கேள்வி : மணலுக்கு பதில் எம்சாண்ட் உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ? விஞ்ஞானப்பூர்வ பதில் என்ன?
என் பதில் :
Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand)என்கிறோம்.
மேலை நாடுகளில் இவை பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டபடும் கட்டிடங்கள் அனைத்தும் இவை கொண்டு தான் கட்டப்படுகின்றன. ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம்.
கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.
இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற்களை பிடித்து கொள்கிறது.
நீர் புகாத முறையில் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வேதி வினையை நிகழ்த்துகிறது.
இந்த வேதி வினை நிகழும் பொழுது அதிக படியான வெப்பத்தை வெளியிடுகின்றன.
இவற்றின் வெப்பத்தை தனிக்கவே கான்கிரீட் இட்டு சில மணி நேரம் கழித்து நீராற்றபடுகின்றன.
கான்கிரீட் தன்னுடைய முழு வலுவை அடைய 28 நாட்கள் ஆகும்.
இதில் மணல் என்பது ஜல்லி கற்களுடன் ஒட்டி பிடிக்க பயன்படுத்தும் பொருள் தான்.
ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும். சந்தையில் தரமற்ற Msand வலம்வருகின்றன.
மேலும் நீங்கள் பயன்படுத்தும் சிமெண்ட், மண், ஜல்லி,நீர், இவைகள் மட்டுமே உங்களுடைய கான்கிரீட்டை வலுப்பெற செய்யாது.
மாறாக நீங்கள் எந்த தரத்தில் concere தயாரிக்கிறார்கள் என்பது தான் கான்கிரீடை வலுப்படுத்தும். M20,M25,M30 என பல வகை உள்ளன வீடுகளுக்கு M20 போதுமானது.
நீங்கள் Msand பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதனுடன் Dr.Fixit LW+ என்ற வேதியல் பொருளை 1 சிமெண்ட் மூடைக்கு 200 ml என்ற விகித்தில் கான்கிரீட் கலைவயில் சேர்த்து கொள்ளுங்கள்.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .
சிவக்குமார் V. K
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக