செவ்வாய், 12 நவம்பர், 2024

 மனசுவிட்டுப் பாராட்டுங்க!

❤
ஆன்ட்ராய்டு செல்பேசியில் விதவிதமான ரீல்ஸ்கள் வருகின்றன. மகள்கள் பாடல் நிகழ்ச்சியில் அருமையாகப் பாடி அசத்துகிறார்கள். அரங்கமே எழுந்து கை தட்டுகிறது! பெற்றோர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள். கண்ணீர் மல்க மகள்களை அரவணைக்கிறார்கள். இன்னொரு ரீல்ஸில், நீயா நானா பேச்சில், எங்களை அப்பாக்கள் தொடக்கூட செய்வதில்லை... அப்பாவின் தொடுகைக்காக... தலைகோதலுக்காக... அரவணைப்புக்காகத் தவிக்கிறோம் என்கிறார்கள் மகள்கள்! என்னவொரு விந்தை!

நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள் தான்... அதுமட்டுமல்ல, உணர்வுள்ள மனிதர்கள்! பாசம், பரிவு, காதல் போன்ற உணர்வுகள் தான் நம்மை ஒருங்கிணைக்கின்றன. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தான் சமூகத்தின் பார்வை, தோல்விகள், தேடல்கள், இயந்திரத்தன வாழ்க்கை எனப் பல்வேறு காரணிகள் குறுக்கே நிற்கின்றன. இவற்றைத் தாண்டி நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அங்கே ஓர் பிணைப்பு உருவாகிறது. நாம் நம் குழந்தைகளுக்காகவோ... குழந்தைகள் தங்கள் பெற்றோருக்காகவோ எவ்வளவோ செய்தாலும், பொதுப்பார்வையில் அவை அனைவரும் செய்யக்கூடியது தானே என்பதாக இருந்தாலும், அதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையை உணர்ந்து பாராட்டும்போது... தட்டிக்கொடுக்கும்போது அங்கே ஓர் முழுமை, நிறைவு கிடைக்கிறதல்லவா? அது தான்... அதுக்காகத்தான் இந்த ஓட்டமெல்லாம்! ❤

கடந்த நான்கைந்து மாதங்களாக மகளின் கல்விக்கடனுக்காகத் தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தேன். இன்றுதான் அதன் நிறைவுப்பகுதியை எட்டினேன். இதேபோன்ற அலைச்சலை பத்தாண்டுகளுக்கு முன் வீட்டுக்கடனுக்காக அலைந்தபோது அனுபவித்திருக்கிறேன். இப்போது மீண்டும் அதேபோன்ற அனுபவம். எனது அக்கவுண்ட் உள்ள செங்குன்றம் வங்கிக்கிளையில், கல்விக்கடன் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் வங்கி அலுவலரை சந்திப்பதற்காகவே மூன்று முறைக்கு மேல் அலுவலகத்துக்கு பெர்மிஷன் போட்டு வங்கிக்கு சென்றுவர வேண்டிய நிலை. அதன்பின் மகளோடு இணைந்து வங்கிக்கு சென்று வங்கிக்கடன் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடிப்பதற்குள் வங்கியில் ஆடிட்டிங் வந்து, வங்கி மேலாளர் மாற்றப்பட்டு, தற்காலிக மேலாளர், அடுத்த மேலாளர் என்று மூன்று மேலாளர்களைப் பார்த்தாச்சு! அதன்பின் வங்கிக்கடன்களை ப்ராசஸிங் செய்யக்கூடிய மைய வங்கிக்கு சென்று, ஒருவழியாக அதற்கான அனைத்து வேலைகளையும் முடிச்சாச்சு!

இதற்காக இன்றைய தினம் மகளை அழைத்துக்கொண்டு, உடன்வந்த கனமழையையும் அழைத்துக்கொண்டு டூவீலரில் நீண்ட தூரம் பயணித்து, ஐய்யப்பன்தாங்கலிலுள்ள மைய வங்கியில், உரிய அலுவலர் வருவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, அதன்பின், வடிவேலு சொல்வதுபோல் மடுவுக்கு ஒரு கையெழுத்து என்பதாக பக்கம் பக்கமாக கையெழுத்துகளைப் போட்டு முடித்து, ஒருவழியாக வங்கிக்கடனுக்கு ஓகே வாங்கியாச்சு! இந்த கல்விக்கடனுக்காக அலைந்த ஒவ்வொரு நாளிலும், அலுவலகத்தில் பெர்மிஷன், மகளின் கல்லூரியில் விடுப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துச் செல்வதும்... இடையே செல்பேசியில் கல்விக்கடன் ப்ராசஸ் குறித்து வங்கி அலுவலரிடம் செல்பேசியில் விசாரிக்கும்போது, ஒருவித ஒவ்வாமையோடு அவர்கள் தரப்பில் அரையுங்குறையுமாகப் பதில் வருவதும்... அதையும் பொறுத்துக்கொள்ளும் தருணங்களிலெல்லாம்... எப்படி இப்படி நான் மாறிப்போனேன் என்று என்னையே நான் ஆச்சர்யமாகக் கேட்டுக்கொள்வேன்!

தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக... முன்னேற்றத்துக்காக... அவரவர் வருமானத்துக்கேற்ப... வாழ்க்கைச்சூழலுக்கேற்ப... ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொருவகையில் மெனக்கெடுகிறார்கள்... தங்கள் சக்திக்குட்பட்டோ, மீறியோ தங்கள் பிள்ளைகளுக்காக முடிந்ததை செய்துகொடுக்கிறார்கள். இது தானே பெற்றவர்களின் கடமை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம் தான். கடமையை கடமையே என்று செய்வது வேறு, உளப்பூர்வமாக மெனக்கெடுவதென்பது வேறு... ஒவ்வொரு முறையும் பிள்ளைகளுக்காக ஒன்றை செய்யும்போது, அது, பிள்ளைகளுக்கு பிடித்த சமையலாகவும் இருக்கலாம்... பிள்ளைகளுக்கு பிடித்ததாக எடுக்கும் உடுப்பாகவும் இருக்கலாம்... அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை நிறைவேற்றுவதாக இருக்கலாம்... அதை பிள்ளைகளுக்காக செய்து தரும்போது பெற்றோரின் மனதுக்குள் ஓர் நெகிழ்ச்சி ஏற்படும்... அதை வெறும் கடமை என்று சொல்லிவிட முடியாது! அதற்கும் மேலான உணர்வு! அப்போது பிள்ளைகளோ, மற்றவர்களோ பாராட்டுகிறார்களோ இல்லையோ, மனசாட்சி பாராட்டும்! அது ஓர் நெகிழ்வான அனுபவம்! ❤

அதேபோல் பிள்ளைகள் தரப்பிலும், படிப்பு, விளையாட்டு, வீட்டுப்பணிகள், சமூகப்பணிகளென ஒவ்வொன்றிலும் ஏதேனுமொன்றை அருமையாக, மெனக்கெடலோடு செய்துமுடிக்கும்போது அவர்களுக்குத் தேவை ஓர் பாராட்டு! சின்னதாக தலைகோதல்! அரவணைப்பு! இங்கே அனைவருமே பெரிதாக சாதித்துவிட முடியாது... அது பெற்றோரானாலும், பிள்ளைகளானாலும்... ஆனபோதும், ஒருவருக்கொருவர் பாசப்பிணைப்போடு, அன்போடு செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் பாராட்டும்போது, அத்தனை மன வலியும், உடல் வலியும் பறந்துபோகும்... மறந்துபோகும்! ❤

இதைத்தான் குறுந்தொகை பாடலொன்றில், கூடலூர் கிழார்,
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே" எனக் குறிப்பிடுகிறார்.

இதன் அர்த்தத்தை சுருக்கமாகச் சொல்வதானால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த தலைவி, தனிக்குடித்தன வாழ்க்கையில், மிகவும் சிரமப்பட்டு கணவனுக்காக மோர்க்குழம்பு செய்து உணவு படைக்க, அதை உண்ட கணவன், "நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது" என்று பாராட்டவும், சமையலுக்காக அவள் பட்ட சிரமத்தையெல்லாம் மறந்து, முகம் மலர்வாள் என்கிறார். (அது சங்க காலச்சூழல்... இன்றைய காலத்தில் சமையலில் கணவனும் பங்கெடுப்பதே சுவை) இம்புட்டு தாங்க வாழ்க்கை! ❤

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

திங்கள், 4 நவம்பர், 2024

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...








 குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...

வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
சனீஸ்வர பகவான்
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.
ஆடித்திருவிழா..
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும். சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், சோனைக் கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு சிறப்புப் பூசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
வழிபாடுகளும் சிறப்புகளும்..
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்
பயண வசதி
தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும். குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆன்மீக பயணங்கள் மனதிற்கு இனிமையானவை ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி, தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....

 


மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி,

தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....
மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.பகைவர்கள் வெல்லும் சக்தியை இத்தலத்து அம்பாள் தருகிறாள்.தவிர திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம்.புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் இங்கு உண்டு.
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்கு காரணம். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.
இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது, என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.
அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கற்பகிரக கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது.
திருவிழா காலத்தில் சேரும் இந்த 50 பானை நெய் வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.
தல விருட்சம் : மூங்கில் மரம்
தீர்த்தம் : மஞ்சள் ஆறு
Location: தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.
மஞ்சளாறு அல்லது வத்தலகுண்டு ஆறு என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும் வைகையின் ஒரு துணையாறு ஆகும். பழனி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது.
மொத்தம் 470 ச. கி.இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும் கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும்.
வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும்.
இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள்.
முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
இனிமையான பயணம் ..நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🥰🙏🙏📗🖋️🖋️📡🎙️💦🌧️🌴💦🌾🏡🚗🚗🚗

திருப்பூர் மாவட்டம் இராஜகம்பள சமூகத்தை சார்ந்த வேடப்பட்டி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அரண்மனையப்பன், மாலையம்மன் கோவிலில் நடுகல் வடிவில் வீற்றிருக்கும் ஜமீன் வமிசத்து முன்னோர்களுக்கு குல வழக்கப்படி பூஜைகள் நடைப்பெற்றது.

 புறநானூறு :

"இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்"
- புறநானூறு 329, 1-4"
பொருள் :
வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள். அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.
என்று புறநானூற்று பாடல் நமக்கு தொன்மை வாய்ந்த நடுகல் வழிபாட்டின் முறையை கூறுகின்றது. சங்க காலம் தொட்டே நடுகல் வழிபாடு நம் தென்னாட்டவர்கள் மரபில் வேரூன்றி இருந்துவரும் வீரத்தை பறைச்சாற்றும் பண்பாட்டு மரபாகும்.
மேலும், நடுகற்கள் பொதுவாகவே வீரர்களுக்கு நடப்படும் கல்லாகும், போர்களில் வீரமரணமடைந்தவருக்கும், தம் குடியிருப்பு மக்களை தாக்கவரும் கொடிய விலங்குகளிடமிருந்து காத்த தீரர்களுக்கும், நிரை மீட்கும் போராளிகளுக்கும், ஏன் உடன்கட்டை ஏறி வீரகுல கற்புக்கரசிகளுக்கும் கூட நடுகற்கள் நடப்படுவது பண்டை தொட்டுவந்த பாரம்பரியபாகும்.
அவ்வகையில்




திருப்பூர் மாவட்டம் இராஜகம்பள சமூகத்தை சார்ந்த வேடப்பட்டி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அரண்மனையப்பன், மாலையம்மன் கோவிலில் நடுகல் வடிவில் வீற்றிருக்கும் ஜமீன் வமிசத்து முன்னோர்களுக்கு குல வழக்கப்படி பூஜைகள் நடைப்பெற்றது.
யார் இந்த அரண்மனையப்பன்?
யார் இந்த மாலையம்மன் என்கிற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம்?
அரண்மனையப்பன் என்பது ஒரு குறிப்பிட்ட தனியொரு தெய்வம் அன்று அது வேடப்பட்டி ஜமீனின் ஒட்டுமொத்த ஆண் வழி முன்னோர்களையும் குறிப்பதாகும்.
அதே போல மாலையம்மன் என்பதும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தில் அடங்காது ஒட்டு மொத்த ஜமீன் பரம்பரையின் பெண்கள் வழி முன்னோர்களை குறிப்பதாகும்.
இது வேடப்பட்டி ஜமீனில் பல தலைமுறைகளாக, நாங்கள் கேள்விப்பட்டவரை 700 வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழக மண்ணில் வேடப்பட்டி அரண்மனையார்களால் நடத்தப்படும் அவர்தம் வம்ச வழிப்பாடாகும்.
இவ்வழிப்பாட்டின் நிகழ்வுகளாக
முதலில் வேடப்பட்டி பாளையத்தின் முழுமுதற் முன்னோன் போடிதலை கும்மநாயக்கருக்கு முதல் பூஜை செய்துயப்படுகிறது.
பிறகு அரண்மனை காவல் தெய்வம் சப்பாணி கருப்புக்கு பூஜை செய்து முடித்த பிறகு, பாரம்பரிய அரண்மனை உறுமிக்காரர்களின் உறுமி இசைப்புடன் முன்னோர் நடுகற்களுக்கு கிடா வெட்டுடன் வழிப்பாடு நடக்கிறது.
அவ்வகையில் இன்று வேடப்பட்டி அரண்மனையார் மாலைக்கோவிலில் எனது அம்மாவின் அம்மா எனது பாட்டியார் வேடப்பட்டி ஜமீன் திரு. துரைசாமி நாயக்கரவர்களின் ராணியார் வெங்கிட்டம்மாள் அவர்களுக்கு வழிபாடு நடந்தது 🙏 💐...
தலைமுறைகள் கடந்தும் தொடரும் ஒரு போர்க்குடி மரபின் வம்ச பாரம்பரியம் இது ❤️❤️❤️

ஞாயிறு, 3 நவம்பர், 2024

நேற்று உடுமலை தமிழ் பேராசிரியர் வீரையன் அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தபோது அவரது புதல்வர் ஆதவன் வீரையன் படிக்கும் ஆஸ்ட்ரோ நெட் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் அவரின் கனவை நிறைவேற்ற இந்த பல்கலைக்ககத்தில் சேர்த்து உள்ளார் ..


நேற்று உடுமலை தமிழ் பேராசிரியர் வீரையன் அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தபோது அவரது புதல்வர் ஆதவன் வீரையன் படிக்கும் ஆஸ்ட்ரோ நெட் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் அவரின் கனவை நிறைவேற்ற இந்த பல்கலைக்ககத்தில் சேர்த்து உள்ளார் ..



The Indian Institute of Science Education and Research Thiruvananthapuram (IISER TVM) is an autonomous institution under the Ministry of Education, Government of India. It is dedicated to scientific research and science education of international standards.

பணி:


- இளங்கலை மட்டத்தில் ஆராய்ச்சியுடன் கற்பித்தலை ஒருங்கிணைத்தல்

- அனைத்து துறைகளிலும் விசாரிக்கும் உணர்வை வளர்ப்பது


நிகழ்ச்சிகள்:


- 5 ஆண்டு BS-MS திட்டம்

- ஒருங்கிணைந்த PhD (iPhD)

- PhD திட்டங்கள்:

 - உயிரியல்

 - வேதியியல்

 - கணிதம்

 - இயற்பியல்

 - பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்

 - தரவு அறிவியல்

 - இடைநிலைப் பகுதிகள்


வளாகம்:


- திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள விதுராவில் அமைந்துள்ளது

- பசுமை மற்றும் மலை பின்னணியுடன் சுற்றுச்சூழல் நட்பு வளாகம்

- அனைத்து மாணவர்களுக்கும் விடுதி விடுதி

- மாணவர் குழுவின் மேற்பார்வையில் பல சமையல் குழப்பம்


ஆராய்ச்சி மற்றும் வசதிகள்:


- எல்லைப்புற ஆராய்ச்சி பகுதிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

- மெய்நிகர் வகுப்பறைகள்

- புத்தகங்கள் மற்றும் மின் வளங்களின் விரிவான சேகரிப்பு கொண்ட நூலகம்

- நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்கள்

- லினக்ஸ் கிளஸ்டருடன் கூடிய கணினி மையம்

- 2 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு


மாணவர் வாழ்க்கை:


- கலாச்சார விழா "இஷ்யா"

- மாணவர் நடத்தும் இதழ் "சோபானம்"

- கலாச்சார மற்றும் அறிவியல் கிளப்புகள்

- திரைப்பட காட்சிகள்

- விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டிகள்

- அவுட்ரீச் திட்டங்கள்


இலக்குகள்:


- இளம் விஞ்ஞானிகளின் முழுமையான வளர்ச்சி

- அறிவியல் விசாரணை மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்


IISER TVM கல்வி , ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சாராத செயல்பாடுகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது, இது அறிவியல் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக அமைகிறது.📗✒️🎙️📡🤝🥰

சனி, 2 நவம்பர், 2024

தீபாவளியும்...நானும்.....

 தீபாவளியும்...நானும்.....

சின்ன வயசுல அப்பா புதுவருட  காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது?

எத்தினி நாள் லீவு வருதுனுதான்...??? 

அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்,,,,

தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்,,என்னா வெடிவாங்கணும்னுதிட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு 5,6 வயசு சின்ன புள்ளயா மாறிடும்,💞,,,,

அதுலையும் நாட்டு வெடி,வெங்காய வெடி,ராக்கெட் ,மாப்பிளை வெடி  & அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு  பாப்போம்😛..

வித விதமா துணி எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை  காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...

என்னதான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி கோயமுத்தூர் புரூக் பீல்டு யும்  பன் மார்ட்லையும், உடுமலைப்பேட்டை,பிங்கி ,குறிஞ்சி , ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும்,,,

அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கிரி கிளாத் ஸ்டார் ,விஜயதீப் , போய் எடுத்து குடுத்த 50,100  ரூபாய் துணியெடுத்த  மதிப்பு எல்லாம் சொல்லவே முடியலே,,,,அதையும் வாங்கிக்கொண்டு வந்து தளி ரோட்டில இருக்கும் மாடர்ன் டைலர்ஸ் கடையில் கொடுத்துட்டு ..தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடி  பள்ளி செல்லும் போது ..அண்ணா எங்க டிரஸ் தைச்சுட்டீங்களா னு கேட்ட ஞாபகம் இன்னும் மனதில் ஓடுகிறது ...

அதே மாதிரி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...

 வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு,,,

குட்டித் தூக்கம் போட்டுட்டு விடியற் காலையிலேயே எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...

நமக்கு கிடைத்த பங்கு பட்டாசை பத்திரமாக எடுத்து வந்து ஒவ்வான்றாக,பெரிய வீரனைப் போல் நீளமான ஊதுபத்தியால் பற்ற வைத்து வெடிக்கும் போது அப்பப்பா,,,

அப்படியே ..புது துணிய போட்டுட்டு ..சர்ச்சு பக்கத்துல இருக்கிற மாலையம்மன் கோவிலுக்கு போயி ..பிள்ளையாரையும் அரச மரத்தியும் சுற்றி  வணங்கி ..வீட்டுக்கு பசியோடு வந்து இட்லியும் ..தோசையும் .. காலையில சுடச் சுட,,சாப்பிட்ட சொந்தம் அப்பப்பா ..தற்காலத்துக்கு வருமா  அந்த மகிழ்ச்சி .

பட்டாசு களோபரம் முடிந்த பிறகு 8 மணிக்கு மதியம் சாப்பாடு...அம்மா,அப்பா கிட்டயும்  எல்லோரையும் அதட்டி உருட்ட.,,,

பிறகு உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு ஊர்வலம்.. புது சட்டையை காண்பிக்க, அப்படியே அவர்கள் வீட்டு தீபாவளி பலகாரங்களை  ருசி பார்க்க....

அதெல்லாம் உலக நாயகன் சொல்லுறபடி ஆராயக்கூடாது அனுபவிக்கணும்,,,

இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...

இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க... 

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் (உடுமலை ),பொள்ளாச்சி மாரியம்மா ஸ்வீட்ஸ் ,உடுமலை ஏவிஎம் ஸ்வீட்ஸ்  அரைகிலோ  வாங்கிட்டு.. அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு,,, கடமைக்கு தீபாவளி கொண்டாடிகிட்டு,,,,

சிலர் தீபாவளி அன்னிக்கு வீட்டை பூட்டிக்கிட்டு வெளியூர் கிளம்பி ஊர் சுற்ற கிளம்பறாங்க ...

ஒண்ணு மட்டும் நிச்சயம்  பணம், சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு, ஒரு மாயவலையை உருவாக்கிவாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்... 

எல்லாமே மெஷின் மாதிரி ஒரு இயந்திர வாழ்க்கை,,,🥰🙏📡🎙️