திங்கள், 15 ஜூலை, 2019

கற்றலின் நினைவுகள்! -கச்சேரி வீதி பள்ளி (உடுமலைப்பேட்டை )

இப்போது நினைத்தாலும் மனதுக்குள் புன்னகைக்க வைக்கும் நினைவு இது. வாசிக்கும் உங்களையும் சிரிக்க வைக்கும்.
என் பள்ளிக் காலத்தில் இப்போது போல் 3வயதில் நோட் புக்கில எழுத முடியாது. ஒண்ணாம் வகுப்பில ஒன்லி சிலேட்தான்.. இரண்டாம் வகுப்பு போனதும்தான் நோட்டில் எழுதமுடியும். அதுவும் 40 பக்க நோட்தான். நான் 2-ம் வகுப்பு சேர்ந்து நாட்கள் ஓடின.. எப்போதடா புது நோட்டில் எழுதச் சொல்வார்கள் எனக் காத்துக் கிடந்தேன்.. புது நோட்டின் வாசம்,, பென்சிலின் கூர்மை,,அழிரப்பரின் வெண்மை அத்தனையையும் தினமும் எடுத்துப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்களுக்குப் பின் முதன் முறையாக சரஸ்வதி டீச்சர் .. தமிழ் நோட்டை எடுக்கச் சொன்னார். ”எல்லோரும் நோட் எடுத்துக்கோ,,
சரஸ்வதி டீச்சர் . போர்டில் எழுதிப்போடுவதை தப்பு இல்லாமல், அழகா எழுதணும். எழுத்து ஒழுங்கா மணிமணியா இல்லைன்னா மொழியைப்(புறங்கையின் எலும்புதான்) பேத்துருவேன்” என்ற பயமுறுத்தலுடன் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தார்.. வகுப்பில் முதல் பெஞ்சில உட்கார்ந்திருந்த நான் (என்னைப்போலவே 😜) குண்டு குண்டான அழகான கையெழுத்தில் எழுத ஆரம்பித்தேன். தமிழ்ப் பாடம். முதலில் ஒரு கேள்வி- பதில் கரும்பலகையில் எழுதி விட்டு சரஸ்வதி டீச்சர் . எங்கள் அத்தனை பேரின் நோட்டையும் பார்வையிட்டார். திருப்தியோடு தொடர்ந்து எழுதிப்போட ஆரம்பித்தார். சின்ன கரும்பலகை.. 2 கேள்வி பதில் எழுதியதும் நிறைந்து விட்டது. அடுத்து மெதுவாக முதலில் எழுதியதை ஒவ்வொரு வரியாக அழித்து அழித்து மூன்றாவது கேள்வி பதிலை எழுத ஆரம்பித்தார்..மற்ற எல்லா பிள்ளைகளும் ஒழுங்கா எழுத நான் மட்டும்  சரஸ்வதி டீச்சர் .செய்ததைப் போலவே ஒவ்வொரு வரியாக அழித்து அழித்துப் புது கேள்வி பதிலை எழுதிக்கொண்டிருந்தேன்... மனதுக்குள்  சரஸ்வதி டீச்சர் .ஏன் இப்படி தப்பு தப்பா எழுதி அழிக்கிறாங்க என்ற குழப்பத்துடன்.🤔🤔(ஈயடிச்சான் காப்பி கதையை நினைத்துக் கொள்ளவும்)..இரண்டாவது முறை கரும்பலகை எழுத்துக்களால் நிறைய, திரும்பவும் மேலிருந்து அழித்து எழுத ஆரம்பித்தார் சரஸ்வதி டீச்சர் ...எனக்கோ பயங்கர டென்ஷன்... நானும் திரும்ப முதலில் இருந்து அழிக்க ஆரம்பிக்க நோட்டெல்லாம் கரியாகி, கொஞ்சம் கிழிய ஆரம்பித்து விட்டது..பயத்துடன் பக்கத்தில் சுப்புலெட்சுமியை எட்டிப் பார்த்தேன்.அவள் நாலாவது பக்கம் எழுதிக்கொண்டிருந்தாள்.நானோ முதல் பக்கத்தையே எழுதி,அழித்து, எழுதி அழித்து,அழித்துக் கொண்டிருந்தேன்.. அவ்வளவுதான் பயந்து ஓவென அழுது...ஐயோ,ஐயோ...ஒரே களேபரம்தான்.சரஸ்வதி டீச்சர் . , ”என்ன செய்ஞ்சுகிட்டு இருக்கிறே...” எனக் கேட்க நான் சரஸ்வதி டீச்சர் . நீங்கதானே அழிச்சு அழிச்சு எழுதுறீங்க அதான் நானும் அப்படியே செய்தேன் எனக் கையை பின்னால் மறைத்து கொண்டே (அடிக்கு பயந்து) அழுகை பாதியும் சொற்கள் பாதியுமாக உளறினேன்.😫😫.. ஆனால் ஏனென்றே தெரியவில்லை சரஸ்வதி டீச்சர் . குலுங்கக் குலுங்க சிரித்துக்கொண்டே இருந்தார்...இந்த கற்றலின் நினைவுகள் தான் ..இப்பொழுதும் உங்களிடம் வாட்சப்பிலும் ,முகநூலிலும் உங்களிடம் அழித்து,அழித்து  எழுதிக்கொண்டுஇருக்கிறேன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681 😄😃😃

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக