செவ்வாய், 30 ஜூலை, 2019

பிரபலம் என்றால் என்ன ? (நான் அறிந்துக் கொண்ட விதத்தில்)
ஒரு முறை ஆசிய அளவிலான சப்-ஜூனியர் - Under15 (ஆண்கள் ) சதுரங்கப் போட்டி மும்பையில் நடந்து .. கடைசி நாளன்று .. எல்லோருக்கும் அறிந்த முகமான "கபில் தேவ் " பரிசளிப்பு விழாவிற்கு தலைமைத் தாங்குவதாய் இருந்தது.. காலையில் போட்டி நடக்கும் நேரத்தில் அந்த இடத்திற்கு அவர் வந்தார்... பத்துநிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு உடனே சென்று விட்டார்..
மாலையில் அவர் பரிசளிப்பு விழாவிற்கு வந்தபோது பேசினார்... அப்போட்டியில் ஒரு  மாணவன்  9/9 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கத்தையும் .. இன்னொரு மாணவன்  7/9 எடுத்து வெண்கலத்தையும் வென்றனர் ... அப்போது அவர் குறிப்பிட்டது :
" காலையில் இங்கு வந்தேன் .. சதுரங்க வீரர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று முடிவு செய்து கோபத்தில் சென்று விட்டேன்... ஆம் .. நான் ..என்தலை மைதானத்தில் தென்பட்டால் ..ஆரவாரத்தையும் கூச்சலையும் கண்டு பழகியவன்.. ஆனால் இங்கு வந்தபோது ஒருவரும் புருவத்தைக்கூட உயர்த்திப் பார்க்காமல் என்னை அவமதித்து விட்டார்கள் ... என்றே நான் நினைத்தேன்.. பின்னர் யோசிக்கையில் எனக்கு புரிந்தது... அத்தனை பேருக்கும் என்னைத் தெரியும்... ஆயினும் இவர்கள் என்னைக் கண்டுக் கொள்ளவில்லை.. அத்தனை மும்முரமாக தன் கவனம் முழுவதையும் தங்கள் செயலில் ஒருமுகப் படுத்தி அவர்கள் விளையாடியதில் ஓர் கர்ப்பகிரகத்தின் தூய்மை.. அமைதி இருந்ததை உணர்ந்தேன்... காலையில் நான் உங்கள் மீது கோபமாய் சென்றதற்கு மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன் .. அதுவரையில் அவர் கோபமாய்த் தான் சீக்கிரமா போனார் என்பது யாருக்கும் தெரியாது ).. இவர் பிரபலம் ஆனதில் தவறுள்ளதா... ?

நான் குறிப்பிடும் பிரபலம் நீங்கள் அல்ல என்று ஒருவரிடம் சொன்னால் ..அப்போ வேறு யார் தான் பிரபலம் .. பிரபலத்திற்கான அளவுகோல் என்ன என்று கேட்டால் .. என்ன சொல்வது... ஷகீலாவும் பிரபலம்... நித்யஸ்ரீ யும் ..அனுஷ்காவும் பிரபலம் .. ஆனால் இவை எல்லாம் ஒரே விதமான பிரபலமா ? இதற்கான வரைமுறைகளை எங்கே வரைய முடியும் ?
எனில் நீங்கள் பிரபலம் என்று சொல்வது யாரை... சிலர் தங்கள் பெயருக்குப் பின்னாலோ முன்னாலோ கவிஞன், எழுத்தாளன் என்ற அடைமொழியை சேர்த்து தானே அறிமுகப் படுத்திக் கொள்கிறான்.. முன்னர் கவிஞன் ..எழுத்தாளன் என்பவன் தனது எழுத்துக்களினால் பிரபலம் ஆனான்... இங்கு முகநூலில் தனது பெயரினால் பிரபலப் படுத்திக் கொள்கிறான்.. சிலரின் பெயர்கள் கூட புனைப் பெயராக .. அவர்களின் அறிமுக அடையாளம்கூட .. உயிரற்ற அக்றிணைப் பொருளாய் இருக்கையில்...
அவன் பிரபலம் என்றால்.. நான் எந்த அளவுக்கு குறைந்து போனேன்.. என்னை ஏன் பிரபலம் எனக் குறிப்பிடாது இருக்கிறீர்கள் .. என்று கேட்டால்... நான் சொல்லவில்லையே உங்களை பிரபலம் என.. நீங்கள் சொல்வதற்கு நீங்கள் தானே விளக்கம் தர வேண்டும் .. அதையும் மீறி .. "பிரபலம்" என அழைத்திருந்தால் ...... "பேபி" என்று பெயருடைய மூதாட்டி இருப்பதில்லையா... அதுபோலவே தான் ... இதில் இன்னார் தான் அடங்குவர்.. இப்படித் தான் ஆகவேண்டும் என்று சொல்வதற்கில்லை ... அந்த நேரத்தில் எங்கு இருக்கிறோமோ அதைப் பொறுத்து பிரபலம் என்பது பொருள்படும்.. சில நேரங்களில் வஞ்சப் புகழ்ச்சி அணியாய் கூட நான் பயன் படுத்துவேன் ....
யாரோ யாரையோ பிரபலம் என்று சொன்னால் அது தவறு சரி என்று நிரண்யம் செய்ய நமக்கந்த அதிகாரம் தந்தது யார்? நாம் எதற்காய் இதைக் குறிதது விவாதித்து சண்டை இடவேண்டும் ..
எனவே இதைப்படிப்போர் யாரும் தங்களைத் தான் நான் குறிப்பிட்டேன் என்று எடுத்துக் கொள்ளாமல் .. ஒரு மாணவன் எழுதிய கட்டுரையாய் இதனை எடுத்துக் கொண்டு .. திருத்தங்கள் செய்ய வேண்டிய இடங்களைக் குறிப்பிட்டு இதற்கான மதிப்பெண்ணையும் தந்தால் "ஆத்தா ... நான் பாசாயிட்டேன் " என்று சொல்லி இன்றைய தினத்தில் சந்தோஷமாய் இங்கு வலம் வருவேன் ..
(மதிப்பெண் இடுகையில் நீங்கள் ஆப்பிரிக்க தேசத்து அன்னபூரணியாய் கஞ்சனாய் இருக்காமல் மலை நாட்டு மங்கையைப் படைத்த பிரும்மனாய் ..வள்ளலாய் இருக்கவும் ..)
சபையோர் யாவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக