ஞாயிறு, 23 ஜனவரி, 2022

உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா







 உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா 


இன்று காலை சதாசிவம் -கவிதா அவர்களின் புதல்வி SK  தனிஷ்கா பூப்பு நன்னீராட்டு விழா ..கரட்டுமடத்தில் மிக எளிமையாக குடும்ப சொந்தங்கள் சூழ நடைபெற்றது ..


இன்று விழாவிற்கு சென்றவுடன் முதலில் நம்ம கம்பள வரலாறு கார்த்தி SR யை தேடினேன் 

மாப்பிளை வந்தவுடன் ..அடுத்து எட்டயபுரம் ஜமீன் உசிலம்பட்டி அருமை தம்பி

கார்த்தி ஸ்மார்ட் தம்பியை தொலைபேசி வலைபோட்டு  வரவழைத்தேன் .ரெண்டு பேரும் சிங்கிளாக இருந்த பொழுது வீரம் ..குடும்ப பொறுப்புகள் வந்தவுடன் அவர்களின் நடை ..உடை ..பாவனை எல்லாம் மாறிவிட்டது ...குணம் மட்டும் மாறாமல் பேசிப்பின்பு மனா நிறைவாக இருந்தது ..


அருமை மாமா சாமிகுணம் அவர்களை சந்தித்து கடந்தவாரம் தின்னப்பட்டி குலதெய்வ கோவில் வரலாறை பதிவிட்டு இருந்தார் .மேற்படிப்பு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் யாரும் .படித்து ,வேலைவாய்ப்பு பெற்றவுடன் ..வளர்ந்தவுடன்  தங்களின் வளர்ந்த வரலாறுகளை மறந்துவிடும் தற்காலங்களில் மறந்து விடுகின்றனர் ..எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும் ..சாமிகுணம் மாமா அவர்கள் பாரம்பரியம் .பண்பாடு மாறாமல் குலதெய்வகோவிலின் வரலாறை மறக்காமல் பதிவிட்டதற்கு அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன் .


காலைநேர உணவு அருமையான சேமியா,பொங்கல் ,கோதுமை ரவை தயிருடன் உடலுக்கு ஏற்ற சத்தான உணவை முடித்துவிட்டு வந்து அமர்ந்த போது ..அருமை தம்பி பொள்ளாச்சி -கொல்லப்பட்டி  தனியார் வங்கியில் பணிபுரியும் அருள் மற்றும் என் கொழுந்திய சாந்தி செந்தில்குமார் -ம் சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி . அருள் தம்பியிடம் தற்பொழுது இருக்கும் சிறு -பெரு கனரக வாகனங்கள் வியாபாரம் நிலவரம் எப்படி உள்ளது கேட்டு அறிந்துகொண்டேன் .


முக்கியமாக வரலாறு புகைப்படம் எடுக்கவில்லைஎன்றால் எப்படி ..மகளுக்கு ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி .


உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தம்பி எரிசனம்பட்டி முருகவேல் (நாமக்கல் ) தம்பியை சந்தித்து தற்பொழுது நாமக்கல் அருகில் கோழித்தீவனம் ஆராய்ச்சி மையம் பணி அங்கு நடைபெற்று வருவது ,அதற்கான பணிகளில் நடைபெற்று கொண்டுவருவது தகவலை அறிந்துகொண்டேன் .தற்பொழுது நடைபெற்ற கீர்த்திவீரர் எத்தலப்பர்  கடந்த எட்டு ஆண்டுகள் அதற்கான பணிகள் தற்பொழுது முடிய எப்படி நடந்தது என்று விலாவாரியாக நடந்ததை கூறும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .காலங்கள் மாறினானாலும் வரலாறுகள் மாறுவதில்லை என்பதை தெரிந்துகொண்டேன் .


தமிழ்நாட்டு ஹாக்கி ஜூனியர் பிரிவில் விளையாடும் சுபாஷ் தம்பியுடன் தற்பொழுது கடைசியாக கலந்துகொண்ட ஹாக்கி விளையாட்டு போட்டியை கேட்டு அறிந்துகொண்டேன் .தம்பி உடுமலையில் முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டு தமிழ்நாட்டுக்காக விளையாடி கொண்டுள்ளார் .


நாடாகும் நிகழ்வுகளை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தேன் ..பில்லவநாயக்கன் சாலையூரில் என் அப்பாவுடன் செல்லும் போது குடும்ப விழாக்கள் நடைபெறும் போது குறைந்தளவு சொந்தங்களே வருவார்கள்  எனக்கு சிறு வயது நினைவு ..தற்பொழுது ஒரு தலைமுறை வளர்ந்தவுடன் மேடையில் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது மிக பிரமிப்புஆக  இருந்தது குடும்ப உறவுகள் சிறு கிளைகளாக இருந்த என்று ஆலமரம் போன்று தங்களின் விழுதுகளை பரப்பி இருந்தது எனக்கு மனநிறைவு .

இன்று பொதுவேலைமுடக்கம் இருந்தாலும் குறைந்த அளவு சொந்தங்கள் மனா நிறைவாக வந்து பேசி குடும்ப உறவைகளை வளர்த்துக்கொண்டது தற்பொழுது இருக்கும் கடினமான வேலை பளு ,மன இறுக்கம் சற்று குறைந்து சொந்தங்களுடன் விடைபெற்று வந்தது அருமை.


நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக