வெள்ளி, 30 ஜனவரி, 2026

ராஜபாளையம் நாய் குட்டியின் வரலாறு ❤️🥰📚🖋️📡🎙️

 ராஜபாளையம் நாய் குட்டியின் வரலாறு ❤️🥰📚🖋️📡🎙️

உலகில் உள்ள நாய் இனங்களில் 350 இனங்கள் மட்டுமே அதில் இந்தியாவை சேர்ந்தவை 7 . அதிலும் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை என இந்த நான்கு நாய்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவை. ராஜபாளையம் நாய்கள் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பரவலாக காணப்படுகின்றன.பாளையக்காரர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டவை.


விஜயநகர பேரரசு காலத்தில் பாளையக்காரர்கள் இங்கு குடியேறிய போது இந்த நாய்களும் இங்கே வந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த இனத்தின் எண்ணிக்கை சுருங்கி விட இன்று ராஜபாளையம் பகுதியில் மட்டும் காணப்படுவதால் ராஜபாளையம் நாய்கள் என அழைக்கப்படுகிறது.

ராஜபாளையத்தில் காணப்படுவதால் இதனை இன்று ராஜபாளையம் நாய் என அழைக்கிறோம் ஆனால் இவை ஆந்திர கர்நாடக பகுதிளை சேர்ந்தவை. இதனை ஆங்கிலத்தில்பொலிகார் ஹவுண்ட் என்பர் பொலிகார் என்றால் பாளையக்காரர்கள் அல்லது படைவீரர் என்று பொருள்.


 சிறப்புகள்:உலகில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஒரே நிறத்தில் குட்டிகளை ஈனும் சிறப்பு கொண்டது. அந்த வகையில் ராஜபாளையம் நாய்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வெள்ளை நிறத்தில் தான் காணப்படும். இளஞ்சிவப்பு நிற மூக்கு, மடிந்த காதுகள், வெள்ளை நிறம் இவை தான் இராஜபாளையம் நாய்களின் அடையாளம்.


 மேலும் இராஜபாளையம் நாய்களின் முக்கியத்துவம் கருதியே இந்திய அரசாங்கம் கடந்த 2005ம் ஆண்டு இராஜபாளையம் நாய்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம் செய்தது.

தற்போது கோம்பை ரக நாய்கள் ராணுவத்தில் சேர்த்து பயிற்சியளித்து பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

--

Sivakumar.V.K


Home Loan Consultant📚🖋️📡🎙️🌈🏠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக