னேற்றத்திற்கு   தொழில் ரீதியாக வளர்ந்ததையும் மறவாமல் இன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு உணர்த்தியது .

ஒரு நபரை ஒரு "குடும்பத்தின்" ஒரு பகுதியாக உணர வைப்பதிலும், ஆதரவான சூழலை வழங்குவதிலும் சக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்  பங்கிற்கு நன்றியை வெளிப்படுத்தியது .

பிரவீன் சார்  தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கு  தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டது மிக சிறப்பு .குறிப்பாக வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் குழு மனப்பான்மையுடன் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களின் நன்றி தெரிவித்து அவர்கள் தன் நண்பர்களுக்கு நமது வங்கியில் வீட்டுக்கடனுக்கு தற்பொழுது பரிந்துரைக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி .

பிரவீன் சார் மாற்று கிளைக்கு சென்றாலும் அவரின் தொடர்பு உணர்வை வளர்க்கவும் அவரது சக அதிகாரி நண்பர்களுக்கு  இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும், அவர்கள் பிரிந்த பிறகும் கூட. தொடர்பை வலுப்படுத்தும் .

என்றும் அன்புடன் உடுமலை 

சௌந்தரராஜன் ....

.சிவகுமார்.வி.கே

வீட்டுக் கடன் ....

9944066681..

வெள்ளி, 20 ஜூன், 2025

உடுமலைப்பேட்டை கொங்கல் நகரம் *டாக்டர் பி. முத்துசாமி---*சுயசரிதை

உடுமலைப்பேட்டை கொங்கல் நகரம்  *டாக்டர் பி. முத்துசாமி---*சுயசரிதை


*டாக்டர் பி. முத்துசாமி*


*டீன், இயந்திர அறிவியல்*

*பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்*


டாக்டர் பி. முத்துசாமி ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார், அவர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கையைக் கொண்டுள்ளார். அவர் கூட்டுப் பொருட்களில் முனைவர் பட்டம், பொறியியல் வடிவமைப்பில் முதுகலை பட்டம் மற்றும் இயந்திர பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.


*கல்வி வாழ்க்கை*


டாக்டர் முத்துசாமி கடந்த 13 ஆண்டுகளாக பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திர அறிவியல் டீனாக பணியாற்றி வருகிறார். தனது பதவிக் காலத்தில், அவர் விதிவிலக்கான தலைமைத்துவத்தையும் கல்வி நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். துறையின் பாடத்திட்டம், ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


*தொழில் அனுபவம்*


டாக்டர் முத்துசாமி தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, டிவிஎஸ் ஓசூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு வருடம் பணியாற்றிய மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தையும், சென்னையில் உள்ள மாருதியில் சேவைப் பயிற்சியாளராக மற்றொரு வருடம் பணியாற்றிய மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தையும் பெற்றார். இந்த அனுபவம் அவருக்கு தத்துவார்த்த அறிவுக்கும் நடைமுறை பயன்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவியது, அவரை ஒரு சிறந்த கல்வியாளராக மாற்றியது.


*ஆராய்ச்சி ஆர்வங்கள்*


டாக்டர் முத்துசாமியின் ஆராய்ச்சி ஆர்வங்கள் கூட்டுப் பொருட்கள் துறையில் உள்ளன, மேலும் அவர் தனது ஆராய்ச்சிப் பணியின் மூலம் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். விண்வெளி, வாகனம் மற்றும் உயிரி மருத்துவத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான புதுமையான பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.


*வெளியீடுகள் மற்றும் விருதுகள்*


டாக்டர் முத்துசாமி புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகள் மற்றும் மாநாடுகளில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான பங்களிப்புகளுக்காக அவர் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.


*தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவம்*


ஒரு அனுபவமிக்க கல்வியாளராக, டாக்டர் முத்துசாமி இயந்திர அறிவியல் டீனாக தனது பணிக்கு ஏராளமான அறிவு மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டு வருகிறார். துறையை வடிவமைப்பதிலும், புதுமை மற்றும் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் அவரது தலைமை முக்கிய பங்கு வகித்துள்ளது. அவர் தனது வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக அறியப்படுகிறார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் முழு திறனை அடைய ஊக்குவித்தார்.


*தொழில்முறை இணைப்புகள்*


டாக்டர் முத்துசாமி [தொடர்புடைய நிறுவனங்களை பட்டியலிடுங்கள்] உட்பட பல தொழில்முறை அமைப்புகளில் தீவிர உறுப்பினராக உள்ளார். அவர் பல சர்வதேச பத்திரிகைகள் மற்றும் மாநாடுகளுக்கு மதிப்பாய்வாளராகவும் பணியாற்றுகிறார்.


இந்த விரிவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு டாக்டர் பி. முத்துசாமியின் அவர்களின்  சாதனைகள் மற்றும் நிபுணத்துவம் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் என்று நம்புகிறேன்! நம் சமூகத்திற்கு இவரை போன்று கல்வியாளர் இருப்பது பெருமை ..வாழ்த்துக்கள் என் அன்பு மாப்பிள்ளை Dr முத்துசாமி அவர்களுக்கு ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -99944066681..



வெள்ளி, 13 ஜூன், 2025

பன்னாட்டு வங்கி யில் புது பொறுப்பு .கிளை மேலாளர் ....

 என் அன்பு ஜெயராமன் தங்கவேல் (அழைப்பு எண் -9715437619)

மாப்பிளைக்கு வாழ்த்துக்கள் ...

கடந்த 12 வருடங்களாக தன் உழைப்புக்கு கிடைத்த பரிசு .






பதவி உயர்வு உடனே வந்துவிடாது ...பொறுமை ,சகிப்புத்தன்மை .அதனுடன் உயர்ந்த எண்ணங்கள் களுடன் கூடவே வருவது ...

மேலாளருக்குகான கடமைகள் ..

ஆலமரமும் அதன் கிளைகளும் .....

ஒரு மேலாளரின் கடமைகள் என்பது இலக்குகளை அமைத்தல், முன் திட்டமிடல், முடிவெடுத்தல், செயல்திறன் மேலாண்மை, மற்றும் ஒரு நேர்மறையான குழு சூழலை உருவாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியது. 

ஒரு மேலாளரின் கடமைகள் 

·         இலக்குகளை அமைத்தல்:

நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலக்குகளை மனதில் கொண்டு, குழுவிற்கான தெளிவான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை அமைக்க வேண்டும். தன் கிளையின் கீழ் சுற்றி விழுது கிளைகளை  பரப்பவேண்டும் அதன் மூலம் தான் தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும் அது தான் உண்மையான வளர்ச்சி காண முடியும் .

·         முன்  திட்டமிடல்:

நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து, செயல்முறைகளை உருவாக்க வேண்டும். 

·         முடிவெடுத்தல்:

சரியான நேரத்தில், தகவல்களின் அடிப்படையில், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். 

·         செயல்திறன் மேலாண்மை:

குழு உறுப்பினர்களின் செயல்திறனை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஆதரவையும் பயிற்சியையும் வழங்க வேண்டும். 

·         நேர்மறையான குழு சூழல்:

குழு பணியாளர்களிடம்  ஒத்துழைப்பையும், நம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். 

·         பணியாளர் பயிற்சி:

புதிய பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மேலாளர்கள் பொறுப்பேற்கிறார்கள். 

·         நிர்வாகம்:

தினசரி செயல்பாடுகளை மேற்பார்வையிடுவது, குழுக்களுக்கு பொறுப்புகளை வழங்குவது, வணிக இலக்குகளை அடைய குழுக்களை வழிநடத்துவது ஆகியவை இதில் அடங்கும். 

·         நிதி மேலாண்மை:

செலவுகளைக் கண்காணிப்பது, வரவுசெலவுத் திட்டங்களை உருவாக்குவது, நிதி அறிக்கைகளை பகுப்பாய்வு செய்வது போன்றவை இதில் அடங்கும். 

இவை தவிர, வாடிக்கையாளர் சேவை, தரவு பகுப்பாய்வு, தகவல் தொடர்பு திறன் போன்ற பல திறன்கள் மேலாளர்களுக்கு அவசியம் இது வீட்டிற்கு மட்டும் கிடையாது வாழ்க்கைக்கும் கூட .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

நிதி ஆலோசகர் .9944066681...

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs)





செவ்வாய், 3 ஜூன், 2025

ஜோதிடம் ....

 ஜோதிடம் ....

எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள விரும்புவது மனித இயல்பு.

சரி. உங்கள் எதிர் காலம் பற்றி அல்லது உங்கள் இறப்பு பற்றி தெரிந்து கொண்டால் என்ன ஆகும்.

நல்லதாக இருக்கும் பட்சத்தில் மனம் கும்மாளம் இடும்.

அவ்வாறின்றி உங்கள் வாழ்க்கை மோசமாக இருக்கும் இதில் கண்டம் இப்படி இந்த வயதில் இந்த மாதிரி இறப்பீர்கள் என்று தெரிந்தால் வாழ்க்கை முழுவதும் நரகம்.

இது இரண்டிலும் பாதிப்பு உண்டு. தனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மமதை ஒருவன் மனதில் தோன்றினால் அவன் யாரையும் மதிக்க மாட்டான்.விநாசகாலே விபரீத புத்தி. இந்த எண்ணமே அவனது வாழ்க்கையை அழித்துவிடும்.

அதேபோல் தனது வாழ்க்கையை நன்றாக இருக்காது தன் மரணம் இப்படித்தான் இருக்கும் எனாறு மனிதனுக்கு தெரியவந்தால்…

எப்படியும் நமது வாழ்க்கை இப்படித்தான் நமது முடிவும் இப்படித்தான் இருக்கும் இனி நாம் இறப்பிற்குள தனது சந்ததிகள் நன்றாக இருக்க அவன் எத்தகைய செயலையும் செய்வார்கள்.

முற்காலத்தில் அரசர்கள் தங்களது இராஜ்யத்தை நடத்த மந்திரிகள் மற்றும் ஆலோசனை கூற ராஜகுரு இருப்பார்கள். இவர்கள் ஆருடம் மூலம் இது இப்படி இருக்கும் ‌இப்படி செய்யவேண்டும் என்று கூறுவது வழக்கம். அந்த இராஜகுருவின் கல்வி அறிவு என்ன? அவர் யாரிடம் இதைக் கற்றார் என்று யாரும் கேட்பதில்லை. அரசனே அவர்களை நம்பும் போது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று காலம் காலமாய் யுகம் யுகமாய் இந்த ஆரூடம் , ஜாதகம் இவைகள் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நம்பிக்கை அவர்கள் இரத்தத்தில் ஊறியது. இந்த நம்பிக்கையை மீறி முடிவெடுக்க அஞ்சினர். ஜாதகம் பார்க்காமல் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடத்தி பால் அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படின் தான் ஜாதகம் பார்க்காமல் வந்ததன் காரணமாக இது நிகழ்ந்தது என்று நம்பத்தொடங்கி அதை தன் சந்ததிகளும் அறிய செய்தனர்.

ஆதிகாலத்தில் சூரியன், சந்திரன் இவைகளைப் பற்றிய புரிதல் இல்லை. ஏன் அமாவாசை மற்றும் பௌர்ணமி நிகழ்கிறது கிரணங்கள் தோன்றும் போது தீடீரென சூரியன் மறைவது அல்லது சந்திரன் மறைவது அவர்கள் மனதில் இனம் புரியாத பயத்தை தோற்றுவித்து இருக்கலாம். அதனால் அதற்கு அஞ்சி வாழ்ந்தனர். ஏதோ நடக்கிறது அதன் ‌காரணம் என்ன வாக் இருக்கும் என்று புரியாமல் வாழ்ந்து வந்தனர்

மெல்ல மெல்ல வளர்ந்த கல்வி அறிவு அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை ஊக்குவித்து பூமி சந்திரன் மற்றும் இதர கோள்கள் அவற்றின் இயக்கம் ஆகியவற்றை கண்டறிந்து இதனா காரணமாக இது நிகழ்ந்தது என்று கூறி மக்கள் மனதில் இருந்த அச்சத்தை போக்கினர்.....

நன்றி ..

அமுதன் .த 


தொடர்பு எண் : 9626585316....