சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-
திங்கள், 19 மே, 2025
சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-
வெள்ளி, 16 மே, 2025
உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன் ( போட்டோ டிஜிட்டல் ராஜேந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..
உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன் ( போட்டோ டிஜிட்டல் ராஜேந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..
ந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..
5 -வகுப்பு குழந்தை செல்வம் சுவேதா விஞ்ஞானியிடம் கேட்ட கேள்வி ...
முன்னேறிய நாடுகளில் இந்திய உலக அளவில் 6 வது இடத்தில் இருக்கிறது என்று பேசினீர்கள் ..நமது நாட்டில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்களே என்று கேட்டார் ..
-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பதில் ...
ஏழைகள் இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா வாசிங்டன் லும் இருக்கிறார்கள் ..வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறார்கள் ..அங்கு ஏழைகள் இருப்பது தெரியாது ..நமது நாட்டில் வெளிப்படையாக தெரிகிறது பதில் அளித்தார்
கேள்வி 2...
5 -வகுப்பு குழந்தை செல்வம் சுவேதா ..நமது நாட்டில் பிளாஸ்டிக் கலாச்சாரத்தை எப்படி மட்டுப்படுத்தவது ..அதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா ?
-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பதில் ...
அறிவியல் திட்டங்கள் இருக்கிறது ..இங்கே என் மேடை முன்னே வாட்டர் பாட்டில் இருக்கிறது ..தவறுதான் ..நம் வசிக்கும் இடங்கள் ..பள்ளி ..கல்லூரி ..ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தவேண்டும் ..உங்களை போன்ற கேள்விகள் ...நடைமுறை படத்த ஆவணசெய்வோம் என்றார் ..கேள்வி கேட்ட சுவேதா என் பாராட்டுக்கள் என்றார் ..
அறிவியலிலும் ..சுற்றுப்புற சூழலிலும் நல்வழி காட்டும் வென்சபட்டி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு நன்றிகள் ..உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்திற்கும் நன்றிகள் ..
குறிப்பு : கம்பள விருட்சம் அறக்கட்டளை என்ன செய்கிறது என்று கேள்வி கேட்ட மேன்மக்களுக்கு ...கம்பள சமுதாயம் தாண்டி பொருளாதாரத்திலும் ..கல்வியிலும் ..பொது தளத்தில் பயணிக்கிறது தற்பொழுது ...நம் கோவை திருப்பூர் மாவட்ட கம்பள சமுதாய மக்களை இப்படி பயணிக்க வைக்கிறது ...இந்த அறிவியல் நிகழ்வில் நம் சொந்தம் என்று தெரியாது ..இதை செய்தியாக பதிவிட்ட பின் தான் தம்பி ராஜேந்திரன் இந்த பாப்பா யாருனு தெரியுமா அண்ணா என்றார் .தெரியாது இந்த பாப்பா தான் நிகழ்ச்சிக்கு வந்ததில் மிக தைரியமாக தனது கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றார் .அப்படி என்றேன் ..இந்த பாப்பா தான் என் பொண்ணு நா என்றார் ..
குஜ்ஜ பொம்மு ராக்ஸ் சுவேதா ராஜேந்திரன் ................
செவ்வாய், 13 மே, 2025
செல்வசென்ராயப்பெருமாள் கோயில் சின்ன நெகமத்தில்
செல்வசென்ராயப்பெருமாள் கோயில்
சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.
கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்
1 கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம்” எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
கல்வெட்டு
கல்வெட்டு-மூன்று பகுதிகளாக
2 நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
3 முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர் (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
4 வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.
5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்
1. பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
2 அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்
3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்
ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.
6 கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
· கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
· இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
· கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் ”பிளாக் பர்ன்” (Black Burn) மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
· சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 📚📚📚✍️✍️✍️✍️
ஞாயிறு, 11 மே, 2025
பெரியகோட்டை ஆவுல்குட்டை தம்பி ஜோதிமுத்து காளான் வளர்ப்பில்
நேற்று உழவர் சந்தைக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம் நேற்று உடுமலை பெரியகோட்டை ஆவுல்குட்டை தம்பி ஜோதிமுத்து சந்தித்தேன் ..புதிதாக வீட்டுமுறை காளான் வளர்ப்பில் ஆர்வத்துடன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் சொல்லி கொண்டுருந்தார் ..தனது ஆர்வத்தை அப்பொழுதே வாழ்த்துக்கள் சொன்னேன் ..இன்று தம்பியை உடுமலையில் உழவர் சந்தையில் தனது மதிப்புக்கூட்டு பொருளான காளான் விற்பனை செய்வதை பார்த்தது மிக்க மகிழ்ச்சி ..தம்பியிடம் பேசியபோது இதன் நன்மைகளை விரிவாக எடுத்துரைத்தார் ..
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..
காளான்கள் உணவுகள் மற்றும் பக்க உணவுகளுக்கு சுவையைச் சேர்ப்பதற்காக அறியப்படுகின்றன. ஆனால், இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது தெரியுமா.?
உண்மையில், அவை பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று கூறப்படுகின்றன.
காளான் குறைந்த கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். அவை எந்த உணவுமுறைக்கும் சிறந்த கூடுதலாகும்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
காளான்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பொருட்களையும் செயல்படுத்துகிறது, இது கட்டி உயிரணுக்களின் வளர்ச்சி உட்பட தொற்று மற்றும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
வைட்டமின் டி சப்ளை
வைட்டமின் டி 2, வைட்டமின் டி வகை, உங்கள் எலும்புகளை வலுவாகவும், தசைகள் சரியாகவும் செயல்பட வைக்கிறது. நமது வைட்டமின் D இன் பெரும்பாலானவை விலங்குகள் சார்ந்த மூலங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் நல்ல பழைய சூரிய ஒளியில் இருந்து வருகிறது. காளான்களில் எர்கோஸ்டெரால் உள்ளது, இது புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது வைட்டமின் டி ஆக மாறும்.
மூளை ஆரோக்கியம்
காளான்களின் ஊட்டச்சத்து மதிப்பு உங்கள் மூளையை லேசான அறிவாற்றல் குறைபாட்டிலிருந்து பாதுகாக்க உதவும். பாலிபினால்கள் மற்றும் சில ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த காளான்கள் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
ஆரோக்கியமான இதயம்
ஆரோக்கியமான இதய பிரியர்களுக்கு காளான் ஒரு வரப்பிரசாதம். அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான கலவைகள் உங்கள் இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதைத் தடுக்க உதவும் . கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவாக இருக்கும் போது இறைச்சிக்கு பதிலாக சுவையான, குறைந்த சோடியம் காளான்களை மாற்றவும்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமநிலைப்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டவும் தேவையான பொருட்கள் காளான்களில் உள்ளன. உங்கள் செரிமான அமைப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்ணும் சத்தான உணவு உங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த காளான்கள் உதவும்.
எடை இழப்புக்கு உதவும்
காளான் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் இணைந்து எடையைக் குறைக்க உதவும். காளான்களின் சுவையானது உங்களின் கூடுதல் உப்பு தேவையை குறைக்கலாம், இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதன் நன்மைகளை அழகாக எடுத்துரைத்தது மிக்க மகிழ்ச்சி .தம்பிக்கு காளான் விற்பனையில் முன்னேற வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு மனநிறைவோடு இல்லம் திரும்பினேன் .
தொடர்பு எண் :ஜோதிமுத்து .9787949226..தேவைப்படுவோர் வாங்கி பயன்பெறலாம் .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681.







